தமிழீழ விடுதலை புலிகளின் இரு விமானங்கள் கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.10 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்ததையடுத்து கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட வான்காப்பு பொறிமுறைகள் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டள்ளது.
விடுதலைபுலிகளின் விமானங்கள் கொழும்புக்குள் வந்துள்ளதை உறுதிப்படுத்திய பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
எனினும் கொழும்பு துறைமுகம், மற்றும் முக்கிய இடங்களிலிருந்து வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக தகவல்களை எதிர்பார்க்கவும்
நன்றி தமிழ்வின்
Bookmarks