Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: தவம்...!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Post தவம்...!



    தவம்...!


    நெடிய பிரிவுக்கு பின்
    தாய் விரல் இறுகப் பற்றும்
    மழலை போல
    தொலைந்து போன
    எழுத்துச் சுவடுகள்
    தேடி வந்து
    விரல் பிடித்து
    உயிர்த்தெழ
    காத்திருக்கின்றன..

    தன் மழலை வாசம்
    தாயறிவதைப் போல
    என் எழுத்துகளின் வாசம்
    நானறியத் தலைப்படுகிறேன்...


    வெகு நாட்கள்
    முக்காடு இட்டு
    புழுதி படிந்து
    உறங்கிய சுவடுகள்
    அதன் மேனியெங்கும்
    மழலை கதக்கிய
    பால் வாசனையை நினைவூட்டின..!


    மழலையால்
    கலைத்து போடப்பட்ட
    விளையாட்டு பொம்மை போல
    ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன
    கவிக்கருக்கள்..!


    மறந்து போனாலும்
    நினைவூட்டியபடியே இருக்கின்றன
    என்றோ நட்டு வைத்த
    நட்புப் பூக்கள்..


    விடியலுக்காக ஏங்கும்
    குருவிக் குஞ்சின் மனதைப் போல்
    கவி வருகைக்காக ஏங்கித் தவிக்கும்
    உள்ளத்தின் ஓர் பிம்பம்..!!


    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    வாங்க.....
    நலமா?
    வரும்போதே தவத்தோடு வந்திருக்கிறீர்கள்....
    தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்..
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அடடே...யார் இது..? வாம்மா...நலமா? தவம் கலைந்த நிலையில் உன் ‘தவம்' பிரமாதம். கவிதாயினியின் எழுத்தை மீண்டும் மன்றத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து கவி விருந்து படைத்திட வேண்டுமென்பது இந்த அண்ணனின் வேண்டுகோள்.

    வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    வாங்க பூமகள்...
    நல்ல கவிதையோடு மன்றம் வந்துள்ளீர்கள்..
    வாழ்த்துக்கள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பூமகளின் கவிதைச்சோலையில் பூக்களென்னவோ அவ்வபோது முளைத்துக்கொண்டுதானிருந்தன.. ஆனால் இன்றைக்குத்தான் அவர் நம் பார்வைக்கு வைத்திருக்கிறார்.... வாழ்த்துக்கள் பூமகள்!

    கவிதையின் வரிகளில் உள்ளத்தின் ஏக்கம் வெளிப்படுகிறது.....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    தவமகள் மீள்வரவுக்கு வரவேற்பு!

    ஈரமண்ணில் விழும் கோடுகள் வடுக்களில்லை!
    பாசமழை குழைத்து மெழுகிவிடுவதால்..

    மன்றநேச மனரணங்கள் ஆழமில்லை...!
    அன்புறவுகள் தேனிறகு வருடுவதால்...


    நலமா பாமகளே?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல் மீள் வரவு பூமகள்.
    அண்மையில் ஒரு கவிதை படித்தேன்.

    குழந்தைகள்
    கலைத்துப் போட்டு விளையாடுவதை
    மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தன
    பொம்மைகள்.


    நமது படைப்புகள், பழக்கங்கள், நினைவுகள் போறவற்றுக்கு நாங்கள் பொம்மைகள்.

    பாராட்டுகள் பூமகள்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    என்றோ நட்டு வைத்த நட்"பூ"க்கள் எப்பொழுதும் மணம் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. மீள்வருகைக்கும் வரவேற்புகளும் இன்னமும் படைக்கப் படவிருக்கும் படைப்புகளுக்கு பாராட்டுகளும்.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by செல்வா View Post
    வாங்க.....
    நலமா?
    நலம்.. நாடலும் அஃதே செல்வா அண்ணா. முதல் பின்னூட்டமிட்டு ஊக்குவித்தமைக்கு நன்றிகள்.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அடடே...யார் இது..? வாம்மா...நலமா? தவம் கலைந்த நிலையில் உன் ‘தவம்' பிரமாதம். கவிதாயினியின் எழுத்தை மீண்டும் மன்றத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து கவி விருந்து படைத்திட வேண்டுமென்பது இந்த அண்ணனின் வேண்டுகோள்.
    வாழ்த்துகள்.
    நலமே சிவா அண்ணா. நீங்கள் நலம் தானே? வாழ்த்துகளுக்கு நன்றிகள் அண்ணா.

    Quote Originally Posted by மதி View Post
    வாங்க பூமகள்...
    வாழ்த்துக்கள்
    இனிய வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் மதி.

    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    கவிதையின் வரிகளில் உள்ளத்தின் ஏக்கம் வெளிப்படுகிறது.....
    கவிதையின் நாடி பிடித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் ஷீ.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    தவமகள் மீள்வரவுக்கு வரவேற்பு!

    ஈரமண்ணில் விழும் கோடுகள் வடுக்களில்லை!
    பாசமழை குழைத்து மெழுகிவிடுவதால்..

    மன்றநேச மனரணங்கள் ஆழமில்லை...!
    அன்புறவுகள் தேனிறகு வருடுவதால்...

    நலமா பாமகளே?
    உங்கள் தங்கை இவள்
    தவமகள் ஆகியிருக்கிறாள்..

    தேனிறகு கொண்டு வருடினாலும்..
    .......

    அன்பிற்கினிய உங்களின் வரவேற்பு கண்டு அகமகிழ்ந்தேன் பெரியண்ணா..

    பாமகள் நலமே. பாசமிகு என் பெரியண்ணா நலம் தானே?

    Quote Originally Posted by அமரன் View Post
    நல் மீள் வரவு பூமகள்.
    அண்மையில் ஒரு கவிதை படித்தேன்.

    குழந்தைகள்
    கலைத்துப் போட்டு விளையாடுவதை
    மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தன
    பொம்மைகள்.


    நமது படைப்புகள், பழக்கங்கள், நினைவுகள் போன்றவற்றுக்கு நாங்கள் பொம்மைகள்.
    பாராட்டுகள் பூமகள்.
    சிகரரின் இனிய வரவேற்புக்கு நன்றிகள்..

    கவிதை மழலையின் புன்னகை போலவே பூரிப்பூட்டுகிறது..

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் அமரன் அண்ணா.
    Quote Originally Posted by mukilan View Post
    என்றோ நட்டு வைத்த நட்"பூ"க்கள் எப்பொழுதும் மணம் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. மீள்வருகைக்கும் வரவேற்புகளும் இன்னமும் படைக்கப் படவிருக்கும் படைப்புகளுக்கு பாராட்டுகளும்.
    முகில் மணம் இக்கவிப் பூ முழுதும் மேவி மண் வாசனையை நினைவுறுத்திவிட்டது.. இத்தங்கை மனம் நிறைந்துவிட்டது..

    நன்றிகள் பல முகிலண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இலையுதிர்காலம் போய் துளிர்க்கும் முதல் துளிர், வசந்தத்தின் வருகை நோக்கி மெல்ல தலை தூக்கிப் பார்ப்பது போல்..

    போன வசந்தம் நிழலாட வரும் வசந்தம் நினைவாட

    சின்ன வாசம் காற்றில் பரவுவது போல்

    உன்கவிதை,

    வா தங்கையே!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #12
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    அடடே யாரு பூ வா... வாங்க பூமகள்.... வெகு நாட்கள் ஆகிவிட்டது...
    உங்களை மன்றத்தில் பார்த்து... இந்த மறுபிரவேச
    கவிதை ரொம்பவே அழகாக இருக்கிறது...
    தொடர்ந்து எழுதுங்கள்... மன்றத்தில்
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •