பந்த் நடத்துவது ஜனநாயக உரிமை. அதை தடுக்க முடியாது என இந்திய உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து அரசியல் கட்சிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இனி அரசியல் கட்சிகளின் பாடு கொண்டாட்டம்தான். நின்றால் , உட்கார்ந்தால் , பந்த்தான்.
மக்கள் தங்கள் உணர்வுகளை தானாக , சுயமாக வெளிப்படுத்த உதவும் வன்முறையற்ற போராட்டம்தான் பந்த் என்ற காலம் மலையேறி அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக , அரசியல் லாபத்திற்காக மக்கள் மீது வலுக்கட்டாயமாக , வன்முறை மூலம் திணிக்கும் சுமையாக பந்த் மாறிவிட்டதே உண்மை.
அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா?? (மக்கள் மீது அக்கறை இருந்தால்???)
Bookmarks