Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 59

Thread: கதைகள் உருவான கதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    கதைகள் உருவான கதை

    வணக்கம் நண்பர்களே
    நம் மன்றத்தில் என்னுடைய மன்ற அக்கவுண்டு பக்கம் சும்மா போனேன், இதுவரை எத்தனை கதைகள் நான் எழுதி இருக்கிறேன் என்று சும்மா பாக்கப்போனேன், அப்படி இப்படி என்று 25 கதையை எழுதி ஒப்பேத்தி விட்டேன். நான் பகிர்ந்து கொள்ள வந்த விஷயம் இதுவல்ல,

    நான் மற்றவருடைய சிறுகதைகளை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றும் முதல் சிந்தனை இந்த கருவை எப்படி யோசித்து இருப்பார்கள், இந்த கரு உதிக்க காரணமாக இருந்த நிகழ்ச்சி எதுவாக இருக்கும்? எப்பது தான்.

    எப்பொழுதுமே ஒரு சிறுகதையோ, கவிதையோ, திரைப்படமோ அல்லது நாவலோ எதுவாக இருந்தாலும், இவை அனைத்து அந்த படைப்பாளியின் மூளையில் ஒரு சின்ன பொறியாக தான் உதிக்கும். ஆனால் அவை டேவலப் ஆனப்பின் தான் முழு வடிவம் பெரும். அப்படி பெற்றவுடன் அதற்கு காரணமான அந்த சின்ன பொறியை நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.

    நான் எழுதிய கதைகளின் கருக்களும் அப்படி தான் உதித்தவை அவைகளை இங்கு நான் பகிர்ந்துக் கொள்ள உள்ளேன். அதே போல நம் மன்றத்தில் அருமையான எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் பல இருக்கின்றன, அவைகள் சம்பந்தப்பட்டவர்களின் மூளையில் எப்படி உதித்தது என்ற கதையை இந்த திரியில் பகிர்ந்தால் சுவையாகவும், அதேப்போல கதைகள் எப்படி வடிவம் பெறுகிறது என்ற ஒரு பாடமாகவும் இருக்கும். அதனால் நண்பர்களே உங்களின் கதைகள் உருவான கதையை சொல்லுங்கள்.

    நன்றி

    முயற்சியின் முதல்படியாக நானே என்னுடைய ஒரு கதையின் கதையை துவங்குகிறேன்.
    Last edited by கீதம்; 24-04-2012 at 02:08 AM. Reason: பிழை திருத்தம்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஒரு படம் பார்ப்பதிலும் அவை உருவான விதம் பார்ப்பதில் உள்ள சுவையே தனி... ஜக்கிசான் படத்தின் இறுதியில் அவற்றை காட்டுவார்கள். (அது தவறுகள் பற்றி)

    சிவாஜி உருவான விதம் என்று ஒரு ஒளித்தொகுப்பு வெளியிட்டிருந்தார்கள். அந்த அனுபவத்தினை தரப்போகிறது உங்கள் பகிர்வு. பகிருங்கள். வேடிக்கை பார்க்க நான் ரெடி..............
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. Likes மயூ liked this post
  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    தீயில் ஒரு பனித்துளி

    எப்பொழுதும் நான் கதைகளை எழுதுவதற்கு முன்பு முதலில் யோசித்துக் கொள்வது, என்ன கதையில் சொல்லப் போறோம், அப்புறம் அதில் வரும் கதாபாத்திரங்கள்.
    ஆனால் இந்த கதை எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காரணம் இதில் நான் முதலில் யோசித்து வைத்தது இதில் வரும் முடிவு.

    அதற்க்கு காரணம் இந்த கதையின் கருவை நான் யோசிக்க துவங்கியதே அந்த முடிவில் இருந்து தான்

    “தந்தையும் மகனும் சிகரெட்டை பிடித்துக் கொண்டு நடந்தனர்”.

    நான் வசிப்பது அடுக்கு மாடி குடியிருப்பில், அப்பொழுது இரவு நேரங்களில் சில சமயம் வாக்கிங் போவதுண்டு. ஒரு நாள் அந்த மாதிரி போகும் பொழுது நான் ஒரு காட்சியை பார்த்தேன். ஒரு வயதானவர் (வயது 65) ஸ்டையில கண்ணாடி போட்டுக் கொண்டு, அவரின் தோள் மீது கையைப் போட்ட படி ஒரு வாலிபன் (வயது 27) இருவரும் நடந்து சென்றனர். நான் அதை பார்த்தவுடன் ”என்ன தான் அப்பாவை நண்பனாக நினைத்தாலும், நடுதெருவில் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு போவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்” என்று நினைத்தேன். அதில் மகன் அடிக்கடி அப்பாவின் காதில் எதோ சொல்லிக் கொண்டே சென்றான். சிறிது தூரம் போனவர்கள் நின்றார்கள், பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை மகன் எடுத்து அப்பாவின் வாயில் வைத்து பற்ற வைத்தான், அவனும் அதேப் போல ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான். இருவரும் எதோ சிரித்துக் கொண்டார்கள். வந்த வேலை முடித்தவுடன் மறுபடியும் தோள் மீது கையை போட்டபடி மகன் அழைத்து வந்தான். நான் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். என்னை கடந்து போகும் பொழுது அந்த மகன் அப்பாவிடம் சொன்னான்.

    “அப்பா கீழே ஒரு கல் இருக்கு பார்த்து வாங்க”

    அப்போ தோன்றியது தான் இந்த கதை, இந்த கதையின் போக்கு வேறு மாதிரியாக சென்றாலும், இந்த முடிவை வைக்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்.

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18077

    இனி நம் உறவுகள் தொடரலாம்.
    Last edited by ரங்கராஜன்; 24-01-2009 at 03:08 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தக்ஸின் மனதில் உதித்த புதிய சிந்தனைக்கு பாராட்டுக்கள். கதை உருவான கதையை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆவலாகவே இருக்கும். உங்கள் தீயில் ஒரு பனித்துளி உருவான கதையைப் படித்து நீங்கள் சுற்றியுள்ளோரை எத்தனை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

    இது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிக அவசியமான ஒன்று. தொடருங்கள் தக்ஸ். நானும் கலந்துகொள்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    25 கதைகளா..? வாழ்த்துக்கள் மூர்த்தி.

    தங்கள் கதை புனையும் திறனையும் கடின உழைப்பையும் எண்ணி வியக்கிறேன்.

    இந்த கதைகள் எல்லாமே ஏற்கனவே யோசித்து தயாரித்திருந்த கதைகளா? அல்லது சமீபத்தில்தான் யோசித்து எழுதினீர்களா?

    அநேகமாய் நம் மன்றத்தில் மிக குறைந்த கால கட்டத்துக்குள் அதிகமான கதைகளை பதித்தவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.

    கீழை நாடான்

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    தக்ஸின் மனதில் உதித்த புதிய சிந்தனைக்கு பாராட்டுக்கள். கதை உருவான கதையை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆவலாகவே இருக்கும். உங்கள் தீயில் ஒரு பனித்துளி உருவான கதையைப் படித்து நீங்கள் சுற்றியுள்ளோரை எத்தனை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

    இது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிக அவசியமான ஒன்று. தொடருங்கள் தக்ஸ். நானும் கலந்துகொள்கிறேன்.
    நன்றி சிவாஜி அண்ணா
    நானும் உங்களின் கதைகளின் கதையை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by Keelai Naadaan View Post
    25 கதைகளா..? வாழ்த்துக்கள் மூர்த்தி.

    தங்கள் கதை புனையும் திறனையும் கடின உழைப்பையும் எண்ணி வியக்கிறேன்.

    இந்த கதைகள் எல்லாமே ஏற்கனவே யோசித்து தயாரித்திருந்த கதைகளா? அல்லது சமீபத்தில்தான் யோசித்து எழுதினீர்களா?

    அநேகமாய் நம் மன்றத்தில் மிக குறைந்த கால கட்டத்துக்குள் அதிகமான கதைகளை பதித்தவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.
    நன்றி கீழை
    நான் கதை எழுத ஆரம்பித்ததே மன்றம் சேர்ந்த பின் தான், அதாவது oct 22 / 2008. எழுதிய அத்தனை கதைகளும் இங்கு வந்து தான் எழுதினேன். நான் என்றும் கதை எழுத வேண்டும் என்று உக்கார்ந்தது இல்லை, அப்படி உக்கார்ந்தால் ஒரு வார்த்தை கூட எனக்கு வராது. ஆனால் மனதை பாதித்த ஒரு காட்சி, (அல்லது) செய்தி (அல்லது) நிகழ்ச்சி நடந்த அடுத்த வினாடி கதை தயாராகி விடும். அநேகமாக மன்ற படைப்பாளிகள் அனைவருக்கும் இந்த நிலை தான் என்று நினைகிறேன். எந்த படைப்பையும் நாம் படைப்பது கிடையாது, அவை தான் நம்மை படைக்க வைக்கின்றன.

    நன்றி.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  9. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    விதைகள்

    என்னுடைய சமீபத்திய சிறுகதை இது. இந்த கதையின் கரு எனக்கு கிடைத்த கதை இது.

    ஒரு நாள் பத்திரிக்கையை பார்த்துக் கொண்டு இருந்தேன், அதில் இஸ்ரேலில் மனித வெடிகுண்டால் பலர் காயம் அடைந்தார்கள் என்று போட்டு இருந்தார்கள். எனக்கு பல நாட்களாக இந்த மனித வெடிகுண்டு நபர்களை பற்றி பல சிந்தனைகள் இருந்தது. மனிதர்களுக்கு அவர்கள் மரணம் எப்பொழுது என்று தெரியாததினால் தான் வாழ்க்கை சந்தோஷமாக போகிறது, ஆனால் மனித வெடிகுண்டாக மாறுபவர்கள் மட்டும் விதி விலக்கு, அவர்களின் சாவை அவர்களே தீர்மானிக்கீறார்கள் (கடவுளைப் போல). அவர்களின் மனதில் கடைசி நிமிடத்தில் என்ன எண்ணங்கள் ஓடும், யாரைப்பற்றி ஓடும், குடும்பமா? குழந்தைகளா?, இயக்கமா? நாடா? எது?. புரியாத புதிராக இருக்கிறது. அப்படி குழம்பி நான் யூ டியுபில் (youtube) மனித வெடி குண்டுகளின் வீடியோகளை பார்த்துக் கொண்டு இருந்தேன், அவர்களின் கடைசி நிமிட முகபாவம் என்ன என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு ஒரு வீடியோ சிக்கியது.

    ஒரு பெண் அதாவது 15 வயது இருக்கும், அவள் ஒரு மனித வெடிகுண்டு உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் வந்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றி விட்டாள், சாக பிடிக்கவில்லையா?, அல்லது உயிர்களை கொல்லவதை பாவம் என்று நினைத்தாளோ. ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டாள். அந்த காட்சி தான் இருந்தது. எனக்கு அதை பார்த்ததும் அன்பே சிவம் படத்தின் கடைசி காட்சியில் கமல்ஹாசன் பேசிய வசனம் தான் ஞாபகம் வந்தது.

    “ஒருத்தனை கொல்ல வந்துட்டு, அப்புறம் முடிவை மாத்திகிட்டு மன்னிப்பு கேட்கற மனசு இருக்கே அது தான் கடவுள்”

    அப்படி தான் இருந்தது அந்த பெண்ணின் நடவடிக்கை, அவளை ஏமாற்றி வெடிகுண்டு கட்டினார்களா? என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அந்த பெண் நினைத்து இருந்தால் அன்று பல உயிர்கள் போய் இருக்கும்.

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19025

    ஆக அந்த காட்சி தான் விதைகள் கதையின் கரு, கதைக்கு தகுந்தார் போல மாற்றி அமைத்து இருந்தேன்.
    அந்த வீடியோ
    [media]http://in.youtube.com/watch?v=_Fw1x1p_kfM[/media]
    Last edited by ரங்கராஜன்; 24-01-2009 at 03:09 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  10. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஒருவேளை நீ இருந்திருந்தா, அவ பண்ணியிருப்பா..... தற்கொலை...

  11. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஒருவேளை நீ இருந்திருந்தா, அவ பண்ணியிருப்பா..... தற்கொலை...
    புரியவில்லை
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  12. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by daks View Post
    புரியவில்லை
    ஒருவேளை நீ இஸ்ரேல்ல இருந்திருந்தா, உன்னைப் பார்த்ததும் அந்தப் பெண் தற்கொலையே செய்திருப்பா.... அப்படின்னு சொல்லவந்தேன்...

    இப்பவாச்சும் புரிஞ்சதா?

  13. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஒருவேளை நீ இஸ்ரேல்ல இருந்திருந்தா, உன்னைப் பார்த்ததும் அந்தப் பெண் தற்கொலையே செய்திருப்பா.... அப்படின்னு சொல்லவந்தேன்...

    இப்பவாச்சும் புரிஞ்சதா?
    புரிஞ்சிதுங்க அரவிந்தசாமி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •