பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.
பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.
அருமையான முயற்சி தக்ஸ்.
Making of the movie பார்ப்பது போல் தான் இதுவும். கதைக்கான காரணம் அறிய பலரும் ஆவலுடன் இருப்பார்கள். உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது.. மெச்சத்தக்கது.
நான் எழுதியது சொற்பக்கதைகளே... இருப்பினும் அவற்றின் கதைகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்
கதை உருவான கதை - மதிய உலா...
இந்தக் கதையில் முக்கால்வாசி விஷயங்கள் உண்மையில் நடந்தவை. சிற்சில தவிர. அதை கதை எழுதுபவருக்கான சுதந்திரமாக எடுத்துக்கொண்டேன். ஹிஹி.. கதையின் ஆரம்பமே மொக்கை. போன வருட ஆரம்பத்தில் இந்தச் சின்ன வயசிலேயே முதுகுவலி வந்தது. சரி. அதிகமா கம்ப்யூட்டர் முன் உட்காருவதாலும் வண்டியோட்டுவதாலும் வருது போல.. சரியாயிடும்னு விட்டுட்டேன். ஒரு வாரம்..பத்து நாள் ஆச்சு. வலி போன மாதிரி தெரியவில்லை. புகழ்பெற்ற ஒரு மருத்துவமனைக்கு சென்றேன். எங்க வேலை செய்றீங்கன்னார். நிற்க வச்சு ரெண்டு தட்டு தட்டினார். அப்புறம் உங்களுக்கு டிஸ்க் ஸ்லிப்பாயிடுச்சு. இனி நீங்க இப்படியே தான் இருக்கணும். நடக்கும் போது பார்த்து நடக்கணும். வண்டி அலுங்காம குலுங்காம ஓட்டணும். அப்படி இப்படின்னு பயமுறுத்திட்டார். வலி குறைய மாத்திரையும் குடுத்தார்.
ஒரு மாதிரி ஷாக்காகி வீட்டுக்கு வந்துட்டேன். அந்த வாரயிறுதியில் வீட்டில் நண்பர்கள் எல்லோரும் இருக்கையில் தூங்கிட்டு இருக்கும் போது என் நண்பன் என் மேலே உட்கார்ந்துட்டான். இருந்த வலி, டாக்டர் ஏற்படுத்தின குழப்பம்... எல்லாமா சேர்ந்து வெறியாகி வெளியே போயிட்டேன். அப்படியே உச்சி வெயில்ல அந்த ஏரியாவ சுத்திட்டு பசிக்கவும் வீட்டுக்குத் திரும்பினேன். மனசு கொஞ்சம் தெளிஞ்சிருந்தது.
என்னமோ தெரியல.. இது புது அனுபவமா இருந்தது... சரி எழுதிப்பார்க்கலாம்னு மடிக்கணினியை எடுத்து வச்சிக்கிட்டு அரை மணிநேரத்தில் எழுதினேன். ஒவ்வொரு விஷயமா யோசிச்சு... மனஓட்டங்களை உணர்ந்து.. எழுதினது. எனக்கே தெரியாம தோராயமா எல்லோருக்கும் பிடிக்கற மாதிரி அந்தக் கதை அமைஞ்சுடுச்சு.. ஹிஹி.
எழுதினதும் முதல்ல காண்பித்தது அந்த நண்பனிடம் தான்..
நன்றி மதி
நம்ம ஆதவா சொன்னது போல கதையின் சுட்டியை கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும், உங்களின் கதையை திரும்ப வாசிக்க பலர் ஆவலாக இருப்பார்கள்
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
மதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..
இப்போது வலி எப்படி உள்ளது மதி?
இன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நலமறிந்து மகிழ்கிறேன் மதி..
நான் சென்னையில் இல்லை..
என் நண்பர் நல்லமுறையில் இதுபோன்ற உபாதைகளுக்குத் தீர்வளிப்பவர் சென்னையில் இருக்கிறார். அவரைப் பார்க்க வழி செய்ய உத்தேசித்திருந்தேன்..
யோகப்பயிற்சியை தொடர்ந்தாலே, இவ்வலி மீளவராமால் காக்கலாம்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks