Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 43

Thread: இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா?

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    கண்மணி அவர்கள் சொல்வதை நான் முழுவதுமாக ஒப்புக்கொள்கிறேன், இந்தி பேசுபவர்கள் ஒரு தென்னிந்திய மொழியையும் கற்றுக்கொள்வதாக இருந்தால்.

    அவர்கள் அவர்களுடைய தாய் மொழியில் மட்டும் பேசுவார்களாம் ஆனால் மற்ற மொழிக்காரர்கள் இந்தியை கற்றுக்கொள்ளவேண்டுமாம்.
    உங்கள் கருத்துதான் எனது கருத்தும்.எல்லோரும் எல்லா மொழிகளும் கற்பதாக இருந்தால் அவர்கள் கூறுவது ஏற்புடையது. இந்திக்காரர்கள் வேறுமொழி கற்கமாட்டார்கள் ஆனால் மற்ற மொழிக்காரர்கள் இந்தி கற்கவேண்டுமாம். நாங்கள் இந்த விளையாட்டுக்கு வரமாட்டமில்ல
    இதை நீங்கள் தாழ்வுமனப்பான்மை என்றால் அப்படியே இருந்துவிடுகின்றோம். இப்படித்தான் ஒரு இனம் அடுத்த இனத்தின் மீது அடக்குமுறையை பிரயோகிக்கின்றது.
    இந்திக்காரர்களின் மனதில் கள்ளம் இல்லையென்றால் அவர்கள் மற்றமொழிகளையும் அங்கீகரிக்கலாம்தானே. மற்றமொழிகளையும் ஏற்றுக்கொள்ளலாம்தானே.

    யாரோ ஒருவர் சொன்னதுபோன்று
    தாய்மொழி கண்போன்றது பிறமொழிகண்ணாடி போன்றது எங்களுடைய கண்நன்றாக இருக்கும்போது எதற்கு நாம் கண்ணாடியை போடவேண்டும்
    பலமொழி பேசப்படும் எந்த ஒரு நாட்டிலும் ஒரு மொழி என்றால் பலநாடுகள் உருவாகும். அதையே பலமொழி என்று வைத்துக்கொண்டால் ஒருநாடாக இருக்கும். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக சுவிற்சலாந்தை கொள்ளமுடியும். 4 மொழிகள் அமைதியான ஒருநாடு..........

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    அடடே! அடடே!!

    கம்முன்னு 15 மொழியும் தெரிஞ்சா தான் மத்திய அரசு வேலைன்னு மாத்திடலாமா? (அரசாங்கம் செயல்பட மட்டும்தான் ஒரு பொதுமொழி தேவைப்படுது)


    தமிழ் நாட்டின் ஆட்சி மொழி ஹிந்தி என அறிவிப்பு கொண்டு வந்தாதான் அது ஆதிக்கம்.


    ஹிந்திக்காரர்கள் என்று நீங்க சொல்றது யாரை? காஷ்மீரிகள், பஞ்சாபிகள், ராஜஸ்தானிகள், பீகாரிகள், வங்காளிகள், மராட்டியர்கள், மணிப்பூரிகள், குஜராத்திகள், உருது பேசுபவர்கள் இப்படி பல மொழிகளும் கலந்த கலவைகள்.

    தென்னிந்திய மொழிகளான தெலுகு, கன்னடம், மலையாளம், கொங்கணி, துளு இவர்கள் உங்க வாதத்தை ஒத்துக்கலை என்றாலும் அவங்களை உங்களோட சேர்த்துக்க முயற்சி செய்யறீங்க.. சரியா...?

    இப்போ இருக்கற நிலைமை எல்லா மாநிலங்களுக்காகவும் ஹிந்தி, தமிழ் நாட்டுக்காக ஆங்கிலம். சரியா?


    தென்னிந்திய மாநிலங்கள் ஒரே ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்த மொழியும் மட்டும் ஆட்சி மொழியா இருக்கட்டும்னு கூடச் சொல்லலாமே? சொல்லுவாங்களா? முடியுமா?

    ஏன் தமிழ் நாட்டில் கூடத்தான் பல மொழி பேசுபவர்கள் இருக்கோம். கூட மாநில ஆட்சி மொழியா தெலுகையோ கன்னடத்தையோ சேர்த்துக்கலாமே? ஏன் தமிழ் மட்டும்?

    நாம் மற்றவங்களுக்கு என்ன அறிவுரை சொல்றோமோ அதை ஏன் நாம முதல்ல உபயோகிக்கக் கூடாது?

  3. #27
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    கண்மணி நீங்கள் தவறாக விளங்கிக்கொள்கின்றீர்கள். ஒருவர் எத்தனைமொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அது தவறல்ல. ஆனால் திணிப்பது என்பது வேறுவிடயம். உங்களுக்கு தெரியுமா ஒரு நாட்டில் ஆட்சிப் பொறுப்பு (ஆட்சியில் இருக்கும் கட்சியினது) உறுப்பினர்களுக்கு மாறிச்செல்கின்றது. தேர்தல் நடப்பதே ஒன்றும் பெரிதாக தெரியாது. நீங்கள் என்னதான் சொன்னாலும் பலமொழி பேசுகின்ற நாட்டில் ஒருமொழி ஆட்சிமொழியாக இருந்தால் அது அடக்குமறையை நோக்கித்தான் செல்லும்.
    இந்தி பேசாத மாநிலங்களில் ரயில் நிலையங்களில் இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இதனால் இந்தி பேசுகின்ற மக்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் மற்றமொழி பேசுகின்றவர்கள் இந்தி அல்லது ஆங்கிலம் கற்க வேண்டியவர்களாகின்றனர். இந்தியநாட்டில் படிக்காத பாமரர்கள்தானே அதிகம்.
    இது ஒரு மொழிபேசுகின்றவர்களுக்கு கிடைக்கின்ற சலுகை.
    என்னைப்பொறுத்தவரை எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். ஆட்சிமொழியாக ஒருமொழியை ஏற்றுக்கொள்ளவே முடியாது
    Last edited by வியாசன்; 25-09-2009 at 08:41 AM.

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    நீங்கள்தான் தவறாக புரிந்து கொண்டிருக்கீங்க. பல ஆட்சி மொழிகள் இருப்பதினால் இந்த நிலை மாறிடுமா என்ன?

    அடக்கு முறைக்கும் ஒற்றை மொழிக்கும் சம்மந்தமில்லாமல் சம்மந்தப்படுத்திறீங்க..

    நான் மேலே சொல்லி இருக்கிற மாதிரி தமிழ்நாட்டில் உள்ள கன்னட / தெலுகு / ஹிந்தி பேசும் மக்களை அந்த அளவா அடக்கி ஆதிக்கம் செஞ்சுகிட்டு இருக்கீங்க? யோசிச்சுப் பாருங்க..

    நாம அடிபணிஞ்சு போகிற வரைக்கும் மற்றவங்க நம்மளை அடக்க முடியாது..

    ஆங்கிலத்தை நாம் ஏன் தூக்கி எறியலை? அது மட்டும் ஆதிக்கம் இல்லையா??

    அதை மறந்திட்டீங்களா?

    தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் - இணைப்பு மொழி ஆங்கிலம்...

    இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி - இணைப்பு மொழி ஆங்கிலம்

    (மக்கள் தொடர்பு கொண்ட) எந்த அரசு அதிகாரியும் அவர் எந்தப் பகுதியில் பணி செய்கிறாரோ

    அந்தப் பகுதியில் உள்ளூர் மொழி, ஹிந்தி, ஆங்கிலம் மூன்றையும் அறிந்திருக்க வேண்டும்.


    இதுக்கு அர்த்தம் தமிழ் நாட்டில் உள்ள கடைசிக் குடிமகன் வரை ஹிந்தி மட்டுமே படிக்கணும் பேசணும் என்பது அல்ல. அப்படிப் புரிஞ்சுக்கறதினால தான் இப்படிப் பேசறீங்க...

    அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டும் ஆங்கிலம், ஹிந்தி," அவர்களுடைய உள்ளூர் மொழி" கட்டாயமாக்கப் படவேண்டும்.
    மற்றவர்கள் அவங்க தேவைக்கேற்ப கற்க வேண்டும். அதுதான் நியாயம் தர்மம்.

    நான் தமிழ் மட்டும்தான் படிப்ப்பேன் என பொறுப்பில்லாம பேசறவங்களை பாராளுமன்றத்துக்கு ஏன் அனுப்பனும்? அதை முதல்ல யோசிங்க. தன்னுடைய தொகுதி மக்களுக்காக ஒரே ஒரு மொழியை கத்துக்க விரும்பாதவங்களை, அதாவது சின்னத்தியாகம் கூட செய்யத் தயாராக இல்லாதவங்களை எதுக்கு அனுப்பனும்?

    அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மூணு பாஷை கட்டாயம், மத்தவங்க தேவைக்கேற்ப என்றால் அதுதான் சரியான வாதம்.

    குடிமக்கள் அனைவரும் கட்டாயம் ஹிந்தி படிக்கணும் என்றால்தான் அது அடக்கு முறையின் ஆரம்பம். ஹிந்தி மட்டும்தான் படிக்கணும் என்றால்தான் அடக்கு முறை.

    ஒவ்வொரு நகரத்திலும் அரசு அலுவலர்களுக்கு உள்ளூர் மொழி கத்து கொடுத்தா (தினம் ஒரு மணி நேரம்) நான் சொன்ன திட்டம் அமுலாகிடும்.

    அரசியல்வாதிகளும் அதீகாரிகளும் தங்கள் சோம்பேறித்தனத்தை மறைக்கச் சொல்லும் காரணத்தை நீங்களும் பிடிச்சுகிட்டு தொங்கறீங்களே என்பதுதான் வருத்தமா இருக்கு.

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by கண்மணி View Post
    நீங்கள்தான் தவறாக புரிந்து கொண்டிருக்கீங்க. பல ஆட்சி மொழிகள் இருப்பதினால் இந்த நிலை மாறிடுமா என்ன?

    அடக்கு முறைக்கும் ஒற்றை மொழிக்கும் சம்மந்தமில்லாமல் சம்மந்தப்படுத்திறீங்க..

    நான் மேலே சொல்லி இருக்கிற மாதிரி தமிழ்நாட்டில் உள்ள கன்னட / தெலுகு / ஹிந்தி பேசும் மக்களை அந்த அளவா அடக்கி ஆதிக்கம் செஞ்சுகிட்டு இருக்கீங்க? யோசிச்சுப் பாருங்க..

    மற்றவங்க நம்மளை நாம அடிபணிஞ்சு போகிற வரைக்கும் அடக்க முடியாது..

    ஆங்கிலத்தை நாம் ஏன் தூக்கி எறியலை? அது மட்டும் ஆதிக்கம் இல்லையா??



    இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி - இணைப்பு மொழி ஆங்கிலம்

    (மக்கள் தொடர்பு கொண்ட) எந்த அரசு அதிகாரியும் அவர் எந்தப் பகுதியில் பணி செய்கிறாரோ

    அந்தப் பகுதியில் உள்ளூர் மொழி, ஹிந்தி, ஆங்கிலம் மூன்றையும் அறிந்திருக்க வேண்டும்.

    இதுக்கு அர்த்தம் தமிழ் நாட்டில் உள்ள கடைசிக் குடிமகன் வரை ஹிந்தி மட்டுமே படிக்கணும் பேசணும் என்பது அல்ல. அப்படிப் புரிஞ்சுக்கறதினால தான் இப்படிப் பேசறீங்க...

    அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டும் ஆங்கிலம், ஹிந்தி, அவர்களுடைய உள்ளூர் மொழி கட்டாயமாக்கப் படவேண்டும்.
    உங்கள் எண்ணம் அதுவாக இருந்தால் நிச்சயமாக எந்தஒரு அரச அலுவலகத்திலும் யாராவது ஒருவர் அங்கீகாரம் பெற்ற மொழிகளை பேசுபவர் ஒருவர் இருக்கவேண்டும்.

    உதாரணமாக

    இந்தி+ஆங்கிலம்+தமிழ்
    இந்தி +ஆங்கிலம்+தெலுங்கு
    இந்தி+ஆங்கிலம்+மலையாளம்

    என்று இருக்க வேண்டும். அப்படியில்லாமல் தனியாக இந்தி தெரிந்திருக்க வேண்டுமென்று சொல்வது தவறான கருத்தாகும். நேர்மையான அரசாக இருந்தால் இதை செயற்படுத்த வேண்டும். அப்படியில்லாமல் தனியே இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    நான் சொன்னதை நீங்க கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரம்பித்து இருக்கீங்க..

    இன்னும் கொஞ்சம் தெளிவா..

    தமிழ் நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு தமிழ் + ஆங்கிலம் + ஹிந்தி தெரிஞ்சிருக்கணும்

    பஞ்சாபில் உள்ள அதிகாரிக்கு பஞ்சாபி + ஆங்கிலம் + ஹிந்தி தெரிஞ்சிருக்கனும்.

    அதே மாதிரி உள்ளூர் அரசியல்வாதிக்கு உள்ளூர் மொழியும் தேசிய அரசியல்வாதிக்கு உள்ளூர் மொழி தேசிய மொழி இரண்டும் கூடவே ஆங்கிலமும் தெரிய வேண்டும்..

    ஹிந்தி என்பது தமிழ் தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டு 95 சதவிகிதம் நாட்டில் பரவி விட்டதால் ஹிந்தி மைய ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெறுகிறது..

    தமிழ் தெரியாத தமிழ் நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தாவே நான் சொன்ன நிலைமை வந்திடும்.

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள அதிகாரிக்கு இரண்டு பாஷைதானா என உடனே அழக்கூடாது.. மத்திய பிரதேசத்தில் உள்ள நம்ம அதிகாரி புதுசா ஒரு பாஷையும் கத்துக்க வேணாம் அப்படின்னு சந்தோஷப் படணும். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அந்த எல்லையைத் தாண்டி ரசு வேலைக்குப் போனா இன்னொரு பாஷை கத்துகிட்டே ஆகணுமே என்றும் சந்தோஷப் படணும்.

    டெல்லி போன்ற தலைநகரத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்ய என மட்டும் முக்கிய அலவலுகங்களில் சில மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கலாம். இவர்கள் நீங்க சொல்றாமாதிரி தமிழ் நாட்டு அதிகாரி ஒருவர், கேரள அதிகாரி ஒருவர் இப்படி இருக்கலாம். இதனால் மக்கள் பயன் பெறுவார்கள்.

    ஆனால் மக்கள் கேள்வி கேட்க முடியாத.. பாராளுமன்ற விவாதங்கள் எந்த பாஷையில் இருந்தா என்ன? நம்ம தியாகி அரசியல்வாதி அந்த பாஷையைக் கத்துகிட்டு நமக்குத் தொண்டு செய்யட்டும்..

    எவ்வளவோ செய்யறாங்க.. இதைச் செய்ய மாட்டாங்களா என்ன?

  7. #31
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    கண்மணி ஏன் பாராளுமன்றத்தில் மற்றமொழி பேசக்கூடாது என்கின்றீர்கள். அதையும் அனுமதிப்பதுதான் நல்லது. இப்போதெல்லாம் பாராளுமன்ற நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலிபரப்பாகின்றது. அதை மக்கள் புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் தாய்மொழியில் பேசுவதுதான் நல்லது.

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    அதை நம்ம ஒளிபரப்பாளர்கள் மொழிமாற்றி உபயோகித்து ஒளிபரப்பலாமே!!!

    அப்ப பெங்காளிகள் கூட அட இந்தத் தமிழன் இவ்வளவு அருமையான கருத்தைச் சொல்கிறாரே என வியப்பார்களே மக்கா!!! அப்போது ஒரு தமிழன் பேசியதை ஒவ்வொரு இந்தியனும் கேட்டு ரசிக்கலாமில்லையா!

    உதாரணமாக நீங்கள் சொன்ன காவிரிப் பிரச்சனையைப் பற்றி பாராளுமன்றத்தில் தமிழக அரசியல்வாதி என்ன பேசுகிறார், கர்நாடக அரசியல்வாதி என்ன பேசுகிறார், கேரள, பாண்டிச்சேரி அரசியல்வாதிகள் என்ன பேசுகிறார்கள், மத்திய மந்திரிசபையின் பதில் என்ன என பாமரனுக்கும் புரியுமே..

  9. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by கண்மணி View Post
    அதை நம்ம ஒளிபரப்பாளர்கள் மொழிமாற்றி உபயோகித்து ஒளிபரப்பலாமே!!!

    அப்ப பெங்காளிகள் கூட அட இந்தத் தமிழன் இவ்வளவு அருமையான கருத்தைச் சொல்கிறாரே என வியப்பார்களே மக்கா!!! அப்போது ஒரு தமிழன் பேசியதை ஒவ்வொரு இந்தியனும் கேட்டு ரசிக்கலாமில்லையா!

    உதாரணமாக நீங்கள் சொன்ன காவிரிப் பிரச்சனையைப் பற்றி பாராளுமன்றத்தில் தமிழக அரசியல்வாதி என்ன பேசுகிறார், கர்நாடக அரசியல்வாதி என்ன பேசுகிறார், கேரள, பாண்டிச்சேரி அரசியல்வாதிகள் என்ன பேசுகிறார்கள், மத்திய மந்திரிசபையின் பதில் என்ன என பாமரனுக்கும் புரியுமே..
    கண்மணி சுத்தி சுத்தி கடைசியில் நாம் ஆரம்பித்த இடத்துக்கு வந்துவிட்டோம். தலைப்பை ஒரு தடவை படியுங்கள் தொலைக்காட்சியில்தான் போய் முடிகின்றது. எனக்கென்னவோ இந்த விவாதம் அபத்தமாக போகின்றதுபோல் ஒரு உணர்வு. இதை தொலைக்காட்சிகள் செய்வதைவிட பாராளுமன்றத்தில் அமுல்படுத்துவது மேலாக தெரிகின்றது.
    இலங்கையிலும் இப்படித்தான் சிங்களத்தை கட்டாயமாக அமுல்படுத்தினார்கள்.பிறகு புத்தமதத்தை பிரதானப்படுத்தினார்கள்................இப்போது தீர்க்கமுடியாமல் வந்து நிற்கின்றது.

  10. #34
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    நீங்கள் இந்தியாவைப் பற்றி அறியாதவர் மாதிரி பேசுகிறீர்கள்.

    இந்தியாவின் ஜனத்தொகை 110 கோடி. அதில் படிக்காதவர்கள் 60 சதவிகிதம். (பெயர் எழுதத் தெரிந்தவர்கள் எல்லாம் படிக்கத் தெரிந்தவர்கள் அல்ல). தனது பகுதியில் புழக்கத்தில் இல்லாத ஒரு மொழியை இந்த 110 கோடிப் பேர் தெரிஞ்சுக்கணும் என்று சொல்கிறீர்கள். நான் சொல்வது 540 + 540 அதாவது 1080 பேர் மட்டும் ஹிந்தி ஆங்கிலம் படித்தால் போதும் என்கிறேன். வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். (ஒரு வேளை நீங்க அரசியல்வாதியோ.. நான் ஹிந்தி கத்துக்க மாட்டேன்.. பள்ளியே இல்லாத,, பள்ளி இருந்தாலும் ஆசிரியர் இல்லாத.. ஆசிரியர் இருந்தாலும் கட்டிடமில்லாத,.. கட்டிடமிருந்தாலும் கூரையில்லாத.. கூரை இருந்தாலும் புத்தகம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே.. ஒரே ஒரு மொழி கத்துக்குங்க என்று சொல்வது போல இருக்கு… யோசிச்சுப் பாருங்க நடக்கற காரியமா அது? தொலைகாட்சியில் பொதுமொழி என்றால் பாராளுமன்றத்தில் எதுக்கு 15 மொழி?)

    இந்த 110 கோடி பேர்களுக்கு தகவல் தரும் தொலைகாட்சி ஒரே ஒருமொழிதான் பேசனுமாம்.ஆனால் 540 பேர் உள்ள பாராளுமன்றத்தில் அவரவர் மொழி பேசலாமாம்..இதுக்கு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க.

    கிடக்கறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வை..

    பாராளுமன்றத்தில் மந்திரி பதிலளிக்கும் போது அவர் ஒரு மாநிலத்திற்கு பதில் அளிப்பதில்லை. இந்தியா முழுமைக்கும் பதில் அளிக்கிறார் என்பதை நினைவில் கொள்க. அதனால் அவர் 90 சதம் மக்கள் ஒப்புக் கொண்ட ஹிந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ பதில் சொல்வதுதான் முறை.

    பாராளுமன்றத்தில் சொந்த மொழியில் பேசவேண்டும் என்பது வறட்டு கௌரவம். வெட்டி பந்தா. அதனால பைசா பிரயோசனம் இல்லை. பாராளுமன்றத்தில் என்ன பேசுகிறோம் எப்படி பேசுகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர எந்த பாஷையில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை. (இது அரசியல்வாதிகள் காட்டும் மாயாஜாலப்படம் – புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.).

    பலமொழி தொலைகாட்சிகள் போனால்தான் மொழிகள் அழிய ஆரம்பிக்கும். அந்த ஒரு மொழி எந்த மொழி என்று சண்டை உண்டானால் அதை தீர்த்து வைக்க அமரனால் கூட முடியாது,,

    தொலைகாட்சியில் ஒரே மொழி என்பதால் எந்தப் பொருளின் விலையும் குறையாது.. ஒரு 3 ரூபாய் பொருளை ஒருவன் 30 ரூபாய்க்கு விற்றால், நீங்கள் தொழில் தொடங்கி அதை 6 ரூபாய்க்கு விற்கத் தொடங்குங்கள். அதனால் மட்டுமே விலை குறையும். போட்டிகளால் மட்டுமே விலைவாசியைக் குறைக்க இயலும் என்பதை ஆழமாய் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்...

  11. #35
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    கண்மணி உங்களை நினைத்த அழுவதா இல்லை சிரிப்பதா? நான் சொல்லவில்லையே தொலைக்காட்சிகள் ஒருமொழியில் ஒளிபரப்பவேண்டுமென்று. நான் சொன்னது தொலைக்காட்சிகள் மொழி பெயர்ப்பு செய்வதைவிட பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு செய்வதுதான் நல்லது என்று.
    இந்தியாவில் ஏதாவது சட்டம் இருக்கின்றதா ஆங்கிலம் அல்லது இந்திமொழி தொந்தவர்கள்தான் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடலாம் என்று.
    இப்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த இரண்டு மொழிதெரியாதவர்கள் கூட மந்திரியாகமுடியும். பலமில்லா மத்தியஅரசாங்கத்தை சிறுகட்சிகள் மிரட்டி தங்களுக்கு தேவையான பதவிகளை பெற்றுக்கொள்முடியும்.
    ஐ.நாவில் கூட எந்தமொழியிலும் பேசக்கூடியதாக இருக்கின்றது. 15 மொழிபேசுகின்ற நாட்டில் இரண்டு மொழி என்றால் உங்களுக்கே உங்களுடைய வாதம் அபத்தமாக தெரியவில்லையா? முகவரியை இழக்க தயராக இருக்கின்றீர்கள் என்பது தெரிகின்றது.
    சரி மொழியை விடுவோம் தமிழக மீனவர்கள் தினந்தோறும் தாக்கப்படுகின்றனரே இதுவே இந்தி பேசுகின்ற மக்களாக இருந்தால்? அவுஸ்திரேலியாவில் பம்பாய்காரர்கள் ஒருசிலர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். தென்பகுதியில் தமிழகமீனவர்கள் ஆடைகள் உரியப்பட்டு தாக்கப்படுகின்றனர் இந்தி கிருஸ்ணபரமாத்மாக்கள் துகிலுரிவதை தடுக்க மறுக்கின்றனர். உங்கள் புள்ளிவிபரங்கள் நன்றாகத்தான் இருக்கின்றது. ஏட்டுசுரைக்காய் கறிக்குதவாது.
    இப்போதே இந்த கீழானநிலை இருக்கின்ற தங்கள் முகவரியை (மொழியையும்) இழந்துவிட்டால் போதுமய்யா போதும்.
    இந்தியா பலநாடுகளாக இருந்தால் பலமாக இருக்கும் ஒருநாடாக இருந்தால் தானே அழிந்து போகும்

  12. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    நன்றி வியாசன்.. நீங்களே எனக்காக வாதாடியதற்கு. மராட்டியர்கள் தாக்கப்பட்டதுக்கு கண்டனம் என்றீர்களே சூப்பர்...

    பாராளும்ன்றத்தில் லல்லு பிரசாத் ஹிந்தியில் பேசுவதை, மம்தா பெங்காலியில் பேசுவதை தமிழச்சியாகிய நான் எப்படிப் புரிந்து கொள்வது என்று நீங்க சொல்லவே இல்லையே!

    பாராளுமன்றத்தில் தமிழில் பேசினால் நீங்கள் சொன்ன அத்தனைப் பிரச்சனையும் தீர்ந்து விடுமா?

    அப்பட்யென்றால் இப்பொழுது கூட பேசலாம். மரபை உடைக்கலாம் என்றுதான் ஏறகனவே சொல்லி இருக்கிறேனே..

    வழி முறைகளை நீங்களே அலசிச் சொல்லுங்கள்.. நான் மௌனமாக கேட்கிறேன்.

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •