ஆழியின் ஆழத்தில்
ஆரவாரமின்றி
அடங்கியிருந்தாலும்
சிப்பித் திறப்பில் வெளிப்படும்
மதிப்பிலா முத்தைப்போல...
தலைப்பொன்றைத் தந்ததும்
ஆதியின் ஆழத்தின்
நித்திலக் கருத்துகள்
வித்தாய் விழுந்தனவே...
சமாதானம் பேசினாலும்
சனாதான தர்மமறியாமல்
வீணாய் தினம்
நானாவித குற்றமிழைக்கும்
நாமாகத் திருந்துவோமென
நயமாக உரைத்த கவியே வாழ்க...!
நம்மிடம் கெட்டதையும்
பிறரிடம் நல்லதையும்
பார்க்கச் சொன்ன ஆதியே...
என்னே உந்தன் நீதியே...
உலக அமைதிக் காண
கலகம் தவிரென்று சொல்லி
காணும் அத்தனைப் புறாக்களின்
அலகிலும் சமாதான இலை செருகாமல்..
உலகில் உள்ளோரனைவரும்
சமாதான மரம் வளர்ப்போம்
அதன் சகோதர நிழல்
அனைவருக்கும் கொடுப்போம்
என சத்து மிகுந்த வித்தாய்
வீரிய வரிகளை விதைத்த
ஆதிக்கு அன்பான வாழ்த்துகள்!!
*****************
ஆதிக்கு அடுத்த கவியாய்
அரங்கத்துக்கழைக்கபடுபவர்.......
பாறையைப் பிளக்கும்
பாரையின் ஒலியிலும்
பண்பாடும் பைந்தமிழ் வித்தகர்..
வென்பாவெனும் நன்பாவை
விரல் நுனியில் விதைப்பவர்
குறள் போல இரு வரியில் தன்
குரல் பதித்த சிந்தனையாளர்
கவி பாடுதல்லாமல்
கவிகள் பாட, கவிதை
கற்றுக்கொடுக்கும் கலைஞன்...
ஆதவாவெனும் அற்புதக் கவிஞனை
பாடவாவென அன்புடன் அழைக்கிறேன்
கவியரங்க மேடையில் கவிபாட வா ஆதவா...!!!
Bookmarks