Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 43

Thread: இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா?

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    . இந்திய பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கே அனுமதியில்லை. அப்படியானல் ஒரு மொழிதானே இருக்கின்றது.

    இது தவறான தகவல். பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். ஒரு எம்.பி இவற்றில் எதில் வேணும்னாலும் பேசலாம். அதன் ஹிந்தி / ஆங்கில மொழி பெயர்ப்பு ஹெட்ஃபோனில் கிடைக்கும்.

    கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மந்திரிகள் மாத்திரமே ஹிந்தி / ஆங்கிலத்தில் பதில் சொல்லும் மரபை கடை பிடிக்கிறார்கள். காரணம் உடனடி மொழி பெயர்ப்பில் சிறிதேனும் பிழை ஏற்பட்டால் பொருள் மாறிவிடும் அல்லவா!

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by கண்மணி View Post
    இது தவறான தகவல்.

    கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மந்திரிகள் மாத்திரமே ஹிந்தி / ஆங்கிலத்தில் பதில் சொல்லும் மரபை கடை பிடிக்கிறார்கள். காரணம் உடனடி மொழி பெயர்ப்பில் சிறிதேனும் பிழை ஏற்பட்டால் பொருள் மாறிவிடும் அல்லவா!
    கண்மணி எனக்கும் தெரியும் அமைச்சர்கள் மட்டும் பதிலளிக்கமுடியாது என்பது. இந்தி மொழியில் பதிலளிக்க அனுமதித்தவர்கள் ஏன் மற்றையமொழியில் அனுமதிக்க கூடாது. அப்படியானால் எல்லோரும் இந்தி கற்கவேண்டும். பிறகென்ன ஒருமொழிதானே?

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ராஜா அவர்கள் கூறும் கருத்துத்தான் என்னுடையதும். அதிகமாக ஒரு டிவியை மக்கள் பார்த்தால் அதில் வரும் விளம்பரங்களுக்கு வியாபாரிகள் அதிகம் பணம் கொடுக்கவேண்டும். ஆகையால் அவர்கள் இதேமாதிரியான தொகையையே அப்பொழுதும் செலுத்துவார்கள்.

    இந்த தொலைகாட்சிகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில்மட்டும் இருந்தால் ஒரு மொழி கொள்கையை நான் ஒப்புக்கொள்கிறேன்.

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    அனுமதி இல்லைன்னு யார் சொன்னது? அப்படி ஒரு சட்டமும் இல்லை, அது மரபு மாத்திரமே... அதை தெளிவா எழுதி இருக்கனே!!!

    கண்ணைத் துடைச்சிகிட்டுப் படிங்க... காரணம் என்னன்னும் சொல்லி இருக்கேன்,,

    கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மந்திரிகள் மாத்திரமே ஹிந்தி / ஆங்கிலத்தில் பதில் சொல்லும் மரபை கடை பிடிக்கிறார்கள். காரணம் உடனடி மொழி பெயர்ப்பில் சிறிதேனும் பிழை ஏற்பட்டால் பொருள் மாறிவிடும் அல்லவா!

    அரசு நிலத்தை பதவியிலிருப்போர் வாங்கக்கூடாது என்பது நடத்தை வழிமுறையே தவிர சட்டம் அல்ல. அதனால் இன்னார் நிலம் வாங்கி இருந்தாலும் அது குற்றம் இல்லை என தமிழக உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உங்களுக்கு நினைவு கூர விழைகிறேன். அதாவது இந்தியாவில் மரபை உடைப்பது குற்றமே இல்லைங்க வியாசன்,


    இதை எல்லோருமே கண்டுக்கலை.. எதிர்க்கலை என்பதையும் நினைவு கொள்ளவும்..

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by வியாசன் View Post
    கண்மணி எனக்கும் தெரியும் அமைச்சர்கள் மட்டும் பதிலளிக்கமுடியாது என்பது. இந்தி மொழியில் பதிலளிக்க அனுமதித்தவர்கள் ஏன் மற்றையமொழியில் அனுமதிக்க கூடாது. அப்படியானால் எல்லோரும் இந்தி கற்கவேண்டும். பிறகென்ன ஒருமொழிதானே?
    எனக்கும் இது கொஞ்சம் உறுத்துகிறது. ஏன் இந்தி பேசுபவர்கள் தன் தாய் மொழியில் பதில் சொல்கிறார்கள், ஆனால் அது மற்றவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

    மொழி பெயர்ப்பாளர்கள் இருப்பதால் ஒரு சில வார்த்தைகள் தவிற மொத்தத்தில் என்ன பேசுகிறார் என்று தெரிந்துகொள்ளமுடியும். தமிழும் ஆங்கிலமும் தெரிந்த தமிழ் எம்.பிக்கள் இந்தியில் நிகழ்த்தும் உரைகளை எப்படி புரிந்துகொள்ளமுடியும், அங்கு உட்காருவதே வீணாகிவிட்டதே.

    அப்படியென்றால் ஆங்கிலத்தில் மட்டுமே மந்திரிகள் பேசவேண்டும் என்று சொன்னால் இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    மத்திய ஆட்சி மொழி என்ற அந்தஸ்தை ஹிந்திக்கு 90 சதவிகித மாநிலங்கள் கொடுத்து விட்டன. தமிழ்நாடு மட்டும்தான் அங்கீகாரம் கொடுக்கலை தெரியுமா?

    ஒரு வெளிநாட்டு மொழி ஏன் இந்தியாவின் ஆட்சி மொழியா இருக்கணும்? இந்தியாவில் மொழி வளமே இல்லையா என்ன?

    நிறைய மொழிகள் கற்பவர்களின் வளர்ச்சி முதல் இரண்டு மூன்று வருடங்கள் குறைவா இருந்தாலும் அதன் பிறகு பிரம்மிக்கும் வகையில் இருக்கு என்று ஆராய்ட்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் அமெரிக்கா, ஐரோப்பா முழுதுமே மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்க ஆரம்பித்து விட்டனர்.

    நிறைய மொழி படித்தவர்கள் விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பாணியே அலாதிதானுங்க,

    1. மத்திய ஆட்சி மொழியாக ஒரு மொழி
    2. மாநில ஆட்சி மொழியாக இன்னொரு மொழி
    3. தங்கள் சமூக இனங்களுக்காக ஒரு மொழி
    4. உலகை அறிந்து கொள்ள ஒரு மொழி
    5. தொழிலுக்காக சில மொழிகள்

    இப்படி ஒருவர் சில மொழிகளை ஒருவர் தெரிந்து கொள்வது முக்கியமா பகுத்தறிவை வளர்க்கும்.. தனி மனிதனுக்கு அது மிக மிக முக்கியம்.

    வாழ்க்கை எளிதா இருக்கும் என்பதை விட அர்த்தமுள்ளதா இருக்கணும்.

    அதுக்கு பலமொழிகள் மிக மிக அத்தியாவசியம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இந்தி தெரியாவதர்கள் என்றால்.. தமிழர்கள் தான் என்ற நிலை உள்ளது. அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் தமிழை வளர்க்கிறோம் என்று இந்தியை வரவிடாமல் செய்துவிட்டனர்.

    ஒரு நாட்டிற்கு ஒரு மொழியென்று இருந்தால் நன்றாக இருக்கும். மாநில மொழிகள் தொடர்ந்து செயல்படுவதில் தவறில்லை.

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    தமிழ்நாட்டை வடநாட்டு மன்னர்கள் யாரும் ஆட்சி செய்யவில்லை ஆகையால் நம்முடைய மொழி அப்படியே இருந்தது, ஆனால் மற்ற மாநிலங்களில் வடநாட்டு மன்னர்களின் ஆட்சி இருந்ததால் அவர்களுடைய மொழியும் கலாச்சாரமும் எளிதாக அந்த மாநிலங்களில் ஏற்பட்டுவிட்டது.

    இப்பொழுது இருக்கும் இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறும்பொழுது வடநாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழர்களையும் இதில் சேர்ந்துகொள்ளச்சொன்னார்கள். அதுவரை நாம் தனித்தே இருந்தோம். அப்படி சேரும்பொழுதும்கூட சுதந்திரம் பெறும் லட்சியம் ஒன்றே பெரிதாக இருந்தது.

    பிரிட்டனிமிருந்து நாம் சுதந்திரம் பெரும்பொழுது காந்தி நேரு ஆகியோர் மிகப்பெரிய தலைவர்களாக ஆகிவிட்டார்கள் ஆனால் தமிழ்நாட்டில் பெரியார் மட்டுமே இருந்தார். ராஜாஜி காமராஜர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்கள் ஆகையால் அவர்கள் நேருவையும் காந்தியையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுடைய கொள்கையை அப்படியே பின்பற்றினார்கள்.

    ராஜாஜி அவர்கள் வடநாட்டினருடன் சேர்ந்துகொண்டு இந்தியை தமிழகத்தில் கட்டாயப்பாடமாக்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள் பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும்.

    பின்னர் எதிர்ப்பு வலுவாகவே, ராஜாஜி அவர்கள் இந்தி விஷயத்தில் கொஞ்சம் பின்வாங்கினார்.

    தமிழகம் எப்பொழுதும் தனித்தே இருந்திருக்கிறது. நம் மொழி மற்றும் கலாச்சாரம் அப்படியே நம்மிடமே இருக்கிறது.

    இதனால்தான் இந்தியை ஆட்சி மொழியாக தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இனிமேலும் இந்தியை தமிழகத்தில் திணிக்கமுடியாது. அப்படி முயற்சித்தால் பிரிவினை எதிர்ப்பு மறுபடியும் தலைதூக்கும்.

    ஒரே வழி, இந்திக்கு நிகராக ஆங்கிலத்தையும் வைத்திருப்பதுதான் என்பது என்னுடைய கருத்து.

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    பலமொழிகள் பேசப்படும் இடத்தில் ஒரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது பிரிவினைக்கு வழிவகுக்கும். இதுவும் ஒருவகை அடக்கு முறையே. அறிஞர் அவர்களும் தாமரை அவர்களும் ஒரு மொழி போதுமென்கின்றார்கள். அப்படி ஒருமைப்பாடு மற்றவிடயங்களில் காணமுடியவில்லையே. பொதுவாக தமிழ்நாட்டுக்கு இதுவரையும் காவிரிப்பிரச்சனையில் தீர்வுகாணமுடியவில்லை. ஒருமைப்பாடு காண்பதாயின் இந்த நதிநீர்ப்பிரச்சனையை மத்திய அரசு தீர்த்து வைக்க முடியுமல்லவா?
    தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தினந்தோறும் தாக்கப்படுகின்றனர். கேட்பதற்கு நாதியில்லை. நண்பர்களே மொழியும் மதமும் ஒவ்வொரு இனத்தின் தனித்தன்மை இதை இழப்பது நல்லதல்ல.
    ஒரே மதமாக இருந்தால் விடுமுறைகள் குறையும் அதனால் உற்பத்தி அதிகரிக்கும் அதற்கும் நீங்கள் தயாரா?

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    இதுதாங்க கூத்துன்னு சொல்றது.. பிரச்சனை மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமல்ல மாவட்டத்துக்கு மாவட்டம், ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு ஏன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் ஏன் அண்ணன் தமபிகளுக்கு உள்ளயே கூட இருக்கு.

    சொத்துத்தகராறு, வரப்புதராறு, தண்ணீர் வண்டித் தகராறு, ஆஸ்பத்திரி தகராறு, கால்வாய் தகராறு இப்படி நமக்குள்ள எத்தனைத் தகராறு இருக்குன்னு மறந்து போச்சா?

    ஒருமைப்பாடு எங்கயும் மனசு இருந்தாதான் காணமுடியுமே தவிர "ஸேம் பிஞ்ச்" போட்டுக் காணமுடியாது.

    இப்போ ஆரென் அண்ணா சொன்னதைக் கேட்டீங்க இல்லையா? மத்த மாநிலங்களெல்லாம் ஒரு காலத்தில் வடநாட்டவரால் ஆளப்பட்டது. அதனால அவர்கள் ஹிந்தியை ஏற்றுகிட்டாங்க.. நாம ஆங்கிலேயரால் ஆளப்பட்டோம் அதனால் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வோம் என்கிறார்.

    எத்தனை மொழி தெரிந்து கோள்கிறோம் என்பது பெரிய பிரச்சனையே அல்ல.. நம் மொழியை பிழையில்லாமல் கற்று அதற்கு நல்ல படைப்புகள் தந்து வாழ வைக்கிறோமா என்பதுதான் முக்கியம். ஹிந்தி கத்துக்க மாட்டேன் என்றால் தமிழ் வளர்ந்து விடாது...

    ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் ஆங்கிலத்தை எதிர்க்க மாட்டாங்க.. காரணம் தமிழைக் காக்க பிறமொழி எதிர்ப்பு என்பது வழியே அல்ல..

    ஏனுங்க மெசினோட பாஷையெல்லாம் "சி" சி++, பேஸிக், பாஸ்கல், கோபால், ஜாவா அது இதுன்னு படிக்கறீங்களே, மனுஷனோட பாஷையை படிச்சா குறைஞ்சா போயிடுவோம்?

    அதுவுமில்லாம 8 கோடிப் பேர்ல அங்கப் போறது ஒரு 80 பேர். அந்த 40 பேர்கூட ஒரு பொதுமொழி படிக்கலைன்னா கேலிக்கூத்தா இல்லையா? (மேல் சபை கீழ்சபை அது இது எல்லாம் சேர்த்து)அதுக்கப்புறம் மத்திய அரசின் வேலைவாய்ப்பு தேடறவங்க..

    இன்னொரு மொழியை நாம எதிர்க்கறோம் என்றால் அதுக்கு காரணம் நம்முடைய தாழ்வு மனப்பான்மைதான்.

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    ஆரம்ப நோக்கத்தில் இருந்து திரி விலகிப் போகுதுன்னு நினைக்கிறேன்.

    இந்தியாவிற்கு ஒரே மொழி போதாது என்பதுதான் பலரின் வாதமா இருக்கு,,

    மத்திய ஆட்சி மொழியாக ஒண்ணு அல்லது இரண்டு மொழிகள் இருக்கலாம்.

    மற்றபடி மொழிகள் உபயோகத்தை அவரவர் விருப்பத்துக்கு விட்டு விடுவது நல்லது என நினைக்கிறேன்,

    ஒரே மொழி என்பதால் இதுவரை எந்த பயனையும் (படிக்க எளிது என்பது தவிர (அதாவது அதில் கூட அறிவு வளர்ச்சி குறைவு என்பதைச் சொல்லி) )காணவில்லை.

    அதனால் ஒரே மொழி என முயற்சி எடுப்பது வீண்முயற்சி..அந்த நேரத்தில் நாலு நல்ல காரியம் பார்க்கலாம்,

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கண்மணி அவர்கள் சொல்வதை நான் முழுவதுமாக ஒப்புக்கொள்கிறேன், இந்தி பேசுபவர்கள் ஒரு தென்னிந்திய மொழியையும் கற்றுக்கொள்வதாக இருந்தால்.

    அவர்கள் அவர்களுடைய தாய் மொழியில் மட்டும் பேசுவார்களாம் ஆனால் மற்ற மொழிக்காரர்கள் இந்தியை கற்றுக்கொள்ளவேண்டுமாம்.

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •