Results 1 to 12 of 12

Thread: எதிரிகள் வாழ்க..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    எதிரிகள் வாழ்க..!






    எதிரிகள் வாழ்க..!



    நெருப்பு நாவுகள்
    சிரிப்போடு சாடுகையில்..
    கரைக்கும் அமிலமாய்
    சிறையிடும் வார்த்தைகள்..!

    உணர்ந்தழுது வெதும்பி
    கிடக்கையில்..
    உள்ளத்தின் நாவசைந்து
    மென்மையாய் உரையாடும்..!

    முன்னாளில் பகைவரால்
    வேல் பாய்ச்சிய
    வசைகள் பல
    தசை கிழித்து
    உள வேர் முறுக்கிய
    கதை படிக்கும்..!

    கூர் ஊசி நூறு
    உரசிப் போன
    நெஞ்சமது..
    இன்னாளின் இடரெல்லாம்
    இம்மியளவாய் தோன்ற வைக்கும்..!

    துயர் கடந்து
    லேசாகி மனம் மெல்ல
    மேலெழும்பும்..!

    எல்லாம் தாங்கி
    ஏற்றமதைக் காண
    கற்பித்த எதிரியே - நீவீர்
    வாழ்க வாழ்கவே...!

    Last edited by பூமகள்; 13-02-2009 at 08:23 AM. Reason: சொல் மாற்றம்..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    நந்தவனத்தில் பூமகள்..
    முதல்களுக்கு வாழ்த்துகள்.

    இப்பூவில்
    பொருத்தமின்றி
    சில பொருத்துதல்கள்.

    திருத்தி விட்டால்
    அனல் மீது பனித்துளியாய்
    எதிரிகளின் கனித்துளியாய்
    இந்தப்பூ
    இன்னும் மணம் வீசும்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    முத்தமிழ் நெருப்பில்
    ரவுத்திரம் பயின்ற
    வித்தகர் விளக்கின்
    இன்னும் அழகாய்
    பொருத்துவேன்..

    ரவுத்திரர் சுட்டுவிரல்
    சுட்டிக் காட்டுமோ?

    முதல் பின்னூட்டம்.. முத்தாக.. கவிக்கு சத்தாக.. ஆயினும்..
    கவி விமர்சனம் இல்லையே...??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    முத்தல்ல முத்தே
    சிப்பி
    உள் முத்தே.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ''எதிரிகள்'' ஒரு வகை..

    எதிர்கொள்ளும் நம் மனப்பாங்கால்
    ''எதிரிகள்'' - இருவகை..
    உசுப்பி, உரமேற்றி - ஆக்கும் வகை ....
    வெறியேற்றி நெறிகுழப்பி - அழிக்கும் வகை...

    இவ்வகைப் படைப்புகளை '' ஆக்க வைக்கும்''
    எதிரிகள் வாழ்க என நானும் இணைந்து பாடுகிறேன் -
    பாமகளுடன்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    உதவி யாரிடம் கேட்கலாம்.. முக்கியமாக யாரிடம் கேட்க கூடாது ..?

    நாம் கேட்டுத்தான் மற்றவர்கள் உதவுவார்கள் என்பது தவறு. ஏதோ ஒருவகையில் எல்லோரும் எல்லோருக்கும் உதவிக் கொண்டுதான் இருக்கிறோம்.

    விரோதி கூட நம் இலட்சியப் பிடிப்பை உறுதியாக்க உதவுகிறார்.

    ---------------------------------------------------------------------

    இன்று தங்கையின் கவிதையைக் கண்டவுடன் என் பழைய வார்த்தைகள் ஞாபகம் வந்தன,

    எவ்வளவோ செஞ்சிட்டோம் இதைச் செய்ய மாட்டோமா?

    இதுவும் ஞாபகம் வருகிறது.

    இன்னும் பல சிந்தனைகள்.. ஒவ்வொன்றாய்.. ஒவ்வொன்றாய்...

    ஆயிரம் வடுக்களில் ஒன்றிரண்டின் அடையாளம் தெரிகிறது...

    உடல் அடிபட்டு அடிபட்டு மரத்து விடும்
    மனம் அடிபட்டு அடிபட்டு பழுத்து விடும்.

    வாழ்க்கை புரியும் பொழுது தெளியும் மனது
    வசைகளுக்கும், சம்மட்டிகளுக்கும் கூட நன்றி சொல்லும்

    நீங்கள் இல்லாவிட்டால் இன்று நான் நானாக இல்லையென..

    எதிரிகள் ஒருவகைதான் இளசு..

    துரோகிகள்தான் பலவகை...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    எதிரியை வாழ்த்துவது என்பது எல்லோராலும் எளிதில் இயலாத காரியம்.. அந்த நிலையை அடையவதற்க்கு நிறையவே பக்குவம் தேவை..!! ஆனால் அந்த பக்குவத்தை அடைவதற்க்கு பலமுறை அடிபட வேண்டியிருக்கும்..!! ஆரம்பத்தில் அதிகமாக வலிக்கும்... பின்னர் போகபோக வலி குறையும் ஆனால் வலிமை கூடும்.. ஒருகட்டத்தில் எதையும் தாங்கும் இதயம் இயல்பாகவே அமைந்துவிடும்.. அந்தநிலையில் எதியைக்கூட இன்முகத்தோடு வாழ்த்த முடியும்..!! அந்த நிலையை நீ அடைந்துவிட்டதாகவே உன் கவிதை உரைக்கிறது... வாழ்த்துக்கள் பூ.. வசந்தமான வாழ்விற்க்கு..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #8
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    எல்லாம் தாங்கி
    ஏற்றமதைக் காண
    கற்பித்த எதிரியே - நீவீர்
    வாழ்க வாழ்கவே...!
    ஏமாற்றமான அனுபவங்கள் அதன்பின் நமக்கு எந்த ஒரு அனுபவத்தையும் தைரியமாக எதிர்கொண்டு சந்திக்கும் மனவுறுதி தரும்... நம்முடன் நேருக்கு நேர் சண்டையிடும் எதிரிதான் நமக்கு வீரத்தையும் தைரியத்தையும் காற்றுத்தரும் குரு.
    எந்தஒரு அனுபவங்களையும் எதிர்கொள்ள நமக்கு அந்த அனுபவத்தின் முதல் தோல்விதான் படிப்பினை

    நல்லதொரு கவி படைத்த பூவுக்கு பாராட்டுக்கள்
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சோதனைகளில் சாதனை செய்ய வெகு சிலருக்கு இயல்பிலேயே அமைந்து விடுகிறது. இன்னும் சிலருக்கு சோதனைகளில் இனி எதுவும் செய்ய இயலாது என்ற விளிம்பு நிலையில் விழுந்து விடாமல் இருக்க சாதனைகள் செய்யும் உத்வேகம் வந்துவிடுகிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும் பூமகள்.
    எதிரிகள் நிச்சயம் தேவை.

    அனைத்து பின்னூட்டங்களும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    உன்னை உனக்கு
    அடையாளம் காட்டவேணும்
    உன்னை யாவர்க்கும்
    எடுத்துக் காட்டவேணும்
    தேவைப்படுகிறார்கள் எதிரிகள்..

    துன்பங்களும் சோகங்களும்
    நேர்கையில் கடவுளை
    நினைப்பவர்கள் போல

    வித்தியாசமான எண்ண ஓட்டத்துடனான
    கவிதை.. பாராட்டுகள்





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  11. #11
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    07 Feb 2009
    Posts
    52
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    //முன்னாளில் பகைவரால்
    வேல் பாய்ச்சிய
    வசைகள் பல
    தசை கிழித்து
    உள வேர் முறுக்கிய
    கதை படிக்கும்..!//

    நல்லா சூடா எழுதறீங்க பூமகள் அவர்களே. உங்கள் கவிதைகளை இனி வரும்போதெல்லாம் படிப்பேன்.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    இரு முக எதிரிகளை இனம் பிரித்த பெரியண்ணாவுக்கும்,

    எதிரிகள், துரோகிகள் வேறுபாட்டை விளக்கிய தாமரை அண்ணாவுக்கும்,

    மன நிலை ஆராய்ந்த சுபிக்கும்,

    எதிரியை குருவாக்கி விமர்சித்த வசீக்கும்,

    வெற்றி நிலை கண்டெடுத்த அமரன்ஜிக்கும்,

    எதிரிகளின் அவசியம் வலியுறுத்திய சகோதரி பூர்ணிமாவுக்கும்,

    துளசியின் வாசம் போல் மணம் பரப்பி விமர்சித்த துளசிக்கும்

    நன்றிகள் கோடி..!

    சில கவிதைகள் பார்க்க மிக எளிதாக இருக்கும், ஆனால் அதற்கு வரும் பின்னூட்டங்களே அதனை இன்னும் அழகாக காட்டும்.. அவ்வகையில் இந்த எளிய கவிதைக்கு வந்த அனைத்து பின்னூட்டங்களும் முத்துகள். நன்றிகள் பலப்பல.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •