இந்தியாவில் 35 மாநில / யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் நாம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி / கலாச்சாரம் / பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறோம்.
ஒரு மாநிலத்தவரின் மொழி அடுத்தவருக்குப் புரிவதில்லை. இவரை அவரும், அவரை இவரும் புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து மடிகிறோம்.
குறிப்பாக கர்நாடகாவில் வாழும் கன்னடர்களுக்குப் பல்வேறு மொழிகள் தெரிந்திருந்தாலும், அவர்கள் தமிழ் என்று உச்சரிக்காமல், “தெமிலு” என்றே எப்போதும் உச்சரித்து நம்மை வெறுப்படிக்கிறார்கள்.
அவர்களுடைய மொழி உச்சரிப்பில் - எல்லா வார்த்தைகளுக்குப் பின்னாலும் ஒரு ‘ஊ’ சேர்த்துக்கொள்வார்கள். காரூ, பஸ்ஸூ, ஸ்கூலூ, - என ஆங்கில வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு ஊ சேர்த்து நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள்.
இந்தியாவில் சாதாரணமாக 200+ தொலைக்காட்சி அலைவரிசைகள் இருக்கின்றன.
நாம் தமிழர்களாக இருக்கிற காரணத்தால் - நமது மொழிப்புலமையின் காரணத்தால் (!) 200+ அலைவரிசைகளில் அதிகபட்சம் 10 அல்லது 15 ஐ மட்டும் பார்த்துப் பிற அலைவரிசைகளைக் கண்ணுறாமல் காலம் கழிக்கிறோம். ( எனது மனைவி 3 சேனல்களை மட்டும்தான் பார்க்கிறார். மகனுக்கு ஒரே ஒரு போகோ போதும்.)
ஆனால் இந்த விளம்பரதாரர்கள் 200+ அலைவரிசைகளிலும் விளம்பரங்கள் கொடுத்துத் தீரவேண்டி இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் பலவித சேனல்கள். ஒவ்வொரு சேனல்களுக்கும் விளம்பரம் கொடுத்தே தீருகிறார்கள். அதாவது 200+ அலைவரிசைகளுக்கும் விளம்பரதாரர்களால் நல்ல வருவாய்தான். இது டிவி காரர்களுக்குக் கொண்டாட்டம்.
ஆனால் நாம் கண்ணுறுவது எத்தனை சேனல்களை? எனக்கு ஒரு 10 சேனல், என் மனைவிக்கு 1 முதல் 3. மகனுக்கு ஒன்றே ஒன்று.
மீதி சேனல்களைக் கண்ணுறும் அளவுக்குப் பொறுமை இங்கே எங்கள் குடும்பத்தில் இல்லை.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதே நிலைமையாகத் தான் இருக்கும் என்பதில் ஐயமும் இல்லை. ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. அவர்களைப் பற்றி நான் இங்கே பேச வரவில்லை.
சரி விசயத்திற்கு வருகிறேன்.
விளம்பரங்களைத் தொலைக்காட்சிகளில் காண்பித்தால் தொலைக்காட்சிகளுக்கு லாபம். அதில் சந்தேகம் இல்லை. இலாபம் இல்லாவிட்டால் இத்தனை தொலைக்காட்சிகள் இந்தியாவில் வந்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனால் விளம்பரதாரர்களுக்கு? அவர்களுக்கு செலவு இருக்கிறது என்பது எனது வாதம் இல்லை.
பிறகு என்னதான் கூற வருகிறேன்.ஒவ்வொரு சேனல்களுக்கும் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்களை கம்பெனிகள் கொடுக்கின்றன. அந்தப் பணத்தின் மூலம் எங்கே இருந்து வருகிறது?
பொருட்களின் விலையை ஏற்றி நமது தலையில் கைவைத்து, நம்முடைய பணத்தை அதிகம் வசூல் செய்து, அதை தொலைக்காட்சிகளுக்குத் தாரை வார்க்கிறார்கள் - உற்பத்தி நிறுவனங்கள்.
3 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு,இந்தியா முழுவதும் 200+ சேனல்களில், பல்வேறு மொழிகளில் விளம்பரம் செய்வதற்காக, உற்பத்தியாளர்கள் அந்தப் பொருளின் மதிப்பை 30 ரூபாய்க்கு ஏற்றிவிடுகிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை.
ஷாப்பிங்க் மால்களின் கவுண்டர்களில். அங்கேயும் ஒரு பெரிய ப்ளாஸ்மா / எல்சிடி தொலைக்காட்சியைத் தொங்கவிட்டிருப்பார்கள். இந்த அதிகப்படியான 27 ரூபாய் துகையை அந்த மால்களில் இருக்கும் டிவியைப் பார்த்துக்கொண்டே, பல்லை இளித்துக்கொண்டே இந்தத் தொகையைச் செலுத்துகிறோம்.
ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் நபரும், அங்கே இருக்கும் மளிகைக் கடையில் இதே 27 ரூபாய் அதிகரிக்கப்பட்ட துகையைக் கட்டுகிறார் என்பதை மறுக்க இயலுமா?
ஒட்டுமொத்த இந்தியாவில் இத்தனை மொழிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு மொழி - அது தமிழ் / தெலுங்கு / இந்தி / இங்கிலீஷ் - எதோ ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்.
ஒரே ஒரு மொழி - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருந்தால் 200+ வந்திருக்குமா?
”அரைத்த மாவை அரைப்போமா? துவைச்ச துணியைத் துவைப்போமா?” என எல்லா சேனல்களிலும் எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்புவார்கள்?
மிஞ்சி மிஞ்சிப் போனால் 10 முதல் 30 சேனல்கள் இருந்திருக்கும். பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் இந்த 30 சேனல்களுக்குக் கொடுக்கும் விளம்பரக் கட்டணம் குறைவாகத் தான் இருந்திருக்கும்.
3 ரூபாய் பொருளை அதிகபட்சம் 9 ரூபாய்க்கு நாம் வாங்கலாம்.
நண்பர் குமாரின் வீட்டில் தொலைக்காட்சியே இல்லை என்று வைத்துக்கொள்வோம். அவருமே 3 ரூபாய் பொருளை இப்போது 30 ரூபாய்க்குத்தானே வாங்குகிறார். அதை என்னவென்று சொல்வது?
இங்கே அவருக்காக நாம் எல்லோரும் சொல்லவேண்டியது : “என்ன கொடுமை சார் இது?”..
சரி இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
எங்கேயாவது குண்டுவெடிப்பு / குண்டுவீச்சு நடந்துவிட்டால் ஆட்சியாளர்கள் முதலில் என்ன செய்கிறார்கள். “குண்டு வெடிப்புக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்”, என ஒரு அறிக்கை வாசித்துவிட்டுப் போவார்கள்.
இங்கே இந்தியாவில் ஆட்சியாளர்கள் மாறுவார்கள். ஆட்சித்தலைமை மாறும். மக்களும் மாறுவார்கள். ஆனால் எந்த ஆட்சியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் - இந்தக் கண்டன அறிக்கை வாசகம் மட்டும் மாறாது.
வருமுன் காப்போம் என்பார்கள். இங்கே நமக்கு இவ்வளவு தொல்லை ஏற்கனவே வந்துவிட்டிருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்.
”காலத்தின் கையில் அது இருக்கு!” என உச்சநடிகரின் பாட்டைப் பாடிக்கொண்டு நடையைக் கட்டவேண்டியதுதானா?
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றதோ, அது நன்றாவே நடக்கின்றது
எது நடக்க இருக்கின்றதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய் ! எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் ! அதை நீ இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய் ! அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டுயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாதோ, அதி இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொருநாள், அது வேறோருவருடையாதாகும்.
” இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமாகும் “
--- http://vijaybalajithecitizen.blogspot.com
Bookmarks