ஒரு இனிய கருத்தை உங்களிடம் பகிர்வதில் எனக்கு ஆனந்தமே
தந்தை தொலைபேசியில் வெளி நாட்டில் இருக்கும் தன் மகனிடம் தொடர்பு கொண்டு மிகவும் கோபமாக பேசுகிறார்
டேய், நான் உங்கம்மாவை விவாகரத்து செய்யப்போகிறேன்.
ஐயோ, அப்பா என்ன ஆச்சி உங்களுக்கு ஏன் திடீர்னு இந்த முடிவு?
போடா, எனக்கு 50வருசமா அவகூட குடும்பம் நடத்தி வெருத்து போச்சி, அதுவுமில்லாம நீயும் உங்கக்காவும் வெளி நாட்டுக்கு போயிடிங்க... நீங்க போயே 10வருசமாவுது.. இவ்லோ நாளா உங்க அம்மா முகத்தை பாத்து பாத்து வெருத்துட்டேன் அதான் இந்த முடிவு..
வேண்டாம்பா இந்த வயசுல விவாகரத்து பன்றது நல்லா இல்லைப்பா...
போடா நான் விவாகரத்து பன்றது பன்றதுதான்..
ஒரு நிமிசம் இருங்கப்பா நான் அக்காகிட்ட பேசிட்டு சொல்லுறேன்
(அப்பா பட்டென்று தொலைபேசியை துண்டித்துவிடுகிறார்.)
அக்காவிடம் தொலைபேசியில் மிகவும் பதற்றமாக,
அக்கா, அக்கா, அப்பா அம்மாவை விவாகரத்து பன்னபோராராம்.!
டேய் என்னடா சொல்ற?
ஆமாங்கா அவர்தான் சொன்னாரு?
அப்படி எல்லாம் இருக்காது, இரு நான் அப்பாகிட்ட பேசுறேன்.
அக்கா அப்பாவிடம் தொலைபேசியில் பேசுகிறாள்.
அப்பா, தம்பி சொன்னான் நீங்க விவாரத்து பன்னப்போறிங்களாமே?
ஆமாம் அதுக்கென்ன இப்போ?
அதெப்படி பன்னலாம்.. அதெல்லாம் கூடவே கூடாது..
நான் பன்னுவேன் பன்னியே தீருவேன்..
சரி எங்களுக்காக ஒரு நாள் பொருத்துக்கோங்க.. நானும் தம்பியும் நாளைக்கே ஊருக்கு வரோம்..
ம்ம்ம்... பாக்கலாம் பாக்கலாம்
என்று சொல்லி மீண்டும் பட்டென்று தொலைபேசிய கட் செய்து தன் மனைவிடம் சொல்கிறார் இப்படி,
ஏ மங்கலம், நம்ம பையனும் பொண்ணும் நாளைக்கு தீபாவளிக்கு வர்ராங்களாம், அதுவும் அவங்க சொந்த காசுல ஃப்லைட் டிக்கட் வாங்க்கிக்கொண்டு?!
இந்த காலத்துல எல்லோரும் 365 நாளும் பிசி கிடையாதுங்க... நம்ம நேசிக்கிறவங்களுக்காக ஒரு நாள் ஒதுக்கு அவங்க கூட செலவு பன்றதுல ஒன்னும் விட்டுப்போகாதிங்க. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை
Bookmarks