Originally Posted by
murthyd99
[COLOR="Red"]
சித்தகிரி
கொடைக்கானல், இந்த பெயரை கேட்டாலே உடம்பு குளிரும், சுவாசக் குழாயில் யூக்கலிப்டர்ஸ் மர வாசனை நிரம்பும், கண்கள் ஜீல்லிடும், மனது அமைதியாக ஒரு நிலைப்படும். இந்த எல்லா உணர்ச்சியும் கொடைக்கானலை ஏற்கனவே பார்த்தவர்களுக்கு மட்டும் தான். இதுவரை அதை பார்த்திராதவர்களுக்கு அது வேறு மலைப் பிரதேசம் அவ்வளவே. வாசு முதல் முறையாக அங்கு செல்கிறான் அதுவும் தனியாக டிசம்பர் மாசத்தில், நண்பர்களின் யோசனைப் படி தான் இங்கு வந்தான். அவன் கொடைக்கானலை சுற்றி பார்க்க ஒரு பிரைவேட் வேனில் பல பயணிகளுடன் இவனும் சென்றான், அவன் கூட வேனில் பெரும்பாலும் வயதானவர்கள்,வெளிநாட்டு சுற்றுலாவாசிகள், வேன் புறப்பட்டது. லேசாக மழைத் தூரல் போட்டுக் கொண்டே இருந்தது. வாசுவுக்கு ஜன்னல் ஓர இடம் கிடைத்தது. வாசு அங்குள்ள காட்சிகளை வெகுவாக ரசித்த படி வந்தான். கையிடு ஒவ்வொரு தளமாக விளக்கிக் கொண்டே வந்தான். இருநூறு வருடமாக இருக்கும் சர்ச்சு, ஐநூறு வருடம் வயதான மரம் என்று பல. வேன் ரோட்டின் ஓரமாக நின்றது, முன்னாடி உக்கார்ந்து இருந்த கையிடு எழுந்து பயணிகளிடம் திரும்பினான்,
"சார் அதோ தெரியுது பாருங்க அந்த மலைப் பேரு மதிக்கெட்டாஞ்சோலை, அந்த மலை ஒரு ரிசர்வ்டு ஏரியா, அங்க நிறைய விதமான அதிசயங்கள் இருக்கு. மூலிகைகள், அதிசய விலங்குகள், பறவைகள்ன்னு நிறைய இருக்கு. அங்கே இதுவரைப் போன மனிதர்கள் திரும்ப வந்ததே கிடையாது, காரணம் என்னனு ஒழுங்கா தெரியல, சிலப்பேர் விலங்குகள் கொன்று விடும் சொல்றாங்க. மீதிப் பேர் அங்கே போன மனம் கெட்டு அங்கேயே இருக்க தோணும்னு சொல்றாங்க, அதனால தான் இந்த இடத்துக்கு மதி+கெட்டான்+சோலையினு பேர் வச்சி இருக்காங்க, இப்போ இது ரிசர்வ்டு ஏரியா" என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தான் அந்த கையிடு.
பயணிங்கள் அனைவரும் அந்த வேனைவிட்டு கீழே இறங்கிச் சென்று கொஞ்ச தூரத்தில் இருந்த மலையை பார்த்தனர். வாசுவும் இறங்கி பார்த்தான், அந்த மலை ஒய்யாரமாக நின்று இருந்தது, அதில் இருந்து வினோதமான சத்தங்களும், மூலிகையின் வாசனையும் வந்தது. அனைவருக்கும் அந்த மலையை பார்க்க கொஞ்சம் திகிலாக தான் இருந்தது. வாசுவுக்கு மட்டும் அந்த திகில் ஆர்வமாக மாறியது. அந்த மலைக்கு போக வேண்டும் என்று தான் இவன் வெளிநாட்டில் இருந்து வந்தான். கையிடிடம் காசைக் கொடுத்து விட்டு பாதியிலே இறங்கிக் கொண்டான். வேன் புறப்பட்டது. யாருமே அங்கு இல்லை. இவன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கு இருந்த வேலியை தாண்டி உள்ளே சென்றான். வாசு ஒரு ஓர்னித்தாலஜீஸ்ட் (பறவைகளை ஆராய்பவன்) வயது 30, இவன் ஒரு வித்தியாசமானவன், விதிவிலக்கானவன் எல்லாரையும் ஒப்பிடும் பொழுது இவன் சில விஷயங்களின் தனியாக தெரிவான். அப்படி எடுக்கப்பட்டது தான் இந்த படிப்பும், இப்போ டீஸ்கவரி சானலில் வேலையில் இருக்கான், இந்த மதிக்கெட்டாஞ்சோலையைப் பற்றி ஒரு ஆங்கில புத்தகத்தில் படித்து, அங்குள்ள பறவைகளை பற்றி ஒரு டாக்குமேண்டரி எடுக்க விரும்பி, தமிழன் என்பதனால் இவனை அனுப்பி இருக்கிறார் இவனுடைய பாஸ். காலை 10.00, வாசு அந்த மலைகாட்டுக்குள் சென்றான். அங்கு பல விதமான சத்தங்கள் பூச்சியில் இருந்து புலி வரை அனைத்து சத்தமும் கேட்டது. வாசுவுக்கு இது சத்தம் எல்லாம் பழக்கம் தான் ஏனென்றால் இவன் பத்து வருடமாக காட்டிலே தான் அலைந்துக் கொண்டு இருக்கிறான். தன்னுடைய பையில் இருந்த சவுண்டு ரெக்கார்டர் எடுத்து காட்டில் கேக்கும் சத்தங்களை பதிவு செய்துக் கொண்டே நடந்தான். பல நூறு வருஷம் வயதுள்ள மரங்கள், பல விதமான பறவைகள், தேங்காய் அளவு பெரிய பூச்சிகள் என்று பல விதமான உயிரினங்களை பார்த்தான். மலையின் நடுவே வந்து விட்டான். அங்கே இருந்த ஒரு பெரிய மரத்தில் இருந்து வயதான மனிதன் கீழே வாசுவை நோக்கி குதித்தான். வாசு தடுமாறிய படி கீழே விழுந்தான். பயத்துடன் அந்த முதியவரை பார்த்தான், முகத்தில் கண்கள் மட்டும் தான் தெரிந்தது மீதி அனைத்தும் முடிகளால் மறைந்து இருந்தது, அதுவும் வெள்ளை நிறத்தில். முழு நிர்வாணமாக இருந்தார், எதாவது காட்டுவாசியாக இருக்குமோ என்று வாசு நினைத்த சமயத்தில், அந்த முதியவர் சுத்த தமிழில்
"யாரைக் கேட்டு என் சித்தகிரிக்குள் வந்தாய்" என்றார் கண்களை உருட்டியபடியே......
Bookmarks