ரொம்ப விறு விறுப்பாக போயக் கொண்டிருக்கிறது கதை. இன்னும் எத்தனை பேர்களை கொல்லப் போகிறதோ இநத வெறி நாய்கள்.
ரொம்ப விறு விறுப்பாக போயக் கொண்டிருக்கிறது கதை. இன்னும் எத்தனை பேர்களை கொல்லப் போகிறதோ இநத வெறி நாய்கள்.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
ஹ்ம்ம்.... எதாவது தப்பு பண்ணுவீங்க சுட்டி காட்டலாம்னு நெனச்சு பின்னூட்டம் போடுறத தள்ளிப்போட்டுட்டே வந்தா.........
வாய்ப்பே இல்ல.... உண்மையிலே ரொம்ப நல்லா இருக்கு.... எந்தப் பிழையும் இல்லாம ஒரு மர்மநாவல்..... ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் மனம் பதறுகிறது. முதல் அத்தியாய முடிவில் கொலையைச் சொல்லி இரண்டாம் அத்தியாய இறுதியில் அதைச் சொல்லாமல் முடித்தவிதம் அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்ற பரிதவிப்பை கூட்டுகிறது....
உண்மையிலேயெ கலக்கல் அண்ணா.....
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
ஏனுங்கண்ணா! இதுவரைக்கும் குத்து மதிப்பா எத்தனைக் கொலைங்க பண்ணியிருப்பீங்க? கதைங்கள்ளதான் கேட்கிறேன். நிஜத்தில இல்லை..
எதிர்ப்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் உள்ளது. தொடருங்கள் சிவா. அந்த சிறுவனுமா கொலையுணப் போகிறான்??
அண்ணே...அழகா கொண்டு போறீங்க....
லொள்ளிக்கொல்லும் இரவுகள்.... திகில் கதை மன்னன் சிவா.ஜி னு பட்டமே குடுத்துடலாம்.
அடுத்து என்னன்னு ஆவலோடு..
உங்களின் தொடர்ந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி மதுரைவீரன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நன்றி அமரன்.
நன்றி மதி.
தொடர்ந்து நீங்களனைவரும் அளிக்கும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
முற்றிலும் புதிய களம்..
சரளமான இயல்பான நடை..
சிவாவின் கதைகள் - சொல்லி அடிக்கும் வெற்றிக் கதைகள்..
இத்தொடரும் அவ்வகையே!
வாழ்த்துகள் சிவா!
கில்லியாய் அடிச்சு ஆடுங்க!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
ஆஹா...இளசுவின் வார்த்தைகள் ஒரு லட்சம் ஊக்க மாத்திரை சாப்பிட்ட உற்சாகத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றி இளசு. மன்ற உறவுகளுக்குப் பிடிக்கும் வகையில் எழுதுவது நிஜமாகவே ஒரு சவால்தான். அந்த முயற்சியில் தொடருகிறேன். தட்டிக்கொடுப்பதும், குட்டிச் சொல்லுவதும் உங்களைப் பொறுத்தது.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அத்தியாயம்-3
லண்டனின் ஒரு பரபரப்பான சாலையோர நடைபாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோதுதான் கீர்த்திவாசனுக்கு அந்த தலைசுற்றல் ஏற்பட்டது.அறுபத்தி ஐந்து வயது என்றாலும், இந்த தள்ளாட்டத்துக்கு வயது காரணமல்ல. அருகிலிருந்த ஒரு மரத்தூணை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
கீர்த்திவாசன் லண்டன் வந்த கதை பெரிய கதை. காதல் கதை. ஹோசூருக்கும் தளிக்கும் இடையில் ஒரு கிராமத்துக் கோவிலின் குருக்களாய் இருந்த காலத்தில் ஏற்பட்ட பிரணயக்கதை.நல்ல செக்கச் சிவந்த உடல். ஆரோக்கியமான மரக்கறி உணவால் அம்சமான உடற்கட்டு.அதோடு அவர் அட்சரசுத்தமாய் உச்சரிக்கும் சமஸ்க்ருத மந்திரங்கள் கேட்பவர்களை மெய்மறக்கவைக்கும்.
அப்படி மெய்மறந்தவர்களில் ஒருத்திதான் மார்க்ரெட். லண்டனிலிருந்து தன் தோழனுடன் ஊர் சுற்றிப்பார்க்க இந்தியாவுக்கு வந்தவள்,எப்படி அந்த இத்துனூண்டு கிராமத்துக்கு வந்தாள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் வந்தவள், அந்த சிறியக் கோவிலுக்கு வெளியில் நின்று கீர்த்திவாசனின் மந்திரத்தைக் கேட்டு மயங்கினாள். ஆளைப் பார்த்ததும் மேலும் மயங்கினாள்.
அங்கேயே சில நாட்கள் தங்குவதாய் அவள் சொன்னதும் அவளது தோழன் திருவண்ணாமலைக்குப் போய்விட்டு வருவதாய் சொல்லிச் சென்றுவிட்டான். அங்கு தங்கியிருந்த ஒரு வாரகாலத்தில் காலையும் மாலையும் தவறாமல் கோவிலில் ஆஜராகிவிடுவாள்.தொடர்ந்து அவளைக் கவனித்து வந்த கீர்த்திவாசன் கோவில் பிரசாதத்தை வெளியில் கொண்டுவந்து கொடுப்பான்.
ஒருநாள் அவள் தன் எண்ணத்தை அவனிடம் சொன்னதும் அவனுக்கு திகீரென்றது. ஆச்சாரமான குடும்பம். வேற்று மதத்துக்காரி, அதுவுமில்லாமல் மேலை நாட்டுக்காரி தன்னை திருமணம் செய்துகொள்வதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் மறுப்புத் தெரிவித்தான். அவள் கேட்பதாயில்லை. உனக்காக நான் எந்த அளவுக்கும் என்னை மாற்றிக்கொள்ளத்தயார் என்று உறுதியாக சொன்னாள். யோசிக்க அவகாசம் கேட்டான். காத்திருப்பதாக சொல்லிவிட்டு சென்றாள்.
அவனுக்கும் அவள் மேல் ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனால் அவளைக் கல்யாணம் செய்துகொண்டு அங்கேயே குடும்பம் நடத்துவது சர்வ நிச்சயமாய் சாத்தியமில்லை என்பதும் அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அதற்கும் அவள் ஒரு வழியைச் சொன்னாள். அவனையும் தன்னுடன் லண்டன் அழைத்துச் செல்வதாக. அவள் காதலையும், உறுதியையும் பார்த்து, அவளது விருப்பப்படி அவளுக்கு அந்தக் கோவிலிலேயேத் தாலி கட்டினான்.
அடுத்த நாளே அவள் புறப்பட்டுச் சென்றுவிட்டாள். கூடிய சீக்கிரம் அவனை அங்கு அழைத்துக்கொள்வதாக உறுதியளித்துவிட்டு, அவனை இறுகத் தழுவி விடைபெற்றாள்.சொன்னபடியே அவளிடமிருந்து பணமும், அனுமதியும் அவனை வந்தடைந்தது. லண்டன் வந்து விட்டான்.
இதுதான் கீர்த்திவாசன் லண்டன் வந்தக் கதை. அவன் குடும்பத்தார் அவனுக்கு சிரார்த்தமே செய்துவிட்டனர். இத்தனை வருடங்களாக எந்தவித தொடர்புகளும் தன் குடும்பத்தாருடன் வைத்துக்கொள்ளாத கீர்த்திவாசனுக்கு இப்போதெல்லாம் அவர்களை பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடைய அப்பாவுக்கு இப்போது 90 வயதாகிறது. மார்க்ரெட் இறந்தபிறகு குழந்தைகள் ஏதுமில்லாத தனிமை அவரை சோர்வடைய வைத்தது.
போதாதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு பண்ணை வீட்டுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது நாய் ஒன்று அவரது காலின் பின்புறத்தில் அழுத்தமாய்க் கடித்ததிலிருந்து இப்படி அடிக்கடி தள்ளாட்டம் வந்துகொண்டிருந்தது.இறந்தால் நம் மண்ணில்தான் இறக்கவேண்டுமென்ற எண்ணத்தில்,எப்படியும் ஊருக்குப் போகவேண்டுமென்று உறுதிசெய்துகொண்டு, தன் எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டு அடுத்த வாரமே இந்தியா கிளம்பிவிட்டார்.
அவரது கிராமத்துக்கு வந்தபோது ஊரேக் கூடிநின்று வேடிக்கைப் பார்த்தது.அக்டோபர் மாதத்தின் முதல் வாரம். அந்தக் கிராமமே குளிராய் இருந்தது. ஆனால் கீர்த்திவாசனின் வீடு மட்டும் உஷ்ணத்தில் தகித்தது. கிழவர் தன் மகனைப் பார்க்கக்கூட விரும்பவில்லை. பெற்றவளும் தன் கணவனின் கொள்கைக்குக் கட்டுப்பட்டு அமைதியாய் இருந்தாள்.
கால்கடுக்க பல மணிநேரம் அங்கே நின்றுகொண்டிருந்தார் கீர்த்திவாசன். கிழவரின் மனது கொஞ்சமும் இளகவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க கால்போன போக்கில் நடக்கத் தொடங்கினார். நடந்து நடந்து அவர் வந்து சேர்ந்த இடம் ஒரு காடு. ஹோசூர் நகரிலிருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இருட்டிவிட்டது. சோர்வாய் அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
தொடரும்
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks