\kjwe'igj24'pjgp
\kjwe'igj24'pjgp
Last edited by ரங்கராஜன்; 22-02-2023 at 09:19 AM.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
ஒவ்வொரு மதத்தையும் எப்படி பல வகைகளில் பின் வந்த மக்கள் Interpret செய்து ஒழுகினார்களோ..
அதே போல் தனி மனிதர்களும் தம் அனுபவம் பட்டறிவில் உரசி
இப்படி atheism என்னும் முடிவுக்கு வருகிறார்கள்..
இந்த atheism -ம் ஒரு மதம்போல் குருட்டாம்போக்கில் பரவாத வரை...சரி!
மணிக்கு என் வாழ்த்துகள்!
வேறோரு சூழலில் வேறொரு Interpretation-க்கு மணி மாறினாலும்
அதற்கும் என் முன் வாழ்த்துகள்..
அந்தந்த நேர மன அறிவுக்குரல் சொல்லி
அடுத்தவரை நோகடிக்காமல் நடக்கும்
அனைத்து மனிதருக்கும் வாழ்த்துகள்!
----------------------------------
பாராட்டுகள் தக்ஸ்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நன்றி இளசு அண்ணா
நீங்கள் கூறிய படி ஒரு மனிதனை ஆத்திகன் ஆக்குவதும் நாத்திகன் ஆக்குவதும் மற்ற மனிதர்கள் தான், இந்த சூழ்நிலையில் சுத்தமான நாத்திகன் ஆவது மணியின் பின் வரும் நிகழ்வுகளை பொறுத்து தான் இருக்கிறது.
இல்லை அவனுக்கு வேலை கிடைக்க சாமிக்கு தேங்காய் உடைத்து வேலை கிடைத்து விட்டால், அடுத்த முறை அவனுடைய வேண்டுதல் ஆடு வேட்டுவதாக மாறும், நிகழ்வுகளை பொறுத்ததே மனித மனதின் மாற்றங்கள்.
பகுத்தறிவு பற்றி நம் தாமரை அண்ணா ஒரு திரியே போட்டு விளக்கி இருக்கார், என்னை பொறுத்தவரை பகுத்தறிவு என்பது ஒரு செயலில் இரு பக்கமும் பார்த்து அலசி, செயலின் எல்லா சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து பார்ப்பது தான் பகுத்தறிவு.
எல்லா மனிதர்களிடமும் இருக்கும் insecurity feeling தான் தன்னை விட ஒரு பெரிய சக்தி அல்லது வேறு யாராவது ஒருவரை சார்ந்து இருக்க வைக்கிறது. மணி பகுத்தறிவுடன் இருந்தால் போதும் ஆத்திகனாக இருந்தால் என்ன? நாத்திகனாக இருந்தால் என்ன? மனிதனாக இருந்தால் போதும். என்ன அண்ணா சொல்றீங்க.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
சூப்பர் கதை தக்ஸ்.. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள்
இது மாதிரி பகுத்தறிவு பகலவன்களின் உதயம் அவர்களின் வாழ்க்கையின் நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்தே நடக்கும். மத வெறி பிடித்த மதி அற்றவர்களை திருத்தவே முடியாது. கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அண்ணா..
30 அல்ல இன்னும் 300-க்கும் மேல் உங்களின் சிறுகதை படைப்புகள் பெருகட்டும்.
வாழ்த்துக்கள் அன்பு அண்ணா....
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
நன்றி மதி மற்றும் பாசமலரே, கதையை புரிந்துக் கொண்டு வாழ்த்தியமைக்கு நன்றி
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
தக்ஸ்,
இந்த தீட்டு சம்பிரதாயம் போன்றவற்றை ஒரு ஆதிக்க உணர்வா உபயோகிப்பவங்க சிலபேர்..
மூடநம்பிக்கையா உபயோகிப்பவங்க சிலபேர்...
தன் முன்னோர்களுக்கு கொடுக்கும் மரியாதையா பார்ப்பவர்கள் சிலபேர்..
நம்பியும் நம்பாமல் கடைபிடிப்போர் சிலபேர்..
எப்படியாவது நியாயப்படுத்த எதாவது ஒத்துப்போகும் விஷயம் கிடைத்தால் அதை முட்டுக் கொடுத்து சப்பைக் கட்டு கட்டுவோர் சிலபேர்..
இப்படிப் பலவகையினர் இருக்காங்க...
ஒரு பழைய நினைவு...
அப்பா ஒரு பேனா வாங்கி கொடுத்தா அவருக்கே திருப்பிக் கொடுப்பது நல்லா இருக்குமா?
