vwewgw
vwewgw
Last edited by ரங்கராஜன்; 22-02-2023 at 09:16 AM.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
அண்ணா திருநங்கையாக மாறும் ஆண்களின் மனநிலையை உணர்த்துகிறது இந்தக்கதை. ஆனால் அப்படி வரும் மாற்றம் 15 வயதிலேயே தெரியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். தமிழ் ரொம்ப பாவம்.
இந்த வார்த்தைகளில் தெரிகிறது அவனின் மாற்றம், முடிவை படித்த பிறகு.“தூதூஊஊஊ, நீ தான் அந்த தமிழா, என்னடி செஞ்ச என் பிள்ளையை, என்ன செஞ்சீடீ மயக்கின அவனை, எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானு என் பின்னாடி சுத்துவான். இப்ப என்னடான்னா கிட்ட கூட வரமாட்டுறான், எப்ப பார்த்தாளும் ஒரு ரூம்ல அடஞ்சி கிடக்குறான்............................நீ நல்லா இருப்பியா நாசமா போய்டுவ நாசமா போய்டுவ” ரமணியின் அம்மா.
வாழ்த்துக்கள்..
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
நன்றி லீலுமா
இந்த வயது குறிப்பிட்ட வயதுனு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். நான் பார்த்த சில ஆவணப்படங்களில் சிலர் 19 & 20 வயது வரை கூட ஆண் இனமாக இருந்து அப்புறம் திருநங்கையாக மாறி இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் இந்த மாறுதல்கள் ஒன்றும் ஒரே நாட்களில் நடப்பது கிடையாது, படி படியாக நடப்பது. இதில் என்ன பிரச்சனை என்றால் தான் உண்டாகும் மாற்றங்களை அவர்கள் உணர்வது கொஞ்சம் நேரம் ஆகும், உணர்ந்ததுக்கு அப்புறம் அவர்கள் இது எதற்கான மாற்றங்கள் என்று புரிந்துக் கொள்ள இன்னும் நேரம் ஆகும், அதன்பின் அதை ஒத்துக் கொள்ள இன்னும் நேரம் ஆகும்................................ நன்றி
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
தமிழரசியை விட்டு ரமணி விலகிப்போனதற்கான காரணத்தை அறிந்தபோது, அவனை நினைத்து பாவமாக இருந்தது.
ஆனா...அவன்தான் திருநங்கையா மாறிட்டான். ஆனா தமிழ் அப்படியேத்தானே இருக்கிறா. அப்ப பாத்த உடனே அவனுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கனுமே..
அந்த மஞ்சள் புடவை அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.
அப்ப இது எதுக்கு?
கதை சொன்ன விதம் நல்லாருக்கு தக்ஸ். ஆனா...என்னவோ ஒண்ணு குறையற மாதிரி இருக்கு.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கதை எப்படியோ போய் எப்படியோ முடிந்து விட்டது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் DAKS
அன்புடன் சுபா
நன்றி அண்ணா
உங்களின் முதல் கேள்விக்கான பதில் அண்ணா, திருநங்கையாக மாறி இருந்த ரமணி ரோட்டை கடக்கும் பொழுது, தமிழரசியின் கார் இடித்து விட்டது. தடுமாறி கீழே விழுந்த ரமணி எழுந்து தன்னுடைய அலங்காரத்தை சரி செய்து கொண்டு இருந்தான்(ள்), தமிழரசியை பார்க்கவே இல்லை.
2. அவள் சரி செய்துக் கொண்டு இருக்கும் பொழுது, தமிழரசி விபத்து ஆனா டென்ஷனில் தமிழில் பேசினாள், அதாவது இந்தி பேசும் மும்பை நகரத்தில் தமிழில் பேசினாள். அப்புறம் அவளாகவே இதை உணர்ந்து ஆங்கிலத்தில் சாரி என்று சொல்கிறாள். தமிழரசியை பார்க்காமல் தன்னுடைய செருப்பை சரி செய்துக் கொண்டு இருந்த ரமணி, தமிழரசி பேசிய தமிழை மட்டும் காதில் வாங்கிக் கொண்டு, என்னம்மா தமிழா என்கிறான்(ள்). (அதாவது தமிழை தாய் மொழியாக கொண்டவளா?). இதற்கு தமிழரசி ஆமாம் என்று கூறி அறிமுகத்திற்காக தன்னுடைய பெயரை தமிழரசி என்று சொல்கிறாள். அந்த பெயரை கேட்டவுடன் ரமணி திடீர் என்று நிமிர்ந்து பார்க்கிறான் (தமிழரசியை ரமணியும் மறக்கவில்லை). அப்பொழுது தான் இருவரும் முகத்துடன் முகம் பார்க்கிறார்கள். சில வினாடிகளில் இருவரும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்,,,,,,,,,,,,,,,,,,, ரமணியும் வெட்கத்துடன் திருநங்கையாக இருப்பது தான்தான் என்று ஒத்துக் கொள்கிறான்................................................... அப்படியே கண்ணீருடன் இருவரும் வார்த்தை வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
நீங்கள் கூறுவது உண்மை தான், எனக்கே எதோ ஒன்று குறைவது போல தான் இருக்கிறது, அதுவும் இல்லாமல் இந்த கதையை நான் முடிவு யோசித்துவிட்டு கற்பனை செய்தது. ஒருவேளை அதனால் இருக்கலாம் அண்ணா.
தவறுகள் இருந்தால் தம்பியை திருத்துங்கள் அண்ணா.......
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
திருநங்கைகளின் பற்றி பல கதைகள் வருகிறது..
ஏதேனும் பாதிப்பா..
நன்றாய் எழுதியிருக்கிறீர்கள் தக்ஸ்... வெறும் வசனங்களை மட்டும் தந்து சூழ்நிலையை படிப்பவரின் யூகத்திற்கே விட்டுவிடும் யுக்தி நல்லா இருக்கு.
திருநங்கையாக மாறும் ரமணி. (இருபாலருக்கும் பொருந்தும் பெயர்). ஆயினும் கதையில் ஒரு முடிவு இல்லாதது போன்ற தோற்றம். ரமணி திருநங்கையாக மாறிய சஸ்பென்ஸ் மட்டும் தான் முடிவா? இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா? சிவாண்ணா சொன்னது போல் ஏதோ ஒன்று குறைகிறது கதையில். கதையுடன் ஒட்டாத முடிவு போல்.
இறுதியாக, திருநங்கை பற்றிய கதை என்றானபின் பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளான அவன், அவள் ஆகிய சொற்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். திருநங்கை பற்றி ராகவன் எழுதிய கதை ஒன்று. பேர் மறந்துவிட்டது. அதில் இறுதிவரை சந்தித்தான், வந்தாள் போன்று பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே இல்லாது எழுதியிருப்பார். இந்தக் கதையிலும் அது போல் செய்திருந்தால் கதையோடு ஒன்றாத முடிவு போன்ற உணர்வு இல்லாமலிருக்கும்.
நன்றி மதி
கதையின் குறைகளாக நான் நினைத்ததை அழகாக வரிசை படுத்தி எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது போல இந்த கதையில் பல இடங்களில் நான் தடுமாறி இருக்கிறேன். எப்பொழுதும் ஒரு கதையை எழுதி விட்டு, மன்றத்தில் பதித்து விட்டு ஒரு வாசகனாக இந்த கதையை படித்தேன். எதோ அவசரத்தில் எழுதியது போல ஒரு உணர்வு. அப்புறம் காட்சி விவரிப்பிலும், வார்த்தைகளும் நான் எதிர்பார்த்த தாக்கத்தை உண்டு பண்ணவில்லை. நான் தலைப்பை அவனது (அவன்+அது) என்று வைத்திருந்தேன். அதனால் ஆரம்பத்திலே திருநங்கை பற்றிய கதை என்று முடிவு யாரும் செய்து விடக்கூடாது என்பதால் தான் அவன் அவள் என்ற குறியீடு வார்த்தைகளை உபயோகிக்க வேண்டியாதாகி விட்டது.
அப்புறம் நான் இந்த கதையை ஒரு திருநங்கையின் பார்வையில், அவளுடைய சுகதுக்கங்களை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் திருநங்கைகளை பார்த்து இருக்கிறேனே தவிர, அவர்களிடம் பேசியது இல்லை. அவர்களின் வாழ்க்கையை பார்த்தது இல்லை. அதனால் ஆரம்பத்திலே தடுமாறி விட்டேன் மதி.
என்னுடைய அடுத்த கதைகளில் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன், நன்றி
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
இது கௌதம்மேனன் ஸ்டைலில் இருக்கு.. ஃபாஸ்ட் ஃப்ரேம்ஸ்.. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த நினவுகள் தோன்றித் தோன்றி மறையும் வேகம் படிக்கும் போது சற்று குழப்பமா இருந்தாலும்..
கண்ணை மூடி ஒவ்வொரு காட்சியா ஃபோகஸ் அண்ட் ஃபேட் அவுட் பண்ணினா..
அழகா இருக்கு.
வசனங்களுக்கு இடையில் விவரணங்கள் மிகக் குறைவா இருப்பதால் மக்களுக்கு எதுவோ குறைவதாக உணர்வு ஏற்படுகிறது..
உடலின் புதிர் மாற்றத்தில் ஒரு நல்ல வாழ்க்கை சிதறுண்டு போவது ...
ஒரு பெண்ணை காதலிக்கும் ஒருவனுக்கு இந்த மாற்றம் வருமா என்ற கேள்வி...
இரண்டும் கொஞ்சம் விளக்கப்பட மனசு விரும்புகிறது..
பதின்ம வயதின் இறுதியில் ஏற்படும் மாற்றம் என்பதால் மன உளைச்சல்கள் மிக அதிகமாகவே இருந்திருக்கும். பூட்டிய அறை வாழ்வும், அனைவரிடமிருந்து விலகலும், மனத்தடுமாற்றத்தில் தடுமாறும் கல்வியும்.. காலவெள்ளத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவுகளும்...
ஒரு நாவலா எழுத வேண்டியதை சிறுகதையா எழுதிட்டீங்க தக்ஸ்...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks