Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: பார்வைகள் பலவிதம்

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    பார்வைகள் பலவிதம்

    தம்பியின் கல்லூரிக்கட்டணம் கட்ட வேண்டும். இங்கிருந்து இரண்டரை மணி நேர பேருந்து பயணம். வீட்டுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம். அதிகம் காக்க வைக்காமல் பேருந்தும் வந்துவிட்டது, அந்த வெயிலுக்கு ஆறுதலாக இருந்தது.

    வேறு யாரும் அந்த நிறுத்தத்தில் ஏறாதது, எப்படியும் இருக்கை கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்படுத்தியது. எதிர்பார்த்ததை போல இருக்கை கிடைத்தாலும், அந்த ஒரு இருக்கை மட்டுமே இருந்தது. ஜன்னலோரம் ஒருவர் அமர்ந்திருக்க, மற்ற இருக்கை காலியாக இருந்தது.

    சென்று அமர்ந்தேன். பக்கத்திலிருந்தவனின் பார்வையே சரியில்லை. பார்க்கவும் நாகரீகமில்லாதவனாக இருந்தான். கைப்பையில் வைத்திருந்த ஐம்பதாயிரத்தை இறுக்கமாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, அவன் பக்கம் முகம் திருப்பாமல் அமர்ந்துகொண்டேன். அவனோ என்னையே முறைத்துக்கொண்டிருந்தான்.

    சாதாரணமாக பேருந்தில் அமர்ந்த சற்று நேரத்துக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கமுள்ளவன் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருந்தேன். அவன் அடிக்கடி சட்டைக்குள் கையை நுழைப்பதும், எடுப்பதுமாய் இருந்தான். அடிக்கொருமுறை பின்னால் திரும்பிப்பார்த்து யாருக்கோ சைகை செய்து கொண்டிருந்தான்.

    கைப்பையைக் கவனமாக இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். ஒருவழியாய் கடைசி நிறுத்தம் வந்தது. நான் எழுவதற்குள் அவசரமாய் எழுந்து என்னைத் தாண்டிக் கொண்டு அவன் இறங்கியதும் திடுக்கென்றிருந்தது. அச்சத்தோடு கைப்பையைப் பார்த்தேன். தோலிருக்க சுளை முழுங்குவதைப்போல பிளேட் போட்டு உள்ளிருக்கும் பணம் உருவப்படுவதை அறிந்திருக்கிறேன்.

    ஆனால் பணம் பத்திரமாக இருந்தது. இறங்கி நடந்தவன் சற்று தூரத்தில் என் பக்கத்து இருக்கைக்காரன், தன் நன்பனிடம்,

    “டே சொடல...இன்னிக்கு நான் பயந்தே போயிட்டேண்டா. என் பக்கத்துல உக்காந்தவன் முளிச்ச முளியே சரியில்ல. பணத்தை சட்டைக்குள்ல வெச்சுக்கிட்டேன். இப்பல்லாம் களவாணிப் பசங்க டிப் டாப்பா வரானுங்க. நல்ல வேளை நான் அடிக்கடி உன்னை திரும்பிப்பாத்து சைகை செஞ்சதுல நான் தனியா இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டு ஒன்னும் செய்யல. இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது. நாமதான் சாக்கிரதையா இருந்துக்கனும்...”

    சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    மனிதர்களின் ஜாக்கிரதை காரணமாக எழும் சந்தேகத்தை தூக்கிப்பிடித்துள்ளீர்கள்....... பாராட்டுகள்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி மூர்த்தி. இன்றைய சூழலில் எந்த புது மனிதரையும் இப்படியான கண்ணோட்டத்தில்தான் நிறையபேர் பார்க்கிறார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஹா..ஹா.. நல்ல கதை..
    இதே சந்தேகம் தான் எனக்கும்.. சிலரை நாம் சந்தேகப்படறோம். ஆனா அவங்க நம்மளையும் சந்தேகப்படலாமில்லையானு..? அதை கதை வடிவில் சொன்ன சிவா அண்ணனுக்கு பாராட்டுக்கள்.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சும்மா இன்னைக்கு, எங்க அலுவலக பஸ்ல வந்தப்ப, திடீர்ன்னு தோணுச்சி. சரின்னு எழுதிட்டேன். ஆனா...ஊர்ல எனக்கும் கிட்டத்தட்ட இந்த மாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கு.

    நன்றி மதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இது சாதாரணமாக எல்லாருக்கும் நடப்பதுதான்.
    தினமும் எமை அடையும் களவுச் செய்திகளால் நாம் கலவரப்பட, எமது கலவரம் மற்றவருக்கு கலவரத்தைக் கொடுக்க..

    எனக்கு முன்னுக்கு மூணு பேரு.. கதையிலும் மூணு பேரு..

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    எனக்கு முன்னுக்கு மூணு பேரு.. கதையிலும் மூணு பேரு..
    முன்னுக்கு மூணு பேருக்கும் இதே பிரச்சனையா...??அங்கும் உண்டா அமரன் இந்தவகை சந்தேகப் பார்வைகள்?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    எதனையும் நம்பி விடுவது எத்துணை தவறோ
    எல்லாவற்றையும் சந்தேகப் படுவதும் அத்துணை தவறே..!!

    நம்பவேண்டியவற்றை நம்பவும்,
    சந்தேகமானவற்றைச் சந்தேகிக்கவும்
    பட்டறிந்த அனுபவ அறிவு முக்கியம்..!!

    அந்த அனுபவ அறிவு இல்லையெனின்
    இந்தக் கதை போன்ற பல நிகழ்வுகள் அரங்கேறும்..!!

    நல்லதோர் கதைக்கு என் மனதார்ந்த வாழ்த்துக்கள் சிவா..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    எதனையும் நம்பி விடுவது எத்துணை தவறோ
    எல்லாவற்றையும் சந்தேகப் படுவதும் அத்துணை தவறே..!!
    மிக மிக உண்மையான கருத்து ஓவியன். அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    எல்லோரும் பணம் வைத்திருந்ததே இதற்கு காரணம் :-)

    மடியில் கனமிருப்பதாலேயே இந்த 'வழிப்பறிப்' பயம் வந்திருக்க வேண்டும்.

    பாராட்டுகள் சிவா..சின்ன மையக்கருத்து வைத்து ஒரு சிறுகதை தந்தமைக்கு..





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னால...

    மின்னுவதெல்லாம் பொன்னல்ல அப்படிங்கற பழமொழியை

    பொன்னும் மின்னும் அப்படின்னு ஒரு கதையில சாடி இருந்தேன். இதே மாதிரி பஸ். ஒரு மாணவன். ஒரு டிப் டாப் மனிதர்.. மாணவனின் பயம்.. இப்படி கதை போகும்..

    கடைசியா இந்தப் பயத்தில் மாணவன் சர்டிஃபிகேட்ஸைத் தொலைச்சிட்டு பணத்தை மட்டும் இறுகப்பிடிச்சுகிட்டு கல்லூரி வந்து உள்ளே போகும்போது

    அந்த டிப்டாப் மனிதர் புரஃபஸர்னு தெரியும்.. அவர் சர்டிஃபிகேட்டை கூப்பிட்டுக் கொடுப்பார்.

    ம்ம் இத்தனை வருஷம் கழிச்சு அதை ஞாபகப் படுத்திட்டீங்க..

    மின்னுவதெல்லாம் பொன்னல்லதான்.. ஆனால் பொன்னும் வைரமும் மின்னத்தானேச் செய்யும் (அந்தக் கதை முடிவு வார்த்தைகள்)


    நமக்குள் இருக்கும் அந்த பய உணர்வு விழிப்பதில்தான் நாம் தூங்கி விடுகிறோம்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் இறைநேசன்'s Avatar
    Join Date
    14 Apr 2008
    Location
    CHENNAI
    Posts
    423
    Post Thanks / Like
    iCash Credits
    9,516
    Downloads
    3
    Uploads
    0
    மிகவும் அருமையான கருத்துள்ள சிறுகதை!

    ஒவ்வொருவரும் தாம் பிறரை பற்றி என்ன நினைக்கிறோம் என்பதோடு பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் சற்று அறிந்துகொள்வது நல்லது!

    பகிர்ந்தமைக்கு நன்றி!
    அன்புடன்
    இறைநேசன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •