Results 1 to 8 of 8

Thread: உயிரினும் ஓம்பப்படும்

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0

    உயிரினும் ஓம்பப்படும்

    திருமண பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு முடித்து முருகேசன் இலையை எதிர் திசையில் மடக்க முயற்சிக்கவும், அருகிலிருந்த செந்தில் தடுத்தான்.

    "இலைய எதிர் திசையுல மடக்கினா உறவு வேண்டாமுன்னு அர்த்தம். உள் பக்கமா மடக்கினா உறவு வேணுமுன்னு அர்த்தம் என்றான் செந்தில்.

    "சரி இலைய மடக்காமலேயே விட்டுட்டா? என்று எதிர்க் கேள்வி கேட்டான் முருகேசன்.

    "மடக்காம விட்டுட்டா நீ திருப்தியா சாப்பிட்டுட்டன்னு அர்த்தம் என்றான்.

    முருகேசன் சட்டென்று இலையை தூக்கி எடுத்து கொண்டு வந்து இலை போடும் இடத்தில் போட்டு விட்டு கை அலம்பிவிட்டு,

    "இதுக்கு ஏதாவது காரணமிருக்கா?" என்றான்.

    "இலை எடுக்க ஆட்கள் இருக்கும் போது நீயே எடுத்துட்டு வந்தியே. உன் கிட்ட அடுத்தவங்களுக்கு உதவி பண்ற மனிதாபிமானம் இருக்குன்னு அர்த்தம்!" என்ற போது அசந்து போனான் முருகேசன்.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எதெதற்கோ எத்தனையோ காரணங்கள் இருக்க முருகேசன் செய்த செயல் மனிதாபிமானத்தை பறைசாற்றியது அருமை.

    (அசந்து போனது செந்திலாகத்தானே இருக்கும் ஐ.பா.ரா. அவர்களே..)

    நல்ல கருத்து சொல்லும் குறுங்கதை. பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அருமையாக இருக்கிறது... ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு அர்த்தம்..

    இந்த இலை பற்றி தாமரை அண்ணா ஒருமுறை என்னிடம் சொன்னார்... அது 5 ஸ்டார் திருமணத்தின் போது...

    அதை இங்கே சொல்வார் என்று எதிர்பார்த்து...
    ஆதவன்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சின்ன சின்ன காரியங்கள்
    அழகான
    பெரிய சிந்தனைகளுடன்....

    கடந்த வார குமுதம் இதழில்,
    ‘ஹலோ' என்றொரு உங்களது
    குட்டிக் கதை கண்டேன்.....

    இரண்டு கதைகளுக்கும்
    என் மனதார்ந்த வாழ்த்துக்கள்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    இனிய நண்பர்களுக்கு எனது கதையை படித்து பாராட்டியமைக்கு நன்றி.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மனம் செப்பனிடும் காரணங்கள் கற்பிக்கப்படும்போது
    சராசரி செயல்களும் வாழ்வும் அழகு கூடி சோபிக்கின்றன..

    பாராட்டுகள் ஐபாரா அவர்களே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது ஒவ்வொரு செயலின் உயர்வும் தாழ்வும்..!!

    நல்லதொரு குட்டிக்கதை.. வாழ்த்துக்கள் பால்ராசையா அண்ணா..!!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    அருமையான ஒரு நல்நெறியை கற்பிக்கும் சிரிப்பு இது... வாழ்த்துக்கள் பால் ராசைய்யா.....

    அப்படியே நாம் உண்ணாமல் விட்ட லட்டு மற்றும் வாழைபழத்தை கையில் எடுத்துக்கொன்டால் அதை மற்றவர்கள் குப்பை தொட்டியில் எடுக்க சண்டையிடும் அவலமும் குறையும்.... நாமே வெளியில் செல்லும்போது அவர்களுக்கு கொடுத்துவிடலாமே....

    உங்க பதிப்பை பார்த்து நான் கற்றுக்கொன்டது...



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •