Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: ஒரு ரூபாய்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    ஒரு ரூபாய்

    வணக்கம் உறவுகளே
    குட்டி கதை புகழ் ஐரேனிபுரம் பால்ராசய்யா வை தொடர்ந்து நானும் ஒரு குட்டி கதையை பதிக்கலாம் என்று முயன்று இருக்கிறேன். பெரிய விஷயத்தை கொஞ்ச வார்த்தைகளில் உணர்த்தும் குட்டி கதைகள் மீது எப்பவும் எனக்கு ஒரு காதல் உண்டு.


    ஒரு ரூபாய்

    ரமேஷ் தன்னுடைய மதிய உணவை பிரபலமான அந்த ஓட்டலில் சாப்பிட சென்றான். பிரபலமான ஓட்டல் என்றாலே அங்கு வாடிக்கையாளர்களுக்கு மரியாதை இருக்காது, வேண்டா வெறுப்பாக தான் சர்வர்கள் பரிமாறுவார்கள். ரமேஷுக்கு சர்வரின் பார்வை, முறைப்பு எரிச்சலை தந்தது, அடக்கிக் கொண்டு உணவை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தான். சர்வர் பில்லை எடுத்து கொண்டு வந்து வைத்தான் பில் 299 ரூபாய் ஆனது. ரமேஷ் 500 நோட்டை எடுத்து கொடுத்தான், சர்வர் தெனாவட்டாக எடுத்துக் கொண்டு போய், மீதி தட்டில் 200 (100+50+5x10) ரூபாய் பாக்கி கொண்டு வைத்து திரும்பி பார்க்காமல் நடந்து போனான்

    ரமேஷுக்கு எரிச்சல் அதிகமானது, சர்வரை சத்தமாக அழைத்தான். அவன் முகத்தில் எந்த வித உணர்வும் இன்றி என்ன? என்பது போல தலையை ஆட்டினான்.

    “என்னங்க 201 ரூபாய்க்கு 200 தரிங்க”

    “சில்லரை இல்ல”

    “அத சொல்ல வேண்டாமா?”

    “நீங்களே புரிஞ்சிக்கனு” ரமேஷுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

    “என்ன ....ர புரிஞ்சிக்கனும், மீதி காசை சாமர்த்தியமா டிப்ஸை எதிர்பார்த்து 5 பத்து ரூபா நோட்டா வைக்க தெரிது இல்ல, அதே மாதிரி சில்லரை ஒழுங்க கொடுக்கனும் அறிவு வேணாம்”

    “ஒரு ரூபாய் தான”

    “யோவ் அது நாலணாவாக கூட இருக்கட்டும், என்னுடைய காசை நான் வேண்டாம்னு சொல்லலாம், ஆனா நீ எப்படி வேண்டாம்னு முடிவு செய்யலாம்”

    ”இரு வரேன்” என்று அவசரமாக சென்ற சர்வர், போய் ஒரு ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து தந்தான். ரமேஷ் வாங்கிக் கொண்டு சர்வரை முறைத்த படியே ஓட்டலை விட்டுச் சென்றான். இன்னொறு சர்வர் வந்து

    ”என்ன மாமே, என்ன சண்டை”

    “ஒண்ணு இல்ல டா ஒரு கஞ்சப்பைய ஒரு ரூபாய்க்கு சண்டை போட்டுட்டு போறான்” என்ற சர்வர் ரமேஷின் பில் வேலட்டை எடுக்க போனான், அதில் ரமேஷ் டிப்ஸாக 10 ரூபாய் வைத்து இருந்தான், கூடவே ஒரு துண்டு காகிதமும் இருந்தது.

    அதில் “நீ முகமலர்ச்சியுடன் உன் வேலையை செய்து இருந்தால் 20 ரூபாய் தந்து இருப்பேன்” என்று எழுதி இருந்தது.

    அந்த சர்வர் அடுத்த டேபிளுக்கு முகமலர்ச்சியுடன் சென்றான்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஒத்தை ரூபா இத்தனை பிரச்சனையை உண்டு பண்ணுதான்னு நம்பாதவங்க

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17189

    இதைப் படிக்கலாம்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    நல்ல இருக்கு அண்ணா.. அழகான குட்டி கதை.
    முக மலர்சியால் எப்போதும் நல்லதே நடக்கும். நான் முன்பே சொன்னது போல் கடினமாக சொள்ளுவத்தைககூட சிரித்த முகத்துடன் சொன்னால் மனம் எளிதாக ஏற்றுக்கொள்ளும்.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    கதையின் கரு எனக்கு பிடித்தமான ஒன்று..

    இரு வேறு கருத்துகளை முன் வைக்கிறது ..


    1. ஒரு ரூபாய் பற்றியது.

    2. பரிமாறுபவரின் முக மலர்ச்சி..


    முதலாம் கருத்து.. நடைமுறையில் பலமுறை நான் யோசித்த ஒன்று..

    பல மளிகைக் கடைகளில் ஒரு ரூபாய், ஐம்பது பைசாவுக்கு விற்பனையே ஆகாத ஒரு மிட்டாயை/ சாக்லேட்டை வழங்கி அனுப்பிவிடுவார்கள்.. அது எத்தனை நூறுகளுக்கு/ஆயிரங்களுக்கு நாம் பொருட்கள் வாங்கியிருந்தாலும்..


    பலமுறை நான் கோபப்பட்டதுண்டு..

    இந்த மிட்டாயை சில்லரைக்கு பதில் ஒரு பேருந்திலோ அல்லது அதே மளிகைக் கடையிலோ திரும்ப கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்களா??

    ஒரு ரூபாயில்லாட்டியும் கீழே இறக்கி விட்டுவிடுவார்கள் தானே நடத்துனர்கள்...??!!

    ஆக, ஒரு ரூபாய் ஆனாலும் அது வேண்டாமென்று முடிவெடுப்பது நம் பொறுப்பு... சூப்பர் கதை.. தக்ஸ்...

    சின்ன வயதில் ஜென் கதைகள் படித்திருக்கிறேன்.. அதிலும் பல நல்ல கருத்துகள் சொல்லாமல் சொல்லியிருப்பார்கள்..

    குட்டி கதைகளின் தாக்கமே தனி தான்..

    நல்லதொரு கதை.. பாராட்டுகள் தக்ஸ்..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நல்ல கதை..
    சர்வர்கள் முகமலர்ச்சியுடன் பரிமாறினாலே.. டிப்ஸ் அதிகம் கொடுக்கத் தோனும்.

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    தக்ஸ்... கலக்கிட்ட தலீவா.. உண்மையிலேயே டிப்ஸ் பெரும் பிரச்சனை தான். அங்கு ஆரம்பிப்பது பெரிய ஊழலில் முடிகிறது.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    சூப்பர் தக்ஸ்.. நல்ல முயற்சி...நல்ல கருத்து..!!

    ஒரே கல்லில் இருமாங்காய்... வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாராட்டுகள் தக்ஸ்..

    சின்ன பொறியில் இரு மெழுகுவர்த்திகளைக் கொளுத்திவிட்டீர்கள்..

    ( எல்லா பிரபல உணவகங்களிலும் சிடுமூஞ்சிகள் என்பதற்கு
    நான் அறிந்தவரை சரவணபவன் விதிவிலக்கு...)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காசு கொடுத்து முகமலர்ச்சியை வாங்குவது/கொடுப்பது விபச்சாரத்துக்கு ஒப்பானது.

    உழைப்புகுரிய ஊதியம் கொடுத்து முகமலர்வை வாங்குவது/கொடுப்பது உயர்வானது.

    உரிய ஊதியம் கிடைத்தும் அதிக ஆசைப்படுவது அழிவுக்கு நிகரானது.

    இனாம்களை எதிர்க்கவும் ஆதரிக்கவும் ஒவ்வொரு கருத்துண்டு.

    இந்தக் கதையிலும் அந்த இரண்டும் உண்டு. இந்தவகை ஆணிக்கதைகள் மனதை தைக்கவேண்டும். ஆழகான ஆடை அணிந்து பவனி வர வைக்கவேண்டும்.

    முகமலர்வு அவசியம் என்பதை ஆணி அடித்த மாதிரி சொன்னமைக்குப் பாராட்டுகள் தக்ஸ். பாராட்டுகள் தக்ஸ்.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சில காலத்திற்கு முன்னரேயே எழுதப்பட்ட கதை, இப்போதுதான் வாசித்தேன்.

    கருத்துச் செறிவோடு, திடீர் திருப்பம் கொடுக்கும் இந்த ஒரு பக்க கதைகள் அமரன் கூறியிருந்ததுபோல ஆணிக்கதைகள்தான்.

    இன்று ஐ.பா.ரா. அவர்களின் ஒரு பக்கக் கதை ஒன்றை வாசித்திருந்தேன்.
    இது அடுத்ததாக...

    பூமகளின் பின்னூட்டம், தாமரை அண்ணாவின் சுட்டி என்பன கவனிக்க வேண்டியன.

    தக்ஸ்... இதுபோல இன்னும் வருமா உங்களிடமிருந்து...
    Last edited by அக்னி; 28-06-2011 at 11:31 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அருமையான அதே நேரத்தில் சிந்திக்கவேண்டிய கதை ..அனாவசியமான செலவுகளை தவிர்க்க வேண்டுமென மறைமுகமாக உணர்த்தும் கதை ...பதிவு பழையதென்றாலும் அது கூறும் கருத்து என்றும் தேவை ..அருமை ..தொடருங்கள் ரங்கராஜன் அவர்களே...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #12
    புதியவர்
    Join Date
    16 May 2011
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    8,970
    Downloads
    2
    Uploads
    0
    ஆக அருமையான கதை

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •