எப்போதும்போல்
இப்போதும் அதே புலம்பல்
போன வருடத்தைவிட
இந்த வருடம் வெயில் அதிகம்....!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
என்ன வெயிலடித்தாலும்
மாடி வீட்டு மகராசர்களுக்கு
வியர்க்காது
உள்ளுக்குள்
ஈரம் இருந்தால்தானே!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நாங்கள் கரி பூசினோம்
நீயும் கரி பூசினாய்
உச்சந்தலையிலும்
பிடரியிலும்
உன் அனல் முத்தங்கள்..
எங்கள் உடல் கறுத்து
வியர்க்கிறது..
உன் உடல் கறுத்து வியர்க்க
நாங்கள் விடும்
உஷ்ணப் பெருமூச்சுகள்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நெளிகின்ற கானலில்
காலை நனைத்துக் கொண்டு
நெடுந்தூரம் நடக்கிறேன்..
சுள்ளென்ற முதுகும்
கொப்புளித்த பாதங்களும்
எரியும் உச்சந்தலையும்
வியர்த்து வழியும்
முகமும் தோள்களும்
இன்னும் எத்தனை வலிகள்
இத்தனை எரிச்சல்களும்
இனிமையானவை எனக்கு
வயிற்றை பசி
எரிக்கும்பொழுது..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
காய்ந்து வெடித்த கருவேல மரத்தின்
முட்கள் சிதறிக் கிடக்கின்ற
கண்மாய் காத்திருக்கிறது
என்னைப்போலவே
ஆளில்லா வண்டித்தடத்தில்
தண்ணீர் வண்டி சிந்தியதால்
முளைத்து வறண்ட
புற்களை தின்னும் ஆடாக
நீ கடந்த பொழுது
எனக்குள் துளித்தவைகளை
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
சுற்றிலும் வெம்மை
உள்ளுக்குள் வெறுமை
கருத்த முகத்தில் துளிர்த்த வியர்வையாய்
அவ்வப்போது நம்பிக்கை துளிர்க்கும்
மெயின் ரோட்டில் எதாவது பேருந்து
நின்று செல்லும் பொழுதெல்லாம்.
Last edited by தாமரை; 29-04-2009 at 05:54 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
பிரமாதம்.... பின்னிட்டீங்க. அதிலும் அந்த மாடிவீட்டு ஈரமின்மை நான்கே வரியானாலும் கத்திரி வெயில் காய்ந்தடித்ததைப் போல அருமையாக இருக்கிறது.
அடுத்தடுத்த கவிதைகளின் இலக்கிய நயம் தரமானவை!!! மிகத்தரமானவை....
------------------------
சிவா.ஜி அண்ணா.. உங்களிடம் இன்னும் கவிதைகள் எதிர்பார்க்கிறேன்.
--------------------------
அக்காச்சி லீலூமா நீங்களும் வெயில் பற்றி கவிதை எழுதலாமே!!!
வெய்யிலே
ஏழையின் கம்மங்கூழை
பணக்காரனை குடிக்க வைக்கிறாய்.
கொஞ்சம் ஏழைக்கும்
மிச்சமிருக்கட்டும்
இற(ர)ங்கிவிடேன்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை கலக்குறீங்க. எனக்கும் அந்த மாடிவீட்டு ஈரமின்மை கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு...அசத்துங்க.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உச்சி சூரியனின் உக்கிரம்
தோற்றுப்போகிறது....
சுள்ளி பொறுக்கும்
செருப்பணியா கிராமத்துத் தாயின்
உதாசீனத்தின் முன்பு...!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கவிதை எல்லாமே சூப்பர இருக்குண்ணா...
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
சிவா அண்ணா நீங்களுமா... கலக்குறீங்க....
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks