Results 1 to 7 of 7

Thread: என் தந்தை நினைவாக

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0

    என் தந்தை நினைவாக

    அன்பைக்குழைத்து அமுதூட்டி
    அறிவைப்பெற்று வாழ்ந்திடவே
    கண் இமைபோல் இருந்து காத்தவரே என்
    கருவுக்குயிர் தந்த தந்தையரே

    பண்பாய் உலகில் வாழ்ந்திடவே
    பகர்ந்த வார்த்தை நான் அறிவேன்
    எண்பது ஆண்டுகள் வாழ்வீர் என
    இருந்தேன் நானும் எண்ணமுடன்

    புலம் பெயரும் வேளைதனில் உம்
    உடல் நிலை கண்டு தளம்பலுற்றேன்
    உள்ளமதில் உறுதி விதை விதைத்து
    வளமாய் வாழ அனுப்பி வைத்தீர்

    என் எண்ணம் எல்லாம் நிறைவேறி
    தலை நிமிரும் வேளையிலே
    நெஞ்சில் இடியாய் துயர்வந்து
    எந்தன் இதயம் இங்கு அழுகிறது

    சட்டம் என்கின்ற வரையறைக்கு
    தந்தை மகன் உறவு புரியாது
    கடசியாய் ஒருமுறை உம் பூமுகம் பாராது
    ஏங்கித்தவிக்கிறேன் உமக்கு புரியாதோ?

    தவிக்கும் அன்னை தலை வருடி
    ஆறுதல் கூற நானும் அருகில் இல்லை
    புரிந்தும் உமக்கு ஏன் இந்த அவசரமோ
    கடவுள் வகுத்த விதிதான் இதுவோ

    நீர்பட்ட கஸ்ரம் அத்தனைவும்
    எனது வாழ்வின் உரம் காணீர்
    பொங்கும் கடலின் ஓசையிலே
    புரிவோம் உங்கள் ஆசியினை

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    தந்தைகள் எப்பொழுதும் இரண்டாம் கட்ட நிலையிலேயே வைக்கப்பட்டு வருகின்றனர். அதை கொஞ்சமேனும் அசைத்துக் காட்டுகிறது உங்கள் கவிதை. சபாஷ். தந்தை-மகன் உறவும் அலாதியானதுதான்.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இழப்புக்கள் கொடுமையானது,
    அதிலும் இந்த இழப்பு ஈடு செய்யவே முடியாதது....

    உங்கள் வருத்தத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன் அகத்தியன்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by இலக்கியன் View Post
    தவிக்கும் அன்னை தலை வருடி
    ஆறுதல் கூற நானும் அருகில் இல்லை
    புரிந்தும் உமக்கு ஏன் இந்த அவசரமோ
    கடவுள் வகுத்த விதிதான் இதுவோ
    கண்களை பனிக்கச்செய்து விட்டீர்கள் இலக்கியரே....
    உண்மையில் நம்மவர் துயர் எப்போதுதான் தீர்ந்து,
    இவ்வாரான பிரிவுத்துயர்கள் தீருமோ????
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்பு இலக்கியன்,

    உங்கள் துயரத்தில் எங்களையும் பங்கெடுக்கவைத்த கவிதை..

    பிள்ளைகளை உள்நெஞ்சில் சுமக்கும் தந்தையர்க்கு இக்கவிதை அர்ப்பணம்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் தமிழ்தாசன்'s Avatar
    Join Date
    30 Oct 2008
    Posts
    492
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    7
    Uploads
    1
    தந்தையர் உள்ளம் அவரவருக்குத்தான் தெரியும்.
    அவர் கஸ்டங்களை உள்ளத்தில் பூட்டிவைப்பார்.
    பனிக்கும் அவர் கண்கள் பார்க்கும் போதும் முழுவதும் தெரியாது அதன் உள் அர்த்தம்.

    இழப்புக்கள் ஈடு செய்ய முடியாததே!

    ஆனாலும் அதை எண்ணி வருந்தும் தொடர் நிலையில் உள்ளம் சோராது அவர் விட்ட நற்பாதைப் பயணம் தொடருவோம் உறதின் வழியில்.

    நல்ல தந்தையர்க்கு சமர்பித்த கவிதை, மனதில் அப்பா! என்ற ஏக்கத்தை விதைக்குது.
    அம்மா, அப்பா அவர்களின் பாதம் முத்தமிடும் உயிர்ப்பாசம் உலகில் எங்கும் கிடைக்காதது.
    வயது முதிர்ந்ததும் அவர்களும் குழந்தைகளே! அவர்களை முன் நாம் எப்படியோ எல்லாம் கஸ்டப்படுத்தியிருந்தாலும். இப்போ குழந்தைகளான அவர்களை உச்சிமோர்ந்து முத்தமிட்டு பணிசெய்வோம். அது கிடைத்தற்கரியது. கிடைத்தும் செய்யாதிருப்பது வேதனைக்குரியது.

    உங்கள் கவிதைக்கு பாராட்டுதலும்,
    உங்கள் ஏக்கத்திற்கு ஆறுதலும், கூறும் அதேவேளை
    உங்கள் பகிர்வும், மன்றம் தந்த பங்கும்,
    மனதில் மறக்க முடியாதது.

    அம்மா, அப்பா வாழும் காலத்தில், அவர்க்கான நம் பணிகளை, அதிமுயற்சித்து கூடியவரை செய்வோம்.

    சூழல்களின் தடுப்புக்கள் வேதனைக்குரியது.
    இன்னும் எழுத மனம் தூண்டுகிறது.

    அனைவர்க்கும் உள்ளத்தில் உள்ளதை ஏன் எழுதுவான்.
    அவரவர் அதைச் சரியாகவே செய்வோம் என நம்புகிறேன்.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    புலம்பெயர்ந்த அகதிநிலை வாழ்வின் கட்டுகள்,
    இழப்புக்களானாலும் அவிழ்வதில்லை.

    இன்பநிகழ்வுகளில் நம்மை நாமே தேற்றிக்கொண்டாலும்,
    துன்பநிகழ்வுகள் நம்மைத் தேற விடுவதில்லை.

    நாடுமற்று, நாட்டுரிமையுமற்று
    வாழும் எம், அவதி நிலை என்றுதான் தீருமோ...

    உங்கள் தந்தையின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு,
    உங்களுக்கு என் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    தந்தையின் கனவுகளுக்கு உயிர்கொடுத்து,
    அவர் ஆத்மாவை மகிழ்வியுங்கள்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •