அன்பைக்குழைத்து அமுதூட்டி
அறிவைப்பெற்று வாழ்ந்திடவே
கண் இமைபோல் இருந்து காத்தவரே என்
கருவுக்குயிர் தந்த தந்தையரே
பண்பாய் உலகில் வாழ்ந்திடவே
பகர்ந்த வார்த்தை நான் அறிவேன்
எண்பது ஆண்டுகள் வாழ்வீர் என
இருந்தேன் நானும் எண்ணமுடன்
புலம் பெயரும் வேளைதனில் உம்
உடல் நிலை கண்டு தளம்பலுற்றேன்
உள்ளமதில் உறுதி விதை விதைத்து
வளமாய் வாழ அனுப்பி வைத்தீர்
என் எண்ணம் எல்லாம் நிறைவேறி
தலை நிமிரும் வேளையிலே
நெஞ்சில் இடியாய் துயர்வந்து
எந்தன் இதயம் இங்கு அழுகிறது
சட்டம் என்கின்ற வரையறைக்கு
தந்தை மகன் உறவு புரியாது
கடசியாய் ஒருமுறை உம் பூமுகம் பாராது
ஏங்கித்தவிக்கிறேன் உமக்கு புரியாதோ?
தவிக்கும் அன்னை தலை வருடி
ஆறுதல் கூற நானும் அருகில் இல்லை
புரிந்தும் உமக்கு ஏன் இந்த அவசரமோ
கடவுள் வகுத்த விதிதான் இதுவோ
நீர்பட்ட கஸ்ரம் அத்தனைவும்
எனது வாழ்வின் உரம் காணீர்
பொங்கும் கடலின் ஓசையிலே
புரிவோம் உங்கள் ஆசியினை
Bookmarks