Page 10 of 10 FirstFirst ... 6 7 8 9 10
Results 109 to 116 of 116

Thread: : வெயில் கவிதைகள் :

                  
   
   
  1. #109
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by கீதம் View Post
    கேட்டீர் வெள்ளந்தீயாக,
    கிடைத்தது உள்ளந்தீயாக.
    வெள்ளந்தி என்பது வழக்கில் இருக்கும் சொல். வெள்ளந்தி என்பதை ஒரு முறை ஒரு பத்திரிக்கையில் ஒருவர் விளக்கி இருந்தார். அதாவது வெள்ளத்திற்கும் சரி தீக்கும் சரி. நல்லது கெட்டது தெரியாது. வேண்டியது வேண்டாதது தெரியாது. அதுமாதிரி இருப்பவர்களை வெள்ளந்தீ போல என்பார்கள். அதுதான் மாறிப் போய் வெள்ளந்தி ஆகியது என்று.

    வெள்ளந்தியாக என்பதை வெள்ளம் - தீயாக என்று நுணுக்கி எழுதினதை இரசிக்கலையோ? அதிலேயே பொருள் இருக்கே, அன்பு வெள்ளமாக பாயும் அவள் தீயாக எரித்தாள் என. அதிகம் படிச்சா இப்படித்தான். தெரிஞ்சதெல்லாம் இருப்பதை மறைத்துவிடும். அதனால் வெள்ளந்தியாக இருக்கறதே நல்லது!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #110
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    வெள்ளந்தி என்பது வழக்கில் இருக்கும் சொல். வெள்ளந்தி என்பதை ஒரு முறை ஒரு பத்திரிக்கையில் ஒருவர் விளக்கி இருந்தார். அதாவது வெள்ளத்திற்கும் சரி தீக்கும் சரி. நல்லது கெட்டது தெரியாது. வேண்டியது வேண்டாதது தெரியாது. அதுமாதிரி இருப்பவர்களை வெள்ளந்தீ போல என்பார்கள். அதுதான் மாறிப் போய் வெள்ளந்தி ஆகியது என்று.

    வெள்ளந்தியாக என்பதை வெள்ளம் - தீயாக என்று நுணுக்கி எழுதினதை இரசிக்கலையோ? அதிலேயே பொருள் இருக்கே, அன்பு வெள்ளமாக பாயும் அவள் தீயாக எரித்தாள் என. அதிகம் படிச்சா இப்படித்தான். தெரிஞ்சதெல்லாம் இருப்பதை மறைத்துவிடும். அதனால் வெள்ளந்தியாக இருக்கறதே நல்லது!!!
    ஆத்தீ... வெள்ளந்தீயில இத்தனை விசயமிருக்கா?

    அட, நான் வெள்ளந்தியாவே இருந்துக்கிறேன்.

  3. #111
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    2006 தேர்தலை மனதில் கொண்டு படித்தால் கீழுள்ள வரிகள் சிலேடையாகிவிடுகிறது அண்ணா, மிக ரசித்தேன்


    சூரியனின் இலவசத்தை
    ஓட்டைப் போட்டு பெற்றோம்

    மொத்தத்தில் நம் இதயத்தில்
    நாமே போட்டுக் கொண்டோம்
    ஓட்டை!!!
    அன்புடன் ஆதி



  4. #112
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    பெங்களூராம் எங்களூரில்
    தீர்ந்தது வெயில் இப்பொது...

    வேண்டுவோம் வருணணை
    உங்களூரில் வெயில் தீர...
    ஜனவரி வரை அந்த ஊர்லதான அப்பு நாங்களும் இருந்தோம், இந்த ஊர்ல பகல்ல வெயிலடிச்சாலும், ராத்திரி சும்மா டிசம்பர் மாச தேனி மாதிரி இல்ல இருக்கு
    அன்புடன் ஆதி



  5. #113
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இளஞ்சூட்டு முத்தத்தை
    நீ
    ஒரு மழைநாளில் பரிசளித்தபோது
    வெப்பம் ஒரு கவிதையாக
    என்னுள் படர்ந்தது

    இரு தேநீர் கோப்பைகள்
    அருகருகே கைகள் பிணைத்து
    காதல் பேசியபோது
    வெப்பம் ஒரு தேயிலையின் ருசியாக
    எனக்குள் நுழைந்தது

    ஒருசேர சங்கமிக்கும்
    கடலின் விளிம்பில்
    கற்கள் பொறுக்கிக் கொண்டிருக்கும்போது
    வெப்பம் ஒரு அலையாக
    என் கால்களைத் தழுவியது

    இருசோடி
    உதடுகளுக்கிடையேயும்
    உடல்களுக்கிடையேயும்
    கண்களுக்கிடையேயும்
    வெப்பம் ஊடுறுவியபோது
    அது குழந்தையாக
    தவழ்ந்தது
    உனக்கும் எனக்குமாய்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #114
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சொட்டுச்சொட்டாக விழுகிறது
    மழை
    ஒவ்வொரு துளிக்குள்ளும்
    உஷ்ணம், வெப்பம்
    ஆக்ரோஷம்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #115
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    அது ஒரு வெயில் காலம்

    வெயிலை உள்வாங்க
    குறைக்கப்பட்ட முடி
    அழுத கண்ணும் சிந்திய முக்குமாய்!
    அப்பா கழுத்தில் கைவைத்து அமுக்கிபிடிக்க
    தலைக்கு மேல நாவிதரின் கிடிக் கிடிக்
    சத்தத்தில் தூங்கிபோன நாட்களை நினைவுட்டுகிறது.
    என்றென்றும் நட்புடன்!

  8. #116
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    அது ஒரு வெயில் காலம்

    புழுதி பறக்கும்
    செம்மண் சாலையில்
    குதிரை வீரனாய் கற்பித்துக் கொண்டு
    நாங்கள் விரட்டிச் செல்லும்
    சைக்கிள் டயர்கள்


    வற்றி விட்ட ஏரியில்
    மிச்சமிருக்கும் சிறிது நீரில்
    துண்டு போட்டு பிடித்த
    அயிரை மீன்கள்

    முள்ளுச் செடிகளில்
    தலைதூக்கும் ஓணான் சிங்கங்களை
    கவட்டை வில்கொண்டு
    வேட்டையாடிய வீர சாகசம்

    கல்லெறிந்து பறித்த மாங்காயா
    நெருப்பு எறும்புகளைத் தாண்டி
    மரமேறி பறித்த மாங்காயா
    எது ருசி என
    உப்பு மிளகாய் கலவையில்
    முக்கி ருசித்தது

    வேப்ப மரத்தடியில்
    கயிற்றுக் கட்டிலில்
    வானத்து நட்சத்திரங்களில்
    எனக்கென்று ஒன்றை கண்டு
    பெயரிட்டு மகிழ்ந்தது

    மொட்டைமாடியில்
    கயிற்றுக் கட்டிலில்
    கூடாரம் போட்டு
    வீடு கட்டி வாழ்ந்தது

    இன்னும் இன்னும்
    எத்தனையோ நினைவுகள்
    அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்
    கான்கிரீட் சிறையில்

    நெஞ்சுமுட்ட நிறைய ஞாபககற்றைகளை
    வீசியடிக்கிறது உங்கள் பதிவு

    கவட்டை கம்பு பனைரோதை பட் பட் சத்ததிற்க்கு மடித்து தைக்கப்பட்ட குமுதம் அட்டை
    குடைக்கம்பியில் வில்லும் அம்பும் செய்து ஆற்றில் பாறைக்கடியில் தேங்கியநீரில் பதுங்கிய குறவைமீன் வேட்டை

    வேப்பம்பழம், சப்பாத்திபழம் சாப்பிட்டு காலில் எற்பட்ட புண்னிற்க்கு பக்கத்துவீட்டு கம்பவுண்டர் தாத்தா
    போட்ட எரிச்சல் மருந்தும் கடு கடு கட்டும்

    மதிய நேர கினற்றுக்குளியல், கட்டுக்கரையில் கானாமல்போகும் காலடிநீர்தடம்

    புளியம்பிஞ்சையும் கொழுந்திலையயையும் கருங்கல்லில் இழைத்து உப்பையும் மிளகாயையும் சேர்த்திழைத்து வழித்துண்டது

    இப்படி எகப்பட்ட நினைவுகளால் இத்திரியை தொடர்ந்து படிக்கமுடியாமல் போனது

    மறுபடியும் உள்நுழைய வேண்டும்...
    என்றென்றும் நட்புடன்!

Page 10 of 10 FirstFirst ... 6 7 8 9 10

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •