Page 4 of 10 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 116

Thread: : வெயில் கவிதைகள் :

                  
   
   
  1. #37
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    வெய்யிலை ரசித்து எத்தனைக் காலமாச்சு.. வறண்டு கொண்டிருக்கும் கண்மாய் கரையில் இருக்கும் காய்ந்த மரத்தடியில் லுங்கியோடும் துண்டோடும் கும்பலாய் கதைத்து (ஸ்டடி லீவில் படிப்பதாய் பேர் பண்ணி) பிறகு கண்மாயோரம் உள்ள கேனியில் குளித்துக் குளிர்ந்து ஆடிய ஆட்டங்கள்..


    வெயிலே நான் உன் ரசிகன்..

    கான்கிரீட் காட்டினில் வெய்யில் தீண்டத்தகாததாய் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதுதான் வருத்தம்.

    வெய்யிலை இன்று மீண்டும் ரசிக்க வைத்த ஆதவனுக்கு நன்றி..

    (வெய்யிலுக்காக ஆதவனுக்கு நன்றி சொல்லாம வேற யாருக்குச் சொல்றது?)
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    உச்சி வெயிலில் குச்சி ஐஸ்
    விற்றுக் கொண்டு போகிறான்
    வியர்க்க வியர்க்க

    காசுள்ளவன் வாங்கி
    காசில்லாத நண்பனுக்கு
    காக்கா கடி கொடுக்க

    ஆதவனுக்குப் பொறாமை வந்து
    இன்னும் கொஞ்சம் எரிகிறான்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அது ஒரு வெயில் காலம்

    வெயிலை உள்வாங்க
    குறைக்கப்பட்ட முடி
    குறைக்கப்பட்ட ஆடை

    புழுதி பறக்கும்
    செம்மண் சாலையில்
    குதிரை வீரனாய் கற்பித்துக் கொண்டு
    நாங்கள் விரட்டிச் செல்லும்
    சைக்கிள் டயர்கள்

    வற்றி விட்ட ஏரியில்
    மிச்சமிருக்கும் சிறிது நீரில்
    துண்டு போட்டு பிடித்த
    அயிரை மீன்கள்

    முள்ளுச் செடிகளில்
    தலைதூக்கும் ஓணான் சிங்கங்களை
    கவட்டை வில்கொண்டு
    வேட்டையாடிய வீர சாகசம்

    கல்லெறிந்து பறித்த மாங்காயா
    நெருப்பு எறும்புகளைத் தாண்டி
    மரமேறி பறித்த மாங்காயா
    எது ருசி என
    உப்பு மிளகாய் கலவையில்
    முக்கி ருசித்தது

    வேப்ப மரத்தடியில்
    கயிற்றுக் கட்டிலில்
    வானத்து நட்சத்திரங்களில்
    எனக்கென்று ஒன்றை கண்டு
    பெயரிட்டு மகிழ்ந்தது

    மொட்டைமாடியில்
    கயிற்றுக் கட்டிலில்
    கூடாரம் போட்டு
    வீடு கட்டி வாழ்ந்தது

    இன்னும் இன்னும்
    எத்தனையோ நினைவுகள்
    அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்
    கான்கிரீட் சிறையில்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #40
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    அது ஒரு வெயில் காலம்

    வெயிலை உள்வாங்க
    குறைக்கப்பட்ட முடி
    குறைக்கப்பட்ட ஆடை

    புழுதி பறக்கும்
    செம்மண் சாலையில்
    குதிரை வீரனாய் கற்பித்துக் கொண்டு
    நாங்கள் விரட்டிச் செல்லும்
    சைக்கள் டயர்கள்

    வற்றி விட்ட ஏரியில்
    மிச்சமிருக்கும் சிறிது நீரில்
    துண்டு போட்டு பிடித்த
    அயிரை மீன்கள்

    முள்ளுச் செடிகளில்
    தலைதூக்கும் ஓணான் சிங்கங்களை
    கவட்டை வில்கொண்டு
    வேட்டையாடிய வீர சாகசம்

    கல்லெறிந்து பறித்த மாங்காயா
    நெருப்பு எறும்புகளைத் தாண்டி
    மரமேறி பறித்த மாங்காயா
    எது ருசி என
    உப்பு மிளகாய் கலவையில்
    முக்கி ருசித்தது

    வேப்ப மரத்தடியில்
    கயிற்றுக் கட்டிலில்
    வானத்து நட்சத்திரங்களில்
    எனக்கென்று ஒன்றை கண்டு
    பெயரிட்டு மகிழ்ந்தது

    மொட்டைமாடியில்
    கயிற்றுக் கட்டிலில்
    கூடாரம் போட்டு
    வீடு கட்டி வாழ்ந்தது

    இன்னும் இன்னும்
    எத்தனையோ நினைவுகள்
    அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்
    கான்கிரீட் சிறையில்
    அற்புதம்.. அபாரம்... கலக்கல்...

    என் ஏக்கமான மனதைப் படம் பிடித்து வடித்திருப்பது போல இருக்கிறது அண்ணா...

    கான்கிரீட் சிறைகளில்.. நட்சத்திரம் ரசிக்கவும்.. நிலா ரசிக்கவும் வழியின்றி வலிக்கிறது மனம்...

    வெயில் கவிதையில் இது அருமையிலும் அருமை.. எதார்த்தம் நிரம்பி வழிகிறது..

    பாராட்டுகள் அண்ணா... தொடருங்கள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #41
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நெருஞ்சிக் காட்டு
    ஒற்றையடிப் பாதை முள்ளும்..

    கோயில் தொடும்
    கல் வழிப் பாதை கூர்மையும்..

    பதம் பார்க்கும் குதியை
    தன் கரங்களால்
    பொடித் துகள்களாகச்
    சுட்டுக் கொண்டிருந்தான்
    துணையாக வந்த
    வெப்பக் கதிரோன்..!!

    (என்னை வெயில் கவிதை எழுத வைத்த ஆதவாவுக்கும் தாமரை அண்ணாவுக்கும் நன்றிகள்.. )
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உச்சி சூரியனின் உக்கிரம்
    தோற்றுப்போகிறது....
    சுள்ளி பொறுக்கும்
    செருப்பணியா கிராமத்துத் தாயின்
    உதாசீனத்தின் முன்பு...!!
    நம்மிருவருக்கும் ஒரேமாதிரியான எண்ணம்!!!! அருமை அண்ணா!!

  7. #43
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    தாமரை அண்ணா கலக்குகிறார். கூடவே சிவா.ஜி அண்ணாவுக்கு சகோதரி பூமகளும். அப்பப்போ தொட்டுப் பார்த்து ' ஆ ' என்று சொல்லும் மதி, ஜில் ஜில் அமரன்....

    கவிதைகள் அனைத்தும் பிரமாதம்!!!

    பொதுவாக வெயில் என்பதால் வறட்சியும் ஞாபகத்திற்கு வரும். வெயில் கவிதைகளும் வறண்டு வரவில்லையோ என்றும் தோணியது...

    அப்படியல்ல... அள்ள அள்ள குறையாத வெயிலைப் போன்று கவிதைகளும் எழுதலாம் என்பதை மக்கள் உணர்த்துகிறார்கள்!!!

  8. #44
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    வெயிலே
    எங்கள் விளையாட்டுத் தோழனே
    உன்னுடன் விளையாடத்தானே
    விடுமுறை

    பாட்டி வீட்டுக் கேணியில்
    பாதாளத்தில் கிடக்கும் குளிர்நீரும்

    கமலாலயக் குளத்தில்
    தேங்கி நிற்கும் பச்சை நீரும்

    நேரு பூங்காவின்
    சிமெண்டு பெஞ்சுகளும்

    மாரியம்மன் பண்டிகைக்கு வாங்கிய
    மண்குதிரை பொம்மைகளும்

    உன்னுடன் மட்டுமே
    எனக்குப் பரீட்சயம்.

    அவைகளெல்லாம் அடையாளம் துறந்து
    என்னை விட்டுப் போனாலும்

    வா பேசிமகிழ்வோம்
    பழைய நினைவுகளை.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #45
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதவா View Post
    தாமரை அண்ணா கலக்குகிறார். கூடவே சிவா.ஜி அண்ணாவுக்கு சகோதரி பூமகளும். அப்பப்போ தொட்டுப் பார்த்து ' ஆ ' என்று சொல்லும் மதி, ஜில் ஜில் அமரன்....
    பூமகள் சிவா.ஜி அண்ணாவுக்கு மட்டும் தான் சகோதரியா?
    ஆட்டோ வருது டோய்.... ஆதவா.. ஓடி போயிடு...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #46
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    வெயில் கவிதைகளின் வெக்கை தாங்கல
    ஏ.சி குளிரில் வெயில் கவிதைகளைப் படிக்க ம்ம்...

    நாளை சென்னை சென்றால் தெரியும் சேதி...

  11. #47
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by மதி View Post
    வெயில் கவிதைகளின் வெக்கை தாங்கல
    ஏ.சி குளிரில் வெயில் கவிதைகளைப் படிக்க ம்ம்...

    நாளை சென்னை சென்றால் தெரியும் சேதி...
    வெக்கை தாங்கல
    ஏ.சி குளிரில்
    வெயில் கவிதைகளைப் படிக்க

    மதிய வெய்யிலில்
    மெரீனா மணலில் அமர்ந்து
    படிக்கக் குளிரும்
    மதி...

    இப்படிப் போட்டு கவிதைன்னு சொல்லிட வேண்டியதுதானே
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #48
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    மணல் பரப்பி
    நீர் பிடித்து வைத்த
    சிங்க முகப் பானையின்
    வாய் வழி வழிந்த
    குளிர் நீரின் சுவைக்கு
    குளிர்பானம் தொடும் நேரமெல்லாம்
    நாக்கு ஏங்குகிறது.

    தெருவோரப் பானைக் கடையெல்லாம்
    தேடுகிறேன்
    பெட்டிச் சிறைக்குள்
    அடைக்கப்பட்ட நீரின்
    சுதந்திரம் வேண்டி..
    Last edited by தாமரை; 30-04-2009 at 06:56 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 4 of 10 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •