Results 1 to 5 of 5

Thread: ஈழத்துப் பாப்பா பாடல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0

    ஈழத்துப் பாப்பா பாடல்

    மின்னஞ்சலினூடாக பெற்றுக்கொண்ட விடயம்.


    ஈழத்துப் பாப்பா பாடல்


    ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
    ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
    பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
    பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

    சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
    சீறும் விமானம்வரும் பாப்பா
    எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
    எவரும் இல்லையடி பாப்பா

    சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
    இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
    வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
    மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

    பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
    வகைவகையாய் வீசினான் குண்டை
    புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
    நகைக்கிறான் எதிரி பாப்பா

    தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
    நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
    பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
    பேய்களின் ஆட்சியடி பாப்பா

    யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
    சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
    இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
    மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

    காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
    காட்டில் வாழ்கிறோம் பாப்பா
    தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
    நாளும் வாழ்கிறோம் பாப்பா
    தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
    தலைவிதி இதுதான் பாப்பா

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    தலைவிதி தான். வேற என்ன சொல்ல...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    ஹிம்..............

    பாரதியார் எதை நினைச்சு எழுதினாரோ தெரியல்லை.. இந்த மெட்டு மட்டும் எம் மக்களுக்கும் பாடலியற்ற கைகொடுத்திருக்கு.....

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பகிர நினைத்தேன்.

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி விராடா...

    பாரதியார் இன்று வன்னியிலிருந்தால், இப்படித்தான் எழுதியிருப்பாரோ..

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    எப்போதும் இது போலவே இருக்காது நண்பர்களே.!
    நமக்கும் ஒரு காலம் வரும்; அப்போது நாம் இழந்ததை வேண்டுமானால் திரும்ப கிடைக்காமல் போகலாம். ஆனால் இழந்ததர்க்கேல்லாம் காலம் பதில் சொல்லும். பாப்பாக்கள் எல்லாம் வீரர்கள் ஆவதுபோல் பாடல் சொல்லிக்கொடுங்கள். பிற்காலத்தில் பயன்படும்.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •