நல்லது அக்கா... ஆனால், ஒபாமாவும், அமெரிக்காவும் சர்வதேச அரசியலில் புறந்தள்ளமுடியாத சக்திகள்... ஈழப்பிரச்சினையிலும் இவரின் வரவு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று... இவரின் வரவு எப்படி இந்தியாவின் நலனில் தாக்கம் செலுத்துமென கருத்துக்கள் எழுப்பப்பட்டனவோ அதேபோலொரு கேள்வியே எனதும்... எனவே இது வேண்டுமென்றே இங்கும் ஈழப்பிரச்சனையை கிளறும் செயலல்ல...
இந்திய பத்திரிகையாளர் அனிதா பிரதாப்ப் ஒருமுறை தன் செவ்வியில் சொல்லியுள்ளார், ஈழத்தமிழர் படை அமரிக்க தேர்தல் முடிவுக்காய் காத்திருப்பதாக...
இப்படி இவரின் வரவு பலவளிகளில் ஈழப்பிரச்சினையிலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனோடு சம்பந்தப்பட்ட திரியில் அது சார்ந்த கேள்வியை எழுப்புவது தவறென கருதினால் இத்தோடு அமைகிறேன்... நன்றி. வணக்கம்.
(வலிகளிலோ, காயங்களின் துயரத்திலோ இங்கு நான் என் பதிவுகளை இடுவதில்லை... அதில் பயனுமில்லை. ஆனால், எமக்கு தெரிந்ததில்தானே எங்கள் பதிவுகள் இருக்கும்... அந்தவகையான பதிவுகளே என்னுடையது.)
Bookmarks