Results 1 to 8 of 8

Thread: ஜென்னல் கைதிகள்

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0

    ஜென்னல் கைதிகள்

    நாங்கள் கன்னியர்கள்
    திருமணம் எனும் பூட்டை திறக்க
    வரதட்சணை சாவி இல்லாத
    ஜென்னல் கைதிகள்!

    புகுந்த வீடு செல்ல முடியாமல்
    பிறந்த வீட்டிலேயே வாழும்
    வாழாவெட்டிகள்!

    தினமும் மாப்பிள்ளை வரன்களின்
    பார்வை அம்புகளுக்கு பலியாகும்
    புள்ளிமான்கள்!

    மாப்பிள்ளை வரன்களின்
    நேர்காணலுக்குப் பிறகு
    ராஜகுமாரர்களின் கனவுகள் மட்டுமே
    மிச்சமாகிவிடுகின்றன!

    வரதட்சணை இருந்தால்நிச்சயதார்த்தமும்
    இல்லையென்றால் புறக்கணிப்புகளும்
    எங்களுக்கு பழகிவிட்டன!

    மாப்பிள்ளையை விலைக்கு வாங்கிவிட்டு
    மாடிவீட்டு மயில்களெல்லாம்
    தோகை விரித்தாடும்போது
    குடிசை வீட்டு குயில்கள் நாங்கள்
    வேதனையில் வாடுகிறோம்!.

    வாழ்க்கை சுவர்களில்
    வறுமை சித்திரம் வரைந்து வரைந்து
    வசப்பட்டு போனவர்கள்!

    தங்க நகைகளை
    நகைக்கடைகளில் மட்டுமே
    பார்த்து பார்த்து
    பழகிப்போனவர்கள்!

    அன்பார்ந்த வானொலி நிலையமே
    கார்த்திகை மாசமடி
    கல்யாண சீசமடி என்ற பாடலை
    இனியும் ஒலி பரப்ப வேண்டாம்

    இங்கே கல்யாணம் ஆகாமல்
    நிறைய முதிர்கன்னியர்கள்
    காத்துக் கிடக்கிறார்கள்!

    நாங்கள் கன்னியர்கள்
    திருமணம் எனும் பூட்டை திறக்க
    வரதட்சணை சாவி இல்லாத
    ஜென்னல் கைதிகள்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    புது கவிதையின் பிறப்புகால கவிதைகளை ஞாபகபடுத்துகிறது உங்களின் எழுத்து நடை.. கவிதையின் கரு பழயதானாலும் வெளுத்துப் போன கல்யாண கனவுகளோடு வெதும்பிப் போன முதிர்கன்னிகள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
    அன்புடன் ஆதி



  3. #3
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    அன்புள்ள ஆதி அவர்களுக்கு,

    பத்து வருடங்களுக்கு முன்பு கோவை வசந்த வாசல் கவியரங்கில் படிக்கப்பட்டு பரிசு பெற்ற் கவிதை இது.
    ஊர் சென்றிருந்தபோது எடுத்து வந்தேன். காலம் கடந்தாலும் கன்னியர்கள் இன்னமும் காத்திருப்பது உண்மைதானே.
    பதிலிட்டமைக்கு பாராட்டுக்கள்

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நிச்சயமாக இன்னமும் இந்த முதிர்கன்னிகள் அந்த வரதட்சணை சாவியில்லாமல் ஜன்னலுள் ஜடமாய்த்தான் காத்து நிற்கிறார்கள். இந்தக்கவிதை இனி வருங்காலத்திலும் வழக்கத்தில் இருக்கும்.

    பாராட்டுக்கள் ஐ.பா.ரா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ஐரேனிபுரம் பால்ராசய்யா View Post
    பத்து வருடங்களுக்கு முன்பு கோவை வசந்த வாசல் கவியரங்கில் படிக்கப்பட்டு பரிசு பெற்ற் கவிதை இது.
    ஊர் சென்றிருந்தபோது எடுத்து வந்தேன்.
    வாழ்த்துகள் பால்ராசய்யா அவர்களே!

    முன்னாள், இந்நாள், வருநாள் - எந்நாள் படைப்புகளையும்
    நம் மன்றத்துக்கு தந்துகொண்டே இருங்கள்... நன்றி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்

    இன்னமும் கூட தினசரிகளில் வரதட்சனை கொடுமை சாவுகளுக்காக ஒரு பக்கம் ஒதுக்க வேண்டியிருப்பது வேதனையான விஷயம்.

    ஏன்..? வரதட்சனை கேட்கும் ஆண்களுக்கு தங்கள் உழைப்பின் மீது திறமையின் மீது நம்பிக்கையில்லையா..?

    கீழை நாடான்

  8. #8
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    நறுக்கென்று நல்ல கேள்வி இது கீழை நாடன் அவர்களே

    சமுதாயத்தில் வரதட்சணை ஒழிய ஒரே வழி காதல் திருமணம் தான்.

    இதை ஏற்றுக்கொள்ளாத சமுதாயங்கள் இருக்கும்வரை இன்னும் காத்திருப்பார்கள் ஜென்னல் கைதிகள்

    பதிலிட்டமைக்கு நன்றி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •