நண்பர்களே !!
கடந்த 2 நாட்களாக மீடியாக்களில் அடிபட்டு வரும் விஷயம் இது. இது நாள் வரை அரசியல்வாதிகள் , சீட்டு கம்பெனி மோசடிகள் , ஊழல்கள்தான் இருந்துவந்துள்ளன. இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள மெகா கார்பரேட் ஊழல் இதுதான்.
சத்யம் கம்யூட்டர்ஸ் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு செபி (SEBI) க்கு / இயக்குநர்கள் குழுவிற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தின் சாராம்சம் இதோ :-
1) உண்மையாகவே இல்லாத சுமார் 5040 கோடி ரூபாய் வங்கி மற்றும் கையிருப்பாக காட்டப்பட்டுள்ளது.
2) சுமார் 376 கோடி ரூபாய் வட்டி வரவேண்டியது என காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையாக அது வரவேண்டியது இல்லை.
3) கம்பெனி வாங்கியுள்ள கடனான 1230 கோடி கணக்கில் காட்டப்படவே இல்லை.
4) கம்பெனிக்கு வரவேண்டிய தொகையாக காட்டப்படுள்ள 490 கோடி உண்மையாக வரவேண்டியது இல்லை.
5) செப்டம்பர் முடிந்த அரையாண்டில் மொத்த இலாபமாக காட்டப்பட்டிருப்பது 649 கோடி. ஆனால் உண்மையான இலாபமோ 61 கோடிதான்.
=========
இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது இதுதான். :-
1) கம்பெனிகளின் இயக்குனர்கள் , ஆடிட்டர்கள் நினைத்தால் என்ன மாதிரியான நிதி நிலை அறிக்கையையும் சமர்பிக்கலாம்.
2) சட்டங்கள் இதை தடுக்கும் அளவுக்கு கடுமையாக இல்லை.
3) இவர்களை நம்பிக்கொண்டிருக்கும் மக்கள் முட்டாள்கள்.
Bookmarks