நிஜம் எரிக்கும்.......
ஒரு மழை நாளில்,
தத்தித் தாவி
துள்ளித் திரிந்தது
விட்டில் பூச்சி...
அலறிப் புடைத்து
அடித்த இடியில்
ஒளியிழந்து போனது
மின்னொளி....
அந்தகார இருளில்
ஒலியெழுப்பி
பாதையைத் தேடியது
விட்டில் பூச்சி....
ஒலியெழுப்பி
பாதையை
காணத் தெரியா
மனிதன்,
ஏற்றி வைத்தான்
நெருப்புமிழும்
விளக்கு ஒன்று....
வெளிச்சம்
வந்த பின்பு
துள்ளித் திரிந்த
விட்டில் பூச்சியினைக்
காணவில்லை....
நிஜம் -
எரித்து கொண்டிருந்தது....
Bookmarks