Results 1 to 12 of 12

Thread: இன்னும் ஓர் இரவு...

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0

    இன்னும் ஓர் இரவு...

    சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
    யாருமற்ற மேசையில் தனியே
    உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
    காலை உணவை மறுக்க செய்கிறது...

    நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
    தேடி தேடியே தொலைந்து போகிறது
    எனது பகலும் சில நினைவுகளும்...

    யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
    இரவு நேர மயானமாய்
    இரைச்சல் நிறைந்த மனதின்
    தனிமையை போக்க முயல்கிறேன்...
    சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
    வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்...

    உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
    மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
    சிறு கண்ணீரும் சில கனவுகளும்...

    எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
    குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
    திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது...
    உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு...

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by சசிதரன் View Post
    உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
    மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
    சிறு கண்ணீரும் சில கனவுகளும்...
    .
    மிக அருமையான வரிகள். தனிமையின் கொடுமையை, சொல்லும் வரிகள்...வலியை உணர்த்துகின்றன. மன்றத்தில் உங்கள் முதல் கவிதைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    இனி உங்களுக்குத் தனிமையில்லை. நிறைய உறவுகள் உள்ள ஒரு குடும்பமே உங்களுடன் உள்ளது. மேலும் பல படைப்புகளை பதித்து எங்களை மகிழ்வியுங்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாவ்!!! வந்தவுடனேயே அருமையான ஒரு கவிதை. பாராட்டுக்கள்.

    தொடருங்கள்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மிக அருமையான வரிகள். தனிமையின் கொடுமையை, சொல்லும் வரிகள்...வலியை உணர்த்துகின்றன. மன்றத்தில் உங்கள் முதல் கவிதைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    இனி உங்களுக்குத் தனிமையில்லை. நிறைய உறவுகள் உள்ள ஒரு குடும்பமே உங்களுடன் உள்ளது. மேலும் பல படைப்புகளை பதித்து எங்களை மகிழ்வியுங்கள்.
    நான் செய்ய quote நினைத்த வரிகளையே quote செய்துள்ளார் சிவா.ஜி அவர்களும்.......

    தனிமையின் வலியை உணர்த்தும் மிக அற்புதமான வரிகள்.

    வாழ்த்துக்கள் தொடரவேண்டும் மன்றத்தில் உங்கள் கவி மழை!
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    தனிமையின் வலியை சொல்லும் அழகிய வரிகள்.

    கீழை நாடான்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் சுஜா's Avatar
    Join Date
    14 May 2008
    Posts
    165
    Post Thanks / Like
    iCash Credits
    18,505
    Downloads
    146
    Uploads
    0
    அருமையான....அருமையான....
    அருமையான....
    அருமையான....
    அருமையான....
    அருமையான....
    அருமையான....
    அருமையான....
    அருமையான....
    அருமையான....கவிதை;வாழ்த்துகள் .
    அன்புடன் சுஜா.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by சசிதரன் View Post


    உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
    மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
    சிறு கண்ணீரும் சில கனவுகளும்...

    ..
    உறங்கிப்போகின்றன என் கண்கள்
    அதில் இறங்கிச் செல்கிறது...உன் கனவும் என் கண்ணீரும்

    நன்றாக உள்ளது கவி வரிகள் சசிதரன் அவா்களே....
    உங்கள் முதல் பதிவே முத்துப்போல் இருக்கிறது.
    மன்றத்திற்கு ஒரு புதிய கவிஞா் வந்ததையொட்டி என் மனம் ஆனந்தக்கடலில் மூழ்கிறது.... தொடா்ந்தும் படையுங்கள் காத்திருக்கிறோம் காதல் காவியங்களுக்காக.......

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தனிமையைக் கரைக்கச்
    சக்தியற்ற கண்ணீர்,
    வெளியேறி,
    மூழ்க வைக்கும் கொடுமை...

    வலி சொல்லும் வரிகள்.

    மற்றோர் மேற்கோளிட்ட வரிகள், என்னையும் வெகுவாகக் கவர்ந்தது.

    5 நட்சத்திரக் கௌரவிப்பும், 250 இ-பண அன்பளிப்பும் வழங்கி மகிழ்கின்றேன்.

    மிகுந்த பாராட்டுக்கள் சசிதரன் அவர்களே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே...உங்கள் வாழ்த்துக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன்...
    Last edited by சசிதரன்; 19-12-2008 at 04:53 PM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தனிமைக்கும் ஏகாந்தத்துக்கும் என்வரையில் வித்தியாசம்- தனிமை எதுவுமற்ற நிலை.. ஏகாந்தம் நினைவாலயத்தின் பிரகாரம்.

    அங்கே கனவுகளின் நகைப்பொலி மணியோசையாய் தோன்றும். இயற்கையின் பேச்சு மந்திர உச்சாடனமாய் தோன்றும். நினைவுகளின் தழுவல் அரசமர தென்றலாய் ஆகும்.. அப்போதும் கண்கள் கசியும் ஆனந்தமாக.

    தனிமையை ஏகாந்தமாக மாற்றுவது நம்கையில், நம்பிக்கையில்.
    சொல்வது எளிது. செய்வது கடிது. ஆனாலும் முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

    சொற்தடங்களின் வழியாகப் பாயும் வலிகளும் கரையோர நாணல்களும் கண்ணுக்குத் தெரிவது கவிதையின் சிறப்பு. பாராட்டுகள் சசிதரன்.
    Last edited by அமரன்; 02-01-2009 at 08:03 AM.

  11. #11
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    16 Sep 2006
    Location
    chennai
    Posts
    77
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    தனிமை பற்றிய அருமையான கவிதை
    பிச்சுமணி

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    உங்களது இந்தக்கவிதையை படிக்கும்போது மனசில் Nடீதா ஒரு இனம்புரியாத வலி கூடவே உட்கார்ந்து விடுகிறது...

    அதுதான் உங்கள் கவிதையின் வெற்றி

    வாழ்த்துக்கள் சசிதரன்..
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •