Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: அடிமாடு....!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    அடிமாடு....!!

    தேனியிலிருந்து இடுக்கிவரை போகவேண்டிய நிர்ப்பந்தம். பேருந்து எதுவும் வரவில்லை. எல்லாம் நேரம். அலுவலக வேலையாய் இடுக்கிக்கு உடனே போக வேண்டியுள்ளது. சாலையையே பார்த்து பார்த்து அலுத்துவிட்டது. கடிகாரத்தைப் பார்த்தால் டென்ஷன் கூடுமென்று அதையும் பார்க்காமலிருந்தான் பரசுராமன்.

    ஒரு லாரி வந்தது. கையைக்காட்டினான். நின்றது. ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்தவன்,

    “எங்க சார் போகனும்?” என்று கேட்டதும்,

    “இடுக்கிப்பா”

    “வண்டி அங்கதான் போகுது வாங்க”

    வயிற்றில் பாலை வார்த்தான். சந்தோஷமாய் ஏறி அமர்ந்துகொண்டான் பரசுராமன். வண்டி போய்க்கொண்டிருக்கும்போதே “ம்....மா” என்ற சப்தம் கேட்டதும், சின்ன ஜன்னல் திறப்பைத் திறந்து பின்னால் பார்த்தான் பரசுராமன். இருபது மாடுகள் மட்டுமே ஏற்றப்படவேண்டிய வண்டியில் முப்பது மாடுகளை ஏற்றியிருந்தார்கள்.

    “என்னப்பா இது அநியாயமா இப்படி வாயில்லாத ஜீவன்களை கொடுமை படுத்துறீங்க? பாவமா இருக்குப்பா...”

    “ என்னா சார் நீங்க...நாளைக்கு இது கேரளாவுல துண்டு துண்டா கடையில தொங்கும் சார்....நாளைக்கு சாவப்போற ஜீவனைப் பத்தி இன்னிக்கு எதுக்கு சார் கவலைப் படறீங்க?”

    ‘அடப்பாவமே...இதெல்லாம் அடிமாடா..?”

    “ஆமா சார். அவங்களுக்கு பால் குடுத்து வளத்த பசுமாடுங்கதான் சார். இப்ப பால் வத்திப்போச்சி...அடிமாட்டுக்கு அனுப்பிட்டாங்க...மனுஷங்க சார்...லாப நஷ்ட கணக்கு பாக்குறவங்க...”

    எதுவும் பேசமுடியாமல் மௌனமாய் இருந்தான். தரகன் தொடர்ந்து,

    “நம்ம மனுஷனுங்கதான் சார், பொம்பளப்பிள்ளை தனக்குப் பிறந்தா நஷ்டம்ன்னு சொல்லி கொண்ணுடறதும், மாட்டுக்கு பிறந்தா லாபம்ன்னு கொண்டாடுறதும்....அதே சமயத்துல...அங்க பாருங்க சார்...பாவம் பிறந்து பத்து நாளே ஆன கிடாரி...அதான் சார் ஆம்பிள கண்ணுக்குட்டி....அதனாலயும் பிரயோஜனமில்லன்னு கறிக்கு வித்துட்டானுங்க.....கேவலமானவங்க....ஆனா அவங்களாலத்தான் சார் எங்க பொழப்பு ஓடுது...”

    அவன் மேற்கொண்டு சொன்ன எதுவும் பரசுராமனின் காதுகளில் விழவில்லை.

    போனவாரம் முதியோர் இல்லத்தில் சேர்த்த அம்மாவை உடனே வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டும். உறுதி செய்து கொண்டான்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நல்ல கதை சிவாண்ணா முகத்தில அறையற மாதிரி... வயசானதும் பெற்றவர்களை அடிமாடுகளாக்கினவர்களுக்கு நல்ல சவுக்கடி

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது மனசு வலிக்குது மதி. இதுல அப்படி செய்யறதுக்கு காரணங்களும் சொல்றதைத்தான் என்னால ஏத்துக்க முடியல. பெத்தீங்க, வளர்த்தீங்க உங்க கடமை முடிஞ்சது...ஓரமா ஒதுங்கிக்கங்கன்னு துரத்தறது நியாயமா?

    வயசான காலத்துல ஆதரவில்லாம இப்படி எத்தனை தாய்மார்கள் அவதிப்படறாங்க.....இதுக்கெல்லாம் காரணம் மருமகள்கள்தான். 90 சதவீதம் அப்படித்தானிருக்கிறார்கள். பெண்ணுக்கு பெண்ணே எதிரி. என்னத்தை சொல்ல?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஆம்.. சிவா, முன்பெல்லாம் சாலையில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அசையக்கூட இடம் இல்லாமல், தலையை ஆட்ட வழி இல்லாமல் தலைகள் வெளியே தொங்க, கண்ணில் நீர் வழிய, வாயிலிருந்து எச்சில் வழிய அந்த உயிரினங்கள் படும் வேதனையை எடுத்துக்கூற இயலாது.

    வயதான பெற்றோர்களின் கஷ்டத்தை அவற்றுடன் ஒப்பிட்டு, சுயநலத்தை பெரிதாக நினைக்கும் இக்காலத்தவருக்கு இனியாவது கொஞ்சமாவது உறைக்கும் வகையில் எழுதியதற்கு நன்றி.

    இன்னும் எழுதுங்க சிவா.
    Last edited by பாரதி; 06-12-2008 at 07:18 AM.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நானும் பார்த்திருக்கிறேன் பாரதி. அந்த அசையக்கூட முடியாத அன்னாந்த நிலையில் அவைகள் படும் கஷ்டம்....பார்க்கவே நெஞ்சு வலிக்கும். அம்மாக்களையும் அப்படியான நிலையில் வைத்திருக்கும் பிள்ளைகளைப் பார்த்தும் இதயம் வலிக்கிறது.

    நன்றி பாரதி. எழுதுகிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    அடிமாட்டு கதையை சொல்லி.....
    கடைசியில கொடுத்தீங்க பாருங்க ஒரு பன்ச்~!!
    அங்க நிக்கிறாரு சிவா.ஜி
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி நாரதரே...அந்த பன்ச் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்தால் சந்தோஷம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஒரு யதார்த்தமான கதை.
    மிகுந்த பாராட்டுக்கள் சிவா.ஜி...

    அடிமாடுகளுக்கு உடன் சாவு...
    முதியோரில்லத்தில் வாழ்வோருக்குத் தினம் தினம் சாவு...
    உணர்வால், மனதால் அவர்களைச் சாகடிக்கும், கொலைகாரப் பிள்ளைகளுக்கு என்ன தண்டனை..?

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    அருமையான கதை. கதையின் முடிவில் முதியோர்களும் அடிமாடுகளாய் நடத்தபடுகிறார்கள் என்பது மனதை நெருடுகிறது. பாராட்டுக்கள்.

    ஜெயகாந்தனின் பால்பேதம் என்ற கதை படித்திருக்கிறீர்களா..?
    அதுவும் அடிமாடுகளைப் பற்றியதுதான். மனதை தொடுவதாயிருக்கும்.

    கீழை நாடான்

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    அடிமாடுகளுக்கு உடன் சாவு...
    முதியோரில்லத்தில் வாழ்வோருக்குத் தினம் தினம் சாவு...
    உணர்வால், மனதால் அவர்களைச் சாகடிக்கும், கொலைகாரப் பிள்ளைகளுக்கு என்ன தண்டனை..?
    இதுதான் அக்னி என் மனதை உறுத்தும் விஷயம். தினம் தினம் செத்துப்பிழைக்கும், பிள்ளையிருந்தும் அனாதையாகிவிட்ட அந்த ஜீவன்களுக்கு என்ன எதிர்காலம்? குற்றம் செய்த பிள்ளைகளுக்கு என்ன தண்டனை? அவர்கள் பிள்ளைகள் அவர்களுக்கு அளிக்கும் தண்டனையாகத்தானிருக்கும்.

    நன்றி அக்னி. மீண்டும் உங்களை இங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உங்கள் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி கீழைநாடான். நிச்சயம் அந்த கதையை தேடிப் படிக்கவேண்டும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல கதை. நல்ல பாடம்.

    ஆனால் இந்த மாடுகளையும் கோழிகளையும் நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஒரு பாவமும் செய்யாத அவைகள் படும் பாடு இருக்கிறதே.

    எல்லாம் இறைச்சிக்கே!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •