Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 33

Thread: ஏவல் நாய்களை ஏவிய கோழைகளே!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12

    Thumbs up ஏவல் நாய்களை ஏவிய கோழைகளே!!!

    வெறிபிடித்து
    துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும்
    சலைவா வழிய கடித்த
    நீங்கள் ஏவிய நாய்கள்
    பொந்துகளுக்குள் பதுங்கின..

    வெறிநாய் கடித்தாலும்
    வெறிபிடிக்காது எங்களுக்கு
    காந்தீயத் தடுப்பூசி
    கச்சிதமாய் வேலைசெய்யும்..

    சோம்பி இருந்த கண்கள்
    இனி விழித்தெழும்
    அக்கம்பக்கங்களை இனி
    அவசியம் நோக்கும்

    வெட்டவெளியிலும் நெஞ்சுயர்த்தி நடப்போம்.
    அன்பை அறத்தை உயர்த்திப் பிடிப்போம்

    சிந்திய ரத்தங்கள் உரமாகும்
    இந்தியன் ஒற்றுமை செழித்து வளரும்.
    பேதங்கள் கொஞ்சம் பின்னே போகும்
    வாதங்கள் இன்னும் பின்னே போகும்
    எத்தனை அடி எங்களுக்கு விழுமோ
    அத்தனை அடிகள் உயர்ந்து வளர்வோம்..

    என்று மரணமென்ற கலக்கமுமில்லை.
    எலிகளின் வாழ்க்கை எங்களுக்கில்லை
    ஆண்மை என்பது ஆயுதங்களில் இல்லை
    வீரம் என்பது வெற்றியில் இல்லை

    நாட்டைக் காக்கும் வீரர்கூட்டம்
    நாங்களும் காப்போம் முடிந்த மட்டும்

    சீரிய நோக்கம் சிந்தனைத் தெளிவு
    காரியச் சித்தம் கண்களில் கருணை
    நேரிய நன்னடை நெஞ்சினில் தாய்மை
    சூரியப் பார்வை செயல்களில் தூய்மை
    உங்களில் இருப்பதை உருக்குலைவாக்கும்
    எங்களில் இருப்பதே ஆண்மை வீரம்

    ஒளியும் வளைகள் இல்லையெனப் போகும்
    ஓடுதல் உங்கள் வாழ்க்கையென ஆகும்
    புன்னகை மாறா முகங்கள் வாழும்
    பூமியில் சமாதானம் பூத்துக் குலுங்கும்
    Last edited by தாமரை; 30-11-2008 at 05:14 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    அப்படிப்பட்ட காலத்திற்காகத்தானே காத்திருக்கிறோம்..

    இனி எங்கும் குண்டுகளுக்குப் பதில் பூக்கள் முழங்குவதைக் காண்போம்,

    அன்புடன்
    தென்றல்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இதில் பட்டியலிட்டதையெல்லாம் செய்துகொண்டிருந்தால் அந்த நாள் கண்டிப்பாக வரும் தென்றல்..

    பூக்கள் மலர்ந்தால்தானே தென்றலுக்குப் பெருமை..சந்தோஷம் எல்லாம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by தாமரை View Post
    வெறிபிடித்து
    துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும்
    சலைவாய் வழிய கடித்த நாய்கள்
    பொந்துகளுக்குள் பதுங்கின..
    சலைவாய்.. ????
    சலைவா???
    என்ன இது தலைவா....!!!!

    ஜொள்ளா... ????
    உமிழ்நீர்.... ???
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சாம்பவி View Post
    சலைவாய்.. ????
    சலைவா???
    என்ன இது தலைவா....!!!!

    ஜொள்ளா... ????
    உமிழ்நீர்.... ???
    சுட்டியமைக்கு நன்றி!

    உமிழ்நீர் உண்பதை ஜீரணமாக்க உதவும்.
    சலைவா வெறியிலும் பேராசையிலும் வழிவது..

    எச்சில் எனவும் சொல்லலாம்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நல்ல கவிதைக்கு பாராட்டு தாமரை.

    இருந்தாலும் நீங்கள் நாய்களை அவமானப்படுத்தி இருக்க வேண்டியதில்லை. காரணம் இரு கால்களில் நடந்த அவைகளை மனித இனம் மட்டுமல்ல, விலங்கினம் உட்பட எந்த ஒரு ஜந்தும் மன்னிக்காது ; மறக்காது.

    சமாதானப்பூக்கள் மலர எத்தனை உயிர்களை உரமாகத்தர வேண்டுமோ...தெரியவில்லையே...?

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by தாமரை View Post
    சுட்டியமைக்கு நன்றி!

    உமிழ்நீர் உண்பதை ஜீரணமாக்க உதவும்.
    சலைவா வெறியிலும் பேராசையிலும் வழிவது..

    எச்சில் எனவும் சொல்லலாம்
    வெறியில் வழிந்தாலும்
    நெறியில் "வழிந்தாலும்"
    நீர் உமிழும் நீர்...
    உமிழ்நீரே......
    முக்காலத்திற்கும் பொருந்தும்
    வினைத் தொகையது.. =))
    வினைத்தொகையானது.... !!!!


    வழிவது
    எச்சிலோ
    உமிழ்நீரோ...
    மொழிவது
    தமிழாக இருக்கட்டுமே.... !!!!

    அதெல்லாம் சரி...
    நிலை மாறலாம்..
    நிலை மாறலாமோ... !!!!!!!
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சாம்பவி View Post
    வெறியில் வழிந்தாலும்
    நெறியில் "வழிந்தாலும்"
    நீர் உமிழும் நீர்...
    உமிழ்நீரே......
    முக்காலத்திற்கும் பொருந்தும்
    வினைத் தொகையது.. =))
    வினைத்தொகையானது.... !!!!


    வழிவது
    எச்சிலோ
    உமிழ்நீரோ...
    மொழிவது
    தமிழாக இருக்கட்டுமே.... !!!!

    அதெல்லாம் சரி...
    நிலை மாறலாம்..
    நிலை மாறலாமோ... !!!!!!!

    வெறியில் வழியும் எச்சில்கள் உமிழப்படுவதில்லை. சொல்லப் போனால் எச்சில் உமிழ்வதற்காக படைக்கப் பட்டதில்லை. அவை ஜீரணத்திற்காக படைக்கப்பட்டவை. வாய்ச்சுத்தமில்லாததால் உமிழ்கிறோம். வெறிநோய் பிடித்தவர்களின் வாயில் வழியும் எச்சில் மூளையின் கட்டுப்பாட்டிலோ அல்லது விருப்பத்திலோ உமிழப்படுவதில்லை. அதனால்தான் அதை உபயோகிக்கத் தயக்கம்..

    வன்முறை என்பது ரேபிஸ் போன்ற ஒரு கொடிய வெறிநோய். இந்த நோய் பிடித்தால் எச்சில் கட்டுப்பாடில்லாமல் வழியுமாம். உமிழப்படுவதில்லை.

    எச்சில் என்று சொல்லக் கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. என் குழந்தைகள் உண்ட எச்சில் பழங்களைத் தின்ற எனக்கு.

    மொழியை விட அந்த உணர்வு எனக்கு மிக முக்கியம் சாம்பவி.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83

    Unhappy

    Quote Originally Posted by தாமரை View Post
    மொழியை விட அந்த உணர்வு எனக்கு மிக முக்கியம் சாம்பவி.
    :OOOOOOOOOOO

    உங்களின் அந்த உணர்வு மிக்க*
    முதல் நான்கு வரிகள்..
    கவிதையில் ஒட்டாமல்
    போனது தான். சோகமே.... !!!!
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    வெறிநாய் கடித்தாலும்
    வெறிபிடிக்காது எங்களுக்கு
    காந்தீயத் தடுப்பூசி
    கச்சிதமாய் வேலைசெய்யும்..


    அன்பை அறத்தை உயர்த்திப் பிடிப்போம்

    சிந்திய ரத்தங்கள் உரமாகும்
    இந்தியன் ஒற்றுமை செழித்து வளரும்.

    எத்தனை அடி எங்களுக்கு விழுமோ
    அத்தனை அடிகள் உயர்ந்து வளர்வோம்..

    ஆண்மை என்பது ஆயுதங்களில் இல்லை
    வீரம் என்பது வெற்றியில் இல்லை

    நாட்டைக் காக்கும் வீரர்கூட்டம்
    நாங்களும் காப்போம் முடிந்த மட்டும்

    சீரிய நோக்கம் சிந்தனைத் தெளிவு
    காரியச் சித்தம் கண்களில் கருணை
    நேரிய நன்னடை நெஞ்சினில் தாய்மை
    சூரியப் பார்வை செயல்களில் தூய்மை

    ஒளியும் வளைகள் இல்லையெனப் போகும்
    ஓடுதல் உங்கள் வாழ்க்கையென ஆகும்
    புன்னகை மாறா முகங்கள் வாழும்
    பூமியில் சமாதானம் பூத்துக் குலுங்கும்
    இந்த வரிகள் பெரிதும் கவர்ந்தன.

    மனமார்ந்த நன்றிகள்

    கீழை நாடான்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    9,024
    Downloads
    4
    Uploads
    0
    இந்த நாள் என்று வரும்?
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    சாம்பவி உங்கள் குழப்பம் புரிகிறது.

    நான் யார் யாரைப் பற்றிப் பேசுகிறேன் யாரிடம் பேசுகிறேன் என்பது கவிதையில் வெளிப்படவில்லை,



    மற்றபடி நான் பேசிக்கொண்டிருப்பது, அந்த தீவிரவாதிகளை தயார் செய்து அனுப்பி இந்தியாவை நிலை குலைய வைத்துவிடலாம் என்று நினைக்கும் கயவர்களிடம்..

    வெறிபிடித்த நாய்களாக வந்தவர்கள் - சில நாட்களாக பதுங்கிக் கிடந்து கொலைகள் புரிந்த சில தீவிரவாதிகள்.. வேகமாக ஓடிவந்து கடித்த அந்த வெறிநாய்கள்.. ராணுவம் வந்தவுடன் ஓடிப் பதுங்கிக் கொண்டனர்

    மதவெறி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பதாலேயே எங்கள் நாட்டில் இந்து-முஸ்லீம் கலவரம் வந்துவிடாது என்பதைச் சொல்லத்தான்.. வெறிநாய்கள் கடித்தாலும் எங்களுக்கு வெறிபிடிக்காது. ஏனென்றால். நாங்கள் காந்தீயம் என்ற தடுப்பூசி போட்டிருக்கிறோம். மதவெறி எங்களுக்கு பிடிக்காது எனச் சொல்லி இருக்கிறேன்.

    இந்தியர்கள் இனி விழிப்புடன் இருப்போம். எங்கள் மனதில் பயத்தை உருவாக்க நினைக்கும் உங்கள் பாட்சா பலிக்காது,. நாங்கள் பயமின்றி எங்கள் நாட்டில் உலவுவோம். இன்னும் அதிகம் உழைப்போம். இன்னும் வேகமாய் நாட்டை முன்னேற்றுவோம்.. இது உன் தவறு இது அவன் தவறு என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல்.. இதுதான் சரி இதெல்லாம் தவறு என வாதிட்டுக் கொண்டிருக்காமல் நாங்கள் உயர உயர வளர்ந்து கொண்டே இருப்போம்.

    எங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் வரலாம். அதைப்பற்றி நாங்கள் அஞ்சப் போவதில்லை. பல நாடுகளிலும் காடுகளிலும் எலிகள் பொந்துகளில் வாழ்வதைப் போல நாங்கள் மறைந்து வாழப்போவதில்லை. ஆயுதங்களைக் கொண்டு மிரட்டுவது ஆண்மைத்தனம் இல்லை. இது போல சுதந்திரமாய் வாழத்துணிவதுதான் ஆண்மை. சும்மா 100 பேரை வீழ்த்திவிட்டோம் என்பது வீரம் இல்லை. அதை நேருக்கு நேர் நின்று நடத்திப் பாருங்கள். யார் வீரர் என்பது புரியும்.

    நாட்டைக் காக்க எங்களிடம் மிகச் சிறந்த படை உண்டு. இனி நாங்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

    எங்களில் இருப்பது

    சீரிய நோக்கம் சிந்தனைத் தெளிவு
    காரியச் சித்தம் கண்களில் கருணை
    நேரிய நன்னடை நெஞ்சினில் தாய்மை
    சூரியப் பார்வை செயல்களில் தூய்மை

    இதுதான் ஆண்மை... இது எங்களில் இருக்கிறது. இவை உங்களுக்குள் உள்ள வெறித்தனத்தைத் தூள் தூளாக்கும்.

    உலகிற்கு இவையெல்லாம் புரியப் புரிய உங்களுக்கு அடைக்கலம் கொடுப்போரே உங்களை விரட்டி அடிப்பர். உங்களால் எங்கும் ஒளிய முடியாமல் போகும்.. ஒரு இடத்திலும் நிலையாக இருக்க முடியாமல் ஓடுவீர்கள் ஓடுவீர்கள்.. இருக்கக் கூட இடமில்லாமல் ஓடுவீர்கள்.

    எதையும் நெஞ்சுரத்துடன் நேரிடையாகவும் புன்னகையோடும் நேர்கொள்ளும் நல்லவர்கள் வாழ்வார்கள். பூமியில் அதனால் சமாதானம் பூக்கும்.

    நாம் என்ற வார்த்தை அதனால்தான் வெளிப்படவில்லை சாம்பவி. நாங்கள் வேறு.. நாம் என்பது வேறு..

    நம்முடைய மக்களை நோக்கிச் சொல்வதாக இருந்தால் நாம் என்றுச் சொல்லி இருப்பேன்.

    இப்போது தெளிவாக இருக்கும் என எண்ணுகிறேன்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •