முழு நிலவாய் முகம் காட்டவிடினும்
வளர் பிறையாய் தேய் பிறையாய்
அரை குறை முகமும் காட்டாது
அம்மவாசையாய் அடைத்து கொள்கிறாய்
உன் முகம் காண
இரவில் உன் தெருவில்
குறுக்கும் மறுக்கவும்
அலைந்து அலைந்து
கூர்கா கூலி கிடைத்தது
பகல் எல்லாம் உன் தெருவில்
அலைந்து அலைந்து
உன் தெருவுக்கும்
பால்காரன் முதல்
தபால்காரன் வரை
பாரிட்ச்யமாகி போனார்கள்
உனக்காக
காத்திருக்கையில்
கல்லெறிந்து கல்லெறிந்து
குட்டையே தூர்ந்து போனது
உனக்காக
பேரூந்து நிறுத்தத்தில்
காத்திருந்து காத்திருந்து
வழித்தடம் சொல்லும்
டைம் கீப்பர் ஆகி போனேன்
பார்க்கும் பெண்கள் எல்லாம்
நீயாகா எனக்கு தெரிவதற்குள்
உன் அழகு முகம் காட்டி
அமிழ்து ஊட்ட வா வா
வாரதிருந்தால் ஆவியாய்
உன் வீடு புகுந்து
உன்னை ஆராதிப்பேன்
Bookmarks