இல்லை அதை வைத்து ஒரு பரீட்சை, படைப்பு கொடுத்து அந்தப் புகழை சமர்ப்பித்தால் நல்லா இருக்குமா?
கடவுள் கொடுத்ததை அவருக்கே கொடுப்போம் என்பது சரியா? இல்லை அதை சரியான விதத்தில் உபயோகிப்போம் என்பது சரியா?
கொடுத்த பரிசை திரும்பக் கொடுத்தல் என்பது கொடுப்பவனை அவமானப்படுத்தல் ஆகும். ஆகவே இறைவன் கொடுத்ததை சரியாக பயன்படுத்துவதால் மட்டுமே இறைவனை நாம் மரியாதை செய்யமுடியும்.
மூட நம்பிக்கை கொண்டவனுள்ளும் ஒரு வெளிச்சத்தை பரப்பும் சிந்தனையைத் தூண்டும் கேள்வி.
இதைச் சொன்ன பொழுது எதிர்ப்பு எழவில்லை. உதாசீனம் எழவில்லை. உண்மைதான் என குடம் குடமாய் கொட்டுவது குறைந்தது
நம்பிக்கைகள் உரசப்படும் பொழுது தீ உண்டாகிறது.
நெருப்பு என்பது விளக்காக வெளிச்சமும் கொடுக்கலாம். அடுப்பாக உணவும் சமைக்கலாம்.. தீயாக ஊரையும் பொசுக்கலாம்.
சிந்திக்கத் தூண்டும் கேள்விகளுக்கும், உணர்ச்சியைத் தூண்டும் கேள்விகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவது கேள்வி வெளிச்சம் கொடுக்கும் தீவகை.. இரண்டாவது ஊரைப்பொசுக்கும் தீவகை.
இங்கிருப்பதோ கேள்விகள் ஓடும் விதமும், விதண்டாவாதம் என தீ எரிய ஆரம்பிக்கும்போது உடனே விறகை இழுத்து எரிச்சலைக் குறைத்து தீய்ந்து போகாமல் பக்குவமா சமைத்த ஒரு நல்ல உணவு..
சூரிய வெளிச்சம் பரவுவதை தடுக்க முடியாது... ஆனால் இங்கு சாமி (?) விழித்தாரா தெரியாது... அதனால் இந்தத் தீயை வெளிச்சம் கொடுக்கும் தீயா பார்க்கமுடியலை.
பக்குவப்படுத்தி ஒரு நல்ல சிந்தனை உணவை சமைத்த தீயாத்தான் பார்க்கமுடியுது. விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.. சிலர் ஒதுக்கியும் போகலாம்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நல்ல கதை தக்ஸ்.... தாமரை அண்ணாவின் விமர்சனம் அழகு... தன் கருத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறார்...
நான் உனக்களித்த அன்பு...
நீ அனுபவிக்காதது என்றாய்.
நீ எனக்களித்த அன்பு...
இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
நான் சொல்லியிருக்க வேண்டுமோ...
தாமரை அண்ணா
சசி சொன்னது போல உங்களின் விமர்சனம் அழகு, இந்த கதையின் முடிவில் பகுத்தறிவு சூரியன் உதயமாக தொடங்கி உள்ளது அது ஜோலிப்பதும், மறைவதும், மணியின் வாழ்க்கையில் பின் வரும் சம்பவங்களே முடிவு செய்யும்......................
நன்றி
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
பாதி வழியிலேயே சாமான்களை வைத்துவிட்டு போகாமல், கோவில் வரை கொண்டு வந்து கொடுத்த மணியிடம் சாம்பு சொல்கிறார்
“ஆண்டவன் உன்னை எப்பவும் கைவிட மாட்டான் டா மணி, அவரை நம்பினா அவர் உன்னை எப்பவும் கைவிட மாட்டார் டா,.......................”
ஆனா...அந்த நேரத்துல ஆண்டவன் செய்யாததை மணி செஞ்சிருக்கான். அவனை நம்பிய சாம்பு சாமியை அவன் கைவிடவில்லை.
தாமரை அளித்த விளக்கத்துக்கு மேல் என்ன சொல்ல?
தீட்டு என்பதும் தீண்டத்தகாதவர்களென்பதும் வழக்கொழிந்து வரும் காலக்கட்டத்தில் நாம் இருந்தாலும், விடாப்பிடியாய் பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் இந்த ‘சாமி'யைப்போன்றவர்கள் திருந்த மணியைப்போல பலர் வேண்டும்.
நல்ல கதை. தெளிவா இருக்கு. அடுத்தடுத்தக் கட்டத்துக்கு பயணிக்கும் உனக்கு என் அன்பான வாழ்த்துகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks