Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 59

Thread: கதைகள் உருவான கதை

                  
   
   
  1. #13
    இளம் புயல் பண்பட்டவர் umakarthick's Avatar
    Join Date
    04 May 2007
    Location
    chennai
    Posts
    372
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    57
    Uploads
    0
    25 கதைகளா தொடர்கதையா இல்லை சிறுகதைகளா இல்லை சற்றே பெரிய சிறுகதைகளா??

    நல்ல திரி நீங்கள் சொன்னது போல ஏதாவது ஒரு சின்ன விஷயம் ,காட்சி,படித்த துணுக்கு ஒரு சிறுகதைக்கு காரணமாயிருக்கும் என்னை கேட்டால் கற்பனை கதைகளை விட இந்த மாதிரி எழுத படும் கதைகள் சிறப்பாக இருக்கும் என்ன சொல்றீங்க ?

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by umakarthick View Post
    25 கதைகளா தொடர்கதையா இல்லை சிறுகதைகளா இல்லை சற்றே பெரிய சிறுகதைகளா??

    நல்ல திரி நீங்கள் சொன்னது போல ஏதாவது ஒரு சின்ன விஷயம் ,காட்சி,படித்த துணுக்கு ஒரு சிறுகதைக்கு காரணமாயிருக்கும் என்னை கேட்டால் கற்பனை கதைகளை விட இந்த மாதிரி எழுத படும் கதைகள் சிறப்பாக இருக்கும் என்ன சொல்றீங்க ?
    நன்றி கார்த்திக்
    எல்லாமே சிறுகதைகள் தான், நீங்கள் கூறுவது போல 100% கற்பனை கதைகளையும் எழுத முடியாது ,அதே போல 100 % உண்மை கதைகளையும் எழுத முடியாது. கொஞ்சம் கலவையுடன் தான் எழுத முடியும், அந்த கலவையின் விழுக்காடு (%) தான் கதையின் வெற்றியை தீர்மானிக்கின்றன. நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    சக்களத்தி

    இந்த கதை எழுத காரணமாக இருந்தது அந்த கதையின் நாயகியே தான். எனக்கு தெரிந்த ஒரு அக்கா அவள், ஏழை அக்கா. எங்க ஊரில் தான் இருக்காங்க (தெரிந்த குடும்ப). அவங்க கதை தான் இது. ஒரு முறை அவங்களை நான் கடற்கரையில் பார்த்தேன் வேறு ஆளுடன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, காரணம் கதையில் வருவது போல ஒரு பணக்கார முதியவருக்கு கட்டாய திருமணம் முடிக்கப்பட்டவள் அவள். என்னை பார்த்தவுடன் அவளுக்கு இன்னும் அதிர்ச்சி, இருவரும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன், சிறிது நேரம் நான் கடல் அலைகளை பார்த்த படி அமர்ந்து இருந்தேன். அந்த அக்கா என்னை நோக்கி வந்தாள், நான் அவளை பார்த்து சிநேகமாக புன்னகித்தேன், அதை எதிர்பார்க்காத அவள், என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். இருவரும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டு இருந்தோம். (நான் தனியாக தான் கடற்கரை சென்று இருந்தேன், நான் எங்கு போனாலும் தனியாக தான் போவேன் கூட்டத்துடன் சென்றாலே எனக்கு அலர்ஜீ). கொஞ்ச நேரம்
    பிறகு அவளே பேச ஆரம்பித்தாள். (எங்களுக்குள் 100% உண்மையாக நடந்த உரையாடல் இது, என்னால் மறக்கவே முடியாது)

    “தச்சன் (என் பெயரை அப்படி தான் அழைப்பாள்), அது யாரு கேட்கவே இல்லையே”

    “(நான் சிரித்துக் கொண்டு) ஃப்ரண்டு-னு சொல்வீங்க”

    “அவள் இல்லை அவர் என்னுடைய காதலர்”

    “..........”

    “நாங்க எப்பவுமே இங்க தான் வாரத்தில் ஒரு நாள் சந்திப்போம்”

    “.........”

    “இதை எல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க”

    “நீ போய் என்ன நடந்தது-னு உங்க வீட்டுல சரியா சொல்லனும் இல்ல”

    “எனக்கு வேறு வேலை இல்லையா”

    “..........”

    சிறிது நேரம் கழித்து அவளே “எனக்கு அந்த ஆளுடன் வாழவே பிடிக்கலை, 65 வயசு கிழவன், இரண்டாந்தாரம்”

    “இப்ப வருத்தப்பட்டு என்னக்கா செய்றது, எல்லாம் முடிஞ்சி போச்சு”

    “என்னால அப்படி விட முடியாது, என்னுடைய வாழ்க்கையை நான் தான் வாழனும். உங்களுக்கு எல்லாம் இது ஒரு சுவாரஸ்யமான கதை அவ்வளவு தான், எனக்கு தான் இது வாழ்க்கை”

    “என்னக்கா இப்ப நான் என்ன சொன்னேன்னு நீ கோபப்படுற, சரி நான் வரேன் (என்று எழுந்தேன்)”

    “சாரிடா எதோ நியாபகத்தில் பேசிவிட்டேன், கொஞ்ச நேரம் இருடா”

    சிறிது நேரம் மெளனம்.

    “(நான் தயக்கத்துடன்) அக்கா இது எல்லாம் தப்பு இல்லையா”

    ”புரியல”

    “இல்ல கல்யாணம் ஆகிட்டு இப்படி செய்ற......”

    “அப்ப இரண்டாம் கல்யாணம் மட்டும் சரியா, என் வாழ்க்கையை அழிச்சது சரியா, என் அப்பாவை விட வயசானவருக்கு என்னை கட்டி வச்சது சரியா”

    சிறிது மெளனம், அவளே தொடந்தாள் ”நீ இப்ப பார்த்தியே அவர் தான் என்னுடைய காதலர், கல்யாணதிற்கு முன்பே நாங்கள் காதலித்தோம்”

    “ஆனா இப்ப அதன் பேரே வேறனு சொல்லுவாங்கக்கா”

    சட் என்று என்னை முறைத்தாள். நான் மெளனமாக மண்னை விரலால் கிளறிக் கொண்டு இருந்தேன். நானே ஆரம்பித்தேன்

    “உன்னுடைய புருஷனுக்கு தெரிந்தால் பிரச்சனை ஆயிடும் க்கா”

    “(அவள் சிரித்துக் கொண்டு) அந்தாளுக்கு தெரியும், சீக்கிரம் இருட்டுரதுக்குள் திரும்ப வந்துடுனு சொல்லி அனுப்பினார்”

    நான் திகைத்து நின்றேன்.

    யாரை குறை சொல்வது, உண்மையில் ethical life, moral life என்பதெல்லாம் என்ன?, யாருக்கு எத்தீக்கலா? மாரலா? இருக்கனும். நமக்கா? இல்ல ஊருக்கா?. ஒன்றுக்கு இருந்தால் இன்னொன்றுக்கு குறை வரும். வாழ்க்கையின் சூச்சமங்கள் நிறைய இருக்கிறது. இந்த அக்காவை போல எத்தனையோ பெண்களின் வாழ்க்கைகள் கேள்விக்குறியாக இருக்கிறது?. மனத்துக்குள் தினமும் எவ்வளவு புழுங்குவாள் அவள், விருப்பம் இல்லாத ஒருவன் அவளை தொடும் பொழுது அவளின் உடல் எப்படி கூசி போய் இருக்கும், அவளின் மனநிலை எப்படி இருக்கும்.

    ஆண்கள் தடுமாறினால் அது அவனின் உரிமையாக்கப்படுகிறது. ஆனால் அதுவே ஒரு பெண் செய்தாள் அவள் வேசியாக்கப்படுகிறாள். ஓரவஞ்சனையான உலகம் இது.

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18186

    நன்றி
    Last edited by ரங்கராஜன்; 24-01-2009 at 03:12 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  4. #16
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    இனிய தக்ஸ் அவர்களுக்கு, உங்களின் கதைக்கான கரு உருவாகும் கதை என்ற புதிய சிந்தனை என்னை லெகுவாய் ஈர்த்தது.
    நேரில் பார்க்கும் சிறு சம்பவங்களுடன் கொஞ்சம் கற்பனையை கலந்து எழுதினால் கதை தயாராகி விடுகிறது. எனது கதைகளின் ஆரம்பமும் அதுதான். ஒருநாள் ஆள் நடமாட்டமில்லாத தெருவழியாக இருசக்கரவாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன், ஒரு முதியவர் தெருவில் விழுந்து எழுந்திருக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார் எனக்கு அவரை கடந்து போக மனமின்றி வண்டியை நிறுத்திவிட்டு அவரை தூக்கி அமர வைத்து பக்கத்து வீட்டிலிருந்தவர்களை அழைத்தேன். அவரகள் வந்து கேட்டார்கள் '' உன் வண்டியல தான் பெரியவர் அடிபட்டு விழுந்தாரா’’ எனக்கு பகீரென்றிருந்தது. உதவி செய்யப்போய் என்னை சந்தேகப்பட்டார்களே என்று வருத்தத்தோடு அலுவலகம் சென்றேன். இரண்டு நாள் கழித்து நடந்த சம்பவத்தை கொஞ்சம் கற்பனையை சேர்த்து ஒரு பக்க கதையாக்கி குமுதம் வார இதழுக்கு அனுப்ப அப்படி போடு என்ற தலைப்பில் கதை வெளிவந்தது. அந்த கதை இதோ உங்களின் பார்வைக்கு.
    அப்படி போடு

    அந்த தெருவின் குறுக்குச் சந்து வழியாக நானும் நண்பர் குமாரும் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தோம்.
    ஆள் நடமாட்டம் இல்லாத அந்த குறுக்குச் சந்துக்குள் நுழைந்த போது எண்பது வயது முதியவர் கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.

    தூரத்தில் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு ’’ யாராச்சும் ஓடி வாங்களேன், பெரியவர் கீழே விழுந்துட்டாரு!’’ என்று உரக்க சத்தமிட்டான் குமர்ர். அவனின் சத்தம் கேட்டு சிலர் வேகமாய் சென்று அந்த முதியவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெழித்து ஆசுவாசப்படுத்தினார்கள். நண்பன் குமார் மீது கடுப்பாகிப்போனது எனக்கு.

    ‘’ அந்த பெரியவர நாம ரெண்டு பேரும் நெனச்சா தூக்கி உதவி பண்ணியிருக்க முடியாதா? மனிதாபிமானமே இல்லாம நடந்துகிட்டியே!’’ என்றேன்.

    குமார் மெல்லியதாய் புன்னகைத்துவிட்டுச் சொன்னான்.

    ’’ நாம டூவீலர அவர் பக்கத்துல நிறுத்தி அந்த முதியவர தூக்கி உதவி பண்ணியிருந்தா அத பார்க்கிறவங்க நாம தான் அவர்மேல வண்டிய மோத விட்டோமோன்னு சந்தேகமா பார்ப்பாங்க, மனிதாபிமானத்துல உதவி பண்ணப்போயி பழி நம்ம மேல விழுந்திடக்கூடாதுன்னுதான் அப்படி கூப்பிட்டேன்.

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நன்றி ராசய்யா
    உங்களின் பதிப்புக்கு மிக்க நன்றி, இன்னும் உங்கள் கதையின் கதைகளை இங்கு நீங்கள் பதியுங்கள், தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

    அப்புறம் ரொம்ப நாளாய் உங்களிடம் ஒண்ணு கேட்கனும்-னு இருந்தேன். அதெப்படி உங்கள் கதைகள் எல்லாம் தொடர்ச்சியாக பிரபல வார இதழ்களில் வருது, எனக்கு மிகுந்த ஆச்சர்யம் தரும் விஷயம் இது, அதிர்ஷ்டகாரர் தான் நீங்கள், வாழ்த்துக்கள்..........
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  6. #18
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    இனிய நண்பருக்கு
    வாரம்தோறும் குமுதம், குங்குமம், ஆகிய இதழ்களுக்கு தலா மூன்று கதைகள் எழுதி அனுப்புகிறேன், மெசேஜ் மற்றும் தரம் இருப்பவை மட்டுமே பிரசுரிக்கப்படுகின்றன. இதற்கு அதிர்ஷ்டம் எதுவுமில்லை.குமுதத்தில் மூன்று மாதங்களுக்குப்பிறகு இந்த வாரம் ஒரு கதை வெளிவந்துள்ளது. எழுதிய கதைகள் வெளிவரவில்லையே என்று எழுதுவதை நிறுத்தவில்லை அது தான் காரணமாக இருக்கலாம் என்பது எனது எண்ணம். நன்றி. எனது தனி பிளாக் பார்க்கவும்

    ஐரேனிபுரம் பால்ராசய்யா
    idaivelikal.blogspot.com

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரமும் அர்த்தம் இருக்கும்.
    அசைவே இல்லா விட்டாலும் அதிலாயிரம் அர்த்தம் இருக்கும்.
    அந்த அர்த்தங்கள் கூர்மையான பார்வைக்கே எத்துப்படும்.
    அர்த்தங்களால் வியக்கத் தெரிந்தவர்கள் கர்த்தாக்கள் ஆகிறார்கள்.
    படைப்பாளிகளும் ஒருவகையில் குழந்தைகளே!
    வியக்க மட்டுமன்றி இப்படி உண்மையைச் சொல்லவும் தயங்குவதில்லையே.

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by அமரன் View Post
    ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரமும் அர்த்தம் இருக்கும்.
    அசைவே இல்லா விட்டாலும் அதிலாயிரம் அர்த்தம் இருக்கும்.
    அந்த அர்த்தங்கள் கூர்மையான பார்வைக்கே எத்துப்படும்.
    அர்த்தங்களால் வியக்கத் தெரிந்தவர்கள் கர்த்தாக்கள் ஆகிறார்கள்.
    படைப்பாளிகளும் ஒருவகையில் குழந்தைகளே!
    வியக்க மட்டுமன்றி இப்படி உண்மையைச் சொல்லவும் தயங்குவதில்லையே.

    அன்பு அமரன்
    முன்பெல்லாம் உங்கள் பின்னூட்டங்கள் கொஞ்சமாவது புரியும், ஆனால் வர வர கொஞ்சம் கூட புரிவதில்லை. எனக்கு இந்த அளவுக்கு தமிழ் தெரியாது, நீங்கள் திட்டுகிறீர்களா?, புகழ்கிறீர்களா?, கிண்டல் பண்ணிறீங்களா? இல்லை தப்பை சுட்டிகாட்டிறீங்களா? சத்தியமா ஒண்ணுமே எனக்கு புரிவதில்லை. தேங்காயை உடைப்பது போல உடையுங்கள் கருத்தை அப்பொழுது தான் தவறு இருந்தால் என்னால் திருத்திக் கொள்ள முடியும்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    தக்ஸ்

    அமரன் சொன்னது வியப்பான புகழ்ச்சியே..
    அதில் நானும் கலக்கிறேன்..

    இத்திரியின் நோக்கமே அலாதி... கவர்ச்சி....
    அதற்கு முதல் பாராட்டுகள்..

    பொறிகள் அறிந்ததும் கதைகள் மேல் ஈர்ப்பு இன்னும் கூடுகிறது... நன்றி..

    ஐபாரா - சேர்ந்து சொல்வதுபோல், இன்னும் சிவா, கீழைநாடான், கார்த்திக்
    எல்லாம் வருவார்கள். அதற்கு வாழ்த்துகள்..

    கடற்கரை உரையாடலே ஒரு கதைக்கான தரத்துடன் ..
    சுஜாதாவை மீறி, அங்கே ஜெயகாந்தனையே கண்டேன்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கடற்கரை உரையாடலும் அதன் முடிவும்...... என்னை வியக்க வைத்தன....

    தஷ்ணாமூர்த்தி... உனக்கு மிகப்பெரும் எதிர்காலம் காத்திருக்கிறது.. (அண்ணாத்தையை மறந்துடாத கண்ணு)
    நீ, ஆவி, குமுதம் போன்ற இதழ்களுக்கு அனுப்பு.. அது பலரைச் சென்றடையும்... உன் கதைகளை நிச்சயம் பிரசுரிப்பார்கள்.. தயக்கம் வேண்டாம்.

    அமரனுடைய பின்னூட்டத்தை ஆழ்ந்து படித்தாலே போதும்... விளங்கிவிடும்.. (என்னைக் கேட்டால், எளிமையாகத்தானே எழுதியிருக்கிறார்...)

    வாழ்த்துக்கள் பையா....

    கூடவே எந்தக் கதையைப் பற்றி சொல்கிறாயோ, அதன் இணைப்பை (Link) கொடுத்துவிடு...

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நன்றி அமரன் & இளசு அண்ணா
    உங்களின் வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி, நான் அமரன் விமர்சனங்களின் ரசிகன், இதை நான் ஏற்கனவே ஒரு திரியில் சொல்லி இருக்கிறேன், அவரிடமும் சொல்லி இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய முதல் விமர்சகர்கள் மதியும், அமரனும். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்கள் இருவரையும் நான் மறக்க மாட்டேன். அவரிடம் சும்மா வம்பு பண்ண தான் அப்படி போட்டேன். கொஞ்ச நாளாய் இருவரின் வேலை காரணமாய் நெருக்கம் குறைந்து விட்டது அதனால் அதை அடைக்க தான், அவரை வம்புக்கு இழுத்தேன்.
    இன்னும் இழுப்பேன். (ஹா ஹா ஹா)
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நல்ல ஒரு படைப்பாளி,
    பல நல்ல படைப்பாளிகளை
    உருவாக்க முடியும்...

    தன் படைப்புக்கள்
    உருவான விதத்தினைப்
    எல்லோருடனும் பகிர்வதனால்...

    மனதாரப் பாராட்டுகிறேன்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •