Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 43 of 43

Thread: இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா?

                  
   
   
  1. #37
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    உங்களுடன் விவாதிப்பதைவிட வேறு ஏதாவது செய்யலாம் குழந்தையைவிட கேவலம் உங்களுக்கு சார்பானதைமட்டும்தான் எடுக்கின்றீர்கள். மற்றவற்றை அம்னீசியா வந்ததுபோல் மறந்துவிடுகின்றீர்கள்.
    இந்த பகுதியிலிருந்து விடைபெறுகின்றேன் நண்பியே. தயவுசெய்து இனிமேல் ஒரு இடமும் விவாதிக்க போகாதீர்கள்.
    நன்றி

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இந்த விவாதம் முதலில் தொடங்கியது தொலைகாட்சி விளம்பரங்களுக்காக. ஆனால் நாம் பாதை மாறி சென்றுவிட்டோம் என்றே நினைக்கிறேன்.

    இதை தனி திரியாக மாற்றிவிடலாமே

  3. #39
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    ஒருவர் எத்தனைமொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அது தவறல்ல. ஆனால் திணிப்பது என்பது வேறுவிடயம்.
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  4. #40
    இளையவர் பண்பட்டவர் பிரம்மத்ராஜா's Avatar
    Join Date
    01 Jul 2009
    Location
    பிள்ளைத்தோப்பு,குமரிமாவட்டம்
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    8,941
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    உங்களுடன் விவாதிப்பதைவிட வேறு ஏதாவது செய்யலாம் குழந்தையைவிட கேவலம் உங்களுக்கு சார்பானதைமட்டும்தான் எடுக்கின்றீர்கள். மற்றவற்றை அம்னீசியா வந்ததுபோல் மறந்துவிடுகின்றீர்கள்.
    இந்த பகுதியிலிருந்து விடைபெறுகின்றேன் நண்பியே. தயவுசெய்து இனிமேல் ஒரு இடமும் விவாதிக்க போகாதீர்கள்.
    நன்றி
    வியாசன் உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு அதே வேளை கண்மணி சொல்வதிலும் சில நியாயங்கள் இருக்கின்றன விவாதிப்பது என்பது எவ்வளவு ஆரோக்கியமான விஷயம் விவாதிக்கும்போதுதான் நமக்கு தெரியாத பல சங்கதிகளை தெரிந்து கொள்கிறோம் ஒன்றுபட்ட இந்தியா என்பது வரமா சாபமா என்று தெரியவில்லை காலம்தான் பதில் சொல்லும் ஆனால் இப்போது உருவாகியிருக்கும் அரசியல் கலாசாரம் எங்கே கொண்டு செல்கிறது இந்தியாவை மாநிலங்களுக்கு இடையிலான உரசல் நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டுதானே இருக்கிறது ரஷியா உடைந்து தனி நாடுகளாக பிரிந்தது நாம் அறிந்ததுதானே அரோக்கியமான விவாதங்கள் தொடர்வதில் சந்தோசமே
    தொடரட்டும் விவாதம்

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    கண்மணி அக்கா மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் அற்பத்தனமான கொள்கைகளை தூக்கி பிடிப்பதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை.!! மாறாக உங்கள் வாதத்தின் நோக்கம் நன்மைக்குதான் என்றறிந்தாலும் அதன் போக்கில் சில இடங்களில் முரண்பாடு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது... அதை உரைத்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன்.. மற்றபடி இந்ததிரியில் மென்மேலும் விவாதத்தை வளர்ப்பது எனது நோக்கமல்ல..!!
    Quote Originally Posted by கண்மணி View Post
    இப்போ ஆரென் அண்ணா சொன்னதைக் கேட்டீங்க இல்லையா? மத்த மாநிலங்களெல்லாம் ஒரு காலத்தில் வடநாட்டவரால் ஆளப்பட்டது. அதனால அவர்கள் ஹிந்தியை ஏற்றுகிட்டாங்க.. நாம ஆங்கிலேயரால் ஆளப்பட்டோம் அதனால் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வோம் என்கிறார். .
    அப்படியென்று நீங்களே அர்த்தபடுத்தி கொண்டால் எப்படியக்கா..?? உண்மையில் தமிழ்நாடு ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் ஏன் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டிருக்க வேண்டும்..?! அரேன் அண்ணா சொன்னதன் அடிப்படை மற்ற மாநிலங்கள் வடநாட்டவரின் ஆளுகைக்கு உட்பட்டபோதே அந்த மொழியின் ஆளுமைக்கும் உட்பட்டுவிட்டதால் சுதந்திரத்திற்க்கு பின் எளிதாக ஹிந்தியை ஏற்றுக்கொண்டன...!! ஆனால் தமிழகம் அத்தகைய ஆளுமைகளுக்கு உட்படாததால் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செய்ததே போதும்.. இன்னொரு ஆதிக்கத்திற்க்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும்..?! வேண்டுமானால் சுதந்திரப்போராட்டத்தில் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து போராடியதுக்கு தண்டனையாக ஹிந்தியை கற்க வேண்டும் என்று சொல்லுங்கள் நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான்..!!!!

    எத்தனை மொழி தெரிந்து கோள்கிறோம் என்பது பெரிய பிரச்சனையே அல்ல.. நம் மொழியை பிழையில்லாமல் கற்று அதற்கு நல்ல படைப்புகள் தந்து வாழ வைக்கிறோமா என்பதுதான் முக்கியம். ஹிந்தி கத்துக்க மாட்டேன் என்றால் தமிழ் வளர்ந்து விடாது...
    நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து..!!
    ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் ஆங்கிலத்தை எதிர்க்க மாட்டாங்க.. காரணம் தமிழைக் காக்க பிறமொழி எதிர்ப்பு என்பது வழியே அல்ல..
    ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு… எல்லாம் அறிந்த கண்மணி அக்காவா இப்படி பேசுவது..?? தமிழை காக்க பிறமொழி எதிர்ப்பு என்பது வழியே அல்ல என்ற உங்கள் வாதத்தை முற்றிலும் ஏற்க்கிறேன்..!! ஆனால் ஹிந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தை எதிர்க்க மாட்டார்கள் என்பது முற்றிலும் தவறான வாதம்…!! ஏனென்றால் தமிழக மக்கள் எந்த காலத்திலும் மற்றமொழியை எதிர்த்தவர்கள் கிடையாது…!! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பண்பாடும் இன்றும் தமிழர்களிடம் பாழ்பட்டுவிடவில்லை என்றே நான் எண்ணுகிறேன்..!! அப்படியானால் தமிழர்கள் எதைத்தான் எதிர்த்தார்கள் என்பதை கொஞ்சம் நீங்களே யோசியுங்கள்.. நான் பின்னாடி சொல்லுகிறேன்..!!
    ஏனுங்க மெசினோட பாஷையெல்லாம் "சி" சி++, பேஸிக், பாஸ்கல், கோபால், ஜாவா அது இதுன்னு படிக்கறீங்களே, மனுஷனோட பாஷையை படிச்சா குறைஞ்சா போயிடுவோம்?
    கண்டிப்பா இல்லை மாறாக வளருவோம்.!! அதனாலதான் இப்ப தமிழ்நாட்டுல ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியா ஹிந்திய தங்கள் குழந்தைகள் தெரிஞ்சுக்கனும்ன்னு பெற்றோர்கள் விரும்புறாங்க போலிருக்கு..!!
    அதுவுமில்லாம 8 கோடிப் பேர்ல அங்கப் போறது ஒரு 80 பேர். அந்த 40 பேர்கூட ஒரு பொதுமொழி படிக்கலைன்னா கேலிக்கூத்தா இல்லையா? (மேல் சபை கீழ்சபை அது இது எல்லாம் சேர்த்து)அதுக்கப்புறம் மத்திய அரசின் வேலைவாய்ப்பு தேடறவங்க..
    இந்த விசயத்தில் உங்கள் கருத்துடன் ஒத்துபோவதால் இதில் மறுப்பதற்க்கு ஒன்றுமில்லை…!!
    இன்னொரு மொழியை நாம எதிர்க்கறோம் என்றால் அதுக்கு காரணம் நம்முடைய தாழ்வு மனப்பான்மைதான்
    நான் பின்னாடி சொல்லுறேன்னு முன்னாடி சொன்னது இந்த இடத்தைதான்…!! அதாவது ஒரு மொழியை நாம் எதிர்க்கிறோம் என்றால் அதற்கு காரணம் நம்முடைய தாழ்வு மனப்பான்மை… அதேபோல் ஒருமொழி சார்பு கொள்கையை எதிர்க்கிறோம் என்றால் அதற்கு காரணம் நம்முடைய தனித்தன்மை..!!

    தமிழர்கள் எதிர்த்தது ஒருமொழி சார்பு கொள்கையைத்தானே தவிர ஒரு மொழியை அல்ல..!! ஹிந்திக்கு பதிலாக அந்த இடத்தில் வேறெந்த மொழியிருந்தாலும் தமிழகம் எதிர்த்திருக்கும்… எதிர்த்துக்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை…!! இந்த இடத்தில் வட இந்தியர் பட்டியலில் நீங்கள் இணைத்து கொண்டிருக்கும் வங்கதேசத்தவரும் ஹிந்தியை எதிர்த்தார்கள் என்பதையும் நினைவில் கொள்க..!!

    ஆனால் இந்த ஒருமொழி சார்பு கொள்கை எதிர்ப்பு போராட்டத்தை ஒருமொழிக்கு எதிரானா போராட்டமாக சித்தரிக்கும் போக்கு அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது..!! இதனால் தமிழர்கள் என்றாலே ஹிந்திக்கும் ஹிந்திக்காரர்களுக்கும் எதிரானவர்கள் என்ற ஒரு எண்ணப்பாடு இன்றைக்கும் வட இந்தியர்களிடம் இருந்துக்கொண்டிருக்கிறது..!! இத்தனைக்கும் இந்தியாவின் இன்றைய வளர்ச்சியில் தமிழகம் பெரும் பங்களிப்பை தந்துக்கொண்டிருக்கிறது…!!

    ஒருமொழி சார்பு கொள்கை எதிர்ப்பு போராட்டம் ஒரு மொழிக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றுஇ அப்போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்கள் தங்களுக்கான ஆதரவை பெருக்க வேண்டிஇ "ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும்" என்ற தவறான கூற்றின் மூலம் சாதாரண மக்களின் உணர்ச்சிகளை உசுப்பி விட்டதுதான்..!!
    அவர்களின் கூற்றை உண்மையென நம்பி அவர்களிடம் ஏமாந்ததை தவிர வேறெந்த தவறையும் செய்யாதவர்கள் தமிழக மக்கள்..!!

    தமிழை முன்னிலை படுத்தி அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழின் வளர்ச்சியையோ தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியையோ கருத்தில் கொள்ளாமல் தங்களின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டதன் விளைவு தமிழர்கள் பொருளாதார நலன்களுக்காக தமிழகத்தை விட்டு மற்ற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்..!! இப்படி தமிழை மட்டுமே அறிந்து வைத்துக்கொண்டு அவர்கள் வெளியிடங்களுக்கு போகும்போது படும் அவலங்கள் பாவம் பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்…!! தமிழகத்துக்குள் இருந்துக்கொண்டு அரசியல்பண்ணும் அரசியல்வாதிகளுக்கு அவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை…!!

    தமிழிக்காக ஹிந்தியை எதிர்த்து போராடியதாக சொல்லி ஆட்சியில் அமர்ந்த அரசியல்வாதிகள் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்கள் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவசியமே இல்லாமல் செய்திருந்தால் தமிழும் வளர்ந்திருக்கும்.. தமிழகமும் வளர்ந்திருக்கும்..!! ஆனால் அப்படி செய்யாமல் இன்றைக்கு அவர்களை பிச்சைகாரர்கள் போல் இலவசத்துக்கு கையேந்த விட்டுவிட்டு யாரோ ஒரு ஹிந்தி தெரியாத ஒரு அரசியல்வாதி டெல்லிக்கு போனதும் மறுபடியும் பழைய சங்கை எடுத்து ஊதபார்க்கிறார்கள் என்றால் ஏற்கனவே ஏமாந்தவர்கள் என்ற வகையில் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மக்களே..!!

    Quote Originally Posted by வியாசன் View Post
    இதை நீங்கள் தாழ்வுமனப்பான்மை என்றால் அப்படியே இருந்துவிடுகின்றோம்..
    வியாசன் அண்ணா.. இப்படியெல்லாம் தன்னிச்சையா முடிவெடுத்து சட்டுன்னு போயி சரணடைஞ்சிரக்கூடாது….!! கண்மணி அக்காவின் அந்த கூற்று ஒரு மொழியை எதிர்ப்பவர்களுக்குதான்… ஒருமொழி சார்பு கொள்கையை எதிர்ப்பவர்களுக்கு அல்ல….!! ஆகையால் தாழ்வுமனப்பான்மை அது இதுன்னு சொல்லி உங்களோட தனித்தன்மையை நீங்களே விட்டு கொடுத்துறாதீங்க சரியா..?!
    Quote Originally Posted by கண்மணி View Post
    ஹிந்திக்காரர்கள் என்று நீங்க சொல்றது யாரை? காஷ்மீரிகள், பஞ்சாபிகள், ராஜஸ்தானிகள், பீகாரிகள், வங்காளிகள், மராட்டியர்கள், மணிப்பூரிகள், குஜராத்திகள், உருது பேசுபவர்கள் இப்படி பல மொழிகளும் கலந்த கலவைகள்.

    தென்னிந்திய மொழிகளான தெலுகு, கன்னடம், மலையாளம், கொங்கணி, துளு இவர்கள் உங்க வாதத்தை ஒத்துக்கலை என்றாலும் அவங்களை உங்களோட சேர்த்துக்க முயற்சி செய்யறீங்க.. சரியா...?
    தவறு..!! திராவிட இயக்கங்கள் ஹிந்திமொழி எதிர்ப்பை முன்னின்று நடத்தியதால் நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்…!! திராவிட இயக்கங்கள் மொழிவாரி மாநிலம் தோன்றுவதற்க்கு முன்பே தோன்றியிருந்தாலும் அவை அதன்பிறகு தமிழகம் என்ற எல்லைக்குள் மட்டுமே வேரூன்றியிருந்தன..!! ஆகையால்தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் மட்டும் பலமாக இருந்தது… ஆந்திராவில் தமிழக அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு ஹிந்தி எதிர்ப்பு அந்த காலக்கட்டத்தில் இருக்கத்தான் செய்தது..!!
    இப்போ இருக்கற நிலைமை எல்லா மாநிலங்களுக்காகவும் ஹிந்தி, தமிழ் நாட்டுக்காக ஆங்கிலம். சரியா?
    சரியா தவறா என்று எப்படி சொல்ல முடியும்... ஒரு பொதுநலனுக்காக சுயநலனை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை.. அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழக மக்கள் ஹிந்தியை கற்க ஆவல்படுகிறார்கள்..!! ஆனால் தங்களின் சுயநலனுக்காக மற்றவனின் சுயமரியாதையை இழக்க சொல்வது எந்தவிதத்தில் சரியாகும்..? அந்த அடிப்படையில்தான் அன்றைக்கு ஹிந்தியை தமிழர்கள் எதிர்த்தார்கள்...!! சரியோ தவறோ அன்றைக்கு தமிழகம் காட்டிய எதிர்ப்பால்தான் இன்றைக்கும் இந்தியா பன்மொழி கலாச்சாரத்துடன் திகழ்ந்து வருகிறது... அப்படியில்லாமல் அவர்களும் அடங்கி போயிருந்தால் அதற்கடுத்த பத்தாண்டுகளில் ஹிந்தியை இந்திய மாநிலங்களின் ஆட்சிமொழியாகவும் ஆக்கியிருப்பார்கள்.. அதற்கடுத்த இருபதாண்டுகளிலேயே இந்ததிரி மன்றத்தில் தோன்ற வேண்டிய அவசியமே இல்லாமல் செய்திருப்பார்கள்..!!
    தென்னிந்திய மாநிலங்கள் ஒரே ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்த மொழியும் மட்டும் ஆட்சி மொழியா இருக்கட்டும்னு கூடச் சொல்லலாமே? சொல்லுவாங்களா? முடியுமா?
    ஹி…ஹி.. ஆனாலும் உங்களுக்கு ஆசை அதிகமக்கா…!! அண்டை மாநில அரசியல்வாதிகள் அவ்வளவு இளிச்சவாயர்களா என்ன…?! அதுவுமில்லாமல் தென்னிந்திய மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் அப்புறம் அவர்கள் எங்குபோய் அரசியல் நடத்துவார்களாம்..?? அவர்களை வரவேற்க்கக்கூடிய வள்ளல்தன்மை வட இந்திய அரசியல்வாதிகளிடம் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை…!!
    ஏன் தமிழ் நாட்டில் கூடத்தான் பல மொழி பேசுபவர்கள் இருக்கோம். கூட மாநில ஆட்சி மொழியா தெலுகையோ கன்னடத்தையோ சேர்த்துக்கலாமே? ஏன் தமிழ் மட்டும்?
    நாம் மற்றவங்களுக்கு என்ன அறிவுரை சொல்றோமோ அதை ஏன் நாம முதல்ல உபயோகிக்கக் கூடாது
    நல்லதொரு கேள்வியிது…!! இன்றைக்கு தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தமிழர்கள் பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் விளைவாக இங்கு வந்து சேர்ந்தவர்கள்..!! அப்போது அவர்கள் ஆள்பவர்களாக இருந்தபோதும் அவர்களால் தமிழர்களின் பகுதியில் தங்கள் மொழியை நிலைநாட்ட முடியாமல் போனதால் இல்லம் என்ற எல்லைக்குள் அதை வைத்துக்கொண்டு சமூகம் என்ற எல்லைக்குள் தமிழையையே உபயோகித்து வந்தனர்…!! அதுமட்டுமில்லாமல் கடந்த ஆறேழு நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் சமூகத்தில் ஒன்றிணைந்துவிட்ட அவர்களை தெலுங்கு கன்னடம் என்று பிரித்து பார்ப்பதே தவறென்று எண்ணுகிறேன்..!! ஏனென்றால் தமிழகத்தில் இருக்கும் தெலுங்கு கன்னடம் பேசும் தமிழர்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் உள்ளவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக நான் உணர்கிறேன்..!!

    உதாரணத்திற்க்கு மேலே நீங்களே ஓரிடத்தில் தென்னிந்திய மொழிகளான தெலுங்குஇ கன்னடம்இ மளையாளம்இ கொங்கணிஇ துளு இவர்கள் உங்கள் வாத்ததை ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்..!! ஆனால் தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தமிழர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்பதை நீங்களும் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன்..!! ஆகையால் இனி இதை மன்றத்தில் அடிக்கடி அழுத்தி சொல்வதை தயவுசெய்து தவிர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் கண்மணியக்கா..!!

    அதுமட்டுமில்லாமல் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து நாற்பதாண்டுகளுக்கு மேலாகியும் மொழிவாரி மாநிலங்கள் தோன்றுவதற்க்கு முன்பிருந்த அதே இட ஒதுக்கீட்டுமுறையைத்தான் இன்றைக்கும் தமிழக அரசு பின்பற்றி வருகிறது..!! அதன் அடிப்படையில் தமிழகத்தை சாராத ஆந்திரஇ கர்நாடக மற்றும் கேரள மக்கள் இன்றைக்கும் தமிழக அரசு பணியில் சேரமுடியும்..!! இத்தகையநிலை தமிழகம் தன் பகுதியை தாரைவார்த்துக் கொடுத்த அண்டை மாநிலங்களில் இல்லை...!!

    இதை தமிழக மக்கள் தலையில் திராவிட கட்சிகள் மிளகாய் அரைக்கின்றன என எடுத்துக்கொள்வதா..?? இல்லை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருக்கிறது என்று கொள்வதா…?! யூகங்களை அவரவர் விருப்பத்திற்க்கே விட்டுவிடுகிறேன்…!!
    Last edited by சுகந்தப்ரீதன்; 08-10-2009 at 09:49 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #42
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    சுகந்தப்பிரீதன் நீண்ட கருத்துக்கள் உண்மையான வாதம் நாங்கள் ஏதாவது கூறினால் ஈழத்தவர்கள் என்ற கருத்தை வைத்துவிடுகின்றார்கள். வரவேற்கின்றேன். உங்கள் கருத்தை உங்களுக்கு நிறையவிடயங்கள் தெரிந்துள்ளது கூறமுடிகின்றது. மற்றையது பல நண்பர்களின் அறிவுரை இணையத்தில் ஈழ , இந்திய பிரச்சனைகள் முன்பு எழுந்தாக அதனால்தான் தொடர்ந்து இந்த திரியில் எழுதமுடியவில்லை. என்னால் பிரச்சனைகள் எழுவதை விரும்பவில்லை.
    வாதாட முடியாதவர்கள்தான் இந்த பிரச்சைனயை எழுப்புகின்றார்கள். கருத்துக்களுக்கு கருத்தியல் வறுமையானவர்கள் விவாதிக்காமல் ஒதுங்கியிருந்தால் பிரச்சனைகள் எழமாட்டாது .விவாதியுங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
    ஒருவரும் கருத்துக்களை பதிக்காமல் இருந்தமையால் நான் யாவரும் ஒருமொழி கொள்கையை ஆதரிக்கின்றார்கள் என்று நினைத்தவிட்டேன். இப்போதுதான் தெரிகிறது நிஜம்
    Last edited by வியாசன்; 08-10-2009 at 10:24 AM.

  7. #43
    இளம் புயல் பண்பட்டவர் பால்ராஜ்'s Avatar
    Join Date
    13 Apr 2009
    Location
    Logam
    Posts
    417
    Post Thanks / Like
    iCash Credits
    27,575
    Downloads
    8
    Uploads
    0
    எது எப்படியோ... பல மொழி / பல மதங்கள் / பல நம்பிக்கைகள் / பல சாதிகள் (இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்) என்ற ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.. இன்னும் வாழ்ந்துதான் தீர வேண்டும்.

    திடீர் என்றி ஸ்விச் போட்டமாதிரி ஒரு மொழி / ஒரு மதம் என்று வருவதற்கான சாத்தியக் கூறுகள் பெரிய பெரிய பூஜ்யம் ..

    இருப்பதை ரசிப்போம்.. ருசிப்போம்.. வாழ்வதில் (உண்மையான வாழ்க்கையில்.. ஏனோதானோ என்றல்ல) தீவிரம் காண்பிப்போம்..
    பா.ரா.

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •