Page 5 of 50 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast
Results 49 to 60 of 590

Thread: ஞான வாக்கியம்(கரும்பாக்கள்)

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    அகத்தே கருத்து புறத்தே வெளுத்து
    சனத்தைக் கவரும் பொய்க்குரு

    அகத்துள் இருப்பார் மெய்யுருக் குயிரார்
    அருவாய் ஒளிந்தார் மெய்க்குரு

    படத்துள் ஏறி மேலே தொங்குவார்
    சனத்தை ஏய்க்கும் பொய்க்குரு

    கடத்துள் இறங்கிக் கீழே இருப்பார்
    படத்துள் பிடிபடா மெய்க்குரு

    காலில் வீழும் சனத்தில் செருகல்
    மாட்டித் திருடும் பொய்க்குரு

    உச்சி பிளந்துன் உள்ளே பொழியும்
    உட்குரு போதகர் மெய்க்குரு
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #50
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    இதத்தில் மனத்தை இருத்தி அன்பின்
    பதத்தில் தோயச் சுகம்

    மனித நேயம் காணத் தாயின்
    புனித நெஞ்சம் வேண்டு

    பெண்மை போற்றும் ஆண்மை ஓங்க
    மண்ணில் இர(ற)ங்கும் ஆண்டவம்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    புகழ்வதால் குளிர்வதும் இகழ்வதால் தகிப்பதும்
    மனஇதம் இழந்தஆ ணவம்

    தலைக்குள் கனமேறித் தரைமேல் தடுமாறும்
    நிலைக்கு நீயஞ்சி அடங்கு

    எல்லோரும் சரிநிகர் சமானமெனக் காணும்
    நன்னோக்கே வேண்டும் நமக்கு
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    பெண்ணே மெய்யாவாள் ஆணே உயிராவான்
    பெண்ணிலாப் பேயாய்த் திரிவாயோ

    ஆணே உயிராவான் பெண்ணே மெய்யாவாள்
    ஆணிலாப் பிணமாய்க் கிடப்பாயோ

    ஆணுயிரும் பெண்மெய்யும் உயிர்மெய்யாய் வாழும்
    ஞாலத்தே ஆண்டவத்தின் நேசம்

    ஆணுயிரும் பெண்மெய்யும் எதிரெதிராய்ப் போராடும்
    ஞாலத்தே ஆணவத்தின் நாசம்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  5. #53
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    இஸங்களைத் தாண்டி இதத்தில் மனங்கனிய
    வசப்படும் இருதய நிசம்

    இஸங்கள் = தீவிரங்கள்
    இதம் = நடுநிலை

    புறமே நிசமாய்ப் பழகிய பார்வை
    அகத்தின் நிசத்தை மறைக்கும்

    புறமே நிசம் = ஆண் பெண் என்ற அடிப்படை பேதம், மற்றெல்லா பேதங்களுக்கும்
    வித்து.
    அகத்தின் நிசம் = சிவ சத்தி ஒருமையை முற்றிலும் உணர்ந்த குரு மெய்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #54
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    ஆணின்றிப் பெண்ணில்லை பெண்ணின்றி ஆணில்லை
    ஆண்பெண் ஒருமையே ஞாலம்

    ஆணுக்குள் பெண்ணுண்டு பெண்ணுக்குள் ஆணுண்டு
    ஞாலத்தில் ஆண்பெண்சரி சமம்

    பேணுந்தயா ரூபம்பெண் ஆளுமறிவு ரூபம்ஆண்
    பேரன்பதே இருவரின் மூலம்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  7. #55
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    ஆணும் பெண்ணும் உலகின் கண்கள்அவை
    காணுங் காட்சி ஒன்றே

    பெண்முகம் பாராமல் சரீரத்தை வருத்தினும்
    உன்மனப் பாறை உருகாது

    பெண்ணைப் புணர்ந்தும் யோகத் திருக்கலாம்
    கண்ணாம் இருதயந் திறந்து

    பெண்ணைக் குத்தி உன்னொரு கண்ணிழக்கும்
    ஆணே நினக்கோ பரகதி

    ஆணைக் குத்தி உன்னொரு கண்ணிழக்கும்
    பெண்ணே நினக்கொ பரகதி

    ஆணும் பெண்ணும் கண்போல் போற்றும்
    மாந்தன் நினக்கே பரகதி
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  8. #56
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    வேண்டும் நினக்கு இருதய அடக்கம்
    வீண்தான் மதப்பிடி வாதம்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  9. #57
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    தூலத்தை விட்டேநீ சூக்குமந் தேடுவாய்
    தூலமே சூக்குமத்தின் வடிவு

    சுத்தசிவமும் நற்சத்தியும் வேறற ஒன்றும்
    நம்மிருதயம் ஏகாந்த தேசம்

    சமாதி என்றால் பிணமாய் விழுவதோ
    நல்லாதி யுள்உயிர்த் திரு

    சமாதி என்றால் பேயாய்த் திரிவதோ
    பகவன் மெய்யாய் இரு
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  10. #58
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    பெண்மெய்யும் ஆணுயிரும் ஒன்றுங் காதலுயிர்
    மெய்யன்றி கூடுமோசொல் வாழ்வு

    பிணமாய்க் கிடக்காது பேயாய்த் திரியாது
    இணங்கு உயிர்மெய் ஒருமையில்

    அன்பெனும் ஒன்றில் பிறந்தோம் தயவும்
    அறிவுமாய்ச் சேர்ந்தே இயங்குவோம்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    காமத்தை அழிக்க தேகத்தை வாட்டும்
    காதலை உணராக் கூட்டம்

    மெய்யை அழித்தே மெய்சேர் வாயோ
    உய்ந்தே குழியில் அழுவாய்

    இகத்தை விட்டே பரத்தைத் தேடுவாய்
    இகத்தைத் தொட்டே பரம்

    மெய்தனை வருத்தி மெய்யைத் தேடும்
    பொய்வழி பொருந்தல் அவம்

    மெய்தனைப் பேணி மெய்யை அறியும்
    மெய்வழி நாடல் தவம்

    அருவ ஆண்டவமே ஆணாய்ப் பெண்ணாய்
    உருவெ டுத்தஒரே நெறி

    உடம்புக்கு மெய்யென்ற பேரேனோ உள்ளாழ்ந்து
    உண்ணீராம் அன்புதனை உணர்

    உலகைப் பாராமுகம் ஏனோ தயவோடு
    உலகைப் "பார்"என்னுந் தமிழ்
    (பார்=உலகம், காண்)
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    ஞாலத்தே ஊனப்புலன் ஞானப்புல னாகமேம்
    பாலத்தைத் திறந்தார்உட் குரு

    காலஞ் செங்குத்தாய் முதுகேறிக் கழியக்
    காயம் மெய்யெனும்உட் குரு

    நாறுந் தேகத்தைப் பொன்மெய்யாய் மாற்றும்
    ஞான போதகர்உட் குரு

    ஈனப்பிறப்பும் இம்மையில் மாயா மறுபிறப்பாய்
    மாறும்படிக்கே செய்தார்உட் குரு

    ஓலமிட்டழும் பொய்ம்மரணம் யார்க்கும் ஒழிய
    சீலமெய்வழி திறந்தார்உட் குரு

    நோய்மூலம் நாசமாக மெய்யைப் பிணமாக்கும்
    பேய்மாயை ஓட்டினார்உட் குரு

    காமத்தைக் காதலன்பில் கரைத்துப் பெண்குலமே
    தாயாராய்க் காட்டியஉட் குரு

    மெய்யுடம்பைக் குடமுழுக்கும் பாலாறு மேல்திறந்து
    உய்வழியை நிறுவும்உட் குரு

    மெய்யின் திரிபினைத் திருத்தவே உயிராய்உள்
    உய்ந்தே இருப்பார்உட் குரு

    மூர்த்திபூசை மாமாயை தீர்த்தே மூலவரைப்
    பார்உள்ளே என்றார்உட் குரு

    இருதயமாம் ஏகாந்த தேசத்தே மனமடங்கி
    இருதயவாய் என்றார்உட் குரு

    குருமந்திர தாரணையில் உள்ளாழ்தலே பிரசாரம்
    தெருசுற்றல் வீண்எனும்உட் குரு

    மெய்யூரே திருச்செந்தூர் உயிராரே ஆண்டவர்எனும்
    மெய்ஞ்ஞானந் தந்தார்உட் குரு
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Page 5 of 50 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •