Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: அன்பில்லாத அப்பாவுக்கு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    அன்பில்லாத அப்பாவுக்கு

    அன்பில்லாத அப்பாவுக்கு

    ராமசாமி நிதானமாக சட்டை பாக்கெட்டில் தேடினார், பின்பு டிராயர் பாக்கெட்டில் தேடினார், இடது, வலது, ஆ.... பேப்பர் இருந்தது.

    "சார் தோ பேப்பர் இருக்கு"

    "யோவ் கீழிச்சிடாம பிரிச்சி படியா"

    ஒரு கசங்கிய பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்தார் ராமசாமி.

    அன்பில்லாத அப்பாவுக்கு
    என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியில, இருந்தாலும் சொல்கிறேன். என் பெயர் மதன், வயசு 15 ஆவுது. என்னை எல்லோரும் உங்களுக்கு பிறந்தவன்னு சொல்றாங்க ஆனால் அதுக்கான அறிகுறிகள் எதுவும் உங்களிடம், என்னிடமும் இல்லை, நல்ல வேலை இல்லை. என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பதுனு தெரியல, சரி நேராவே ஆரம்பிக்கிறேன். என்னை உங்களுக்கு ஏன் பிடிக்கல?, நான் கருப்பா இருக்கேன்னா இல்ல, குள்ளமா இருக்கேன்னா. ஆனா நான் இப்ப தானே இப்படி இருக்கேன், நீங்க என்ன குழந்தையாக இருக்கும் போதே விட்டுட்டு போய்டீகன்னு பாட்டி சொன்னாங்களே. நான் என் சின்ன வயசு போட்டோவை பார்த்தேன் நல்ல கலரா தான் இருக்கேன், அப்புறம் எதுக்கு என்ன விட்டுட்டு போய்டீங்க. நீங்க போனதும் அம்மா ரயில்ல விழுந்து செத்துட்டாங்கலாம் பாட்டி சொன்னாங்க. பாட்டி தான் கஷ்டப்பட்டு என்ன பாத்துக்குது. சரி என்ன ஏன் உங்களுக்கு பிடிக்கல. நான் சின்ன வயசுல ஸ்கூல் போகும் போது என்னுடைய ஸ்கூல் பசங்களின் அப்பாவை பார்ப்பேன் அவங்க எவ்வளவு நல்லா என்கிட்ட பேசுவாங்க தெரியுமா. ஆனா நான் அவங்கிட்ட பேச மாட்டேன். ஏன் தெரியுமா, பேசினா அவங்க கேக்குற இரண்டாவது வார்த்தை "உன் அப்பா என்ன செய்றாருனு தான்" எனக்கு அழுகை வந்துடும் அதனால் அவங்க கூட பேசமாட்டேன். ஆனா ஒளிஞ்சி இருந்து அவர்களை பார்ப்பேன். எல்லாரும் அழகா இருப்பாங்க, அளவான மீசை, பெரிய கண்ணு, பைக் எல்லாம் வச்சினு ரொம்ப அழகா இருப்பாங்க. ஆமா நீங்க எப்படி இருப்பீங்க, பைக்கு வச்சி இருக்கீங்கலா?. என் ஃப்ரேஸ் அவங்க அப்பாவோட தோளை கட்டிபிடிச்சினு தான் பைக்குல போவாங்க, என்னையும் நீங்க ஓரே ஓரு முறை அப்படி கூட்டினு
    போறீங்கலா ப்ளீஸ், ஓரே ஒரு முறை போதும். போன மாதம் நடந்த பரீச்சையில நான் பெயில் ஆயிடேன். பாட்டி தான் ரொம்ப அழுதுச்சி, ஆனா திட்டல பாவம் அது தாத்தா இல்லாம தனியா எனக்காக மட்டும் தான் உயிரோட இருக்கேன்னு சொல்லுச்சி. எனக்கு அழுகையா வந்தது. நான் எவ்வளவு முயற்சி செஞ்சாலும் என்னால நல்லா படிக்க முடியில, அம்மா நியாபகமும், அவங்க இறந்ததுக்கு காரணமான உங்க நியாபகமாவே இருக்கு. என்னுடைய மிஸ்ஸு கூட சொல்லுவாங்க

    "டேய் மதன் நீ நல்ல படிக்கனும் டா, உன் நிலைமையில் இருக்கறவங்க எல்லாம் நல்ல படிச்சி பெரிய வேலையில் இருக்காங்க. நீயும் அந்த மாதிரி வரனும்" சொல்லுவாங்க.

    அவங்களுக்கு என்ன சொல்லிட்டு ஜாலியா போய்டுவாங்க ஏன்னா அவங்களுக்கு அப்பா, அம்மா எல்லாரும் இருக்காங்க. என் கஷ்டம் அவங்களுக்கு புரியாது. எனக்கு உங்களுடைய முகம் கூட நினைவு இல்லை, நான் ஆறுமாச குழந்தையா இருக்கும் போது நீங்க போய்டீங்களா, அதனால் தான் எனக்கு நியாபகம் இல்லை. உங்கள என் வாழ்க்கையில் ஒரே ஒரு வாட்டி பார்த்தால் போதும், உங்க கிட்ட ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லனும். சரி எனக்கு படிப்பு தான் வரலை பாட்டிய வேலை செஞ்சியாவது காப்பாத்தலாம்னு நினைக்கும் போது பாட்டி நேத்து செத்து போச்சி. என் கையில சல்லிகாசு இல்ல பக்கத்து வீட்டு முனுசாமி அண்ணணும் நானும் தான் சைக்கிள் ரிக்ஷால தூக்கினு போய் பாட்டியை பொதச்சோம். எனக்கு என்ன செய்றதுனே தெரியிலை, பசிக்குது, அழுவையா வருது. நீங்க ஏன் என்ன விட்டுட்டு போனீங்க. உங்கள பார்த்தா ஒன்னு கேக்கனும்னு சொன்னேன் இல்ல, அது என்ன தெரியுமா

    "தயவு செய்து அடுத்த ஜென்மத்தில் யாருக்கு அப்பனா இருக்காதே"


    கடிதத்தின் பின்னாடி : ஒருவேலை யாராவது அப்பானு தேடினு வந்தா இந்த கடிதத்தை அவரிடம் கொடுக்கவும் என்று எழுதி இருந்தது.


    ராமசாமி கண்களில் மில்லி மீட்டர் அளவுக்கு கண்ணீர் இருந்தது

    "சார் பாவம் சார் பையன்"

    இன்ஸ்பேக்டர் "ஆமாயா சின்ன வயசு பையன்" என்றார். அதற்க்குள் இன்னொறு காவலாளி கத்தியுடன் வந்தான்

    இன்ஸ்பேக்டர் "யோவ் கத்தி வாயினு வர இவ்வளவு நேரமா, போயா போய் கயிற அறுத்து பாடிய கீழே இறக்கு"
    Last edited by ரங்கராஜன்; 20-11-2008 at 02:20 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    முதலில் படிக்க ஆரம்பிக்கும் போது சற்று நெருடியது... பின் தான் உறைத்தது. சில விஷயங்கள் வாழ்வின் போக்கையே மாற்றிவிடும். பாட்டி இறந்தபின் மதன் எடுத்த முடிவு மனதை கனத்தது.

    நல்ல கதை மூர்த்தி

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    ரொம்பவும் நெகிழ்ச்சியான கதை

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நன்றி மதி, அருண்
    உங்களின் விமர்சனத்துக்கு நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நெகிழ வைத்த கதை. யாருமில்லாத உலகில் ஒரு 15 வயது பையன் வாழ்வது உண்மையாகவே ஒரு போராட்டமாகத்தானிருக்கும். அவன் முடிவை நினைத்து வேதனையாக இருக்கிறது. பாராட்டுக்கள் மூர்த்தி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    9,024
    Downloads
    4
    Uploads
    0
    கண் கலங்கியது

    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
    பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ரொம்ப நல்லாருக்கு மூர்த்தி வாழ்த்துக்கள். ஆனா இடையில எழுத்துப்பிழைகள் இடறுகிறது. நல்ல சாப்பாட்ட ருசிச்சு சாப்பிடும் போது கல் கடிபட்டா எப்படியிருக்கும் அப்படி தெரிகிறது. கொஞ்சம் எழுத்துப்பிழை களையுங்கள்.
    "தயவு செய்து அடுத்த ஜென்மத்தில் யாருக்கு அப்பனா இருக்காதே"
    கடிதத்தில் அதுவரை இருந்த நடைபோய் சற்று மேதாவித்தனமாக எழுதியது போல் பட்டது. அதே நடையில் இருந்தால் நன்றாக இருக்கும் இது எனக்குத் தோன்றியது.
    வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by செல்வா View Post
    ரொம்ப நல்லாருக்கு மூர்த்தி வாழ்த்துக்கள். ஆனா இடையில எழுத்துப்பிழைகள் இடறுகிறது. நல்ல சாப்பாட்ட ருசிச்சு சாப்பிடும் போது கல் கடிபட்டா எப்படியிருக்கும் அப்படி தெரிகிறது. கொஞ்சம் எழுத்துப்பிழை களையுங்கள்.

    கடிதத்தில் அதுவரை இருந்த நடைபோய் சற்று மேதாவித்தனமாக எழுதியது போல் பட்டது. அதே நடையில் இருந்தால் நன்றாக இருக்கும் இது எனக்குத் தோன்றியது.
    வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.
    நன்றி செல்வா
    எழுத்து பிழைகளை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன். நீங்கள் கூறுவது உண்மை தான் மதன் அதுவரை மரியாதையாக தான் பேசி வந்தான். அந்த கடைசி வரி அவனின் எல்லா கோபங்களும் வெளிப்படுது, சாகும் ஒருவன், அந்த சாவுக்கு காரணமாக இருப்பவனுக்கு ஏன் மரியாதை தர வேண்டும். அதுவும் 15 வயது பையன். இது என்னுடைய கருத்து மட்டுமே. நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by murthyd99 View Post
    எழுத்து பிழைகளை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன்.
    ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் மன்றில் அனைவரும் உதவுவர்.
    நீங்கள் கூறுவது உண்மை தான் மதன் அதுவரை மரியாதையாக தான் பேசி வந்தான். அந்த கடைசி வரி அவனின் எல்லா கோபங்களும் வெளிப்படுது, சாகும் ஒருவன், அந்த சாவுக்கு காரணமாக இருப்பவனுக்கு ஏன் மரியாதை தர வேண்டும். அதுவும் 15 வயது பையன். இது என்னுடைய கருத்து மட்டுமே. நன்றி
    ஓ... காரணத்தோடு தான் அவ்வாறு இருக்கிறது என்றால் சரி. நான் நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்களோ என நினைத்தேன்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் MURALINITHISH's Avatar
    Join Date
    21 Mar 2008
    Posts
    161
    Post Thanks / Like
    iCash Credits
    25,471
    Downloads
    1
    Uploads
    0
    இது போல் எத்தனையோ தகப்பன்கள் உலகில் உண்டு ஒரு குழந்தையின் வலியில் வந்த வார்த்தை அது வலியின் உச்சம்
    அனைவரையும் நேசிப்போம்
    அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை



  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    ஏனோ தெரியலை மூர்த்தி.. இதுவரை படிச்ச உங்க கதையில இந்த கதை ரொம்பவே வலியை கொடுக்குது..!! பக்குவபட்ட மனிதன் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுவதற்க்கும் குழந்தைகள் வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதற்க்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது.. அதில் அவர்களுக்கு இருக்கும் வலி, இயலாமை, ஏக்கம் என்று எல்லாவற்றையும் கடிதத்தில் அப்படியே வெளிபடுத்தி இருகிறீர்கள்..!! தற்கொலை என்பது அத்தனை எளிதான விசயமல்ல.. அதையே அவன் செய்கிறான் என்றால் எந்த அளவுக்கு அந்த உள்ளம் உடைந்து போயிருக்கும் என்பதை உணரமுடிகிறது..!! கடமை தவறும் கயவர்களுக்கு நல்லதொரு சவுக்கடியாய் கடிதத்தின் கடைசி வரிகள்..!!

    வாழ்த்துக்கள் மூர்த்தி..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •