Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: வலி

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0

    வலி

    கோவையிலிருந்து மும்பை செல்லும் ரயிலுக்காக பிரயாணிகள் பலரும் காத்திருந்தார்கள். எட்டு வயது சிறுமி பூங்கோதை அங்குமிங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தாள்.

    அவள் காலில் அணிந்திருந்த செருப்பு ஒன்று கழண்டு தண்டவாளத்தில் விழ, அவளது தந்தை தாமோதரன் கோபத்தில் அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். அடிவாங்கியதும் மொத்த சந்தோஷமும் விலகி கண்களில் கண்ணீர் வந்திறங்க சத்தமில்லாமல் அழுதாள் பூங்கோதை.

    தாமோதரன் தண்டவாளத்தில் இறங்கி ஒற்றை செருப்பை எடுத்துக்கொடுத்தார். பத்து நிமிடம் கழிந்து ரயில் வண்டி வர அனைவரும் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள்.

    ரயில் புறப்பட்டதும் தாமோதரன் சட்டைபாக்கெட்டிலிருந்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகருக்கு காட்ட வெளியே எடுத்த போது. அது கை தவறி ஜென்னல் வழியாக வெளியே பறந்து போனது .சட்டென்று சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணச்சீட்டை தேடி எடுத்து வந்தார் தாமோதரன்.

    " அப்பா நான் செருப்ப தவற விட்டதுக்கு நீங்க என் கன்னத்துல அறைஞ்சீங்க, நீங்க டிக்கெட்ட தவற விட்டதுக்கு உங்கள யார் வந்து கன்னத்துல அறைவாங்க? விரக்தியாய் அவள் கேட்டபோது தமோதரனுக்கு அது நன்றாகவே வலித்தது.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    ராசய்யா தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வர வர உங்கள் குட்டி கதைகள் சுருங்கி, சின்ன குட்டி கதைகளாக மாறி வருகிறது. தாமோதரன் தொலைத்த பயணச்சீட்டு பின்னாடி வரும் அளவுக்கு கதைகள் எழுதாத வரை சந்தோஷம்.

    கருவின் அளவில் எதுவும் இல்லை, ஆழத்தில் தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்வது என் காதுக்கு கேட்கிறது, அது சரியாக படும் பட்சத்தில் ஒரு நாலு அஞ்சு கதைகளை சேர்த்து போட்டால், ஒரு திரி பார்த்த பயன் முழுமை அடையும்.

    தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற குருட்டு நம்பிக்கையுடன்.......... நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    குழந்தைகள் செய்யும் சிறிய தவற்றை பெரிது பண்ண கூடாது என்ற கருத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது இந்த கதை. பாராட்டுக்கள்.

  4. #4
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    இனிய தக்ஸ் அவர்களுக்கு,

    குட்டிக்கதைகள் வரிகள் குறைந்து வரும் ஹைக்கூ கவிதைகளைப்போல, நறுக்கென்று குட்டுவதுபோலவும் எழுத வேண்டும் என்று தான் வரிகளை சுருக்கி எழுதுகிறேன். மற்றபடி சற்றே பெரிரிரிரிரிய கதைகளும் எழுதாமல் இல்லை. உங்களுக்காகவே வேட்டி சட்டை எனும் கதையை பதிந்திருக்கிறேன். படியுங்கள்.
    உங்கள் உணர்வுகளுக்கு நன்றி.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ஐரேனிபுரம் பால்ராசய்யா View Post
    இனிய தக்ஸ் அவர்களுக்கு,

    குட்டிக்கதைகள் வரிகள் குறைந்து வரும் ஹைக்கூ கவிதைகளைப்போல, நறுக்கென்று குட்டுவதுபோலவும் எழுத வேண்டும் என்று தான் வரிகளை சுருக்கி எழுதுகிறேன். மற்றபடி சற்றே பெரிரிரிரிரிய கதைகளும் எழுதாமல் இல்லை. உங்களுக்காகவே வேட்டி சட்டை எனும் கதையை பதிந்திருக்கிறேன். படியுங்கள்.
    உங்கள் உணர்வுகளுக்கு நன்றி.
    நன்றி ராசய்யா
    விமர்சனங்களை தவறாக எடுத்துக் கொள்ளாமல் பதில் அளித்ததுக்கு நன்றி ராசய்யா. உங்களின் புதிய கதையை படித்து விமர்சனம் எழுதுகிறேன்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தண்டனைகளில் மிகப்பெரியது மன்னிப்பு. அதற்கு ஈடானது பூங்கோதைகளின் அறைகள். இதய அறைகளில் புகுந்து வியாபித்து உணர்வுகளைத் தூண்டித் துய்மைப்படுத்தும் தண்டனைகளை விட கண்டிப்புகள் எவ்வகையிலும் உயர்ந்தவை இல்லை. அருமை பால் ராசையா.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அழகான கதை.. அருமையான வாழ்வியல் தத்துவம்..

    பாராட்டுகள் ஐபாரா அவர்களே..

    இதையொட்டிய கருவில் பாரதி ஒரு சிறுகதை நம் மன்றில் தந்த நினைவு..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    சிறிய ஆனால் ஆழமான கதை. புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தை ஜாலங்கள் செய்து கதாசிரியர் என்று உலா வரும் மன்றத்தில் உங்களது எழுத்துக்கள் கருத்து செறிந்தவை. பாராட்டுக்கள்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரை மைந்தன் View Post
    சிறிய ஆனால் ஆழமான கதை. புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தை ஜாலங்கள் செய்து கதாசிரியர் என்று உலா வரும் மன்றத்தில் உங்களது எழுத்துக்கள் கருத்து செறிந்தவை. பாராட்டுக்கள்.
    ஒருத்தரை புகழ இன்னொருத்தரை இகழ்வது சரியில்லை மதுரை ஐயா..

    புளிக்காத மது வெறும் பழரசம்..

    புளிக்காத கள் வெறும் பதனி..

    புளித்தால் தானையா போதை..
    அன்புடன் ஆதி



  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    ஒருத்தரை புகழ இன்னொருத்தரை இகழ்வது சரியில்லை மதுரை ஐயா..

    புளிக்காத மது வெறும் பழரசம்..

    புளிக்காத கள் வெறும் பதனி..

    புளித்தால் தானையா போதை..
    உங்களது பின்னூட்டம் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. எனது நல்ல படைப்புக்களை பாராட்ட தவறினாலும் என் வார்த்தைகளில் உள் அர்த்தம் கண்டு பிடித்து குறை கூறுவது உங்கள் வாடிக்கை ஆகி விட்டது. இதனால் தான் மனறத்திலிருந்து விலகுவது என்றிருந்தேன். அறிஞர் போன்ற இனிமையான நண்பர்களின் ஆதரவால் இன்றும் இணைந்திருக்கிறேன்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரை மைந்தன் View Post
    உங்களது பின்னூட்டம் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. எனது நல்ல படைப்புக்களை பாராட்ட தவறினாலும் என் வார்த்தைகளில் உள் அர்த்தம் கண்டு பிடித்து குறை கூறுவது உங்கள் வாடிக்கை ஆகி விட்டது. இதனால் தான் மனறத்திலிருந்து விலகுவது என்றிருந்தேன். அறிஞர் போன்ற இனிமையான நண்பர்களின் ஆதரவால் இன்றும் இணைந்திருக்கிறேன்.
    , என்னங்கையா பொசுக்கு பொசுக்கு னு கோப படுறீங்க..

    இந்த பதில் போடும் போது யோசிச்சு யோசிச்சுதான் போட்டேன்..

    ஏன்னா நீங்க சட் சட்டு கோபபடுறத கவனிச்சிருக்கேன்..

    பொத்தாம் பொதுவா ஒரு சொல்லை எறியிரப்போ.. அது அமைதியான குளத்தில் எறியிற கல்லாதான் போய்டும்..

    இதற்கு முன் எங்காவது நான் இப்படி உங்க கிட்ட சொல்லிருக்கனா ? யோசிச்சு பாருங்க.. உங்க பின்னூட்டம் பால்ராஸண்ணாவ ஊக்கப் படுத்தும், ஆனா பலர புண்படுத்தும்.. புரிஞ்சுக்கோங்க ஐயா..

    எது நான் செய்வது உங்களுக்கு பிடிக்கலையோ, அதை நீங்க மற்றவங்களுக்கு செய்யாமல் இருக்கலாம் இல்லையா.. ?
    அன்புடன் ஆதி



  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நமக்கு கீழே உள்ளவர்கள் தப்பு செய்கையில் பட்டென பொங்கி விடும் நாம், நாம் தவறு செய்கையிலெல்லாம் அடக்கி வாசித்திடவே விளைகிறோம்...

    குறைந்த வரிகளில் நிறைவான கருவினை எடுத்துக் கூறும் உங்களது முயற்சிகளுக்கு என் மனதார்ந்த பாராட்டுக்கள் பால்ராசையா அவர்களே, தொடர்ந்தும் வித்தியாசமான உங்களது முயற்சிகள் இது போன்ற அழகான வெற்றிகளைப் பெறட்டும்...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •