தங்கள் பின்னூட்டம் மிகவும் உற்சாகத்தை தருகிறது ஆதவா... என் ஒவ்வொரு கவிதைகளுக்கும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்க வைக்கிறீர்கள்.
//தோட்டத்துச் செடியில் முட்கள்.... குத்திக் காட்டவா? அதைவிட, உதிர்ந்து மொட்டையாகிப்போன செடியை ஒப்பிட்டிருக்கலாம். பிரிவுதான் தனிமைக்கு வழி.. முட்கள் கூட செடியின் இலைகள்தானே!//
முற்றிலும் தனிமையை ஏற்க முடியாத மனநிலையை வெளிப்படுத்தவே முட்களை குறிப்பிட்டேன் நண்பா.
//இந்த கவிதையில் நாயகனின் உணர்வை மட்டுமே சொல்லப்படுவதால், நாயகனின் இடம்பெயர்தலோ, அவனைப் பற்றிய விவரணைகளோ ஏதும் அவசியமற்றதாகி, கவிதையிலும் இடம்பெறாமல் போவது தனிச்சிறப்பு.//
உணர்ந்த பாராட்டு வரிகளுக்கு மிக்க நன்றி ஆதவா. நாயகனின் உணர்வுகளை மட்டும் பதிவு செய்வதே என் முயற்சியாக இருந்தது. உங்கள் பாராட்டினால் அதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாகவே கருதுகிறேன்.
//சுட்டெரிக்கும் தார் சாலையென நீள்கிறது தனிமை..//
இவ்வரிகளில் நீங்கள் குறிப்பிட்டது போல் நீண்ட தனிமையை குறிக்கவே பயன்படுத்தினேன். உங்கள் புரிதலுக்கு கோடி நன்றிகள். உண்மையில் நம் வரிகளின் அர்த்தங்கள் சரியாக உணரப்படும் போது... மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இல்லையா...
// உதடுகள் ஈரம் காய்ந்து உலர்ந்து போகின்றன... தனிமை! தனிமை! தனிமை... தனிமை அன்றி வேறேதுமின்றி... இதற்கு அடுத்த வரிகள், கவிதையை மட்டுமே பேசுகின்றன. தனிமையின் உளறல்கள் யாருக்கோ, ஏதோ ஒரு வடிவில் கிடைக்கக்கூடும் என்ற நப்பாசையுடன் முடிகிறது.//தனிமை மட்டுமே அதனை கொடிய ரணம் தரும் ஆயுதம் ஆதவா.. அதனை உணர்த்த விரும்பியே அவ்வரிகளை கையாண்டேன்..
//மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பை கையில் வைத்துக்கொண்டு நீண்ட நாட்களாக அலைந்து கொண்டிருக்கிறீர்களோ!!!//
ஹா ஹா... அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க... நான் எழுத ஆரம்பிச்சதே கொஞ்ச மாதம் முன்னாடிதான். நல்ல ரசிகன் என்று என்னை என்னால் அடையாளப்படுத்த முடியும். நல்ல படைப்பாளி என்று பிறரால் நான் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கான முயற்சிகளே என் கவிதைகள்.. என் பாதையை எனக்கு அடையாளம் காட்டுகிறது உங்கள் விமர்சனங்கள்... தொடர்ந்து விமர்சியுங்கள்...
நான் உனக்களித்த அன்பு...
நீ அனுபவிக்காதது என்றாய்.
நீ எனக்களித்த அன்பு...
இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
நான் சொல்லியிருக்க வேண்டுமோ...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks