Originally Posted by
கண்மணி
நீங்கள்தான் தவறாக புரிந்து கொண்டிருக்கீங்க. பல ஆட்சி மொழிகள் இருப்பதினால் இந்த நிலை மாறிடுமா என்ன?
அடக்கு முறைக்கும் ஒற்றை மொழிக்கும் சம்மந்தமில்லாமல் சம்மந்தப்படுத்திறீங்க..
நான் மேலே சொல்லி இருக்கிற மாதிரி தமிழ்நாட்டில் உள்ள கன்னட / தெலுகு / ஹிந்தி பேசும் மக்களை அந்த அளவா அடக்கி ஆதிக்கம் செஞ்சுகிட்டு இருக்கீங்க? யோசிச்சுப் பாருங்க..
மற்றவங்க நம்மளை நாம அடிபணிஞ்சு போகிற வரைக்கும் அடக்க முடியாது..
ஆங்கிலத்தை நாம் ஏன் தூக்கி எறியலை? அது மட்டும் ஆதிக்கம் இல்லையா??
இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி - இணைப்பு மொழி ஆங்கிலம்
(மக்கள் தொடர்பு கொண்ட) எந்த அரசு அதிகாரியும் அவர் எந்தப் பகுதியில் பணி செய்கிறாரோ
அந்தப் பகுதியில் உள்ளூர் மொழி, ஹிந்தி, ஆங்கிலம் மூன்றையும் அறிந்திருக்க வேண்டும்.
இதுக்கு அர்த்தம் தமிழ் நாட்டில் உள்ள கடைசிக் குடிமகன் வரை ஹிந்தி மட்டுமே படிக்கணும் பேசணும் என்பது அல்ல. அப்படிப் புரிஞ்சுக்கறதினால தான் இப்படிப் பேசறீங்க...
அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டும் ஆங்கிலம், ஹிந்தி, அவர்களுடைய உள்ளூர் மொழி கட்டாயமாக்கப் படவேண்டும்.
Bookmarks