Page 3 of 10 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 116

Thread: : வெயில் கவிதைகள் :

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தான் தொட்ட இடங்களில்
    ஈரம் துடைத்துச் சென்ற வெயில்
    பட்டுச் சென்றிருக்கலாம்
    தான் படாத இடங்களிலும்..

    விழிகள் பட்டு நோகிறது
    வெயில் படாத இடங்கள்.

  2. #26
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்..

    வெயிலில் உருகி கவிதையாய் கொட்டுங்கள்...

    எட்ட நின்று வேடிக்கைப் பார்க்கிறேன்.

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    குளிர்பதன அறைக்குள் இருந்து
    எழுதிக் கொண்டிருக்கிறேன்
    வெயில் கவிதைகளை.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #28
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நுங்கும் தர்பூஸூம்
    வெள்ளரியும் எலுமிச்சைச் சாறும்
    கம்மங்கூழும், நீர்மோரும்
    நீயில்லா விட்டால் ருசிக்காது
    என் காதல் வெயிலே!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #29
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அதே அறையிலிருந்து
    வாசித்துக்கொண்டிருக்கிறேன்
    வெயில் கவிதைகளை....

    உடல் குளிர்ந்திருந்தாலும்
    உள்ளம் உஷ்ணத்தில் கொதிக்கிறது
    ஜன்னல் வழியே,
    வெயில் குளிப்பாட்டிக்கொண்டிருந்த
    குப்பத்துக்குழந்தைகளின்
    நிலை கண்டு....!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #30
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வெயில் காதலி....சூப்பர்.....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அதே அறையிலிருந்து
    வாசித்துக்கொண்டிருக்கிறேன்
    வெயில் கவிதைகளை....

    உடல் குளிர்ந்திருந்தாலும்
    உள்ளம் உஷ்ணத்தில் கொதிக்கிறது
    ஜன்னல் வழியே,
    வெயில் குளிப்பாட்டிக்கொண்டிருந்த
    குப்பத்துக்குழந்தைகளின்
    நிலை கண்டு....!!
    ஒண்ணு நீங்க அவங்களோட போய் விளையாடுங்க..
    இல்ல அவங்களை உள்ள கூட்டிகிட்டு வந்து கதை சொல்லுங்க..

    எதுக்கு கொதிக்கணும்?
    -------------------------------------------------------------------

    என் வீட்டுக் கூரை
    ஓட்டைகளை காட்டிக் கொடுத்து
    சரிசெய்யச் சொல்கிறது வெயில்
    அடுத்த மழை வரும்முன்பு.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #32
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    ஒண்ணு நீங்க அவங்களோட போய் விளையாடுங்க..
    இல்ல அவங்களை உள்ள கூட்டிகிட்டு வந்து கதை சொல்லுங்க..

    எதுக்கு கொதிக்கணும்?
    அப்படியே கூட்டிக்கிட்டு வந்தாலும் அது தற்காலிகம்தானே...

    கொதிக்கறது அவங்களோட நிரந்தர நிலையை நினைச்சுத்தான்...
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    மழைக்கு லட்சக்கணக்கில கவிதை இருக்கு. பனிக்கும், வசந்தத்திற்கும், ஏன் இலையுதிர்காலத்துக்கும் கூட எத்தனையோ கவிதை இருக்கு.

    ஆனால் வெயிலுக்கு என்று கவிதைகள் மிகக் குறைச்சல்தான்.. என்னவோ ஆதவா இந்தவருஷம் இந்தத் தலைப்பை ஆரம்பிச்சு வச்சாரு,. நாங்களும் எழுதிகிட்டு இருக்கோம்..

    இதை வேறு எதோடும் இணைத்து எங்களை பின்னாடி திட்டக் கூடாது மக்கா..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #34
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    சேச்செ... அப்படியெல்லாம் திட்டமாட்டோம்.
    நீங்க நடத்துங்க..

    கற்பனைகளை கடன் வாங்க கத்துக்கறோம்.

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    உச்சி வெயில் முத்தமிட்ட
    உப்பு முத்தக் கறைகளை
    கேணித் தண்ணீரில்
    கழுவிக் கொண்ட காலங்கள்

    கண்களை இடுக்கி
    தண்ணீர் லாரி நோக்கி
    நெற்றியில் கைவைத்து
    நோக்கும் நேரத்தில்
    எழுவதை
    தவிர்க்க முடிவதில்லை.

    வீச்சமில்லா நீர் குளித்து
    வருடங்களாகின்றன

    முலையுண்ணும் மகவு
    இரத்தமுறிஞ்சியது போல்
    ஆல்துளைக் கிணறுகளில்
    செந்நீர்

    கங்கையும் கழுவ முடியா பாவத்தை
    வெயிலே உன்னால் மட்டும்தான்
    கழுவ முடியும்

    உக்கிரமாய் எரிந்து
    அத்தனை நீரையும் ஆவியாக்கி
    சுத்த நீரை கொடு..
    மழையாய்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    மாடுகள் மேய்ச்சலை மறந்து
    காய்ந்த வேப்பமரத்தின் கீழ்
    சோர்ந்து படுத்திருக்கின்றன

    பழஞ்சோறும் வெங்காயமும்
    பசியடக்கி தந்த குளுகுளுப்பில்
    மேய்ப்பனும் தூங்குகிறான்

    காக்கைகள் கூட
    இரைதேடலை
    மாலைக்கு ஒத்தி வைத்து
    கூடுகளில் போடுகின்றன
    குட்டித் தூக்கம்..

    கண்ணுக்கெட்டிய தூரம் வரை
    கரிசல் மண்ணும்
    முட்செடிகளும்
    அசையாமல் தூங்குகின்றன

    சுழன்று எரிகின்ற சூரியனே
    நீயும் கொஞ்சம்
    உறங்கி ஓய்வெடு..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 3 of 10 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •