இனிய நண்பன் கண்ஸின் எண்ணவோட்டமே எனதும்..
ஏனோ பெரிய ஊழல்களின் அடிநாத உண்மை இறுதிவரை மக்களுக்கு எட்டுவதே இல்லை!
இனிய நண்பன் கண்ஸின் எண்ணவோட்டமே எனதும்..
ஏனோ பெரிய ஊழல்களின் அடிநாத உண்மை இறுதிவரை மக்களுக்கு எட்டுவதே இல்லை!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
பல தில்லு முல்லுகள் மெதுவாக அம்பலமாவதையும் கவனித்தல் வேண்டும்
1. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கணக்கு காட்டுவது 53000 ஊழியர்கள். உண்மையில் இருப்பது 40000 பேர்கள்தான். 13000 போலி ஊழியர்களின் சம்பளம் மாதாமாதம் கணக்கு காட்டப் பட்டு கையாடல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
2. ஹெச்டிஎஃபிசி வங்கியின் போலி முதலீட்டு பத்திரங்களை பயன்படுத்தி உள்ளது தெரிய வருகிறது.
எத்தனை பேரின் கூட்டு முயற்சியோ என எண்ணும் போதே மலைப்பாக இருக்கிறது.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சத்யம் நிறுவனத்தை கையகப்படுத்த எல் & டி நிறுவனம் காட்டும் முனைப்பையும் விசாரணை அதிகாரிகள் கருத்தில் கொள்ளவேண்டும்.
வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!
சத்யம் நிறுவனத்தை தணிக்கை செய்த இரு தணிக்கையாளர்கள் அந்த தணிக்கை நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன் சுட்டி இதோ :-
http://sify.com/finance/fullstory.php?id=14845829
தங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் அந்நிறுவனம் அவர்கள் இருவருக்கும் வேண்டிய உதவிகளை செய்திருக்க வேண்டும். அதை விடுத்து இது போன்ற நடவடிக்கை எடுப்பதன் மூலம் பன்னாட்டு நிறுவனம் தன் உண்மை ரூபத்தை காட்டியிருக்கிறது. வேண்டிய மட்டும் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு வேலை முடிந்ததும் உதறிவிடும் பன்னாட்டு கம்பெனிகளின் கலாச்சாரத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.
இப்போதாவது இது போன்ற பன்னாட்டு கம்பெனி மோகம் கொண்டு அலையும் நம்மவர்கள் உண்மையை உணர்வார்களா??
அன்புடன்,
ஸ்ரீதர்
அன்பே சிவம்
சத்யத்தில் சத்யமில்லாததால் சத்யம் சத்யமில்லாமல்..
அன்புடன் ஆதி
தாமரை.. 53000 ஊழியர்கள் இருப்பதும் உண்மை. சம்பளத்தில் முறைகேடுகள் இல்லை என அரசினால் நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் அடுத்த நாளே விளக்கம் கொடுத்தனர். மேலும் சனவரி மாத சம்பளம் ராஜூவால் தரப்படவில்லை. அரசினால் நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் தந்தார்கள். கொடுத்தது 52163 ஊழியர்களுக்கு என்றும் செய்தி தாள்களில் விளக்கம் அளித்தார்கள். ஊடகங்களில் ஊகங்களை நம்பாது இருப்பது நல்லது. சி.பி.ஐ யின் விசாரணைக்குப் பின் உண்மை வரும் என நம்புவோமாக.
கண்ஸ் நலமா?
இப்போது இன்னொரு நிறுவனம் பங்குகளை வாங்கிவிட்ட நிலையில்
அடுத்த கட்டம் என்ன?
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks