ஒரு வயலில் தீப்பிடித்து கொண்டது. தீயணைப்பு துறை வந்து அந்த தீயை அணைக்க முயன்றது. தீ முற்றிலும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால், ஒரு தீயணைப்பு வண்டியினால் அந்த தீ பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.
கிராமத்தில் இருக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்’ தீயணைப்பு வண்டியை அழைத்து தீயை கட்டுப்படுத்தலாம் என்று கட்டதுரை ஒரு ஆலோசனை கூறியதும் , அனைவரும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர். இருந்தாலும் வேறு வழி இல்லை. வ.வா.ச பொது சேவை தீயணைப்பு வண்டிக்கு போன் செய்து வரவழைத்தனர்.
கைப்புள்ளயின் தீயணைப்பு வண்டி ஸ்பாட்டுக்கு வந்து நேராக அந்த தீ பற்றி கொழுந்து விட்டு எரியும் வயல் வெளியின் நடுவில் சென்றது. அனைவருக்கும் ஆச்சரியம்.. உடனே கைப்புள்ளயும், அவன் ஆட்களும் தண்ணீரை பீச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இவர்களின் தீர செயலை பாராட்டி, வயலுக்கு சொந்தக்காரர், கைப்புள்ளக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கினான்.
கட்டதுரை : இந்த 1000 ரூபாய வச்சு என்ன பண்ணுவே?
கைப்புள்ள
(தன் மேல் படிந்துள்ள சாம்பலை தட்டி விட்டபடி) : முதல்ல இந்த வண்டியோட பிரேக்கை சரி பண்ணனும்..
Bookmarks