இல்லை தக்ஸ்..
இருந்தால் இப்படி உன்னுடன் கண்ணாமூச்சி ஆடுவேனா?
சந்திப்போம் அடுத்த பயணத்தில் - எல்லாம் தலை செயல்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
சந்தடி சாக்கில உன்னை தெய்வமாக்கி என்னை பக்தன் ஆக்கிட்டாய். பலே பலே.. உன் கதைகளைப் பொறுத்தவரை நான் பக்தனே. அதிலும் தேங்காய் உடைத்தால் பொறுக்கிக் கடிக்கும் அளவுக்கு தீவிர பக்தன். அந்தளவுக்கு கதைகளில் பல்வகை நர்த்தனம் புரிகிறாய். இதைத்தான் சொல்ல வந்தேன்பா.
(அடுத்து என்ன கற்பூரமா)
நல்லா தான் இருக்கிறான்.... என்னைப்போலவே... ஹிஹி
வெந்நீர் கதை உருவான கதை.
ஒரு நாள் ஜெத்தாவுக்கு சென்றுவிட்டு செல்வாவைப் பார்த்துவிட்டு திரும்ப நானிருக்கும் இடத்துக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். திடீரென்று நல்ல மழை. லேசாக குளிர ஆரம்பித்துவிட்டது. வீட்டுக்குப் போனதும் வெந்நீர் வெச்சு குளிக்கனுன்னு நினைச்சப்பவே தொடர்ந்து அதைப் பற்றிய எண்ணங்கள் தோண ஆரம்பிச்சிடிச்சி.
எங்கப்பாவுக்கு வெந்நீர் குளியல்ன்னா ரொம்ப பிடிக்கும். எங்கம்மாவும் சரி, எங்க அண்ணிகளும் சரி முகம் சுளிக்காமல் வெந்நீர் வைத்துக்கொடுப்பார்கள். அதுவும் நினைவுக்கு வந்ததுமே...எதிர்மறையாய் சிந்திக்கத் தொடங்கினேன். ரொம்பவும் ஆசைப்படற இந்த சாதாரண வெந்நீர்குளியல்கூட கிடைக்காம ஒரு தந்தை படற கஷ்டத்தை யோசிச்சிப் பார்த்தேன். வீடு வந்து சேர்றதுக்குள்ளயே முக்கால்பாகம் கதையை மனசுல உருவாக்கிட்டேன்.
எங்க பக்கத்துவீட்ல ஒரு பெரியவர் இருந்தார்(இப்ப இல்லை) தலைமைஆசிரியரா இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு கிடைக்கிற ஓய்வூதியத்தை முழுசா அவரோட மருமகள் வாங்கி வைத்துக்கொண்டு அவருக்கு செலவுக்குக்கூட அதிகமாக பணம் கொடுக்கமாட்டார். ஒரே மகன்தான் ஆனால் அவரும் இதை கண்டுகொள்ள மாட்டார்.
மிகவும் தயங்கித் தயங்கி என்னிடமோ இல்லை என் மனைவியிடமோ பணம் கடன் கேட்பார். திரும்பவும் கொடுத்துவிடுவார் நீண்ட நாட்கள் கழித்து. அவருடைய நினைவும் வந்தது. அனைத்தையும் இணைத்து அந்தக்கதையை எழுதினேன்.
(அந்தக்கதையை இதயம் நிறைய பிரிண்ட் எடுத்து அவருடைய நன்பர்களுக்கெல்லாம் கொடுத்திருக்கிறாரென்று அவர்களில் சிலர் சொன்னபோதுதான் தெரிந்தது)
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நவீன கிந்தனார் சரிதம்- நகைச்சுவை சிறு கதை
இந்த கதையின் கரு தற்சமயம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள Slumdog Millionair என்ற ஆங்கில படத்தின் மூலம் வந்தது. சமீபத்தில் அந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது எனக்கே வியப்பை தரும் விஷயம் அந்த கதையில் Who wants to be a millionaire போட்டியில் கேட்கப் படும் கேள்விகளுக்கு எப்படி ஜமால் என்ற ஸ்லம் பையன் தன் வாழ்க்கையில் நடந்தவைகளைக் கொண்டு பதிலளிக்கிறானோ அப்படியே கிந்தனாரும் பதிலளிப்பதாக நகைச்சுவையாக வந்த என் கற்பனை. மன்றத்தில் இதை யாரும் நமபப் போவதில்லை என்றாலும் இது எனக்கு என்மேலேயே நம்பிக்கை தருகிறது. நிச்சயம் நல்ல கருக்களைக் கொண்ட நகைச்சுவை கதைகளை உருவாக்கு முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.
எனக்கு இதை வெளிக் கொணர வாய்ப்பளித்த தக்ஸ் அவரகளுக்கு என் நன்றி.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
நன்றி சிவா அண்ணா & மதுரை சார்
உங்கள் இருவரின் மனதில் தோன்றிய கருவை அழகாக வடித்து இருக்கிறீர்கள், தொடருங்கள்.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
அச்சு
இந்த கதையின் முக்கியமான கரு குழந்தை, அதனுடைய வால்தனங்கள், சிரிப்பு, கோபம், அழுகை எல்லாம் தான் காரணம்.
என்னுடைய மாமாவின் பேத்தி பெயர் பாலா, அதாவது அந்த குழந்தைக்கு நான் சித்தப்பா. என்னை படிக்க வைத்து எல்லாம் என்னுடைய தாய் மாமா தான். அவருடைய மகள் (என்னைவிட 5 வயது மூத்தவள்) எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு திருமணம் நடந்து கற்பமுற்றால், நான் அவர்கள் வீட்டில் இருந்து தான் படித்தேன். பாலா வயிற்றில் வளருவதில் இருந்தே அவள் மீது பெரும் பாசம் கொண்டு இருந்தேன். பிறந்த புதிதில் பல நாட்கள் இரவில் தூங்காமல் ஊரே குலுங்குவது போல அழுவாள், பல நாட்கள் அவளை கையில் வைத்துக் கொண்டே நான் தூங்கி இருக்கிறேன். பிறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது, வாய் என்றால் வங்காள விரிகுடா மாதிரி வாய் அடிப்பாள், கோபம் வந்தால் சும்மா விஜய்சாந்தி மாதிரி, Mr&Mrs. Simth படத்தில் வரும் ஏஞ்லினா ஜூலி மாதிரி பச்சாதாபமே பார்க்காமல் கையில் இருப்பதை தூக்கி அடிப்பாள், அவளாலே ஒரு சுற்று நான் இளைத்து விட்டேன். நான் எப்பொழுதும் அவளை நோண்டிக் கொண்டு இருப்பேன். அவளுக்கு அளவு கடந்த கோபம் வரும், சந்தேக கேஸில் திருடர்களை அடிப்பது போல என்னை பிரித்து மேய்வாள், அவள் அடிக்கும் பொழுது வேறு நான் தெரியாமல் சிரித்து விடுவேன். அவ்வளவு தான் பத்ரகாளியாக மாறிவிடுவாள்.
அவள் என்னை “த்தித்தப்பா” என்று கூப்பிடும் அழகுக்காகவே காலம் பூரா அவளிடம் நான் அடிவாங்குவேன்.
ஒருமுறை ஊருக்கு போய் இருந்தாள், நான் அவளுக்கு போன் செய்தேன் என்னிடம் போனில் அவள் பேசவில்லை, போனை தன்னுடைய அம்மாவிடம் இருந்து வாங்கி விட்டு
“அலோ யாரா இய்ந்தாலும் அப்பறமாஆ பேச்சுங்க, நான்னு வேலையாஆ இக்கேன்”
“ஏய் நாதாண்டி சித்தப்பா பேசறேன்”
போனை வைத்து விட்டாள்.
எனக்கு ஆத்திரம், கோபம், அழுகை, அவமானம் எல்லாம் முட்டிக்கொண்டு வந்தது. இது நடக்கும் பொழுது எனக்கு வயது 24, எருமை மாடு வயதில் நானும் குழந்தையாக மாறினேன். அப்புறம் தான் யோசித்தேன் குழந்தைகளுடன் இருக்கும் பொழுது நாமும் குழந்தையாக மாறி விடுகிறோம் என்று.
அப்பொழுது உருவான கதை தான் அச்சு. பெயர் அச்சு என்ற காரணம், ஒருமுறை நான் பஸ்ஸில் சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு தாய், தூங்கிக் கொண்டு இருந்த தன்னுடைய மூன்று வயது மகனை
“அச்சு செல்லம், எழுந்து சாப்பிடுங்க, பசிக்கலையா அச்சு செல்லத்திற்கு” என்று
கொஞ்சினால் அதற்கு அந்த குழந்தை ஒரு சிணுங்கு சிணுங்கியது. அவ்வளவு அழகாக இருந்தது அந்த காட்சி. அந்த தாயின் கொஞ்சலா, அல்லது அந்த குழந்தையின் சிணுங்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பெயர் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது அதான் அச்சு,
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18513
கீழே அவளும் நானும் சண்டை இட்டுக்கொள்ளும் வீடியோவை கொடுக்கிறேன் பாருங்கள்
[media]http://in.youtube.com/watch?v=-qxb-so__Xc&feature=channel_page[/media]
Last edited by ரங்கராஜன்; 10-02-2009 at 08:03 AM.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
சிவா.ஜி, மதுரை, அண்ணாக்கள், மற்றூம் தம்மூ!!
உங்கள் கதை உருவான கதை உண்மையிலேயே மிகவும் அருமை..... வாழ்த்துக்கள்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks