Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 26

Thread: வன்னியில் மக்களின் அவலநிலை...

                  
   
   
  1. #13
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Aug 2007
    Posts
    175
    Post Thanks / Like
    iCash Credits
    12,380
    Downloads
    0
    Uploads
    0

    வன்னியில் மக்கள் நிலைமை


  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    நன்றி கம்பன் அவர்களே!

    நீங்கள் கொடுத்த சுட்டியிலிருந்து நேரடித் தொடர்பை இங்கே கொடுக்கிறேன். மற்ற உறவுகளும் பார்ப்பதற்கு வசதியாகவிருக்கும்

    சா என்ன அவலமிது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டோடும் நம்முறவுகள்

    http://eurotvlive.com/download/20090...ELL_ATTACK.wmv


    http://eurotvlive.com/download/20090..._attack_02.wmv

    நன்றி யாழ்களம்

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கண் கொண்டு பார்க்க முடியாத அவலம்....

    ஹூம், இதுதான் இலங்கை அரசாங்கத்தின் zero-civilian-casualty doctrine போல....

    உலக நாடுகளுக்கு இலங்கை அரசு, இதனைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது...
    உலக நாடுகளும் ஆமாமென கேட்டு ஆயுதங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #16
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    4 இலட்சம் மக்களுக்கு 10 மருத்துவர்கள்தானா? என்ன கொடுமை இது?

    செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லையா?

    இந்த அவலங்கள் உலகநாடுகளின் கண்களுக்கு அகப்படவில்லையோ?
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0

    300 தமிழர் பலி; பலநூறு பேர் படுகாயம்; கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்": வன்னி மக்களை சிக்

    முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வள்ளிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு இலட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

    சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 மணி முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

    சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

    மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந்திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

    இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

    கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலானோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என தெரிவிக்கப்படுகிறது.

    இன்றைய இனக்கொலைத் தாக்குதல்களில் மட்டும் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் "கியூடெக்" நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த கண்மூடித்தனமான இனக்கொலைத் தாக்குதல் பற்றிய இந்தச் செய்திகளை தமிழ்நெட்" இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

    இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ரி.வரதராஜா அவர்கள் சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.சபை, சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு காயமடைந்த பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற மருந்துப் பொருட்களையும், மருத்துவ பணியாளர்களையும் அவசரமாக வினியோகிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அவர் அனுப்பிய செய்தியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 300 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் 1000 ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் தேவையான மருந்துப் பொருட்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் தயாரித்து அனுப்பியுள்ளார்.


    நன்றி : தமிழ்வின்

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by அய்யா View Post
    4 இலட்சம் மக்களுக்கு 10 மருத்துவர்கள்தானா? என்ன கொடுமை இது?

    செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லையா?

    இந்த அவலங்கள் உலகநாடுகளின் கண்களுக்கு அகப்படவில்லையோ?
    வன்னியிலிருந்த பல தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றிவிட்டது. மிக மிக அரிதானவைகளே தற்பொழுது வன்னி மக்களுக்குக் கிடைக்கறது. காரணம் இலங்கை அரசு பல தொண்டு நிறுவனங்களை வன்னிப் பகுதியிலிருந்து வெளியேற்றியமையே. அவர்கள் இருக்கையில் வெறித்தனமான தாக்குதல்களை மக்கள் மீது கட்டவிழ்த்து விட முடியாதல்லவா.


    கண்ணும் வாயும் காதும் மூடிக் கொண்டிருந்து நவீன ரக ஆயுதங்களை வாரி இறைக்கும் நாடுகளிற்கு இதைப்பற்றிக் கவலை என்ன. வியாபார நோக்குகள் ஒரு பக்கமும் அரசியல லாபம் மறுபக்கமும் பேனுவோர் மத்தியில் இருக்கும் சில நல்ல அதிகாரிகளைக் கூட இருள் மறைக்கிறது. ஐ.நா கண்டணம் தெரிவித்துக்கொண்டிருக்கிறது மக்கள் படுகொலைக்கல்ல மகிந்த அரசுக்கு ஈழம் வேண்டுமாம் கொடுத்து விடும் படி.. இது போன்ற சில அரசியல்வாதிகளால் மக்கள் பிரச்சினைகள் பல நாட்டு அதிபர்களின் காதுகளில் விழுவதில்லை. காரணம் இவர்கள் போன்று இரண்டு பக்கம் சம்பளம் பெருவோர்

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் தமிழ்தாசன்'s Avatar
    Join Date
    30 Oct 2008
    Posts
    492
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    7
    Uploads
    1
    விடுதலை இயக்கங்கள் இது போன்று பின் வாங்கிச் செல்வதும்- பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர் விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றனர்.


    விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர் அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.



    பா.நடேசன் அவர்களின் செவ்வி நன்றி.பிபிசி



    நன்றி etv
    Last edited by தமிழ்தாசன்; 26-01-2009 at 09:48 PM.

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    இன்றும் வன்னியில் கொலைவெறித் தாக்குதல்...

    இந்திய வெளியுறவு அமைச்சர், இலங்கை சென்று, வாக்குறுதி பெற்று, இந்தியா திரும்பியதன் பின்னரான 12 மணிநேரத்திற்குள், பிரகடனப்படுத்த மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள், அகோர குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
    23 பொதுமக்கள் பலியானதுடன், 100க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

    மேலதிக தகவலுக்கு...

    நன்றி: தமிழ்வின்

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஜனவரி 25 அவலம்...

    எச்சரிக்கை: இளகிய மனம் படைத்தோர், பார்ப்பதையும் கேட்பதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

    [media]http://it.youtube.com/watch?v=7y0_e1fhKaM&eurl=http://www.kalakam.com/forum/viewtopic.php?p=7977[/media]

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இலங்கையில் நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிபிசி உலக செய்தி சேவையின் தகவல்கள்...

    http://news.bbc.co.uk/2/hi/7858065.stm

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் வெள்ளை பொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதியுயர் வெடிமருந்து கொண்ட எறிகணைகளை (எரிகுண்டுகளை) பீரங்கிகள் மூலம் ஏவி வருகின்றது போல அப்பிரதேசங்களை அவதானிக்கும் போது தெரிவதாக அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

    இச் செய்தியை மேலும் படிக்க


    இந்தக் குண்டு தொடர்பான விபரங்கள் விக்கிப்பீடியா தளத்திலிருந்து

    http://en.wikipedia.org/wiki/White_phosphorus_(weapon)


    முன்னர், வியட்நாம் போரின் போது அமெரிக்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்தவகை எறிகணைகள், அண்மையில் இஸ்ரேலிய இராணுவத்தினரினால் காசா பகுதியிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது இலங்கையில் ராணுவம் ஈழமக்களைக் கொல்லப் பயன்படுகிறது.
    Last edited by நிரன்; 04-02-2009 at 02:31 PM. Reason: மேலதிக விபரச்சேர்ப்பு

  12. #24
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2008
    Location
    தமிழகம்
    Posts
    106
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    மனதை உறையவைக்கும் பதிவுகள்...

    - 25 வருடங்களாக (என்னுடைய கல்லூரி காலம் முதல் ) பல வேறு விதமாக மனிதர்களும் பல காட்ச்சிகளும் மாறி மாறி எது உண்மை ?... எது சரி ?... என்ன செய்வது ?.... என்று புரியாமல் காலத்தின் ஓட்டத்தில் சிக்கிகொண்டு போய்கொண்டிருக்கும் இயல்பான தமிழனில் ஒருவன்

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •