என்ன செய்து என்ன பிரயோசனம் அண்ணா. எம்மம்மகள் பலரின் சாம்பல்படுக்கை மீதா சமாதானக் குழந்தையை வளர்த்தப் போகிறார்கள்.
இப்போது கூட 5000 எறிகணைகள் ஒரே இடத்தில் வீழ்ந்ததாகவும் இடம்பெயர்ந்தோர் அடைக்கலம் புகுந்த இரு முகாம்கள் தீக்கிரை என்றும் நித்திரையிலேயே நிரந்தர நித்திரைக்குப் பலர் போனதாகவும் தகவல் வந்த வண்ணம் உள்ளது. உறுதிப்படுத்த முயன்றபடி உள்ளேன். உண்மையாக நடந்திருந்தால் நெஞ்சடைக்கும் நிமிடங்கள் வந்துவிட்டன என்பதைத் தவிர வேறேதும் சொல்ல இயலவில்லை.
இன்னும் இன்னும் எத்தனையோ செய்திகள். எத்தனையோ தகவல்கள். இழந்த உறவுகளின் வேதனையே தீராத நிலையில் இருக்கும் உறவுகளையும் இழக்க விரும்பாமல் தாங்கும் சக்தி இல்லாமால் விழுங்கத்தான் முடிகிறது.
Bookmarks