Results 1 to 9 of 9

Thread: நிஜம் எரிக்கும்.......

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    நிஜம் எரிக்கும்.......

    நிஜம் எரிக்கும்.......

    ஒரு மழை நாளில்,
    தத்தித் தாவி
    துள்ளித் திரிந்தது
    விட்டில் பூச்சி...

    அலறிப் புடைத்து
    அடித்த இடியில்
    ஒளியிழந்து போனது
    மின்னொளி....

    அந்தகார இருளில்
    ஒலியெழுப்பி
    பாதையைத் தேடியது
    விட்டில் பூச்சி....

    ஒலியெழுப்பி
    பாதையை
    காணத் தெரியா
    மனிதன்,
    ஏற்றி வைத்தான்
    நெருப்புமிழும்
    விளக்கு ஒன்று....

    வெளிச்சம்
    வந்த பின்பு
    துள்ளித் திரிந்த
    விட்டில் பூச்சியினைக்
    காணவில்லை....

    நிஜம் -
    எரித்து கொண்டிருந்தது....
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:16 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நண்பா மீண்டும் ஒரு அருமையான கவிதை. நிஜம் பல நேரம் இது போல் தான் இருக்கு.
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:15 AM.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    ஒளியின் வெளிச்சத்தை மட்டும் உபயோகப் படுத்து.
    ஒளியையே உள்வாங்க நினைக்காதே.
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:15 AM.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாராட்டுகள் நண்பன் அவர்களே

    இக்கவிதை பல்வேறு மாறுபட்ட எண்ணக்கலவைகளை
    என்னுள் உற்பத்தி செய்தது.

    அகால முடிவைத் தேடி ஓடும் விட்டில்,
    அற்பாயுசில் மரிக்கும் ஈசல்,
    தெரிந்தே போதைக்குழியில்
    விழுந்து எழ முயன்றும் முடியாமல்
    பாதியில் பயணத்தை முடித்த மனிதர்,


    பச்சாத்தாபம் வர உச்சுக் கொட்டுவது
    என்னில் ஒரு பாதி!

    ஆனால், இயற்கை காட்டும் வழியிலேயே
    விளக்கு வரா ஆதியிலிருந்தே
    சில நிகழ்வுகள் இவ்வகையே அல்லவா?

    புணர்ந்த உடனே மடிந்துபோகும் ஆண்தேனீ,
    புலிக்கு இரையான புள்ளிமான்,
    தாயால் விழுங்கப்படும் பாம்புக்குட்டி..

    சில முடிவுகள் விதிக்கப்பட்டவை.
    சில தெரிந்தே எடுக்கப்பட்டவை...

    பாவாடை தாவணியில் பார்த்த உருவத்திடம்
    இப்படி சொன்னவன் விட்டிலா தேனீயா?
    "இன்றே என் காலமெல்லாம் கடந்துவிட்டாலும்
    ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்
    மங்கை உனைத் தொட்டவுடன் மறைந்துவிட்டாலும் - நான்
    மறுபடியும் பிறந்து வந்து மாலை சூட்டுவேன்..."



    இக்கால இளைஞன் இப்படி பாடுகிறான்..
    சாலை வளைவில் தொலைந்த ஆப்பிள் பெண்ணை எண்ணி"நான் இன்னொரு பிறவி எடுத்து வந்தேனும்
    மீண்டும் காதலிப்பேன்...
    விளக்குகள் - விட்டில்கள் தொடர்கதைதான் இல்லையா?

    நிஜம் எரிக்கும் - எச்சரிக்கை சரியே...
    எரியப்பிறந்தவை இதனால் மாறுமா இல்லையா???
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:15 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    புதியவர்
    Join Date
    05 Sep 2003
    Location
    madurai
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,990
    Downloads
    0
    Uploads
    0
    நிஜமாகவே நல்லாஇருக்குது
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:14 AM.

  6. #6
    இனியவர்
    Join Date
    21 Jun 2003
    Location
    துபாய்/மானுடக்க&
    Posts
    885
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இன்னுமின்னும் கொடுங்கள் கவிதைகளை
    காத்திருக்கிறேன்
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:13 AM.

  7. #7
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    இதுவும் ஒரு முடிவிலிதான்..
    பாராட்டுக்கள் நண்பன்..
    அண்ணனுக்கு..
    ஆன் தேனீ மட்டுமல்ல
    ச்சிட்டிக் என்று ஓசை எழுப்பும் சுவர்க் கோழிக்கும் அதே கதிதான்..
    உறவு முடிந்ததும் மரணம்..
    விமர்சணத்தோடு அறிவியலைக் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்...
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:13 AM.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    நிஜமான கவியொன்று.. பாராட்டுக்கள் நண்பனுக்கு!

    நிதர்சணமான உரையொன்று... நன்றிகள் என் அண்ணனுக்கு!!
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:13 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நடைமுறை வாழ்க்கையை நயம்பட உரைத்த நண்பனுக்கு வாழ்த்துக்கள். நிஜம் சுடும், எரிக்கும் என்பதும் உண்மையே.
    Last edited by அமரன்; 24-11-2007 at 08:12 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •