Results 1 to 12 of 42

Thread: நூர் பாத்திமா.....

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    நூர் பாத்திமா.....

    நூர் பாத்திமா.....

    ஒரு தேவதையைப் போல
    எல்லைகளைக் கடந்து
    எங்கள் நாடு வந்தாய்.

    தலையைச் சுற்றி
    மூக்கைத் தொடும்
    தலைவலியின்றி
    தரைவழி வந்தாய்.

    கிழிந்து கிடக்கும்
    நம் உறவுகள் போலவே
    உன் இதயம் முழுக்க
    ஒட்டைகளோடு வந்தாய்.

    கருமேகம் சூழ்ந்த
    வானம் போலத்தான்
    உன்னைப் பெற்றவர்களின்
    முகத்திலும்
    அருளின்றி இருந்தது -
    தலைநகரத்தில்
    நீங்கள் இறங்கிய பொழுது.

    எல்லை தாண்டிய தீவிரவாதிகள்
    எங்கள் ஜவான்களின் இதயத்தில்
    ஓட்டை போட்டுக் கொண்டிருந்த பொழுது -
    உன் இதயத்து ஓட்டையை
    அடைப்பதற்கு எங்கள் நாட்டு
    மருத்துவர்கள் உழைத்தனர்.

    நொடிப்பொழுதில்
    வெடிக்கும் குண்டுகளில்
    செத்து வீழும்
    அப்பாவி காஷ்மீரிகளின்
    குருதி தெருவில் ஓடிய பொழுது,
    எங்கள் நாட்டு மக்களின்
    ரத்தமும் ஆக்ஸிஜெனும்
    உன் உடலின் உள்ளே
    புகுத்தப் பட்டுக் கொண்டிருந்தது.

    மயக்கத்தில் நீயும்
    கலக்கத்தில் உன் பெற்றவர்களும்
    இருந்த பொழுது
    நாங்கள் எல்லோரும் பிரார்த்தனையில்
    இருந்தோம் -
    'கடவுளே!
    எங்களைத் தேடி வந்த
    இந்த பிஞ்சைக் காப்பாற்று'
    கூட்டுப் பிரார்த்தனையும்
    மலர்க் கொத்துகளும்
    நாட்டு எல்லைகளைக் கடந்து
    உன் காலடியில் சமர்ப்பிக்கப் பட்டது.

    பலகோடி மக்களின்
    இதயங்களும் ஒருமித்து
    உனக்காகத் துடிக்க
    உன் இதயமும் பழுதில்லாமல்
    துடிக்கத் தொடங்கியது.

    உனக்காக செலவு செய்ய
    உன் பெற்றோர்கள் செய்த ஏற்பாடுகள்
    அனைத்தும் மறுத்து
    எங்கள் நாட்டு மருத்துவர்கள்
    தங்கள் உழைப்பை
    உனக்கு அன்புக் காணிக்கையாக்கினர்.
    இந்த அன்பிற்குப் பதில் அன்பு என -
    உன் மருத்துவ செலவுத் தொகையும்,
    வந்த அன்பளிப்புகளும்,
    ஏழைக் குழந்தைகளின் இதயத்துக்காக
    உன் பெற்றவர்களால்
    அர்ப்பணிக்கப் பட்ட போது
    எல்லோருக்கும் தெளிவானதே -
    இரு நாட்டு மக்களும்
    எதிரிகளல்ல,
    சந்தர்ப்பம் கிடைத்தால்
    சகோதரர்களும் ஆவர் என்று.

    சில காலம் முன்னே
    எலியும், பூனையுமாக
    அடித்துக் கொண்ட
    அரசியல்வாதிகளை
    ஒதுக்கித் தள்ளிவிட்டு
    மக்களின் அன்பை
    வெளிப்படுத்த
    ஒரு தேவதையாக
    உன் வரவு ஆகியதே...
    இனியாவது
    உன் போல் தேவதைகள் மட்டும்
    எங்கள் நாட்டிற்கு வரட்டும்.
    சாத்தான்களின்
    குண்டுகளும், வார்த்தகளும்
    ஓடியே போகட்டும்....
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:46 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •