அன்பில்லாத அப்பாவுக்கு
ராமசாமி நிதானமாக சட்டை பாக்கெட்டில் தேடினார், பின்பு டிராயர் பாக்கெட்டில் தேடினார், இடது, வலது, ஆ.... பேப்பர் இருந்தது.
"சார் தோ பேப்பர் இருக்கு"
"யோவ் கீழிச்சிடாம பிரிச்சி படியா"
ஒரு கசங்கிய பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்தார் ராமசாமி.
அன்பில்லாத அப்பாவுக்கு
என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியில, இருந்தாலும் சொல்கிறேன். என் பெயர் மதன், வயசு 15 ஆவுது. என்னை எல்லோரும் உங்களுக்கு பிறந்தவன்னு சொல்றாங்க ஆனால் அதுக்கான அறிகுறிகள் எதுவும் உங்களிடம், என்னிடமும் இல்லை, நல்ல வேலை இல்லை. என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பதுனு தெரியல, சரி நேராவே ஆரம்பிக்கிறேன். என்னை உங்களுக்கு ஏன் பிடிக்கல?, நான் கருப்பா இருக்கேன்னா இல்ல, குள்ளமா இருக்கேன்னா. ஆனா நான் இப்ப தானே இப்படி இருக்கேன், நீங்க என்ன குழந்தையாக இருக்கும் போதே விட்டுட்டு போய்டீகன்னு பாட்டி சொன்னாங்களே. நான் என் சின்ன வயசு போட்டோவை பார்த்தேன் நல்ல கலரா தான் இருக்கேன், அப்புறம் எதுக்கு என்ன விட்டுட்டு போய்டீங்க. நீங்க போனதும் அம்மா ரயில்ல விழுந்து செத்துட்டாங்கலாம் பாட்டி சொன்னாங்க. பாட்டி தான் கஷ்டப்பட்டு என்ன பாத்துக்குது. சரி என்ன ஏன் உங்களுக்கு பிடிக்கல. நான் சின்ன வயசுல ஸ்கூல் போகும் போது என்னுடைய ஸ்கூல் பசங்களின் அப்பாவை பார்ப்பேன் அவங்க எவ்வளவு நல்லா என்கிட்ட பேசுவாங்க தெரியுமா. ஆனா நான் அவங்கிட்ட பேச மாட்டேன். ஏன் தெரியுமா, பேசினா அவங்க கேக்குற இரண்டாவது வார்த்தை "உன் அப்பா என்ன செய்றாருனு தான்" எனக்கு அழுகை வந்துடும் அதனால் அவங்க கூட பேசமாட்டேன். ஆனா ஒளிஞ்சி இருந்து அவர்களை பார்ப்பேன். எல்லாரும் அழகா இருப்பாங்க, அளவான மீசை, பெரிய கண்ணு, பைக் எல்லாம் வச்சினு ரொம்ப அழகா இருப்பாங்க. ஆமா நீங்க எப்படி இருப்பீங்க, பைக்கு வச்சி இருக்கீங்கலா?. என் ஃப்ரேஸ் அவங்க அப்பாவோட தோளை கட்டிபிடிச்சினு தான் பைக்குல போவாங்க, என்னையும் நீங்க ஓரே ஓரு முறை அப்படி கூட்டினு
போறீங்கலா ப்ளீஸ், ஓரே ஒரு முறை போதும். போன மாதம் நடந்த பரீச்சையில நான் பெயில் ஆயிடேன். பாட்டி தான் ரொம்ப அழுதுச்சி, ஆனா திட்டல பாவம் அது தாத்தா இல்லாம தனியா எனக்காக மட்டும் தான் உயிரோட இருக்கேன்னு சொல்லுச்சி. எனக்கு அழுகையா வந்தது. நான் எவ்வளவு முயற்சி செஞ்சாலும் என்னால நல்லா படிக்க முடியில, அம்மா நியாபகமும், அவங்க இறந்ததுக்கு காரணமான உங்க நியாபகமாவே இருக்கு. என்னுடைய மிஸ்ஸு கூட சொல்லுவாங்க
"டேய் மதன் நீ நல்ல படிக்கனும் டா, உன் நிலைமையில் இருக்கறவங்க எல்லாம் நல்ல படிச்சி பெரிய வேலையில் இருக்காங்க. நீயும் அந்த மாதிரி வரனும்" சொல்லுவாங்க.
அவங்களுக்கு என்ன சொல்லிட்டு ஜாலியா போய்டுவாங்க ஏன்னா அவங்களுக்கு அப்பா, அம்மா எல்லாரும் இருக்காங்க. என் கஷ்டம் அவங்களுக்கு புரியாது. எனக்கு உங்களுடைய முகம் கூட நினைவு இல்லை, நான் ஆறுமாச குழந்தையா இருக்கும் போது நீங்க போய்டீங்களா, அதனால் தான் எனக்கு நியாபகம் இல்லை. உங்கள என் வாழ்க்கையில் ஒரே ஒரு வாட்டி பார்த்தால் போதும், உங்க கிட்ட ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லனும். சரி எனக்கு படிப்பு தான் வரலை பாட்டிய வேலை செஞ்சியாவது காப்பாத்தலாம்னு நினைக்கும் போது பாட்டி நேத்து செத்து போச்சி. என் கையில சல்லிகாசு இல்ல பக்கத்து வீட்டு முனுசாமி அண்ணணும் நானும் தான் சைக்கிள் ரிக்ஷால தூக்கினு போய் பாட்டியை பொதச்சோம். எனக்கு என்ன செய்றதுனே தெரியிலை, பசிக்குது, அழுவையா வருது. நீங்க ஏன் என்ன விட்டுட்டு போனீங்க. உங்கள பார்த்தா ஒன்னு கேக்கனும்னு சொன்னேன் இல்ல, அது என்ன தெரியுமா
"தயவு செய்து அடுத்த ஜென்மத்தில் யாருக்கு அப்பனா இருக்காதே"
கடிதத்தின் பின்னாடி : ஒருவேலை யாராவது அப்பானு தேடினு வந்தா இந்த கடிதத்தை அவரிடம் கொடுக்கவும் என்று எழுதி இருந்தது.
ராமசாமி கண்களில் மில்லி மீட்டர் அளவுக்கு கண்ணீர் இருந்தது
"சார் பாவம் சார் பையன்"
இன்ஸ்பேக்டர் "ஆமாயா சின்ன வயசு பையன்" என்றார். அதற்க்குள் இன்னொறு காவலாளி கத்தியுடன் வந்தான்
இன்ஸ்பேக்டர் "யோவ் கத்தி வாயினு வர இவ்வளவு நேரமா, போயா போய் கயிற அறுத்து பாடிய கீழே இறக்கு"
Bookmarks