Results 1 to 8 of 8

Thread: தூரலின் ஓவியம்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2008
    Location
    tamilnadu
    Age
    41
    Posts
    98
    Post Thanks / Like
    iCash Credits
    28,721
    Downloads
    9
    Uploads
    0

    தூரலின் ஓவியம்

    தூரலின் ஓவியம்

    முடிவைக்கொன்று எல்லைசெய்த
    வின்வெளியில்
    ஓடிவிளையாடுகின்ற நீர்த்துளியே!
    உயிரினால்
    உலகினை உயிர்ப்பிக்கும்
    உனக்கோர்
    உருவம்செய்து கடவுள்தோற்றான்.

    உனக்குள்
    ஏதோ ஒரு மோகம்,
    மேகமாகிறாய்.
    ஏதோ ஒரு தேடல்,
    பயணிக்கிறாய்.
    ஏதோ ஒரு கற்பனை,
    ஓவியமாகிறாய்.
    ஏதோ ஒரு வெட்கம்,
    மின்னலாய் நானுகிறாய்.
    ஏதோ ஒரு பொறாமை,
    நிலவினை மறைக்கிறாய்.
    ஏதோ ஒரு கோபம்,
    இடியென முழங்குகிறாய்.
    ஏதோ ஒரு பந்தம்,
    வெண்முகிலோடு கலக்கிறாய்.
    ஏதோ ஒரு போராட்டம்,
    புயலோடு களம்கான்கிறாய்.
    ஏதோ ஒரு நட்பு,
    சிட்டுக்களுடன் சிரிக்கிறாய்.
    ஏதோ ஒரு சோகம்,
    கண்ணீர் வடிக்கிறாய்.

    கதிரோடு
    காதலாடும் கனத்தினில்
    ஆடம்பரமாய் அணிந்த
    அத்தனை நிறங்களையும்
    என் இந்திய மண்ணில்
    இழந்துவிட்டே சங்கமிக்கிறாய்.
    வேற்றுமையை மறந்து
    சங்கமிக்கும்
    இந்திய சித்தாந்தம்
    இயற்கை வரைந்ததாய்,
    தோல்வியை தீண்டாது.

    காமம்கொண்ட தென்றலோடு
    சலனத்தால்
    சங்கமித்த அழகில்
    உலகின் உயிரோட்டமே
    புதிதாய் பிறக்கிறது.

    நீ உருகி உதிர்ந்தவேளையிலே
    இன்பங்களை
    வண்ணங்களாய்க்கொண்டு
    கற்பனை வடித்த ஓவியமாய்
    புவிப்பெண்
    புதிதாய் பொலிவுறுகிறாள்.

    ஏதோ ஒரு உயிரின்
    உணர்வுகளையெல்லாம்
    கைக்கொண்டு கிடக்கிறாய்,
    உலகினில்
    உயிர்களின் பிறப்பிற்கு
    உத்தரவிடுகிறாய்,
    உன் ஓட்டத்தின்
    எல்லா நொடிகளையும்
    அழகோடு வடிக்கிறாய்,
    காதலின்
    எல்லா பிரதிபளிப்பையும்
    கண்முன்னே காட்டுகிறாய்,
    உனக்காக ஏங்கவைத்து
    ஆக்கமும்
    அழிவும் செய்கிறாய்.

    உறுதியாய்
    உன்னை
    ஓர் உருவமாய் காண்கிறேன்,
    நீயும்
    பெண்தான்.......

    -குளிர்தழல்.
    "உன்னை விட திறமைசாலி யாரும் இல்லை"எனும்போது உன்னை விட புத்திசாலிகள் நிச்சயம் உண்டு.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    கவிதை சிறப்பாக வந்திருக்கிறது...

    கவிதை முடியும் கடைசி வரிகள் முத்தாய்ப்பாய் ஜொலிக்கிறது...

    வாழ்த்துக்கள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  3. #3
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    நல்ல கவிதை குளிர்தழல்... வாழ்த்துக்கள்...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    குளிர்தழல் கொஞ்சகாலமாக உங்களை மன்றப்பக்கம் காணவில்லை...........
    இப்போது அந்த குறைதீர்க்க ஒரு அற்புதமான கவியோடு வந்திருக்கின்றீர்கள்

    வாழ்த்துக்கள்

    தொடர்ந்து எழுதுங்கள்......... முடிந்தால் நிழலுக்கு உயிர் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்கள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நீண்ட கவிதையானாலும் சலிப்பின்றி வாசிக்க வைக்கும் வார்த்தையாடல்கள். வானில் நிகழும் அனைத்துக்கும் வித்தியாச விளக்கமளித்த விதமும், உறுதியான உருவம் நீ..பெண்தான் என முடித்த விதமும் அற்புதம்.

    நெஞ்சையள்ளும் கவிதை தந்த குளிர்தழலுக்கு மனம்நிறைந்த பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    தூலின் = தூலின் ..?

    மேகமாய் வந்து போகிறாய் என்று பெண்ணைப் பார்த்துதான் கவிஞர்கள்
    பாடுவது வழக்கம்.. மேகத்தையே பெண்ணாகப் பார்க்கும் விதம் கொஞ்சம்
    வித்தியாசமாகத் தான் இருக்கிறது..

    மழையை கருப்பொருளாகக் கொண்டு அனேக கவிஞர்கள் திரைப்பாடல் எழுதியிருக்கிறார்கள்.. கவிதைகள் செய்திருக்கிறார்கள்.. அந்த வரிசையில்
    இந்த கவிதையை இன்னும் கொஞ்சம் மாறுதலாய் சிந்தித்திருக்கும் விதத்திற்கு
    பாராட்டுகள் குளிர்தழல்..

    நனைந்தேன் சாரலில்..
    தொடரட்டும் தூறல்கள்..
    Last edited by poornima; 28-12-2008 at 12:24 PM.





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    அமர்க்களம்......

    தூரல் - தூறல்?
    வின்வெளி - விண்வெளி..

    முடிவைக் கொன்று எல்லை செய்த என்று ஆரம்பித்த வரிகளே பிரமாதம்...

    பெண்ணை இப்படியெல்லாமா பாடுவது.... பாட்டுக்கு ஏற்றபடி பாடம் நடத்தப்படுகிறதா உலகில்? ம்ஹூம்..

    மேகமும் பெண்தான்..
    அதன் மென்மையில்

    மேகமும் பெண்ணின் மனம்தான்
    அது கலைந்து போகையில்...

    ஹிஹி.... இது சும்மா..

  8. #8
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2008
    Location
    tamilnadu
    Age
    41
    Posts
    98
    Post Thanks / Like
    iCash Credits
    28,721
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by தென்றல் View Post
    அமர்க்களம்......

    தூரல் - தூறல்?
    வின்வெளி - விண்வெளி..

    முடிவைக் கொன்று எல்லை செய்த என்று ஆரம்பித்த வரிகளே பிரமாதம்...

    பெண்ணை இப்படியெல்லாமா பாடுவது.... பாட்டுக்கு ஏற்றபடி பாடம் நடத்தப்படுகிறதா உலகில்? ம்ஹூம்..

    மேகமும் பெண்தான்..
    அதன் மென்மையில்

    மேகமும் பெண்ணின் மனம்தான்
    அது கலைந்து போகையில்...

    ஹிஹி.... இது சும்மா..
    சில எழுத்துப்பிழைகள் வந்ததற்கு வருத்தப்படுகிறேன்.
    விமர்சனத்திற்கு நன்றி! திருத்திக்கொள்கிறேன்.
    "உன்னை விட திறமைசாலி யாரும் இல்லை"எனும்போது உன்னை விட புத்திசாலிகள் நிச்சயம் உண்டு.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •