Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 59 of 59

Thread: கதைகள் உருவான கதை

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நீ எனக்கு வேண்டும்

    வணக்கம் உறவுகளே
    ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த பக்கம் வந்து, சரி இந்த முறை கொஞ்சம் சுவாரஸ்யமான கரு இது. எப்பொழுது எங்கு என்று நினைவில்லை. ஒரு புத்தகத்தில் ஒரு கட்டுரையை படித்தேன், என்னுடைய சுஜாதா ஐயா நண்பரின் நிஜ வாழ்க்கையை எழுதி இருந்தார். பெயர் நியாபகம் இல்லை. சுஜாதா ஐயாவின் எழுத்தில் இருந்து.

    “என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடன் நான் பணி புரியும் சென்னை விமான நிலையத்தில் எனக்கு சீனியராக இருந்தார். அவர் ஒரு கட்ட பிரம்மச்சாரி வயது 40 இருக்கும், திடீர் என்று ஒரு நாள் அவங்க வீட்டுக்கு சென்றேன். பார்த்தால் அவர் வயதுடைய ஒரு பெண்ணும் அவருடைய குழந்தைகளும் இருந்தார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம். யார் அவங்க என்று கேட்க விரும்பினாலும் கேட்கவில்லை. அவரே சொன்னார்

    “ இவங்கல தான் நான் கல்லூரி படிக்கும் பொழுது காதலித்தேன், ஆனால் அவங்க சம்மதிக்கவில்லை, எங்கள் வீட்டிலும் சம்மதிக்கவில்லை, அவங்க திருமணம் செய்து கொண்டாள். நான் செய்துக் கொள்ளவில்லை. ரொம்ப வருஷம் கழித்து போன வாரம் ஒரு கல்யாணத்தில் அவங்கள சந்தித்தேன், கணவர் இறந்து விட்டாராம். தனியாக கஷ்டப்பட்டாங்க, நான் என்னுடன் அழைத்து கொண்டு வந்துவிட்டேன் குழந்தைகளுடன்” என்றார் என்னுடைய நண்பர் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, சற்று சலங்கை ஒலி படம் போலவும் இருந்தது. என்ன வித்தியாசம் அது நிழல் இது நிஜம். காமம் என்ற சுகத்திற்காக மட்டும் காதலிக்கும் காலத்தில், காதலுக்காக காதலித்த என்னுடைய நண்பரை பார்க்க பெருமையாக இருந்தது. ஆச்சர்யத்துடன் இதை என்னுடைய மருத்துவ நண்பரிடம் சொன்னேன், அத்ற்கு அவர் சிரித்துக் கொண்டு சொன்னார் “அவர் ஒரு அப்நார்மல் மனிதன், சைக்கலாஜிக்கா அவருக்கு எதோ பிராபலம் இருக்கிறதுனு” சொன்னார்


    இப்படி முடித்து இருப்பார் அந்த கட்டுரையை, நான் இதை படித்து பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அந்த பெயர் தெரியாத மனிதன் மேல் எனக்கு மிகுந்த மரியாதை வந்தது. மருத்துவம் அவருக்கு என்ன பெயர் வைத்தாலும், மனம் அவரை மகுடத்தில் தான் வைத்து அழகு பார்க்கிறது. இந்த கருவை வைத்து தான் கொஞ்சம் என்னுடைய கோபங்களையும் வைத்து கதையை திரித்தேன்.

    இந்த மாதிரி பிரச்சனையை கொஞ்சம் அலசினால், இந்த மாதிரி அடமண்ட், அக்ரஸிவ், பண்புகள் எல்லாம் ஒரு குழந்தை மட்டும் இருக்கும் குடும்பத்து குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். எப்படியாவது தான் நினைத்தது தனக்கு வந்து சேர வேண்டும் என்று நினைப்பது உண்டு. குழந்தைகள் வளர வளர வேகமும், கோபமும், மூர்க்கதனமும் அதிகமாகும். அப்பொழுது தான் மனம் இந்த மாதிரி கிரிமினலாக நினைக்க வைக்கும்

    ஒரே குழந்தையாக வளர்ந்த தகுதியில்
    தக்ஷ்ணாமூர்த்தி.

    கதையின் சுட்டி
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18560
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #50
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நகரத்தில் புது மனைவி

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18042

    இந்த கதை எழுத காரணமாக இருந்தவர் எனக்கு தெரிந்த உடன்பிறவா அக்கா ஒருத்தி, திருமணம் ஆகி அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் மிக மென்மையானவள், சிரித்த முகம் உடையவள். திருமண வாழ்க்கையை பற்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதவள். அவளுக்கு தெரிந்தது எல்லாம் குடும்பம் மட்டும் தான், அப்பா, அம்மா, தம்பி, தங்கை அவ்வளவு தான். அவளுக்கு அமெரிக்காவில் இருந்து மாப்பிள்ளை வந்தார் அவர் நல்லவர் தான் (கதையில் வரும் கணவனுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை, அது கற்பனை). ஒன்றுமே தெரியாத அவளுக்கு சென்னையே புதுசு, அப்போ அமெரிக்கா எப்படி இருக்கும்????????, மனரீதியா எவ்வளவு பிரச்சனை இருக்கும். இத்தனையையும் ஒரே கதாபாத்திரத்தை வைத்து சொல்ல முடிவு செய்தேன். மனைவி மட்டும் தான் கதையில் வருவாள், அவள் தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவது போல கதையை அமைத்து இருந்தேன். கர்பமாக இருக்கும் சில பெண்களை இப்படி பேசி நான் கேட்டு இருக்கிறேன். கணவன் வேலையில் இருந்து வந்ததும் குழந்தை அங்கு உதைத்தது, இங்கே இடிச்சது என்று சொல்லி சந்தோஷப்படுவாள், கணவனும் தன்னுடைய பையை கூட கழற்றி வைக்காமல் மெய் மறந்து கேட்டுக் கொண்டு இருப்பான், அது ஒரு விதமான சுகமான உணர்ச்சி. ஆனால் கணவன் சரியில்லாத பெண்களின் நிலை என்ன?????????, அவர்கள் அந்த சந்தோஷத்தை எல்லாம் யாரிடம் சொல்லுவாள், சொந்த ஊராக இருந்தாலும் தன் சொந்தத்திடம், அல்லது தோழிகளிடம் சொல்லுவாள். யாரும் தெரியாத ஊரில், கெட்ட கணவனை வைத்துக் கொண்டு அவள் யாரிடம் சொல்லுவாள் என்று யோசித்த பொழுது தோன்றிய கரு இது. நான் எதிர்பார்த்த படி இது வாசகர்களிடம் சேரவில்லை என்றாலும் எனக்கு பிடித்த கதைகளில் இது முக்கியமானது.

    நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    உன் வாசம் மாறவில்லை

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18332

    வணக்கம் உறவுகளே
    இந்த கதையின் கரு மிக மிக மென்மையான கரு, இந்த கருவை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது, அப்படி புரிந்தாலும் ஒத்துக் கொள்ள முடியாது அதற்கு முக்கிய காரணம் சமுதாயம்.
    இந்த கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் பார்த்தால் தான் இந்த கதையின் நியாயம், நேர்மை புரியும். ஆனால் இந்த கதையை மூன்றாவது மனிதனாக பார்த்தால் இந்த கதையின் ஒழுக்கம் புரியாது, உறவும் புரியாது.

    எல்லார் வாழ்க்கையிலும் காதல் உண்டு, அதுவும் இளமையில் உண்டான காதல் என்றும் மறைவது கிடையாது. அந்த காதல் வெற்றியானல் கொஞ்ச மாதங்களிலே மறைந்து விடுகிறது, தோல்வியானால் இறக்கும் வரை நெஞ்சில் இனிக்கிறது. எல்லாருக்கும் அந்த உணர்வு இருக்கும், சுயமரியாதையை அல்லது உங்களின் சுயவட்டத்தை கொஞ்சம் அழித்துவிட்டு பார்த்தால் அந்த உறவுக்காக நீங்கள் மறைமுகமாக ஏங்குவது புரியும். அப்படி பட்ட முதிர்ச்சியான காதல் தான் இந்த கதையின் கருவும் கூட.

    எனக்கு தெரிந்த உறவுகாரர் ஒருவர் வீட்டில் நான் தங்கி இருந்தேன், அவர் என்னுடைய மாமா முறை, அவருக்கு அவருடைய பிறந்த நாளின் பொழுது சரியாக ஒரு பெண்ணிடம் இருந்து வாழ்த்து அட்டை வரும், ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல, சரியாக 29 வருடங்களாக வந்துக் கொண்டே இருக்கிறது, எனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா? 29 பிறந்த நாள் வாழ்த்து அட்டையையும் அவர் பத்திரமாக வைத்து இருக்கிறார். அவருக்கு வயது 49, ஆனால் இவர் ஒரு நாள் கூட அவங்களை திரும்ப தொடர்பு கொண்டது கிடையாது என்று தெரிகிறது. ஏனென்றால் ஒவ்வொரு அட்டையிலும் ”நீங்கள் எப்படி இருக்கீங்கனு ஒரு முறையாவது பதில் போடுங்கனு எழுதி இருப்பாங்க” இந்த வரி 29 அட்டைகளிலும் தவறாமல் இருக்கும். எங்க மாமாவுக்கு கல்யாணம் ஆகி இரண்டு பெரிய பசங்க இருக்கிறார்கள், அந்த பெண்மணிக்கு கல்யாணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான் போல, கடிதத்தில் இருந்தது, தன்னுடைய மகன் பிறந்ததில் இருந்து அவன் வேலைக்கு போகிறான் என்பது வரை ஒவ்வொரு வருடமும் அந்த பெண்மணி எழுதி இருக்கிறார்.

    எங்க மாமா இது வரை ஒரு பதில் கூட போட்டது கிடையாது, ஆனால் பல நாள் இரவு அந்த அட்டைகளை எனக்கு தெரியாமல் எடுத்து பார்ப்பார் (அந்த வீட்டில் நானும் அவரும் மட்டும் தான், வேலை விஷயமாக அவர் குடும்பத்தை விட்டு என்னுடன் தங்கி இருந்தார்), பல ராத்திரிகள் அதை முறைத்தபடி உக்கார்ந்து இருப்பார். கண்டிப்பாக அந்த பெண்மணி இவர் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத உறவாக தான் இருக்க முடியும்.

    எனக்கு இவர்கள் இருவரை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது, குறிப்பாக அந்த பெண்மணி, குடும்பம் என்று ஆன பின் தான் நேசித்த ஒரு உறவை எப்படி அதே பாசத்துடன் 29 ஆண்டுகள் நேசிக்க முடிகிறது, பதில் இல்லை என்றாலும் பொறுமையாக வாழ்த்து அட்டை போட முடிகிறது. (அதை தவிர எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் இல்லை)

    அப்புறம் அந்த மாமா பதில் போடவில்லை என்றாலும் மனதளவில் அந்த பெண்மணியை மிகவும் நேசிக்கிறார், அவரின் கடிதங்களை அவ்வளவு பாசத்துடன் பார்ப்பார், தொடுவார்.

    என்ன மாதிரியான உறவு இது?, தூரமாக இருந்தாலும், பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் இருவரும் மனதளவில் ஒன்றாக வாழ்கிறார்கள்.

    இந்த உறவின் கரு தான் இந்த சிறுகதையின் ஆணி வேர், சில பல மாற்றங்களுடன் மாற்றி சிறுகதை வடிவத்தில் கொடுத்தேன். முன்பே சொன்ன மாதிரி இந்த கதையின் நாயகன் நாயகியாக உங்களை பொறுத்தி பார்த்தால் மட்டும் தான் கதையின் நியாயம், ஒழுக்கம் புரியும். நாயகனுடைய மகனாகவும், மனைவியாகவும் அல்லது நாயகியின் மகனாகவும், கணவனாகவும் பார்த்தால் எரிச்சலாக தான் இருக்கும், எனென்றால் எனக்கும் முதலில் அப்படி தான் இருந்தது. நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  4. #52
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    இந்த உறவின் கரு தான் இந்த சிறுகதையின் ஆணி வேர், சில பல மாற்றங்களுடன் மாற்றி சிறுகதை வடிவத்தில் கொடுத்தேன். முன்பே சொன்ன மாதிரி இந்த கதையின் நாயகன் நாயகியாக உங்களை பொறுத்தி பார்த்தால் மட்டும் தான் கதையின் நியாயம், ஒழுக்கம் புரியும். நாயகனுடைய மகனாகவும், மனைவியாகவும் அல்லது நாயகியின் மகனாகவும், கணவனாகவும் பார்த்தால் எரிச்சலாக தான் இருக்கும், எனென்றால் எனக்கும் முதலில் அப்படி தான் இருந்தது
    நான் அந்தக் கதையை படித்தேன். மிகவும் சரி அண்ணா..
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  5. #53
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    தீயில் ஒரு பனித்துளி மிக அருமையான கதை தக்ஸ்... ஆழ்ந்து படிக்க முடிந்தது.. பாசத்துக்கு என்றுமே அளவுகோல் கிடையாது... எப்படியோ அப்பாவை புரிஞ்சுட்டானே அதுவே போதும். கதை எழுத உங்களுக்கு கரு கிடைத்த விதம் பற்றி நீங்கள் போட்டது மிக அருமை. நன்றி தக்ஸ்...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அருமையான திரி.

    கான்செப்ட்டே வித்தியாசமாக இருக்கிறது.

    மற்ற கதைகளின் கருவையும் தொடரலாமே.

  7. #55
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 May 2010
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    12,073
    Downloads
    0
    Uploads
    0
    நான் கதை எழுதிய இல்லை ஆனால்.

    கீதம் எழுதிய முற்றல் வெண்டைக்காய்-யின் ஒரு வரி பிளாஸ் பாயிண்டை என்னால் சொல்ல இயலும்.

    ஏற்கனவே அறிந்த பழமொழி.....
    கடைக்கு போய் காய்கறி வாங்கும் போது மனதில் பாதித்த முதிர்கன்னி வெண்டைக்காயாக மனதில் தோன்றியதன் விளைவுதான் அந்த கதை என்று நினைக்கிறேன்.

    அப்படித்தானே..கீதம்

  8. #56
    புதியவர்
    Join Date
    18 Feb 2011
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ரங்கராஜன் View Post
    நன்றி மதி
    ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?
    ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?[/QUOTE]

  9. #57
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    எனது பத்துப் பன்னிரண்டு வயதுகளின்போது கோடை விடுமுறைகளுக்கு அம்மாச்சியின் ஊருக்குச் செல்வது வழக்கம். அப்படியே இலவச இணைப்பாக பக்கத்திலிருக்கும் பெரியம்மாவின் ஊருக்கும் சமயங்களில் செல்வது உண்டு. பெரியம்மாவின் ஊர் திருத்துறைப்பூண்டிக்கருகில் உள்ள கொக்காலடி என்னும் சிற்றூர். அப்போது பெரியம்மாவின் வீடு என்பது ஒரு குளத்தையொட்டி இருந்த குடிசையே...

    வீட்டின் கொல்லைப்புறம் குளம் இருந்தது. அந்தக் குளத்தில் நான் பார்க்கும்போதெல்லாம் ஒரு வயதான அம்மா கழுத்து மட்டும் மேலே தெரியும்படி அமிழ்ந்திருப்பார். யாருடனும் எதுவும் பேசமாட்டார். ஆனால் தனக்குத்தானே பேசி சிரித்துக்கொள்வார். காலையிலிருந்து மாலை வரை நீரில் ஊறிக்கொண்டே இருப்பார்.

    அவரது வீடு குளத்தை ஒட்டியே அந்தப்பக்கம் இருந்தது. பெரிய வீடு. சொல்லப்போனால் அந்தச் சிற்றூரில் பணக்கார வீடும் அதுதான். மாடிவீடு. பெரிய கொல்லை! வண்டிமாடுகளும், எருமைகளும், பசுக்களுமாய் கொல்லையே நிறைந்திருக்கும். அந்த வீட்டு முதலாளியின் தாயார்தான் அந்தம்மா. மனநிலை பாதிக்கப்பட்டு இப்படி செய்கிறார் என்று பேசிக்கொண்டார்கள். ஏன் மனநிலை பாதிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

    மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் அந்தம்மா குளத்தை விட்டு வெளியேறி வீட்டுக்கு செல்வார், முழு நிர்வாணமாக. அச்சந்தர்ப்பங்களில் பெரியம்மா என்னை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அனுப்பிவிடுவார் என்றாலும் விவரம் தெரியாத வயதில் அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது.

    மற்றொரு நிகழ்வு பெரியம்மா சொல்லக்கேட்டது. ஊருக்குள் திரிந்த மனநிலை தவறிய இளம்பெண் இரண்டாவது குழந்தை பெற்றிருக்கிறாள் என்றும் இரு குழந்தைகளும் நல்ல தெளிவான மனநிலையில் இருப்பதாகவும் பார்க்க அத்தனை அம்சமாக இருப்பதாகவும் சொல்லி அந்தப் பெண்ணுக்காக மிகவும் பரிதாப்பப்பட்டார்.

    இந்த சம்பவமும் என்னை பாதித்தது. இந்தப் பெண்ணைப் பற்றிதான் கதை எழுதவேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஒரு எண்ணம் இருந்தது. ரங்கராஜனின் லாலா கதையில் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் எழுதும்போது என்னை அறியாமலேயே அந்த முதியவளின் நினைவு தோன்றி இரு சம்பவங்களையும் இணைத்து ஒரு கதையாக்கிவிட்டேன்.

    இதுவே சிவப்பி கதை உருவான கதை.

  10. #58
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நினைவிடுக்குகளில் சிக்குண்ட மனதின் சிதறல்கள் சிவப்பியின் உருவாக்க அணுக்கள்..

  11. #59
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    பாராட்டுக்கள் ....
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •