Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast
Results 49 to 60 of 100

Thread: புத்தம் புது பூமி..!!(தொடர்கதை)-நிறைவுற்றது

                  
   
   
  1. #49
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அடுத்து.. அடுத்து.. அடுத்து....?????
    இரண்டாம் பாக இறுதியில் இருந்த அந்த மர்மம் இப்போது அவிழ்க்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக எழுப்பப்படப்போகும் அந்த இருவரும் இறக்கப் போகின்றார்கள் என்பது தெரியும். ஆனால் எப்போ... எப்படி..?

    தங்களின் அறிவியல் சம்பந்தமான கற்பனாசக்தி வியக்க வைக்கிறது சிவாண்ணா.. சொல்லும் விஷயங்கள் அப்படியே கண்முன் விரிகிறது... தொடருங்கோ....
    ரொம்ப நன்றி மதி. ஆனா எனக்கெல்லாம் முன்னோடிகள் நீங்கள். உங்களிடமிருந்து பெற்றதை வைத்து நானும் ஏதோ ஜல்லியடிக்கிறேன்.

    நீங்களனைவரும் இருக்கும் தைரியத்தில் தொடர்கிறேன். நன்றி மதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #50
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கையைக் கொடுங்கள் சிவா....
    சிறப்பு பாராட்டுகள்..

    மருத்துவம், கணினி, பண்பாட்டு மாற்றங்கள், அரசியல் நடப்புகள் என
    பரந்த ஆழ்ந்த அறிவும்,
    நல்லதை எண்ணி விழைந்து எழுச்சியுறும் பெரிய மனதின் கற்பனை வளமும்

    கைகோர்த்து வரையும் கதையோவியம்..

    பயனுள்ள அழகுகள் குறைவு..
    இக்கதை அபூர்வ மருந்து மலர்!

    வாழ்த்துகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    கதையில் புதுமையும் இல்லை அறிவியலும் இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றமே. நன்றாக எழத முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  4. #52
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    பயனுள்ள அழகுகள் குறைவு..
    இக்கதை அபூர்வ மருந்து மலர்!

    வாழ்த்துகள்!
    உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இளசு. மருத்துவம்...அதைத் தொடத்தயங்கினேன். சரி பிற்காலத்தில் நடக்கப்போவதுதானே என கொஞ்சமாய் ஏதோ எழுதியிருக்கிறேன்.

    வழக்கம்போல உங்கள் ஊக்கம் எனக்கு மேலும் உற்சாகத்தையளிக்கிறது. மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #53
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரை மைந்தன் View Post
    கதையில் புதுமையும் இல்லை அறிவியலும் இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றமே. நன்றாக எழத முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
    மிக மிக உண்மை மதுரைமைந்தன் அவர்களே. இந்தக்கதையில் எந்தபுதுமையும் இல்லை. அறிவியலும் இல்லை. நான் இதை விஞ்ஞானக்கதை என்று பிரகடணப்படுத்தவில்லையே...பின் இதில் அறிவியலைத் தேடினால் எப்படி கிடைக்கும்?

    அதேபோல யாரும் சொல்லாத புதுமையை சொல்ல நானென்ன சுஜாதாவா? ஒரு சாதாரண எழுத்துக்காரன். உங்களைப்போன்றோர் என் கதையை வாசிப்பதே எனக்குப் பெருமை. இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #54
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அத்தியாயம்-4


    லார்ஜ்குஷ் மற்றும் காஜலக்ஷேவின் நாடுகளிலிருந்து இரண்டு குழுக்கள் தலைநகரத்துக்கு வந்திறங்கியிருந்தார்கள். தங்கள் தலைவர்களை வரவேற்று அழைத்து செல்ல. இன்னும் ஒரு வாரத்தில் இருவரும் உறைநிலையிலிருந்து உயிரோடு வரப்போகிறார்கள். இரண்டு குழுக்களுமே கொஞ்சம் பிசகானவை. ஏராளமான ரத்தத்தைப் பார்த்தவர்கள். மிக நீண்டகாலமாக பார்க்காதவர்கள். மீண்டும் பார்க்கத் துடிப்பவர்கள்.

    ரகசிய ஆலோசனை செய்ய அவர்கள் திறந்தவெளி மைதானத்தை தேர்ந்தெடுத்ததிலிருந்தே தெரிகிறது எவ்வளவு நரித்தனமானவர்களென்று. அரசாங்கப் பாதுகாப்புக்காக எல்லா இடங்களிலும் ஒட்டுக்கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை எப்போதும் இயங்காது. குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட, அரசாங்கத்துக்கோ, அல்லது மனித இனத்துக்கோ எதிராக பேசப்படும் பல வார்த்தைகளைத் தொகுத்து அதனுள் ஏற்றியிருந்தார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகள் பேசப்படும்போது மட்டும் செயல்படத்தொடங்கும்.

    அதனைத் தெரிந்துகொண்டுதான் எந்தவிதமான கருவிகளும் இல்லாத மைதானத்தில் கூடிப்பேசினார்கள்.அவர்கள் பேச்சில் ஒரு மாபெரும் மாற்றத்துக்காக காத்துக்கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்தது. அதற்கான சரியான தலைமையை எதிர்பார்த்திருந்தார்கள். அந்த தலைமை கிடைத்ததும் அவர்களின் செயல்பாடுகள் தொடங்கும். அதில் இரக்கம் என்பதோ...மனிதம் என்பதோ சற்றும் இருக்காது. இந்த அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ரசாயண ஆயுதங்களை மறைவாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவை பிரயோகிக்கப்பட்டால் மக்கள் கூட்டம் கூட்டமாக செத்துவிழுவார்கள். அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள்.

    கூட்டம் கலைந்து அவர்கள் எழுந்துபோனபிறகு அந்த இடத்தில் பிணவாடை வீசிற்று.


    ந்த விளையாட்டு மைதானத்தில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்தார்கள். இடப்பற்றாக்குறை இருந்தும் விளையாட்டுக்காக அத்தனை பெரிய அரங்கத்தை அமைத்திருந்தார்கள். ஆனாலும் அதையும் பல்நோக்கு வியாபார அங்காடிகளும், அலுவலகங்களும் உள்ள கட்டிடமாகவே அமைத்திருந்தார்கள்.அங்கே நடந்துகொண்டிருக்கும் சடுகுடு விளையாட்டை மக்கள் ஆரவாரத்துடன் ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ஆட்டம் தடைசெய்யப்பட்டிருந்தது. மிகப்பரபரப்பான ஆட்டமான சடுகுடு எல்லோருக்கும் பிடித்திருந்தது. உலக விளையாட்டாக எதனை தெரிவு செய்யலாமெனக் கருத்துக்கணிப்பு செய்தபோது ஏராளமான வாக்குகளைப் பெற்று சடுகுடு முதலிடத்தைப் பெற்றதால் அதையே உலக விளையாட்டாய் தேர்ந்தெடுத்தார்கள்.

    அனைவரின் கைகளிலும் இளநீர்பாணம் இருந்தது. கோக் வகையறாக்கள் அறவே நிறுத்தப்பட்டிருந்தது. புகையிலை விளைச்சல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. புகைபிடிக்கும் வழக்கம் சுத்தமாக இல்லாமலிருந்தது.
    அதனால் மாசுபடாத காற்றை சுவாசித்துக்கொண்டு ஆட்டத்தை ரசித்தார்கள்.

    தொரப்பாவின் பண்ணை வீட்டிலிருந்து திரும்பிய மறுநாள் ரேவா, ஷாபோ, மிலா மூவரும் விளையாட்டரங்கத்துக்கு வந்திருந்தார்கள். உற்சாகக்கூச்சலோடு அவர்களும் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருக்கும்போது ஷாபோ லஷியைப் பார்த்தான். அவளுக்கு அருகில் புதிதாய் ஒரு பெரியவர் தலையில் தொப்பியுடன் இருப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்தான். ரேவாவுக்கும், மிலாவுக்கும் காட்டினான்.

    அருகே சென்றார்கள்.

    ‘ஹாய் லஷி..எப்படி இருக்கிறாய்?”

    “நலம் ஷாபோ. எப்படியிருக்கிறாய் ரேவா...இதுயார் உங்கள் நண்பனா?”

    மிலாவைக் காட்டிக்கேட்டாள்.

    “ஆமாம். இவன் மிலா. வேறு கல்லூரியில் படிக்கிறான். ரசாயனத்துறை. அதுயார் புதிதாக ஒரு பெரியவர் தலையில் தொப்பியுடன்?”

    ஷாபோவின் கேள்விக்கு லஷி பதிலளிக்குமுன் விளையாட்டைக்காண வீட்டிலிருந்து புறப்படும்போது ராகவன் விஸ்வநாதனிடம் சொன்னதை சொல்லவேண்டும்.

    “அப்பா இந்த தொப்பியை அணிந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் அனைவரும் உங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். இன்னும் ஒரு வாரத்துக்கு உங்களுக்கு வேறு எந்த சிகிச்சையும் அளிக்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒருவாரம் கழிந்ததும் உங்களுக்கு சிகிச்சையளித்து வழுக்கை இல்லாமல் செய்துவிடலாம். இப்போதைக்கு இதை அணிந்துகொள்ளுங்கள்”

    என்று சொன்னதால் விஸ்வநாதன் தொப்பியுடன் வந்திருந்தார். இனி லஷியின் பதில்....

    “ஓ.....அவரா. என் தாத்தா. அப்பாவின் அப்பா. சமீபத்தில்தான் உறைநிலையிலிருந்து வெளிவந்தார். உலக விளையாட்டாய் சடுகுடு இருப்பதைக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யமாகி உடனே பார்க்கவேண்டுமென எங்களோடு வந்துவிட்டார்.”

    “ஓ...இவர்தான் அந்த முதல் உயிர்தெழுந்த மனிதரா? மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாரே?”

    “ அவருக்கு வயது 50. ஆரோக்கியமாக இல்லாமல் எப்படியிருப்பார்?”

    “அட அப்பாவுக்கு 50 மகனுக்கு....?”

    “நாற்பத்தியாறு”

    “வேடிக்கையாக இருக்கிறது. ஆச்சர்யமாகவும் இருக்கிறது”


    ஆச்சர்யமாய் மூன்றுபேரும் அவரைப் பார்த்தனர். இவர்கள் அவரையே பார்ப்பதைக் கவனித்ததும் அவரே அருகில் வந்துவிட்டார்.

    “லஷி உன் நண்பர்களா?”

    “ஆமாம் தாத்தா. இவன் ஷாபோ, ரேவா...இருவரும் என் வகுப்புத்தோழர்கள். இது மிலா இவர்களின் நண்பன்”

    கைக்குலுக்கினார். இளைஞர்கள் வித்தியாசத்தை உணர்ந்தார்கள். விஸ்வநாதன் புன்முறுவலுடன்,

    “இன்னும் சில நாட்களில் இந்த சொரசொரப்பு சரியாகிவிடும். 20 வருடமாக உறைந்த உடலல்லவா?”

    தங்களின் சின்ன முகமாற்றத்திலேயே அவர்கள் நினைத்ததை யூகித்துவிட்ட தாத்தாவை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அவர் செய்யப்போகும் உதவியால்தான் இவர்கள் மிகப்பெரிய ஒரு காரியத்தை சாதிக்கப்போகிறார்கள் என்பது அப்போது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

    லஷி குடும்பதினரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தங்கள் இருக்கைக்கு திரும்பும் வழியில் தங்கள் குடியிருப்பின் ஆயிரமாவது தளத்தின் குடித்தனக்காரர் அந்தப்பெண்ணுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தான் ஷாபோ. சரியான சந்தர்ப்பம்...இப்போதே அவள் பெண்ணா இல்லையா என்று சோதித்துப் பார்த்துவிடவேண்டும். அவசரமாக அவன் நகர்ந்து செல்லும் திசையைப் பார்த்த ரேவா தனக்குள் சிரித்துக்கொண்டான்.

    “ம்...நீண்டநாள் சந்தேகம். சோதித்துவிட்டு வரட்டும்.” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு மிலாவை அழைத்துக்கொண்டு இருக்கைக்கு திரும்பினான்.

    சற்றுநேரத்தில் திரும்பவந்த ஷாபோ கட்டைவிரலைக் கவிழ்த்துக்காட்டினான்.

    “என்னடா ஆச்சு?”

    “ மிக உயர்தர ரோபோடா ரேவா அது. பெண்ணில்லை”

    என்ன பேசிக்கொள்கிறார்களென்று மிலாவுக்கு விளங்காமல் விழித்தான். அவனுக்கு விளக்கிவிட்டு ஷாபோவைக் கேட்டான் ரேவா...

    “எப்படி தெரிந்தது?”

    “தோளில் கையைப் போட்டேன். லேசாகக்கிள்ளினேன். எந்த உணர்ச்சியுமில்லை. அது ரோபோதான். ஆனால் ரோபோவை எதற்கு உடன் அழைத்துவந்திருக்கிறார். அதற்கென்ன சடுகுடு புரியுமா?”

    “அவரது தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக இருக்கும்”

    “இருக்கலாம்”

    என்று சொன்ன ஷாபோவை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த ரோபோ 'களுக்'என்று சிரித்தாள்.

    “நீ கிள்ளியபோது அதைப் பொறுத்துக்கொள்ள எத்தனைக் கஷ்டப்படவேண்டியிருந்தது தெரியுமா? இன்னும் கொஞ்சநாள் குழப்பத்திலிரு. ஒருநாள் நானே உன்னிடம் வருகிறேன்” மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் கனி.


    டுத்தநாள் மிலாவுக்கு தாத்தா தொரப்பாவிடமிருந்து தன்னை வந்து உடனே சந்திக்கும்படி செய்தி வந்தது. தனது யூனிவர்ஸல் கம்யூனிக்கேட்டரை இயக்கி ஷாபோவையும், ரேவாவையும் அழைத்து செய்தியை சொன்னான். வகுப்பிலிருப்பதால் மாலை போகலாமென முடிவு செய்தார்கள்.


    தொடரும்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #55
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நான்காம் பாகத்தில் முதல் பாதி சமூகம் சார்ந்தது இரண்டாவது பாதி மீண்டும் விஞ்ஞானத்தினுள்..

    ரகசிய ஆலோசனைக்கு திறந்தவெளி மைதானம்
    இளநீர் பானம்

    கருவிகளில் பதிக்கப்பட்ட மொழிதான் பிரச்சனையேஎ!!! ஏன்னா, நம்மவர்கள் இந்தமாதிரி பிரச்சனைகளைப் பேசுவதற்காகவே மொழியைக் கண்டுபிடிப்பார்கள்.... (எஸ்ராவின் ஒரு கதையில் ஒரு குடும்பம் மொழியைக் கண்டுபிடிக்கும். பிறகு அதை நன்கு உபயோகப்படுத்தும்.. அதனாள் வரும் விளைவுகளை அழகாகச் சொல்லியிருப்பார்.)

    சொட்டை போக்க, தொப்பி,

    எல்லாவற்றையும் விட, அந்த குறும்புப் பெண் கனி!!!

    இந்த அத்தியாயம் எதிர்பார்ப்போடு முடியவில்லை.. ஆனாலும் கதையின் அடுத்த அத்தியாயம் எதிர்பார்த்து!!!

    ஆதவன்.

  8. #56
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அதே அதே...

  9. #57
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    இந்த பாகமும் நன்றாக உள்ளது. அடுத்த பாகம் இன்னும் விறுவிறுப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா...!
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  10. #58
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அத்தியாயம்-5


    தொரப்பா...ஆழ்ந்த யோசனையிலிருந்தார். பத்துவருடங்களுக்கு முன் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தார்.

    கடல்மட்டம் உயர்ந்து பல நிலப்பிரதேசங்கள் நீருக்குள் போய்விட உலகம் சுருங்கியது. அந்த சமயத்தில்தான் பல்வேறு நாட்டின் நல்ல தலைவர்களுக்கு ஒரு எண்ணம் ஒருசேர தோன்றியது. great minds thinks alike என்பதைப்போல உயர்ந்தவர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருந்ததில் ஆச்சர்யமில்லை. சுருக்கப்பட்ட இந்த உலகத்தை நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணத்தின் மூலம் இன்னும் சுருக்க நினைத்தார்கள்.

    முதல் கட்டமாக அனைவரும் ஒருவரையொருவர் தொடர்புகொண்டு கூடிப்பேசினார்கள். தங்களுக்குள் விவாதித்து சாதக பாதகங்களை அலசி ஒரு திட்டத்தை தயார் செய்தார்கள். அவர்கள் சிந்தனையில் உருவானதுதான் யுனைட்டெட் கண்ட்ரீஸ் ஆஃப் எர்த். ஒருங்கிணைக்கப்பட்ட உலகம். புத்தம் புது பூமி.

    அதன் ஆரம்பமாக தாங்களின் நாடுகளை முதலில் இணைத்தார்கள். ஒரு குழுவாய் ஆட்சி செய்தார்கள். அவர்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்களை ஆரம்பத்தில் சற்றே கடுமையாக கவனிக்க வேண்டியதாக இருந்தது.
    அதை ஒரு அறுவை சிகிச்சையாகத்தான் அவர்கள் நினைத்தார்கள். ஒன்றாக இணைய மறுத்த நாட்டின் தலைவர்களை வழிக்கு கொண்டுவர முதலில் அவர்கள் நாடியது அந்தந்த நாட்டின் ராணுவத்தளபதிகளைத்தான்.

    அவர்களை சம்மதிக்கவைத்ததும் ராணுவப்புரட்சியை ஏற்படுத்தி நாட்டைக் கைப்பற்றினார்கள். பின்னர் ஏற்கனவே இனைந்திருந்த நாடுகளுடன் அவற்றையும் இணைத்தார்கள். ஏறக்குறைய சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவில் சமஸ்தானங்களை ஒருங்கிணைத்ததைப்போல.

    அனைத்து நாடுகளும் இணைந்ததும் அரசாங்கக்குழுவை அமைத்தார்கள். அந்தக்குழுவினர் ஏகமனதாகத் தேர்ந்தெடுத்த தலைவர்தான் தற்போதைய உலகத்தலைவர் மில்லர். அதிபுத்திசாலி. மிகப்படித்தவர். அதைவிடவும் மிகப்படைத்தவர். அவரது தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்க மருந்து. அவரின் தேர்ந்தெடுப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முன்னாலிருந்த முக்கியப் பிரச்சனை எரிபொருள். தொடர்ந்த யுத்தங்களாலும், பெருகிவிட்ட வாகனங்களாலும் கச்சா எண்னையை அசுரத்தனமாக உறிஞ்சி எடுத்து தீர்த்துவிட்டார்கள். கைவசமிருக்கும் எண்ணையை வைத்துக்கொண்டு இன்னும் ஆறுமாதங்கள்தான் ஓட்ட முடியும் என்ற நிலை வந்தபோது மாற்று பொருளுக்கு தீர்வுகாணவேண்டியது அவசியம் மட்டுமல்லாது அவசரமாகவும் ஆகிவிட்டது.

    அந்த சமயத்தில்தான் ஜெர்மனியின் ஒரு அறிவியலார் மிக சக்திவாய்ந்த மின்கொள்கலனை உருவாக்கினார். அதாவது ஒரு மின்கொள்கலனை ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தின் அளவுவரைக்கூட உருவாக்கி, அதில் மின்சாரத்தை சேமித்துவைத்து ஒரு நகரத்துக்கே விநியோகிக்க முடியும். இந்த சாத்தியக்கூறு தெரிந்ததுமே அடுத்ததாக மின்னலின் சக்தியை சேமிக்க முடியுமா என ஆராய்ந்து அதிலும் வெற்றியடைந்தார்கள். உலகம் முழுவதும் எல்லா நகரங்களிலும் ராட்சச மின்கொள்கலன்கள் உருவாக்கப்பட்டு மின்னலிலிருந்து பெற்ற அபரிமிதமான சக்தியை அதில் சேமித்து மின் விநியோகம் செய்ததில் எரிபொருள் தேவை முழுதுமாகத் தீர்க்கப்பட்டது.

    முன்பெல்லாம் பிளாஸ்டிக் கழிவாக இருந்தது. இப்போது கழிவுகளே பிளாஸ்டிக் ஆகிக்கொண்டிருக்கிறது. கழிவுகளை சில ரசாயண செயலுக்கு உட்படுத்தி அதனை பெட்ரோலியப் பொருட்களாக மாற்றினார்கள். இப்படி பல புதுமைகள் நிகழ்ந்தன. ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிக்கூடங்கள் ஒரு பக்கம் விரிவான பல்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த நாட்டின் மூளை அந்த நாட்டுக்கு உபயோகப்படுகிறது, இந்த நாட்டின் வளம் மற்ற நாட்டுக்குப் போகிறது என்ற எந்த பாகுபாடுகளுமே இல்லாத உலகமாக ஒரு கூரைக்கு கீழ் இயங்கியதில் அபார வளர்ச்சியடைந்தது.

    அப்படி உருவாக்கப்பட்ட இந்த பூமிக்கு படுபாவிகள் இருவரால் ஆபத்து வரவிருக்கிறது. எப்படியாவது அவர்களை உயிருடன் வரவிடக்கூடாது, அவர்கள் வந்தால் அவர்களைப்போல பலரை உருவாக்குவார்கள். போரில்லா நிம்மதியான வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். எனவே அவர்களை வரவிடக்கூடாது என தனக்குள் எண்ணிக்கொண்ட தொரப்பா வின்னூர்தி வந்து நிற்பதை அறிந்து வெளியே வந்தார். மூன்றுபேரையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவர் அந்த புகைப்படங்களை அவர்களுக்குக் காட்டினார்.

    “இதோ இவன் தான் லார்ஜ்குஷ், இது காஜலக்*ஷே. இன்னும் சில நாட்களில் இவர்களை எழுப்பப்போகிறார்கள். நமது ஒருங்கிணைக்கப்பட்ட பூமியின் தற்போதைய தலைவர் அறிவை வளர்த்துக்கொண்ட அளவுக்கு அரசியலை வளர்த்துக்கொள்ளவில்லை. இந்த இருவரும் ஏதாவது தந்திரத்தை செய்து அவரை பதவியிறக்கம் செய்துவிடுவார்கள்”

    “தாத்தா அப்படியென்றால் அவர்கள் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியே வரவேக்கூடாது இல்லையா?”

    “மிகச் சரியாய் சொன்னாய் மிலா. அந்த மருத்துவமனைக்குள் எப்படியாவது நுழைந்து அந்த இருவரையும் நிரந்தர உறக்கத்துள் ஆழ்த்திவிட வேண்டும். நீங்கள் மூவரும்தான் அதை செய்யப்போகிறீர்கள்”

    “எப்படி தாத்தா? அவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அதிதீவிர பாதுகாப்பு இருக்கிறதே. அதன் வாசலில் இருக்கும் லேசர் ஸ்கேனரை தாண்டி போகவேண்டுமானால் அங்கீகரிக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியும்”

    “நீ சொல்வது சரிதான் ஷாபோ. அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். அதற்காகத்தானே உங்களை இங்கே வரச் சொன்னேன்”

    “முதலில் மருத்துவமனைக்குள் போகவேண்டும். அது முடியும். ஆனால் அந்த அறையிருக்கும் தளத்துக்குப் போக சரியான காரணம் தேவைப்படுமே”

    “யோசிக்கலாம்....”

    அப்போது ஷாபோவின் யுனிவர்ஸல் கம்யூனிக்கேட்டர் சினுங்கியது. அதன் ஒரு பொத்தானை அழுத்தியதும் அதிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர் வெட்டவெளியில் திரையாக விரிந்தது. அந்த திரையில் லஷி தெரிந்தாள். முகத்தில் லேசான பதட்டம் தெரிந்தது. அவளைப்போலவே இவனும் அவளுக்குத் தெரிந்ததும் பேசத்தொடங்கினாள்.

    “வணக்கம் ஷாபோ. இப்போது எங்கேயிருக்கிறாய்?”

    “வணக்கம் லஷி. மிலாவின் தாத்தாவின் பண்ணைவீட்டில் இருக்கிறோம்”

    “உடனே எங்கள் வீட்டுக்கு வரமுடியுமா? எங்கள் தாத்தா உன்னையும் உன் நண்பர்களையும் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டுமாம்”

    ‘அப்படியா...இன்னும் அரை மணியில் அங்கேயிருப்போம்.”

    “சரி வாருங்கள்”

    தொடர்பு அறுந்ததும், ஷாபோ ரேவாவையும், மிலாவையும் பார்த்தான். உரையாடலை அவர்களும் கேட்டுக்கொண்டிருந்ததால், தாத்தாவைப் பார்த்து,

    “ஏதோ முக்கியமான விஷயம் போலிருக்கிறது தாத்தா. எனக்கென்னவோ நாம் ஈடுபட்டிருக்கும் இதே விஷயத்தைதான் அவர் பேசப்போகிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது”

    என்று சொன்ன ஷாபோவைப் பார்த்து,

    “எப்படி அப்படியொரு எண்ணம் உனக்குத் தோன்றுகிறது?”

    “தெரியவில்லை. ஏதோ அப்படி தோன்றுகிறது”

    “சரி அப்படியானால் உடனே புறப்படுங்கள். நீ நினைத்ததைப்போல என்றால் உடனே என் திரைக்கு வாருங்கள்”


    தொடரும்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #59
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அசத்தோ அசத்தென்று அசத்துறீங்கள்.... அடுத்த பாகத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #60
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நானும்... காத்திருப்போர் பட்டியலில்.

Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •