அதே ஆவலுடன்...
அதே ஆவலுடன்...
அமரன், மதி உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்ய நிச்சயம் முயலுவேன். ஊக்கத்துக்கு நன்றி தோழமைகளே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் I am Legend எனற ஆங்கில படத்தை பார்ததேன். அதில் நியூ யார்க நகரம் முழுவதும் ஒரு பயங்கர வைரஸ் அட்டாக்கினால் பாதிக்கப்ட்டு அங்கிருக்கும் மனிதர்களும் நாய்களும் ரத்த வெறி பிடித்த வாம்பையர் கொல்லிகளாக் மாறுகிறார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு டாக்டர் வைரஸ்கான மாற்று மருந்தைக் கண்டு பிடித்து அதன் மூலம் அவரும் அவரது செல்ல நாயும் சாதாரணமாக வாழ்கிறார்கள். அவர் வெளியில் சென்று நிலைமையை ஆராயும்போது இந்த வாமபையர்கள் அவரை அட்டாக் செய்கிறார்கள். அதிலிருந்து அவர் தப்பி விடுகிறார். ஆனால் அவரது நாயை அந்த வாம்பையர்கள் கடித்து கொன்று விடுகின்றன. அவர் அந்த மாற்று மருந்தை தங்களது உயிரைக் காத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் வாழும் மக்களுக்கு அவரைப போல உயிர் தப்பிய ஒரு மகளிரிடம் ஒப்படைத்த பின்னர் வாம்பையரால் கொல்லப் படுகிறார்.
உங்களது கதையும் அததகைய வைரஸ் சம்பந்தமானது என்று நினைக்கிறேன். கதை சுவாரஸ்யமாக இருக்கிறது.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
அத்தனை பெரிய அளவில் நான் சிந்திக்கவில்லை மதுரை வீரரே. ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டையாக என் புத்திக்கு எட்டியதையே சிந்திக்க முடிகிறது. இதெல்லாம் சும்மா லோக்கல் நாய்கள். இருந்தாலும் நீங்கள் எழுதியதைப் படித்தபிறகு அந்த படத்தைப் பார்க்கும் ஆவலேற்படுகிறது. ஆனால் இந்தக் கதை முடிந்ததும் தான் பார்க்கவேண்டும்.
ஊக்கப் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி மதுரைவீரன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அத்தியாயம்-5
கோவை பொறியியற் கல்லூரி ஒன்றின் பேனரோடு அந்த பேருந்து பெங்களூருவின் பிரதான சாலையில் வந்துகொண்டிருந்தது.தங்களின் தொழிற்சாலை காணல் வைபவத்தை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தனர். வாழ்க்கையின் சுமைகள் என்னவென்று தெரியாத பருவத்திலிருந்த மாணவ மாணவிகள் அந்த நேரத்து சந்தோஷத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் பாடிய பாடல்களுக்கு ஆட்டம் அதிர்ந்தது.
கேட்டுக்கொண்டே பேருந்தை ஓட்டிய சன்முகத்துக்கு நாற்பது வயதாகிறது. திருச்செங்கோடு சொந்த ஊர். பதினாலு வயதில் ஒரு லாரியில் க்ளீனராக சேர்ந்து 22 வயதில் ஸ்டீயரிங் பிடித்தவர். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வந்தவர். மாணவ மாணவிகளின் சந்தோஷத்தை வெகுவாக ரசித்தார்.
படிப்பு முடிந்ததும் ஒரு சுமையுள்ள உலகம் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தும் இந்த நேரத்து சந்தோஷத்தை அனுபவிக்கும் அந்த பிள்ளைகளை, அவர்களது கலாட்டாக்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். 'நாக்க மூக்கா' வுக்கு அவர்கள் போட்ட குத்துக்கு, பேருந்தே ஆடியது. ஆடிப்பாடிக் களைத்த அவர்கள் தங்கள் பேராசியரை பசியுடன் பார்த்தார்கள். சிறிய புன்முறுவலுடன் ஓட்டுநரைப்பார்த்து,
“வழியில நல்ல ஓட்டலாப் பாத்து நிறுத்துங்க சன்முகம், பசங்க ரொம்ப பசியா இருக்காங்க” என்று அந்த பேராசியர் சொன்னதும்,
“ சார், மடிவாலாவுல ஒரு நல்ல ஓட்டல் இருக்கு. அங்க நிறுத்தறேன். சாப்பிட்டுட்டு கிளம்பலாம். அதைத் தாண்டிட்டா, எல்லாரும் கொள்ளையடிப்பானுங்க...” உபரித்தகவலை தெரியப்படுத்திக்கொண்டே சொன்ன சன்முகத்தின் சொல்லை ஆமோதித்தார்கள் பேராசியர்களும், பேராசிரியைகளும்.
சாப்பாட்டுக்குப் பிறகு கிளம்பிய அந்தப் பேருந்தில் சற்று நேர சல சலப்பிற்குப் பிறகு அமைதி நிலவியது. களைப்பாக அனைவரும் தூங்கிவிட்ட நிலையில், சன்முகம் சீராக பேருந்தை ஓட்டிக்கொண்டு போனார். தன் பொறுப்பை உணர்ந்தவராக வெகு ஜாக்கிரதையாக அந்தப் பேருந்தை அவர் செலுத்திக்கொண்டிருக்கும் பாங்கைப் பார்த்து நிம்மதியுடன் கண்ணயர்ந்தார்கள் பேராசிரிய பெருமக்கள்.
எலக்ட்ரானிக்ஸ் சிட்டி தாண்டியதும் போக்குவரத்தில் ஒரு தேக்கம். நேரம் பத்து மணி. ஊர்வலமாக நகரத்தொடங்கிய அந்த நேர போகுவரத்தை சன்முகம் எதிர்பார்க்கவில்லை. சற்றே எரிச்சல்படத் தொடங்கினார். மெள்ள ஊர்ந்து, ஊர்ந்து அத்திபெலேவை அடந்தபோது மணி பதினொன்றே முக்கால். இடையில் விழித்துப்பார்த்த பேராசியர் ஒருவர்,
“சன்முகம் இப்ப எங்கப்பா இருக்கோம்” என்று கேட்டதற்கு,
“ஏன் சார் அந்தக் கொடுமையைக் கேக்கறீங்க...? இன்னும் அத்திப்பள்ளியையே தாண்டல. இந்நேரம் கிருஷ்ணகிரி தாண்டி தர்மபுரிக்குப் பக்கத்துல போயிருக்கனும்...என்ன எழவு ட்ராஃபிக்கோ..அசோக் லேலெண்ட் கிட்ட ஏதோ ஆக்ஸிடெண்ட் போலருக்கு. இப்போதைக்கு கிளியர் ஆகாது.நீங்க தூங்குங்க சார், நான் வேற ஏதாவது வழியிருக்கான்னு பாக்கறேன்” என்று சொன்ன சன்முகத்துக்கு தான் லாரி ஓட்டிய காலத்தில், அத்திப்பெலேவிலிருந்து குறுக்கு வழியில் ஹோசூர் போன நினைவு வந்தது.
நத்தையாய் நகர்ந்த போக்குவரத்திலிருந்து பிரிந்து வலப்பக்கம் போன சில கார் களோடு தன் பேருந்தையும் செலுத்தினார். அத்திப்பெலேவிலிருந்து வலப்பக்கம் பிரிந்த அந்த சாலை டி.வி.எஸ் வழியாக ஹோசூர் வந்தடையும். எட்டு கிலோமீட்டர்கள் அதிகம் தானென்றாலும் இத்தனை போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க அதுதான் நல்ல வழி. சாலை குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை,காலை நேரத்தோடு பிள்ளைகளை கோவை கொண்டு சேர்க்கவேண்டுமென நினைத்து அந்தப் பாதையில் தன் பேருந்தை செலுத்தினார் சன்முகம்.
சற்றுதூரம் சென்றவுடன் இடதுபக்கத்தில் ஒரு சாலை பிரிந்தது. அதைப் பார்ப்பதற்குள் நேர் சாலையில் சற்றுதூரம் கடந்துவிட்டார். அந்த பாதையை உபயோகித்து நீண்ட நாட்களாகிவிட்டதால் அவரால் எந்த பிரிவில் செல்ல வேண்டுமென்பதை முடிவு செய்ய முடியவில்லை. ஒரு குத்துமதிப்பாக பேருந்தை செலுத்திக்கொண்டிருந்தார்.
மீண்டும் ஒரு சாலை இடதுபக்கம் பிரிவதை தூரத்திலிருந்தே பார்த்ததும் தன் பேருந்தின் வேகத்தைக் குறைத்தார். சாலையோர பலகை...
அனேக்கல் 1 கி.மீ, ஹோசூர் 13 கி.மீ
என்று காட்டியதும்தான் அவருக்குத் தெரிந்தது தான் தவறானப் பாதையில் வந்துவிட்டது. அவசரமாய் இடதுபக்கம் திருப்பி ஹோசூருக்கு செல்லும் பாதையில் பேருந்தை செலுத்தினார். நேரம் பனிரெண்டரை ஆகிவிட்டிருந்தது.
வாகன நடமாட்டமே இல்லாத அந்த சாலையில், பேருந்து போய்க்கொண்டிருந்தது. பேராசிரியர் ஒருவர் வெகு நேரமாய் பொறுத்துப்பொறுத்துப்பார்த்துவிட்டு இயலாமல்,
“சன்முகம் வண்டியைக் கொஞ்சம் ஓரம் கட்டுப்பா. தாங்க முடியல. முட்டுது.” என்றதும்....
பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.
பேராசியர் இறங்குவதைப் பார்த்ததும், தொடர்வினையாக இன்னும் சில மாணவர்களும் இறங்கினார்கள். சில மாணவிகளும் இறங்கி, தூரப் புதர்களுக்கருகே போனார்கள்.
தொடரும்
Last edited by சிவா.ஜி; 17-11-2008 at 09:32 AM.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அழகாக ஒவ்வொரு அத்தியாய நிகழ்வுகளையும் சேர்த்து இருக்கிறீர்கள், தொடருங்கள்
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
நன்றி மூர்த்தி. ஒரு நல்ல கதாசிரியரின் பாராட்டுக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அத்தியாயம்-6
இன்ஸ்பெக்டர் முருகேசன் நல்ல உறக்கத்திலிருந்த இரவு பதினொன்றரைக்கு அந்த அழைப்பு வந்தது. சற்றே எரிச்சலுடன் அலைபேசியை எடுத்து அழைப்பது யாரெனப் பார்த்தார். தங்கையின் பெயரைப் பார்த்ததும் இந்த நேரத்தில் ஏன் அழைக்கிறாள்.....ஏதோ பிரச்சனை என்று உள்ளே ஒரு எண்ணம் தோன்ற, உடனே சம்மதத்தை அழுத்தி அலைபேசியைக் காதுகளுக்குக் கொடுத்தார்.
“அண்ணா....நல்ல தூக்கத்துல இருந்திருப்ப...சாரிண்ணா....வீட்டுக்காரரோட தம்பி விஷம் குடிச்சிட்டான். ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கோம்...அங்கருந்துதான் பேசறேன். நீ கொஞ்சம் வரமுடியுமாண்ணா?
“அடக்கடவுளே ப்ளஸ் ட்டூ படிக்கிற பையனுக்கு என்ன பிராப்ளம்மா...எதுக்கு இப்படி செஞ்சான்?”
“தெரியலண்ணா....கண்ணு முழிச்சிப் பாத்தான்னாதான் விவரம் தெரியும். அனேக்கல் போலீஸ் வந்திருக்காங்க. கன்னடத்துல என்னென்னமோ கேக்கறாங்க நீ வந்தா கொஞ்சம் நல்லாருக்கும்...”
“இதோ ஒடனே பொறப்பட்டு வர்றம்மா....பையனுக்கு இப்ப எப்படி இருக்கு?”
“வாந்தி எடுக்க வெச்சுட்டாங்க. பயப்படறதுக்கு ஒன்னுமில்லன்னு சொல்றாங்க. இன்னும் மயக்கத்துலதான் இருக்கான். வர்றதாணன்னா?”
“வர்றம்மா...இன்னும் முக்கா மணி நேரத்துல அங்க இருப்பேன்.
ஸ்டேடியத்துக்குப் பக்கத்திலிருந்த ஒரு புது நகரில் இருக்கும் அந்த வீட்டிலிருந்து தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு முருகேசன் புறப்பட்ட போது பதின்னொன்று ஐம்பது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவர், மீண்டும் இறங்கி வீட்டுக்குள் சென்று தன் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டார். சமீபகால வெறிநாய்களின் பிரச்சனையால் இரவு நேரங்களில் வெளியே போக நேர்ந்தால் மறக்காமல் கைத்துப்பாக்கியை உடன் எடுத்து செல்வது நிர்பந்தமாகிவிட்டது.
வாகன நடமாட்டமில்லாத அந்த குறுகிய சாலையில் சற்றே வேகத்துடன் தன் ஜீப்பை செலுத்தினார். ஆனால் சிறிது தூரத்திலேயே வேகத்தைக் குறைக்கவேண்டியிருந்தது. குண்டும் குழியுமான சாலை அந்த வேகத்தை அனுமதிக்கவில்லை. எரிச்சலடைந்தார்.
அனேக்கல் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராக இருப்பவருக்கு கட்டிக்கொடுத்த ஒரே தங்கை. அவள்மீது முருகேசனுக்குப் பாசம் அதிகம். அந்தத் தங்கை தன்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாள். இந்த சாலை என்னடாவென்றால் என்னை வேகமாகச் செல்ல விட மாட்டேங்குதே....என்று முடிந்தவரை மேடு பள்ளங்களைத் தவிர்த்து ஓட்டிச் சென்றார்.
இருட்டில் இயற்கை உபாதைக்கு இறங்கிய ஆசிரியர்களும், மாணவர்களும் பாரத்தை குறைத்துக்கொண்டு பேருந்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். சன்முகம் பேருந்துக்கு அப்புறமாக சென்று டார்ச்லைட் வெளிச்சத்தில் டயர்களை சோதித்துக் கொண்டிருந்தார். மற்றவர்களை விட்டு சற்று தூரமாகப் போயிருந்த மூன்று மாணவிகள் திரும்பி வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
புதர்களிலிருந்து அந்த மூவரும் அலறிக்கொண்டு ஓடிவந்தார்கள். திடுக்கிட்டுப்போய் அந்த திசையைப் பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள். மிகப் பயங்கரமான அந்த வெறி நாய்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தன. பேருந்தை நெருங்குவதற்குள் அவற்றில் ஒன்று ஒரு மாணவியின் மேல் பாய்ந்தது. அலறலைக் கேட்டு ஓடி வந்த சன்முகம் தன் கையில் இருந்த ஒரு அடி நீள உலோக டார்ச்லைட்டுடன் சற்றும் யோசிக்காமல் அந்த இடத்துக்கு விரைந்தார்.
அதற்குள் மற்றொரு நாய் இன்னொரு மாணவியைத் தாக்கியது. வெகு வேகமாகச் சென்ற சன்முகத்தின் பின்னால் மாணவர்களும் ஓடினார்கள். சென்ற வேகத்தில், அந்த மாணவின் மேல் கால்களை வைத்து கடிக்க தயாராக இருந்த நாயை டார்ச்சால் வேகமாக அடித்தார் சன்முகம்.
‘காள்...' என்ற சத்தத்துடன் அந்த நாய் தள்ளிப்போய் விழுந்தது. மீண்டும் சுதாரித்துக்கொண்டு அவரைப் பார்த்து வெறியுடன் பாய்ந்தது. மாணவர்களும் ஓடி வந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அத்தனை நாய்களை எதிர்பார்க்கவில்லை. வெறியேறிய அந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் அவர்கள் செயலற்று நின்றுவிட்டார்கள்.
சற்று நேரத்தில் அந்த இடமே போர்க்களம் ஆகிவிட்டது. பேருந்தில் இருந்தவர்கள் எதுவும் செய்ய முடியாமல் கண்ணுக்கு முன் நடக்கும் அந்த வெறித்தாக்குதலை வேதனையோடு பார்த்துக்கொண்டு உள்ளேயே அமர்ந்திருந்தார்கள்.
அப்போது ‘டுமீல்' என துப்பாக்கிச் சத்தம் கேட்டதுடன் சக்திவாய்ந்த ஹெட்லைட்டுகளின் வெளிச்சம் அந்த நாய்க்கூட்டத்தின் மேல் பாய்ந்தது. மீண்டும் ஒருமுறை அந்த துப்பாக்கி வெடித்ததும், அந்த வெறிநாய்கள் அங்கிருந்து பின்வாங்கி ஓடிவிட்டன.
ஜீப்பிலிருந்து இறங்கிய முருகேசன் ஓடி வந்து கீழேக் கிடந்தவர்களைப் பார்த்தார். ஒரு மாணவியும், இரண்டு மாணவர்களும் அதிக சேதாரமடைந்திருந்தார்கள். சன்முகத்தின் காது பாதிக் கிழிந்து தொங்கிய நிலையிலிருந்தது. முருகேசன் அவசரமாய் தன் கைக்குட்டையை எடுத்து கிழிந்து தொங்கிய காதை சேர்த்துவைத்துக்கட்டினார்.
அதற்குள் பேருந்திலிருந்தவர்களும் இறங்கிவந்து தாக்கப்பட்டவர்களை கவனிக்கத் தொடங்கினார்கள். ஒரு பேராசியரிடம் வந்த இன்ஸ்பெக்டர்....
“இந்த நேரத்துல இங்க எப்படி வந்தீங்க...? சரி டிரைவர் எங்க?”
“அதோ அவர்தாங்க டிரைவர்” என்று வந்துகொண்டிருந்த சன்முகத்தைக் காட்டினார்.
“நான் தான் சார் தப்பு பண்ணிட்டேன். ட்ராஃபிக்லருந்து தப்பிக்கறதுக்காக இந்த வழியில வந்துட்டேன். அய்யோ புள்ளைங்களுக்கு இப்படி ஆயிடிச்சே....அந்த சனியன் பிடிச்ச நாய்ங்க இப்படி கொதறிப்போட்டுட்டு போய்டிச்சீங்களே....”
தலையில் அடித்துக்கொண்டு அழுத சன்முகத்தை தோளில் அணைத்தவாறே....
“சரி விடுங்க. இப்ப உங்களால வண்டி ஓட்ட முடியுங்களா?”
“தாராளமாங்க.....சார்...நீங்க போலீஸ்ங்களா..?
“ஆமா ஹோசூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர். ஒரு நிமிஷம் இருங்க”
என்று சொல்லிவிட்டு தன் கைப்பேசியை எடுத்து ஆம்புலன்ஸை விரைவாக வரச் சொன்னார். மீண்டும் தன் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு அந்த இடத்துக்கு சில காவலர்களை வரச் சொன்னார்.
ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்ததும், காயமடைந்த அனைவரையும் அதில் ஏற்றி விரைவாக பெங்களூரு செயிண்ட் ஜான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி சொல்லிவிட்டு தானும் பின் தொடர்வதாக சொல்லி, அங்கிருந்தவர்களிடம்,
”நீங்க எல்லாம் பஸ்ஸுக்குள்ளேயே இருங்க. போலீஸ்காரங்க இப்ப வந்துடுவாங்க. அவங்க வந்ததும் நீங்களும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துடுங்க”
படபடவென்று சொல்லிவிட்டு தன் ஜீப்பில் தாவியேறிக்கொண்டவர் ஆவேசத்துடன் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார்.
தொடரும்
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
லொள்ளிக் கொள்ளும் இரவுகள் என்றதும் நான் என்னவோ சிரிப்புக் கதையோ என்று நினைத்து இதுநாள் வரையிலும் படிக்காமல் விட்டுவிட்டேன்..
ஒவ்வொரு அத்தியாயத்தின்போதும் அந்தக் காட்டுக்குள் சென்று கடி வாங்குவதைப் போன்ற உணர்வு இருக்கிறது..
திகில் படங்களைப் பார்க்கும்பொழுது சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க நேரிடுவோம். அதைப் போன்றதொரு உணர்வு இக்கதையைப் படிக்கும்பொழுது ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் திரியாசிரியர் திகில் சிவா.ஜி அண்ணாவுக்கு..
அந்த லண்டன் கதையை மட்டும் முன்னமே வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அல்லது சொன்ன இடத்தில் அவசரம் இல்லாமல் நிதானம் கையாண்டிருக்கலாம்.. இது என் கருத்து.
முக்கியமாக டயலாக்.. அந்த வாய்ச்சொல்லின் வளைவுக்கு ஏற்ப எழுத்துக்களை வடிவமைத்தது உங்களது ப்ளஸ் பாயிண்ட். சில இடங்களில் ஸ்தம்பித்தேன். சில இடங்களில் காயமும் பட்டேன். ()
கதையைப் படிக்கும் போது நேரில் நடப்பது போல் உணர்கிறேன். தேர்ந்த கதாசிரியர்கள் தான் அப்படி எழுத முடியும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் ஆதவா. லண்டனுக்கு எப்படி வந்தார், ஏன் திரும்ப இந்தியா வந்தார் என்று மட்டுமே சொல்ல நினைத்தேன். அதனால் சுருக்கத்தைக் கையாண்டேன். அதே போல மூன்றாவது அத்தியாயமாகத் தானே வைத்திருக்கிறேன். அதற்கு முன்பாக என்றால் முதலிலேயே தாக்குதல் எதனால் என்று தெரிந்துவிடுமே.
முக்கியமாய் ஆதவாவைக் காயப்படுத்தியது எது எனத் தெரிந்தால் உடனடியாக மாற்றிவிடுவேன். தயவு செய்து சொல்லுங்கள் ஆதவா.
இப்படியானதொரு பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks