Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: துபாய் கணவா....!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    துபாய் கணவா....!!!

    நேற்று நண்பரொருவர் எனக்கனுப்பிய மின்னஞ்சலில் இந்தக் கவிதையைக் கண்டதும் பிடித்த வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

    மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
    கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
    அழுவதும்... அணைப்பதும்...
    கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
    இடைகிள்ளி... நகை சொல்லி...
    அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
    ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
    எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
    ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

    கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
    ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

    4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...

    2 வருடமொருமுறை கணவன் ...

    நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
    ٌ இது வரமா ..? சாபமா..?

    பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

    ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
    எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
    இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

    ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
    பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

    ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
    அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

    பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
    ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

    வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


    உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
    ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

    -வண்ணத்துப்பூச்சியார்-
    Last edited by சிவா.ஜி; 01-05-2010 at 03:55 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வாஸ்தவம் தான். ஆனால் எத்தனை நாள் பாசத்துடன் குடும்பத்தினை நடத்துவது.??? பணம் வேண்டுமே... பாசம் சாப்பாடு போடுமா? அங்கே தானே இடிக்கிறது. ஊரில் அன்றாட உழைப்பிற்கு வழி இருக்கும் என்றால் சொர்க்கம் அங்கு தானே.........

    இல்லையென்றால் விதியா? இங்கு வந்து மாரடிக்க? இல்லையா சிவாண்ணா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பணமா?? பாசமா?? எனப் பட்டிமன்றமே வைத்துவிடலாம் போல....
    பணத்துடன், பாசத்துடன் துபாயில் வாழ வாய்ப்பு கிடைத்தால் சந்தோசமே...
    நன்றி சிவா.ஜி.

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by அறிஞர் View Post
    பணமா?? பாசமா?? எனப் பட்டிமன்றமே வைத்துவிடலாம் போல....
    பணத்துடன், பாசத்துடன் துபாயில் வாழ வாய்ப்பு கிடைத்தால் சந்தோசமே...
    நன்றி சிவா.ஜி.
    பணம் தான் அங்கும் நிர்ணயிக்கிறது அண்ணா...

    முன்பு 3000 DHS எல்லையாக இருந்த வருமானத்தொகை தற்சமயம் 10000 DHS ஆக ஐ.அ.ரா அரசு மாற்றிவிட்டது. அதுவும் 6 மாத வங்கி விபரணம் காட்டினால் தான் குடும்பத்தினை அழைக்கலாம்...

    இங்கு சிறப்பாக வாழ பணம் மற்றும் வேலைசெய்யும் கம்பனிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன...

    நான் பார்த்து பொறாமைப்பட்ட நபர் பாரதி அண்ணா... (துபாயில்) கண்பட்டுவிடக்கூடாது... ஆனால் உண்மையில் கொடுத்துவைத்தவர். அவருக்கு துபாயில் இருக்கிற நினைப்பே இருக்காது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் Ranjitham's Avatar
    Join Date
    13 Sep 2008
    Location
    புதுக்கோட்டை
    Posts
    104
    Post Thanks / Like
    iCash Credits
    16,816
    Downloads
    1
    Uploads
    0
    என்னுடைய கணவரின் 15 வருட இரானுவ வாழ்க்கையில் 11 வருடங்கள் அவருடன் இருந்துள்ளேன் 1977-1989. இரண்டு குழந்தைகள் பிரசவத்திற்க்கும் என் தாய் தில்லி மற்றும் பெங்களுர் வந்தார். பலசமயங்களில் ஒரெ அரையில் குடும்பம் நடத்தியுள்ளோம். எல்லையோர ‘குவார்டர்சில் சேரிங்முரையில்’ ஒரெ வசிக்கும் வழி, பலமுரை குடிமாரியுள்ளோம். சிருவயதில் கனவருடன் வசித்த சந்தோசத்தில் மற்ற சிரமங்கள் பெரிதாய் தெரியவில்லை. இன்று நினைத்தாலும் புல்ல்ரிக்கின்றது. இந்த பழாய் போன வருமையின் காரனமாக பிரிந்த கனவனைநினைத்து வந்த கவிதை கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சேர்ந்துவாழ வழி இல்லையா? வெளிநாட்டில் 50 ஆயிரம் சம்பாதிப்பதும் உள்நாட்டில் 5 ஆயிரம் போதுமனது, என் கருத்து். கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் பிரிவை தவிற்கலாமே.
    நன்றியுடன்
    இரன்சிதம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by Ranjitham View Post
    என்னுடைய கணவரின் 15 வருட இரானுவ வாழ்க்கையில் 11 வருடங்கள் அவருடன் இருந்துள்ளேன்

    இந்த பழாய் போன வருமையின் காரனமாக பிரிந்த கனவனைநினைத்து வந்த கவிதை கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சேர்ந்துவாழ வழி இல்லையா? வெளிநாட்டில் 50 ஆயிரம் சம்பாதிப்பதும் உள்நாட்டில் 5 ஆயிரம் போதுமனது, என் கருத்து். கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் பிரிவை தவிற்கலாமே.
    நன்றியுடன்
    இரன்சிதம்
    தங்களை போன்று பலர் எண்ணினால் குடும்பங்கள் ஒன்றாய் இணைந்து இன்புறும்.
    வறுமையின் கோடு, செழிப்பாக வாழ எண்ணும் எண்ணம்.. சிலரை இந்த சூழ்நிலைக்கு தள்ளுகிறது.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சொந்த நாட்டில் உழைப்பில்லை.
    வந்த நாட்டில் உறவில்லை.

    வரமா சாபமா என்று வகுத்துக்கொள்ள முடியாத நிலை.

    பகிர்வுக்கு நன்றி சிவா.ஜி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by அக்னி View Post
    சொந்த நாட்டில் உழைப்பில்லை.
    வந்த நாட்டில் உறவில்லை
    .

    வரமா சாபமா என்று வகுத்துக்கொள்ள முடியாத நிலை.

    பகிர்வுக்கு நன்றி சிவா.ஜி...
    அருமையான வரிகள் கண்கள் ஒரு நிமிடம் கலங்கி விட்டன..... பகிர்வுக்கு நன்றி அண்ணா
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by Ranjitham View Post
    இந்த பழாய் போன வருமையின் காரனமாக பிரிந்த கனவனைநினைத்து வந்த கவிதை கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சேர்ந்துவாழ வழி இல்லையா? வெளிநாட்டில் 50 ஆயிரம் சம்பாதிப்பதும் உள்நாட்டில் 5 ஆயிரம் போதுமனது, என் கருத்து். கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் பிரிவை தவிற்கலாமே.
    ரஞ்சிதம் சொன்னது போல் அந்த 5000 ரூபாயில் கூட அளவுடன் செலவழித்து மிச்சம் பிடிக்கும் குடும்பங்களும் நம் நாட்டில் உள்ளது.

    பணம் எவ்வளவு இருந்தாலும் பாசத்தால் கிடைக்கும் நிம்மதி குடும்பத்துடன் இருக்கும்போது மட்டுமே கிடைக்கும். பணம் ஒரு போதை. அது கிடைக்க கிடைக்க இன்னும் அதிகமாக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் போதை. பெரும்பாலோர்கள் தேவைக்காக பணம் சேர்க்க செல்லுபவர்களே. ஆனால் போதுமான பணம் சேர்த்த பிறகும் அவர்களுக்கு அதன் மீது வரும் ஆசை குடும்ப பிரிவை அதிகமாக்குகிறது.

    கவிதை பிரிந்த மனைவியின் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது அண்ணா... பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா....
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கிழித்து விடு கணவா... கிழித்துவிடு என்று சொன்னதும் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது என்னவோ திருமண அத்தாட்சிப் பத்திரம்(தாள்) தான்.

    பின்னர்த்தானே விளங்கியது டுபாயிலிருக்கும் கணவனின் பயணச் சீட்டை கிழித்துவிட்டு தொடர்ந்தும் டுபாயிலேயே இருக்கச் சொல்லியிருப்பது...

    இதுக்கு மதி அண்ணாதான் பதில் தரணும்
    ஏன்...
    சிவாஜி கூட தரலாம்.
    Last edited by விகடன்; 05-03-2009 at 08:51 AM.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    அன்புரசிகன் சொல்வது பணத்துடன் பாசத்துடன் துபையில் வாழ ஓன்றை இழந்தால் தான் ஒன்றை பெறமுடியும்.அதனால் அது சாபமா அல்லது வரமா என்பது அவரவர்களின் மனநிலை பொறுத்தது.

    இந்த கவிதை கணவர்களை பிரிந்து வாழும் ஒட்டு மொத்த பெண்களின் குமுறலாக இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி சிவாண்னா

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    ஆம் ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் ஆனால் எதை இழக்க வேண்டும் என்பதில் தான் தெளிவாக இருக்க வேண்டும்

    கசப்பான உண்மைகளை இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •